ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    சிக்கன்குனியா ஹோமியோ தீர்வுகள்

    Go down

    சிக்கன்குனியா ஹோமியோ தீர்வுகள் Empty சிக்கன்குனியா ஹோமியோ தீர்வுகள்

    Post by ஜவாஹிரா Tue 16 Nov 2010, 11:27 pm

    சிக்குன்குனியா நெருப்பெனப் பரவும் நோய்:

    இன்றைய உலகில் அதிவேகமாகப் பரவுவது தகவல் துறை சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல....நோய்களும்தான். மனித குலம் சந்தித்த எண்ணற்ற இயற்கைச் சீற்றங்கள், நோய் தாக்குதகள் ஏராளம். அவற்றுள் ஒன்றுதான் சிக்குன்குனியா சுரம்.


    பொதுவாக காய்ச்சலை நோயாகக் கருத வேண்டியது இல்லை. உடலின் உள்ளிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற நோயெதிர்ப்பு ஆற்றல் நடத்தும் போராட்டத்தின் வெளிப்பாடே உஷ்ண அதிகரிப்பு. காய்ச்சல் நமது நண்பனைப் போன்றது. சாதாரண சுர நிலைகளில் மருந்தில்லாமலேயே நலம் பெறலாம். அல்லது நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு ஆதரவான எளிய ஹோமியோ சிகிச்சை மூலம் நலம் பெறலாம்.


    சிக்குன் குனியா சுரம் போன்ற தொற்று நோய்சுரங்களில் மருந்தின்றி நலம் பெற வாய்ப்பில்லை. இந்நோயில் அலட்சியம் காரணமாக அல்லது ஆங்கில மருத்துவம் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏராளம்.


    சிக்குன் குனியாவின் சரித்திரம்:

    1952, 1953ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள டான்சானியாவில் சிக்குன்குனியா முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. டான்சானியா மொழியில் முன் வளையச் செய்யக்கூடிய, முடக்கிப் போடக் கூடிய என்ற பொருளில் இந்நோய் பேசப்பட்டு, இன்றைய மனிதனை குரங்கிலிருந்து தோன்றிய ஆதிமனிதன் போலக் கூனி நடக்கச் செய்கிற அல்லது நடக்கக் கூட முடியாமல் முடக்கிப் போடுகிற காய்ச்சல் என்பதால் இதனை முடக்குக் காய்ச்சல் எனலாம்.


    1963ல் முதன் முதலில் இந்தியாவில், கல்கத்தாவில் சிக்குன் குனியா பரவியது. பின்னர் 121 மாவட்டங்களில் பரவி பல லட்சம் மக்களைத் தாக்கியது. 1964ல் சென்னையில் பரவிய போது சுமார் 4,00,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1971ல் இந்தியாவில் மீண்டும் இந்நோய் வலம் வந்தது. 1973ல் மகாராஷ்டிர மாநிலத்தைக் கடுமையாகத் தாக்கியது. 2005ஆம் ஆண்டின் இறுதி மாதங்களிலும், 2006ம் ஆண்டு துவக்க மாதங்களிலும் இந்தியா முழுவதும் சிக்குன்குனியா ஆக்ரமித்தது. 2007-ல் வடக்கு இத்தாலி, சிங்கப்பூர், இந்தோனேசியா, தைவான் போன்ற நாடுகளில் சிக்குன் குனியாவின் தீவிரத் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.


    சிக்குன்குனியா இன்றைய முக்கியப் பொதுப் பிரச்சனை :

    அரசியல் காரணங்களால் ஒரு கட்டம் வரை இது சிக்குன் குனியா இல்லை என்றும் சாதாரண பருவ மழைக்கால வைரஸ் சுரம் என்றும் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகின்றன அரசுகள். சாதாரண ஏழை எளிய மக்கள், சிக்குன்குனியா நோயின் அனைத்துக் குறிகளோடு பாதிக்கப் பட்டிருந்தாலும் அவரவர் சொந்தச் செலவில் இந்நோயினை உறுதி செய்து கொள்ளும் பரிசோதனை செய்து கொள்ள வசதியும், வழியுமில்லை. மேலும் ஆங்கில மருத்துவ சிகிச்சையில் பலன் இருக்கிறதோ இல்லையோ, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முடக்குக் காய்ச்சல் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடந்த 2006ம் ஆண்டு சிக்குன் குனியாவிற்கு ஆங்கிலச் சிகிச்சை பார்த்து....., அரைகுறையாய் நிவாரணம் பெற்று இப்போது மீண்டும் நோய் தொற்றி வேதனையோடு வருபவர்களும் இக் கூட்டத்தில் அடங்குவர்.


    சிக்குன்குனியாவுக்கு காரணங்கள் என்ன?

    இது ஒருவகை வைரஸ் சுரம் குறிப்பிட்ட காலம் இருந்த பின் தானாகவே குறைந்து மறைந்து விடும் நோய். மரணத்தை ஏற்படுத்தாது என்று இந்நோய் பற்றி விவரிக்கப்படுகிறது. இந்நோய் உண்டாக்கும் கிருமி ஆல்பா வைரஸ் அல்லது சிக் வைரஸ் என்றும் இதனைப் பரப்புவது இருவிதக் கொசுக்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அவை 1. ஏடியஸ் ஏஜிப்டி ,2. ஏடியஸ்ஆல்போபிக்டி. இந்தக் கொசுக்களே, சிக்குன்குனியா மற்றும் டெங்கு, மஞ்சள் சுரம் போன்ற நோய்கள் பரவுவற்கு முக்கியக் கடத்திகளாகப் பணியாற்றுகின்றன.


    கொசு ஒழிப்பின் பெயரால் நடந்தவை என்ன?

    1950களில் நம் நாட்டில் மலேரியாக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி ஏராளமானோர் பலியானபோது கொசு ஒழிப்பு ஒன்றுதான் இறுதித் தீர்வாகக் கருதியது அரசு. தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது கொசுக்களுக்கு எதிரான யுத்தமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1953ல் இந்த யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரே மருந்து டி.டி.டி. இம்மருந்து தொடர்ந்து 5 ஆண்டுகள் பயன்படுத்தப் பட்ட பின்னரும் முழுமை யான வெற்றி பெறமுடியவில்லை.


    கொசுக்களின் மரபணு மாற்றம் காரணமாக டிடிடிக்கு எதிரான எதிர்ப்பாற்றல் பெருகி இம்மருந்து வீரியமற்றதாகி விட்டது. பின்பு 1958, 1977ம் ஆண்டுகளில் தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இருமுறை மாற்றங்கள் செய்யப்பட்டன. லிண்டேன், மாலத்தியான் எனும் மருந்துகள் தெளிக்கப்பட்டன. அதுவும் தோல்வியைத் தழுவின. மேலும் பைரத்தின் என்ற புகை மருந்து, கொசு லார்வாக்களை அழிக்கும் அபேட் என்ற நுண்ணுயிரி மருந்தும் செயல்பாட்டுக்கு வந்தது. இதற்கு குறைவான நிதி ஒதுக்கீடு, ஊராட்சி, நகராட்சி நிர்வாக ஊழல்கள் போன்ற பல காரணங்களோடு இம்மருந்துகளின் பயனற்ற தன்மையும் இணைந்து கொசு ஒழிப்பில் பின்னடைவை ஏற்படுத்தியது.


    சுற்றுச் சூழல் சீர்குலைவு:

    கொசு ஒழிப்பிற்கான முயற்சிகளும், கருவிகளும், மருந்துகளும் மாறிக் கொண்டே வந்தாலும் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை. மாறாக இதற்கான அனைத்து மருந்துகளும் நீர், நிலம், காற்று, சூழல் அனைத்தையும் நச்சுப்படுத்துகின்றன. இந்தியாவில் பெருகிவரும் ஆஸ்த்துமா போன்ற நெஞ்சக நோய்களுக்கு கொசு ஒழிப்பு மருந்துகள் தான் காரணம் என ஓர் ஆய்வு தரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. எனவே சுற்றுச் சூழலை பாதிக்காத வண்ணம் உலகளவில் பயன்படுத்தப்படும் வேறு கருவிகள் மற்றும் நடைமுறைகளை அறிந்து இந்தியாவில் செயல்படுத்த வேண்டும்.


    கொசு கடித்த பின் தோன்றும் முக்கிய அறிகுறிகள் சில:

    ஏடியஸ் கொசு கடித்த 4 முதல் 7 நாட்களுக்குள் சில பல நோய்க்குறிகள் தோன்றுகின்றன. சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் போன்றோரை இந்நோய் தாக்கினால் அதிகளவு சிக்கல்கள் ஏற்படுகின்றன.



    பொதுவாக சிக்குன் குனியா சுரத்தில் காணப்படும் முக்கியக் குறிகள்:



    1. கடுமையான காய்ச்சல். உடல் உஷ்ணம் திடீரென 102 -104 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கிறது, இரண்டு முதல் ஏழு நாட்கள் நீடிக்கிறது.


    2. கடுமையான தலைவலியும், உடல்வலியும் ஏற்படுகின்றன. உடல் வலிகள் தசைவலிகளாகவும், முதுகுவலிகளாகவும், மூட்டு வலிகளாகவும் அமைகின்றன.


    3. அரிப்பும், எரிச்சலும், கொண்ட தோல் சினைப்புகள், நிற மாற்றங்கள் ஏற்படுகின்றன. மூக்கில் சிவப்புத் திட்டுகளும், உதட்டில் கருநிற புள்ளிகளும், முகம் மற்றும் வயிறு, கை கால்களில் கருநிறத் திட்டுகளும் ரத்தத் திட்டுகளும், சிறு பொருக்குகளும் தோன்றுகின்றன.


    4. கண்படல அழற்சியும், சிறிது ஒளிக் கூச்சமும் ஏற்படுகின்றன.


    5. குமட்டல், வாந்தி சில சமயம் சிலருக்கு வயிற்றுப் போக்கு



    6. தூக்கமின்மை, அமைதியின்மை


    7. சிலருக்கு இரத்தக் கசிவு அறிகுறிகள், குறிப்பாக மூக்கிலிருந்து, ஈறுகளில் இருந்து கசிவு. தொற்று காரணமாக (பிளாட்டிலெட்ஸ்) தட்டையணுக்கள் எண்ணிக்கை குறைவதால் இந்நிலை ஏற்படுகிறது.


    8. தற்காலிக ஞாபக மறதி


    9. கடும் சோர்வு, பலவீனம், களைப்பு


    10. இந்நோயால் நேரடியான மரண பாதிப்பு இல்லை எனினும் ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்புள்ளவர்களுக்கு சிக்குன்குனியா தாக்கினால் மரண ஆபத்து உண்டு. மேலும் இச்சுரத்தில் திடீர் உஷ்ண அதிகரிப்பில் நீரிழப்பு ஏற்பட்டு சிறுநீரகக் கோளாறுகளும், சீரண மண்டலக் கோளாறுகளும் ஏற்பட்டு மிகவும் ஆபத்தாக முடிகிறது. காய்ச்சலில் உடலின் நீர்ச்சத்து ஆவியாகி இழக்கப்படுவதால் சோடியம், பொட்டாசியம் இன்னும் பிற உப்பு அளவுகளிலும் மாறுபாடு ஏற்பட்டு உப்புச் சமன்பாடு சீர்குலைகிறது. இப்படி வேறு காரணங்களால் இரண்டாம் கட்ட சிக்கல்கள் (செகண்டரி காம்ப்ளிகேஷன்) ஏற்படுகிறது.


    ஆங்கில மருத்துவத்தில் ஒருமுறை சிக்குன்குனியா தாக்கினால் உடலுக்குள் நோயெதிர்ப்பு பொருள் உண்டாகி, மீண்டும் அவருக்கு சிக்குன்குனியா வராது என்று விளக்கமளிக்கிறது. ஆனால் நடைமுறையில் கடந்த 2006ல் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட பலர் அந்நோய் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மீண்டும் தாக்காமல் தடுக்கவும் முடியவில்லை. இதனால் நோயெதிர்ப்பு பொருளான இம்மியுனோகுளோபிலின்-ஜி என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.


    சிக்குன்குனியாவிற்கு ஹோமியோபதியில் தீர்வு:

    ஆங்கில மருத்துவத்தில் உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள் கடுமையான உடலியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது. இது விவாதத்திற்கு உரியது.


    ஹோமியோபதிக் கோட்பாட்டின்படி எந்த ஒரு நோய் அல்லது தொற்று நோய்க்கும் கிருமிகள் காரணம் என்று கூறுவதில்லை. அதனால் கிருமி ஒழிப்பு மட்டுமே பணியாகக் கொண்டவையல்ல ஹோமியோபதி மருந்துகள். ஹோமியோபதி தத்துவத்தின்படி தொற்றுநோய் பரவும் சூழ்நிலைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்த நோய் தொற்றாத மக்களுக்கும், நோய் பாதிப்பு அடைந்தவர்களின் ஒரேமாதிரி அறிகுறிகளையும், ஒரே தனித்துவக் குறிகளையும், மேலோங்கிய குறிகளின் அடிப்படையிலும் மருந்து தேர்வு செய்து, அது தடுப்பு மருந்தாக அளிக்கப்படுகிறது.


    வரலாறு நெடுகிலும், தொற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு ஹோமியோபதி வெற்றிகரமாக உதவியுள்ளன. தற்போது தமிழகத்தில் பரவிவரும் சிக்குன்குனியாவிற்கும் ஹோமியோ மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறந்த தடுப்பாற்றலைப் பெற முடியும்.


    ஆர்ஸ்.ஆல்ப்., ரஸ்டாக்ஸ்., யூப.பெர்ப்.,
    ஜெல்சி., ஆர்னிகா.,
    ரூடா., கோல்சிகம்.,
    பெல்.,
    பிரையோ., சைனா.,
    பாப்டீ., பைரோ.,
    நக்ஸ்.,
    லேடம்.,
    பாலிபோரஸ்பினிகோலா.,
    காலிமூர்., லெசிதின்.,
    சீட்ரான்.,
    இன்புளூய.,
    அக்டியா ஸ்பிகேட்டா
    போன்ற பல ஹோமியோபதி மருந்துகள் மூலமாக மட்டுமே சிக்குன்குனியாவை முற்றிலும் முறியடித்து ஒட்டுமொத்த உடல் நலனையும் மேம்படுத்த முடியும்.
    நன்றி -Dr.S.வெங்கடாசலம்

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum