ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    விரண ரோக சிகிச்சைகள்

    Go down

    விரண ரோக சிகிச்சைகள் Empty விரண ரோக சிகிச்சைகள்

    Post by Admin Tue 21 Sep 2010, 9:00 pm

    விரணரோக சிகிச்சை

    நிம்பலாதி கல்கம்
    :- வேப்பன் இலை, மரமஞ்சள், அதிமதூரம்இவைகளை தேன் நெய் கலந்து வஸ்த்திரத்திற்கு லேபனம் செய்து வத்தி செய்தாவதுஅல்லது எள்ளு கல்கத்திலாவது விரணசோதனம் செய்யவேண்டியது.

    புங்கன், வேப்பன், நொச்சி இவைகளின் சாறுகளினால் புண்களைக் கழுவுதல்,லேபனம் செய்தல், இவைகளை செய்தால் விரணஙகளிலுள்ள கிருமிகள் நாசமாகும்.

    திரிபலாதிகியாழம் :- திரிபலை கியாழத்தில் குங்கிலிய சூரணத்தைகலந்து சாப்பிட்டுவர குத்தல், இரத்தம் சீழ்வடிதல், துர்க்கந்தம் இவைகளுடன்கூடிய விரண வீக்கங்களை நிவர்த்தியாகும்.

    ஹஸ்திரந்தாதி லேபனம் :- யானைக்கொம்பை ஜலத்தில் அரைத்து லேபனம் செய்தால் மிகவும் கெட்டியாயிருக்கும் விரணங்கள் உடைந்து விடும்.

    துஷ்டவிரண லேபனம் :- வேப்பன் இலை, எள்ளு, சிவதை, இந்துப்பு இவைகளை மைப்போல் அரைத்து தேனுடன் கலந்து லேபனஞ் செய்தால் துஷ்டவிரணங்கள் நிவர்த்தியாகும்.

    அயோரஜாதி லேபனம் :- அன்னபேதி, திரிபலை, இலவங்கம், மரமஞ்சள் இவைகளை சமஎடையாக அரைத்து லேபனஞ் செய்தால் விரணங்கள் ஆறி புதியதோல் உண்டாகும்.

    விரணசோபைக்கு லேபனம் :- அசுவகந்தி, கடுக்காய்த்தோல், தேவதாரு,சுக்கு, சிற்றரத்தை, இவைகளை சமஎடையாக அரைத்து விரணத்திற்கு லேபனஞ்செய்தால் விரணசோபை நிவர்த்தியாகும்.

    ஜாத்தியாதி கிருதம் :- ஜாதிப்பத்திரி, பேய்ப்புடல், வேப்பம்பட்டை,கடுகுரோகணி, மரமஞ்சள், நன்னாரிவேர், மஞ்சிஷ்டி, வெட்டிவேர், அதிமதுரம்,மயில்துத்தம், புங்கன்விரை இவைகளை சமஎடையாக சேர்த்து கியாழம் வைத்துஅதில் நெய் கலந்து கிருதப்பக்குவமாக காய்ச்சி மேலுக்குப் போட சூக்ஷ்மமுகத்தோடு மருமத்தைச்சேர்த்து ஒழுவிக் கொண்டு கம்பீரமான நோய்களையுடையவிரனங்கள் சுத்தமாகி நிவர்த்தியாகும்.

    பாரதாதி மலஹர கிருதம்
    :- ரசம், கெந்தி இவைகளைசமஎடையாககல்வத்திலிட்டு மைப்போல் அரைத்து அதற்கு சமமாக மிருதார்சிங்கியைக் கலந்துஅரைத்து இவைகள் யாவற்றிற்கும் சமம் கடுக்காய், காசிக்கட்டி சேர்ந்தசூரணத்தை கலந்து செவ்வையாக அரைத்து இந்த எடைக்கு நான்கு பாகம் அதிகமாகநெய்யைக்
    கலந்து அதில் வத்தியை நனைத்து விரணத்தின்மீது போட்டால் துஷ்டமான விரணம்சுத்தமாவதுடன் நாடீவிரணம் சகல விரணங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

    அமுருதாதி குக்குலு
    :- சீந்தில்கொடி, பேய்ப்புடல்,சுக்கு,திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், திரிபலை, இவைகளை சமஎடையாகச்சேர்த்து சூரணித்து இந்த சூரணத்திற்கு சமஎடை குங்கிலிய சூரணத்தை கலந்துபிரதிதினம் 1/4 முதல் 1/2 பலம் விகிதம் சாப்பிட்டுக் கொண்டுவர விர்ணங்கள்,வாதரத்தம், குன்மம், உதரரோகம்,
    பாண்டுரோகம், வீக்கம் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

    குக்குலு வடுகங்கள் :- திரிபலை சூரணத்துடன் குங்கிலியஞ் சேர்த்து மாத்திரைகள் செய்து சாப்பிட்டால் மலபந்தம் நிவர்த்தியாகி விரணங்கள் ஆறும்.

    விடங்காதி குக்குலு வடுகங்கள
    ் :- வாய்விளங்கம், திரிபலை,திரிகடுகு, இவைகளை சூரணித்து இந்த சூரணத்திற்கு சமஎட குங்கிலிய சூரணம்சேர்த்து நெய்விட்டு அரைத்து மாத்திரைகள் செய்து சாப்பிட்டு பத்தியத்துடன்இருந்தால் துஷ்டவிரணங்கள் அபசி, மேகம், குஷ்டம், நாடி விரணம் இவைகள்சுத்தமாகும்.

    விரணசோதண ரோபன விதி :- எள்ளு, இந்துப்பு, அதிமதூரம் வேப்பிலை,மஞ்சள், மரமஞ்சள், சிவதை வேர், இவைகளை சூரணித்து தேனுடன் அரைத்து லேபனம்செய்தால் துஷ்டமான விரணங்கள் சுத்தமாகும்.

    பிரக்ஷ¡ளனம் :- வேப்பன் இலை க்ஷ¡யத்தினால் விரணங்களை கழுவவேண்டியது. மற்றும் ஆல், அத்தி, ஒதியன் முதலிய பட்டைகளின் கியாழம்கடுக்காய் கியாழம் முதலியவற்றிலும் விரணங்களைகழுவலாம்.

    தாதகீ சூரணம் :- காட்டாத்திப்பூவை சூரணித்து வெள்ளை அகத்திவிரைதயிலத்தில் கலந்து சாப்பிட்டால் அக்கினிமந்த விரணம், விசர்ப்பி,கீடவிரணம், லூதவிரணம், வெகுகாலமாயிருக்கும் துஷ்டவிரணம், நாடீ மர்மம்,இவைகளை அனுசரித்துள்ள ரணங்கள் இவை நிவர்த்தியாகும்.

    திரிபலா சூரணம் :- திரிபலை சூரணத்தை தேங்காய்யெண்ணெய் யுடன் கலந்து லேபனம் செய்தால் அக்கினிதக்க விரணம் நிவர்த்தியாகும்.

    மதூசிஷ்டாதி தைலம் :- மொழுக்கு, அதிமதூரம், லோத்திரம்,குங்கிலியம், பெருங்கடம்பை, சந்தனம், மஞ்சிஷ்டி இவைகளை கற்கஞ்செய்துஅதில் நெய்விட்டு காய்ச்சி லேபனம் செய்தால் அக்கினிபுத்த விரணம்பக்குகட்டி நிவர்த்தியாகும்.

    ஆகந்துக விரண சிகிச்சை :-
    ஆகந்துக விரணத்தில் அதிமதூர சூரணத்தை நெய்யுடன் கலந்து காய்ச்சி சிறிது உஸ்ணமாயிருக்கும் போது லேபனம் செய்ய வேண்டியது.

    பித்தகரமான பதார்த்தங்கள் ரக்தசோதனகரங்களான பதார்த்தங்கள்,உஸ்ணகரபதார்த்தங்கள் இவைகளை சக்தியளவு தேன், நெய்இவைகளுடன் கலந்துராத்திரி காலத்தில் உபயோகித்தால் ஆகந்துக விரணங்கள் நிவர்த்தியாகும்.

    மருத்துவன் ஆகந்துக விரணத்தை செவ்வையாக அறிந்து ரத்த பித்த உஸ்ண நாசனகரசீதகரங்களான திரவியங்களை நெய் தேன் இவைகளுடன் கலந்து சிகிச்சைசெய்யவேண்டியது. ஆகந்துகவிரணம் அதிகமாகயிருக்கும் போது ரோகியின்பலாபலத்தையறிந்து nவமனம், விரேசனம், லங்கனம், போஜனம் குறுதிவாங்கல் இவைகளைசெய்யவேண்டியது.

    ஓமம், உப்பு, இவைகளை மைபோல் அரைத்து உலோகபாததிரத்தில் வேகவைத்து அடிக்கடிலேபனம் செய்து கெட்ட ரத்தத்தை கொம்பு, ஊசி, அலகு, சிலாக்குமுதலியவைகளினால் விமோசனம் செய்யவேண்டியது.

    சத்யோவிரண சிகிச்சை :- பக்குடன் கூடியிருக்கும் சத்யோ க்ஷ¡ரவிரணங்களுக்கு அதிமதுர சூரணத்தை நெய்யில்பொட்டு காய்ச்சி ஆற்றி, ஏழுநாள்லேபனம் செய்து பிறகு துவர்ப்பு, மதுரம், சீதளம் ஆகிய சகல சிச்சைகளைசெய்தால் சாமானிய விரணம் நிவர்த்தியாகும்.

    சர்வ விரணங்களுக்கு பத்தியங்கள் :- யவதானியம், 60-நாளில் பயிராகும்அரிசி, கோதுமை, பழையவெல்லம், பழையவெள்ளை நெல் அரிசி, சிறுகடலை, துவரை,பச்சைபயறு இவைகளது கூட்டு கஞ்சி, ரசம், தேன், பொரிகஞ்சி, காட்டுஜந்துபக்ஷ¢ மாமிசம், நெய், எண்ணெய், புடலங்காய், இளமுள்ளங்கி, கத்திரிக்காய்,பாவக்காய், முள்ளுவெள்ளரிக்காய், சிறிகீரை இவை யாவும்பத்தியங்கள்.

    அபத்தியங்கள் :- புணர்ச்சி, ஆயாசம், அதிகமாய் பேசுதல், பகல்நித்திரை, எப்பொழுதும் பெண்களைப் பார்க்குதல், இரவில் விழித்திருத்தல்,அதிக சஞ்சாரம், சோகம், விருத்த போஜனம், சலபானம், தாம்பூலம், கீரைகள்,மீன்வகைகள், தேகத்திற்கு பிடிக்காத அன்னம் இவை யாவும் அபத்தியங்கள்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum