ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    இயற்க்கை பால்

    Go down

    இயற்க்கை பால் Empty இயற்க்கை பால்

    Post by தோழன் Sun 12 Dec 2010, 9:51 pm

    பால் மற்றும்பால் பொருட்களால் மனித குலத்துக்கு தீங்குகள் தான் அதிகம். நன்மைகள் குறைவே. பால்கபத்தைப் பெருக்கும். இது சளியை அதிகப் படுத்தும். நம் பெண்மணிகள் குழந்தைகளுக்குமுலைப்பால் மட்டுமே தந்த பின்னர்,இரண்டு வயதுக்கு மேல்பாலையோ, பால் பொருட்களையோ குழந்தைகளுக்கு தருவதைத்தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாலில் இருக்கும் சத்துப் பொருளை கிரகிக்கும் என்சைம்மனித உடலில் (குழந்தைகளின் வயிற்றில்) இரண்டு வயதுக்குப் பின்னர் சுரப்பதில்லை.இயற்கையாகவே இது நேருவதைக் கொண்டு இரண்டு வயதுக்கு மேல் மனிதனுக்கு பால்/பால்பொருட்கள் தேவை இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    கபம் (சளி)மனிதனைக் கொல்லும் வியாதி. இதை பால் ஊற்றி வளர்க்கிறோம். பாம்புக்கு பால் ஊற்றிவளர்ப்பது போல. பாம்புக்கு எத்துணை பால் ஊற்றி வளர்த்தாலும் இறுதியில் பாம்பு நஞ்சினைக் கக்குவது போல, பால் இறுதியில் கபமாக மாறி மனிதனுக்கு எமனாக மாறுகிறது என்கிறார் அர்னால்ட்எஹ்ராத் (Arnold Ehret) என்னும் மேலை நாட்டு உணவியல் ஆராய்ச்சியாளர்.

    பாலுக்கு மாற்றாகநலம் பயக்கும் இயற்கை பாலை நாம் இல்லத்திலேயே அதிக செலவின்றி தயாரிக்கலாம். அவற்றைஅருந்தலாம். நிறைய பயன்களை விளைவிக்கும் இயற்கை பால் தயாரிக்கும் முறைகளை கீழேகாணலாம்.

    முக்கியமானகுறிப்பு:
    இங்குவிளக்கப்பட்டிருக்கும் இருக்கும் இயற்கை பால் எதையும் காய்ச்ச கூடாது.காய்ச்சினால் அதனை அருந்தும் குறிக்கோள் நிறைவேறாது. பச்சையாகத்தான் அருந்தவேண்டும். தேவைப் பட்டால் தேனீர் வடிகட்டியால் வடிகட்டி பின் அருந்தவும்.

    இயற்கை பால்வகைகளை நலம் கூட்டும் மருந்து போல எண்ணி அருந்த வேண்டும். ருசிக்காக (விருந்துபோல) அருந்துவது தேவையில்லை.

    கோதுமைப் பால்
    100 கிராம்கோதுமையை எடுத்து நன்கு கழுவி முளைக் கட்டவேண்டும். பின் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துமிக்ஸியில் இட்டு அரைத்து பால் எடுக்கவும். அத்துடன் தனியாக எடுத்த தேங்காய் பால்சேர்த்து சாப்பிடலாம்.

    கொசுறு: சுவைக்குதேன் சேர்த்தும் சாப்பிடலாம்.

    பயன்கள்:
    இது புற்று நோயைஎதிர்க்க வல்லது.
    உடலுக்கு நல்லபலம் கொடுக்கும்.
    வாதத்தைகுணப்படுத்தும். சுரம் நீங்கும்.
    மூக்கில் நீர்வடிதல் குணமாகும்.
    ஆண்களுக்கு உயிர்அணுவை பெருக செய்யும்.
    பாக்டீரியா, வைரஸை எதிர்க்கும்.
    வெள்ளை அணுக்களைபலப்படுத்தி அதிகரிக்க செய்யும்.

    நிலக்கடலைப் பால்
    நூறு கிராம்நிலக்கடலையை எடுத்து சுத்தம் செய்து முளை கட்டிய பிறகு அத்துடன் ஊறிய ஐந்துமுந்திரி பருப்புகளையும் சேர்த்து ஒரு ஏலக்காயும் சேர்த்து மிக்ஸியில் போட்டு பால்தயார் செய்துக் கொள்ளவும்.

    எச்சரிக்கை: இந்தநிலக்கடலை பாலினை காய்ச்ச கூடாது. மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் சாப்பிடவேண்டும்.

    பயன்கள்:
    இது செல்களின்வளர்ச்சிக்கும், புதுப்பித்தலுக்கும் மிகவும் உதவும். (Stem cell கிரியாவூக்கி), சிறுநீர் பையின்அழற்சியை குணமாக்கும்.
    நரம்பு தளர்ச்சிநீங்கும்.
    கைகால் குறண்டல்குணமாகும்.
    மலச்சிக்கல்நீங்கும்.

    எள்ளுப்பால்
    கொள்ளுப்பால்எடுத்தது போலவே இந்த எள்ளுப்பாலும் எடுக்கலாம். 100 கிராம் எள்ளை நன்கு சுத்தம்செய்து இரவு முழுவது தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து ஒரு ஈரமானதுணியில் கட்டிவைத்து விட வேண்டும். துணி காயாமல் அடிக்கடி அதில் தண்ணீரைதெளித்துக் கொண்டு இருக்கவேண்டும். உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் பி1, வைட்டமின் சிஉள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. உடலுக்கு வன்மையும், குருதி பெருக்கையும் உண்டாக்கும். எள்ளில் கருப்பு எள் அதிக மருத்துவத் தன்மைகொண்டது. அதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளுவில்இரும்புச்சத்து நிறைந்துள்ளது.. முளைத்த தான்யங்கள், பயறு வகைகள்முளைகாதவற்றைவிட பன்மடங்கு சத்துக்கள் அதிகம் உடையவை. எனவேதான் முளைக்க வைத்துபால் தயாரிக்க வேண்டும். இந்த முளைவிட்ட எள்ளுடன் சிறிதளவு தேங்காய் துருவல்சேர்த்து அரைத்து பால் தயாரிக்கவும். இந்த எள்ளுப்பால் சாப்பிட சிறிது கசப்பாகஇருந்தாலும் உடலுக்கு மிகவும் நல்லது.

    எள்ளு பற்றிய இருமுது மொழி உண்டு.
    (1)இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு
    (2)வைத்தியனுக்கு கொடுபதற்கு பதில் வாணியனுக்கு கொடுக்கலாம்.

    எள்ளுமருத் தைக்கெடுக்கும் எறனலாந் திண்மைதரும்
    உள்ளிலையைச் சேர்க்கும் உதிரத்தைத் தள்ளுமிரு
    கண்ணுக் கொளிகொடுக்குங் காசமுண்டாம்பித்தமுமாம்
    பண்ணுக் கிடர்புரியும் பார்


    எச்சரிக்கை: இதுமருந்தின் செயல்பாட்டை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால் நோய்க்கு மருந்துசாப்பிடுபவர்கள் இந்த பாலை பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    பயன்கள்: இதுஇரத்த சோகையை நீக்கும். ஹீமோகுளொபின் குறைவாக உள்ளவர்களும், மாதவிலக்கின் போது அதிகமாக உதிர போக்கு உள்ளவர்களும் இதை சாப்பிடலாம். சுவாசகோளாறுகள், ஆஸ்த்துமா உள்ளவர்கள் சாப்பிட்டால் கஷ்டம்குறையும். உடல் மெலிந்து ஒல்லியாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்க அவர்களுக்குஉடல் எடை கூடும். உடலும் ஆரோக்கியம் பெறும்.

    கொள்ளுப்பால்
    இயற்கைப்பால்பற்றி அனைவரும் அறிந்ததே. கொழுத்தவனுக்கு கொள்ளுஎன்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன்படுத்தினால்அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உடலில் ஊளை சதைபோடுவதற்கு, உப்புதான் மிக முக்கிய காரணம் உப்பு நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும்குணமுடையது.

    100 கிராம்கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள்அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான்இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்)அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சிஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.

    முளைவிட்ட கொள்ளு(1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும்சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்கவேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லதுவடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.

    பலன்கள்:சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடைகுறையும்). சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தைகொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல்குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான்மருந்தின் அளவு.

    எச்சரிக்கை:கர்பமாக உள்ள பெண்கள் கொள்ளுப் பாலை சாப்பிட கூடாது.




    nandri -frutarians.blogspot.com

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum