ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    வல்லமையுள்ள சக்தி மருந்துகளினுள்ளே மறைந்து இருக்கிறது-ஆர்கனான் ஸ்லோகம் -20

    Go down

    வல்லமையுள்ள சக்தி மருந்துகளினுள்ளே மறைந்து இருக்கிறது-ஆர்கனான் ஸ்லோகம் -20 Empty வல்லமையுள்ள சக்தி மருந்துகளினுள்ளே மறைந்து இருக்கிறது-ஆர்கனான் ஸ்லோகம் -20

    Post by ஜவாஹிரா Mon 17 Jan 2011, 6:02 pm

    மனிதனின் ஆரோக்கிய
    நிலையை மாற்றவும் அதே சமயம் நோய்களை தீர்க்கவும் வல்லமையுள்ள சக்தி மருந்துகளினுள்ளே
    மறைந்து இருக்கிறது. பகுத்தறிவின் துணை கொண்டு அதை கண்டுபிடிக்க எக்காலத்திலும்
    முடியாது. மனிதனின் ஆரோக்கிய நிலைமையில் ஏற்படுத்தும் மாறுதல்களை அனுபவ வாயிலாகப்
    பார்த்தே தெளிவாக அறிய முடியும். ஆகவே மருந்தில் இருக்கும் நோய் தீர்க்கும்
    சக்தியை எப்போதும் யாராலும் கருவிகளை கொண்டு நிருபித்து காட்ட முடியாது.


    நமது உடலில் ஐந்து வித பௌதிகமாக இருந்து கொண்டு இயங்குகிறது
    அல்லவா? (மண், நீர், நெருப்பு, காற்று, விண் என்று) அதாவது

    1. மண் என்ற தத்துவம்
    நமது உடலில் கெட்டிப் பொருளாக இருக்கிறது. அதிலிருந்து ஓர் உணர்வு தொடு உணர்வாகவும்
    அல்லது அழுத்தமாகவும் உணர்கிறோம் அந்த ஓர் ஆற்றல் தான் கடவுள்.
    2. நீர் நமது
    உடலில் பித்தமாக, ரசமாக, இரத்தமாக நீர் பொருளாக இயங்குகிறது. ஒவ்வொரு வித
    ஆற்றலாகிறதே அது தான் கடவுள்.
    3. நெருப்பு என்பது நமது உடம்பில் எப்போதும்
    உடல் வெப்பம் 98ு அளவாகவும் இருந்து கொண்டு உடலை இயக்குகிறது அல்லவா? அந்த
    ஓர் ஆற்றல் தான் கடவுள்.
    4. காற்று உடலுக்கு தேவை. 10 விதமான வாயுகளாக மாறி
    உடலை நடத்துகிறது அல்லவா? அந்த ஓர் ஆற்றல் தான் கடவுள்.
    5. விண் உடலில் மனமாகவும்
    அதுவே அறிவாகவும் செயல்படுகிறது, அந்த ஓர் ஆற்றல் தான் கடவுள் என்கிறார்.

    மேலே கண்ட 5-வித பௌதிக பிரிவில் ஒழுங்காக இயங்கிகொண்டு இருக்கிறது. இவ்வாறு
    இயக்குவது தான் கடவுள். இந்த இயக்கத்தை வித்தியாசப்படுத்தி ஏற்றவும், தாழ்த்தவும்
    மாற்றியும் காட்டி சமன் செய்து கொள்கிறதே அதுதான் கடவுள். அதை உணரதான் முடியும்.
    கற்சிலை, பொற்சிலை போல் காட்ட முடியாது. எல்லா உடலிலும், எல்லா பொருளிலும்
    தன்மைக்கு ஏற்ப இயங்கி வெளிபடுவதே அதை காந்தம் என்று சுருக்கமாக சொல்லலாம்.
    எந்த வித கருவிகளுக்கும் கூட தெரியாத ஒரு ஆற்றல்தான் காந்தம். காந்ததத்தை
    தான் கடவுள் என்கிறார். அந்த காந்தத்தை இரு கூறுகளாக பிரித்து உயிருள்ள உடலில்
    இயங்கும் போது அதை ஜீவகாந்தம் என்றும், அதையும் பாதுகாத்து இயக்குகின்ற மற்றவற்றை
    வான்காந்தம் என்கிறார்.



    ஒவ்வொரு மருந்திலும் இரண்டு குணம் உள்ளது.
    ஒன்று அமிர்தம். மற்றொன்று நச்சு. ஒவ்வொரு பொருளிலும் இரண்டு பண்புகள் உள்ளது.
    ஒன்று நன்மை செய்வது மற்றொன்று தீமை செய்வது.
    உதாரணம்,
    எட்டிக்காயை பச்சையாக
    சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்பட்டு மரணம் அடைந்து விடுவார். அதை ஹோமியோபதி
    முறைப்படி வீரியமாக்கி கடுமையான வயிற்று வலிக்கு தரும்போது மரணத்தை ஏற்படுத்தும்
    எட்டிக்காய் நச்சு இப்போது அதே வயிற்று வலிக்கு மருந்தாக பயன்படுகிறது. இதே
    நச்சு தான் இப்போது அமிர்தமாகிறது. இது போல எல்லா தாவரங்களிலும் இது போல்
    நச்சும் ஹோமியோபதி மருத்துவ முறையால்) அமிர்தமுமாகிறது. ஹோமியோபதி முறைப்படி
    வீரியப்படுத்தும் போது(Potency) அவைகள் அமிர்தாமகின்றன. இதேபோல் இரும்பில்
    செய்த கத்தி, காய்கறிகள், பழங்கள், விறகு போன்ற பலப்பல பொருட்களை வெட்ட பயன்படுகிறது.
    இது நன்மை. தன்னையோ பிறரையோ வெட்டப் பயன்படுத்தும் போது உயிரை போக்கும் நசசாக
    அதுவே மாறிவிடுகிறது.
    இதே போல் ஒரு மனிதனை பிறவி தொடரும் சந்தர்ப்ப சூழ்நிலை
    வசதி வாய்ப்புகள் நல்லவனாகவும் (அமிர்தம்), இதே சமுதாய அமைப்பு கெட்டவனாக்கி
    (விஷம்) விடுகிறது. தாவரமும், மனிதனும், உலோகமும் ஒன்றுதான். ஆனால் அவற்றுள்
    இருவித நன்மை தீமை செய்யும் பண்புகள் உள்ளன. ஆகவே திட, திரவ, வாயு ஆகிய மூன்று
    பொருட்களிலும் இரண்டு இரண்டு பண்புகள் இருக்கிறது. பக்குவப்படுவதிலும், பயன்படுத்துவதிலும்,
    சமுதாயத்தின் இன்ப துன்பத்தில் பயிற்சி பெறுவதிலுமே வித்தியாசப்படுகிறது.


    இப்படி ஆயிரமாயிரம் விஷயங்களில் உள்ளதை பார்த்து தெரிந்து தெளிந்து கொள்ளுவோம்.
    ஓரே பொருளில் உணவும், மருந்தும், அமிர்தமும், நஞ்சும், நன்மையும், தீமையும்
    உள்ளது. அதன் மாற்றமும் காலமும் பயன்படுத்துவதில் உள்ள மாறுதல்களை பொருத்து
    மாறுகிறது.


    வள்ளலார் கூறுவதாவது:-

    திரும்ப திரும்ப புண்ணாக்குவது அவனது மனமே
    (நோய்) என்று வள்ளலார் கூறுகிறார். அதே போல் மருந்தை பற்றி கூறும் போது,
    மருந்தோ மருந்து அருமருந்து, மனமே மருந்து, அதில் உள்ள நற்பண்புகளே மருந்து
    (அமிர்தம்) என்றும் கூறுகிறார். இதே இடத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்கள்
    கூறுவது) “குற்றவாளி, பாவி என்றும் ஞானி என்றும் யாரும் இல்லை உலகிலே, குற்றத்திற்கு
    காரணமோ இந்த பழைய சமுதாய அமைப்பே” - என்கிறார்.

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum