ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (நிறைவு பகுதி )

    Go down

    மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (நிறைவு பகுதி ) Empty மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (நிறைவு பகுதி )

    Post by மருத்துவன் Sun 20 Feb 2011, 5:53 pm

    நிலவியல் குறியீடூகளுக்கான சட்டம் (GEOGRAPHICAL INDICATION ACT) 1999

    திருநெல்வேலி
    அல்வா, காஞ்சிபுரம் பட்டு, டார்ஜிலிங் தேயிலை, சேலம் மாம்பழம் போன்ற
    பொருட்கள் அவை தயாராகும் இடத்தின் காரணமாகவே புகழ்பெற்றவை. இவற்றிற்கான
    குறியீட்டு உரிமையை பதிவு செய்வதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
    இதன்மூலம் நமது பாரம்பரிய செல்வங்களான வேப்பமரம், மஞ்சள், பாசுமதி அரிசி
    போன்றவற்றை பாதுகாத்திட முடியும் என்றும், நம் விவசாயிகளின் உரிமைகளை
    இச்சட்டம் பாதுகாக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் உன்மையில் ஏராளமான
    இயற்கை வளம் மிகுந்த நாட்டில் அத்தனை பொருட்களையும் இந்த சட்டத்தின் கீழ்
    பதிவு செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்த சட்டத்தின் கீழ் ஒரு
    குறிப்பிட்ட பகுதியில் விளையும் அல்லது தயாரிக்கப்படும் பொருளுக்கு
    வழங்கப்படும் பாதுகாப்பு, அப்பகுதி சார்ந்த மக்களுக்கான சிறப்புரிமையாக
    வழங்கப்படவில்லை. ஒரு புகழ்பெற்ற பொருளை அப்பகுதியில் தயாரிக்கும் யாரும்
    அதற்கான உரிமையை பதிவு செய் முடியும்.

    உதாரணமாக, அமெரிக்க நிறுவனம்
    ஒன்று காஞ்சிபுரத்தில் தறி அமைத்து காஞ்சிப்பட்டுக்கோ, ஈரோட்டில் உற்பத்தி
    நிலையம் அமைத்து பவானி ஜமக்காளத்திற்கோ, திருநெல்வேலியில் உணவகம் அமைத்து
    திருநெல்வேலி அல்வாவிற்கோ இந்த சட்டத்தின் கீழ் பதிவு பெறமுடியும்.
    இந்தியாவின் பாசுமதி அரிசியை பல வெளிநாட்டு நிறுவனங்கள் “டாசுமதி, காசுமதி”
    போன்ற பெயர்களில் காப்புரிமை பெற்றுள்ளனர். இத்தகைய மோசடிகளுக்கு எதிராக
    இந்த சட்டத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை.





    உயிரினவகை வேறுபாட்டு சட்டம் (BIOLOGICAL DIVERSITY ACT) 2001

    நம்
    நாட்டின் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் அறிவுச்செல்வங்களை
    (TRADITIONAL KNOWLEDGE) பாதுகாத்திடவும், பல்உயிரின ஒப்பந்தத்தின்
    (CONVENTION FOR BIO-DIVERSITY) அடிப்படையில் அமைந்ததே உயிரினவகை
    வேறுபாட்டு சட்டம். [You must be registered and logged in to see this image.]காப்புரிமை
    போன்ற சட்டங்களினால் நம்நாட்டு வளங்கள் பறிபோவதை தடுப்பதற்கு இச்சட்டம்
    இயற்றப்பட்டது. இந்த சட்டம் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சில கமிட்டிகளை
    நியமித்துள்ளது. இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டினுடைய இயற்கை வளங்களையும்
    இன்னும் பல வளங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த
    சட்டம் நம்நாட்டு இயற்கைவளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை வழங்குவதை
    முழுவதுமாக தடைசெய்கிறது.

    அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு)
    ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக இந்த கமிட்டியின் கீழ்
    பாதுக்காக்கப்படும் இடங்களுக்குச்சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி
    செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகை, ஆராய்ச்சி என்ற
    பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம்
    நம்முடைய இயற்கைவளங்களின் மாதிரிகளை ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு
    எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. நம் விவசாயிகளின் பழமை வாய்ந்த
    பயிர்வகைகளையும் வேறுசில தாவர வகைகளையும் ஆராய்ச்சி செய்யவும் இச்சட்டம்
    அனுமதி அளிக்கின்றது. மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்தகு
    இச்சட்டம் உதவுவதோடல்லாமல் இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக விவசாயிகளுக்கு
    ஏற்படும் நஷ்டங்ளையும் மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி
    செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது.




    நிறைவுரை

    பன்னாட்டு
    நிறுவனங்கள், தங்கள் நலன் காக்கும் சட்டங்களை அமல்படுத்த பலவகையான
    நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. உலக வங்கி மூலம் கொடுக்கும் நிர்பந்தம் ஒரு
    முறை; அமெரிக்கா போன்ற “அமைதியின் காவலர்கள்” மூலம் கொடுக்கும் நெருக்கடி
    மற்றொரு முறை; ஏழை நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்து
    காரியம் சாதிப்பது மற்றொரு முறை.

    இந்தோனேஷியா போன்ற நாடுகளில் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுக்கு பலவித பெயர்களில் கட்டணம் செலுத்தியதாக மான்சான்டோ நிறுவனம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.

    இந்தியாவில்
    இத்தகைய செயல்கள் நடைபெறாது என்று யாரும் உறுதிகூற முடியாது. ஆனால்
    சர்வதேச அரங்கில் இந்தியாவின் மாண்பு குறைந்துவிடாமல் பாதுகாப்பதற்காக
    பலவிதமான மனித உரிமை மீறல்கள் மறைக்கப்படுவதைப்போல இந்த லஞ்ச-ஊழல்
    குற்றங்களும் மூடிமறைக்கப்படலாம்.

    இத்தகைய சமூக அநீதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் சமூக பொறுப்புள்ள குடிமக்கள் யாரும் விலகி நிற்க முடியாது.





    -மு. வெற்றிச்செல்வன்
    (vetri@lawyer.com)
    நன்றி -http://www.makkal-sattam.org

    மருத்துவன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 110
    Points : 280
    Reputation : 2
    Join date : 06/12/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-1)
    » மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-2 )
    » மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-3)
    » மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-4)
    » கண்புரை -அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோவில் மாறும்

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum