என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
குர்ஆனை நம்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்து!
ஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: இஸ்லாமும் மருத்துவமும் -ISALAM & MEDICINE
Page 1 of 1
குர்ஆனை நம்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்து!
குர்ஆனை நம்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்து!
குர்ஆனை நம்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்து!
இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அருள்மறை குர்ஆன் 17:82)
வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதன் இறைவன் எங்கே என்று அலைந்து திரிந்து தன் வாழக்கையைத் தொலைத்துவிடக் கூடாது அதே சமயம் படைத்த இறைவனை அவன் சரியாக அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் அருள்மறையை குர்ஆனை புரட்ட வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் மூஃமின்களுக்கு அதாவது இறைநம்பிக்கை யாளர்களுக்கு ரஹ்மத் எனும் பேரருள் கொண்டதாக உள்ளது என்று கூறப்படுகிறது.
ரஹ்மத் என்றால் பேரருள் என்று பொருள்படும் மனிதன் உள்ளிட்ட படைப்பினங்களுக்கு அருள்புரிபவன் அல்லாஹ் மட்டுமே அவனைத்தவிர யாரும் எவருக்கும் அருள்பாளிக்க இயலாது என்ற கருத்தையும் வலியுறுத்துவதன் மூலம் உலகில் உள்ள எந்த வஸ்துக்களையும் வணங்கி மோசம் போகாதீர்கள் என்று குர்ஆன் வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொண்டு இந்த குர்ஆனை பொருளுணர்ந்து படித்தால் படிக்கக்கூடிய மனிதனது மனம் புத்துணர்ச்சி பெற்று அவனுடைய உள்ளத்தில் காணப்படும் ஏக்கம், தாகம், மற்றும் பயம் ஆகியன விலகுகிறது.
உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மனிதன் திருமறைக் குர்ஆனை படித்து இறைவனது தன்மைகளை உணர்ந்துக் கொண்டால் அவன் நற்பாக்கியத்தை பெறுகிறான் மேலும் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட முற்படுகிறான் இப்படிப்பட்ட பேரருள் மற்றும் பாக்கியம் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்த ஒரு இறைவிசுவாசிக்கே கிடைக்கிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் முஃமின்களுக்கு ரஹ்மத்தாக உள்ளது.
குர்ஆனை நம்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்து!
அருமருந்து என்று கூறப்படும்போது அதற்கு எதிர்ப்பதமாக நோய் என்ற ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இயல்பாகவே மனிதனுக்கு உண்டாகும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அதாவது
ஒரு மனிதனுக்கு இதயம், சுவாச உருப்புகள் உள்ளது போன்று உள்ளமும் இருக்கிறது. அந்த உள்ளத்தை உணரத்தான் முடியுமே தவிர யாராலும் காட்ட இயலாது.
ஒரு மனிதன் நல்ல உள்ளம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் இறைவன் இருப்பதாகவும் ஒருவன் கெட்ட எண்ணடம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் சாத்தான் குடியிருப்பதாகவும் அனைத்து மதத்தவர்களாலும் நம்பப்படுகிறது எது எப்படியோ உள்ளம் என்று ஒன்று இருப்பதாக நாம் நம்ப வேண்டும்.
இஸ்லாம் இந்த உள்ளத்தை பற்றி கூறும் போது அந்த உள்ளத்தில் கூட நோய் உருவாகும் என்றும் இது அப்பாவி மக்களை ஏமாற்றும் மனிதர்களிடம் அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறது. அதாவது ஒருவனை ஏமாற்ற நினைப்பவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஏமாற்றுவித்தைகளில் மூழ்கி நன்மை தீமைகளை உணரக்கூடிய நிலையை இழந்துவிடுகிறான். உதாரணமாகபிரேமானந்தா, நித்யானந்தா போன்ற சாமியார்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கூறலாம் இப்படிப்பட்ட சாமியார்கள் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு தீட்சை அளிப்பதாக பொய் கூறுவார்கள் பின்னர் இந்த பொய்களில் மூழ்கி பித்தலாட்டம் மற்றும் விபச்சாரம் ஆகிய பாவங்களில் தங்களை சிக்கவைத்துக் கொண்டு பாவத்தில் மூழ்கி விடுகிறார்கள் இறுதியாக அவர்கள் தங்கள் கரங்களாலேயே தங்களை சந்தி சிரிக்க வைத்து விடுகிறார்கள். இது போன்ற நோய்கள்தான் உள்ளத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் என்று இஸ்லாம் வர்ணிக்கிறது.
மனதில் ஆழ்ந்த குழப்பம் ஏற்படும் யாரிடம் சென்றாலும் தீர்வு கிடைக்காது தட்டுத்தடுமாறி அங்கும் இங்குமாக அலைவோம் இறுதியாக வேறு வழியின்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று அல்குர்ஆனை புரட்டுவோம் அந்த அருள்மறையின் வசனங்களை பொருளுணர்ந்து படிப்போம் கூடவே நபிகளார் (ஸல்) கூறிய அறிவுரைகளையும் அவர் வாழந்துகாட்டிய விதத்தையும் அலசிப்பார்ப்போம் பின்னர் நம் உள்ளத்தில் தோன்றிய குழப்பமான நோய்க்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் குர்ஆன் குழப்பத்தை தீர்க்கும் அருமருந்தாகஅமைந்துள்ளது என்ற உண்மை நமக்கு வெளிப்படுகிறது.
உள்ளத்தின் நோயை தீர்த்து வைக்க எந்த டாக்டரும் இல்லை, அதற்காக உலகில் எந்த மருத்துவ பட்டய படிப்பும் கிடையாது மேலும் இந்த உள்ளத்தில் ஏறபடும் இந்த நோய்க்கு ஒருவனே மருத்துவனாக உள்ளான அவனே அல்லாஹ்! அவன் காட்டும் மருந்தே அருள்மறை குர்ஆன்!
உடலில் ஏற்படும் நோய்
உடல் இல்லாமல் மனிதன் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம், கண்கள், கல்லீரல், கணையம் போன்ற விலைமதிக்க இயலாத உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தியவன் படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான். எனவே ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்தையும் அவனே படைத்துள்ளான் மேலும் நோய்க்கான மருந்து மனிதனுடைய சிந்திக்கும் திறமை மற்றும் கண்டு பிடிக்கும் ஆற்றலை பொருத்தே அமைகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் இந்த மருந்துகளை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்ல.
நன்றி -நண்பர் சிராஜ் -இந்த கட்டுரை இவருடைய தளத்திலிருந்து அனுமதிதான் எடுக்கபட்டுள்ளது -அவரது தள முகவரி -http://gloriousquran.wordpress.com/
குர்ஆனை நம்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்து!
இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அருள்மறை குர்ஆன் 17:82)
வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதன் இறைவன் எங்கே என்று அலைந்து திரிந்து தன் வாழக்கையைத் தொலைத்துவிடக் கூடாது அதே சமயம் படைத்த இறைவனை அவன் சரியாக அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் அருள்மறையை குர்ஆனை புரட்ட வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் மூஃமின்களுக்கு அதாவது இறைநம்பிக்கை யாளர்களுக்கு ரஹ்மத் எனும் பேரருள் கொண்டதாக உள்ளது என்று கூறப்படுகிறது.
ரஹ்மத் என்றால் பேரருள் என்று பொருள்படும் மனிதன் உள்ளிட்ட படைப்பினங்களுக்கு அருள்புரிபவன் அல்லாஹ் மட்டுமே அவனைத்தவிர யாரும் எவருக்கும் அருள்பாளிக்க இயலாது என்ற கருத்தையும் வலியுறுத்துவதன் மூலம் உலகில் உள்ள எந்த வஸ்துக்களையும் வணங்கி மோசம் போகாதீர்கள் என்று குர்ஆன் வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொண்டு இந்த குர்ஆனை பொருளுணர்ந்து படித்தால் படிக்கக்கூடிய மனிதனது மனம் புத்துணர்ச்சி பெற்று அவனுடைய உள்ளத்தில் காணப்படும் ஏக்கம், தாகம், மற்றும் பயம் ஆகியன விலகுகிறது.
உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மனிதன் திருமறைக் குர்ஆனை படித்து இறைவனது தன்மைகளை உணர்ந்துக் கொண்டால் அவன் நற்பாக்கியத்தை பெறுகிறான் மேலும் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட முற்படுகிறான் இப்படிப்பட்ட பேரருள் மற்றும் பாக்கியம் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்த ஒரு இறைவிசுவாசிக்கே கிடைக்கிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் முஃமின்களுக்கு ரஹ்மத்தாக உள்ளது.
குர்ஆனை நம்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்து!
அருமருந்து என்று கூறப்படும்போது அதற்கு எதிர்ப்பதமாக நோய் என்ற ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இயல்பாகவே மனிதனுக்கு உண்டாகும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அதாவது
- உள்ளத்தில் ஏற்படும் நோய்
- உடலில் ஏற்படும் நோய்.
ஒரு மனிதனுக்கு இதயம், சுவாச உருப்புகள் உள்ளது போன்று உள்ளமும் இருக்கிறது. அந்த உள்ளத்தை உணரத்தான் முடியுமே தவிர யாராலும் காட்ட இயலாது.
ஒரு மனிதன் நல்ல உள்ளம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் இறைவன் இருப்பதாகவும் ஒருவன் கெட்ட எண்ணடம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் சாத்தான் குடியிருப்பதாகவும் அனைத்து மதத்தவர்களாலும் நம்பப்படுகிறது எது எப்படியோ உள்ளம் என்று ஒன்று இருப்பதாக நாம் நம்ப வேண்டும்.
இஸ்லாம் இந்த உள்ளத்தை பற்றி கூறும் போது அந்த உள்ளத்தில் கூட நோய் உருவாகும் என்றும் இது அப்பாவி மக்களை ஏமாற்றும் மனிதர்களிடம் அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறது. அதாவது ஒருவனை ஏமாற்ற நினைப்பவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஏமாற்றுவித்தைகளில் மூழ்கி நன்மை தீமைகளை உணரக்கூடிய நிலையை இழந்துவிடுகிறான். உதாரணமாகபிரேமானந்தா, நித்யானந்தா போன்ற சாமியார்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கூறலாம் இப்படிப்பட்ட சாமியார்கள் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு தீட்சை அளிப்பதாக பொய் கூறுவார்கள் பின்னர் இந்த பொய்களில் மூழ்கி பித்தலாட்டம் மற்றும் விபச்சாரம் ஆகிய பாவங்களில் தங்களை சிக்கவைத்துக் கொண்டு பாவத்தில் மூழ்கி விடுகிறார்கள் இறுதியாக அவர்கள் தங்கள் கரங்களாலேயே தங்களை சந்தி சிரிக்க வைத்து விடுகிறார்கள். இது போன்ற நோய்கள்தான் உள்ளத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் என்று இஸ்லாம் வர்ணிக்கிறது.
அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 2:9,10)
ஒரு இறைவிசுவாசிக்கு உள்ளத்தில் இப்படிப்பட்ட நோயின் தாக்கம் ஏற்பட்டால் உடனே அந்த நோயிலிருந்து அவன் சுதாரித்தக் கொள்ள அருள்மறை குர்ஆன் மாபெரும் சாதனமாக விளங்குகிறது. அதாவது பொய் கூற முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், திருட முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், விபச்சாரத்தை நெருங்கும்பொது இஸ்லாம் கடுமையாக கண்டிப்பதை உணரலாம். மேலும் எந்த ஒரு செயலையாவது நாம் செய்ய முற்படும்போது இது கூடுமா? கூடாதா? மார்க்க எல்லைக்கு உட்பட்டதா? மார்க்கத்தில் வரம்பு மீறிய செயலா? என்று யோசிப்போம். மனதில் ஆழ்ந்த குழப்பம் ஏற்படும் யாரிடம் சென்றாலும் தீர்வு கிடைக்காது தட்டுத்தடுமாறி அங்கும் இங்குமாக அலைவோம் இறுதியாக வேறு வழியின்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று அல்குர்ஆனை புரட்டுவோம் அந்த அருள்மறையின் வசனங்களை பொருளுணர்ந்து படிப்போம் கூடவே நபிகளார் (ஸல்) கூறிய அறிவுரைகளையும் அவர் வாழந்துகாட்டிய விதத்தையும் அலசிப்பார்ப்போம் பின்னர் நம் உள்ளத்தில் தோன்றிய குழப்பமான நோய்க்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் குர்ஆன் குழப்பத்தை தீர்க்கும் அருமருந்தாகஅமைந்துள்ளது என்ற உண்மை நமக்கு வெளிப்படுகிறது.
உள்ளத்தின் நோயை தீர்த்து வைக்க எந்த டாக்டரும் இல்லை, அதற்காக உலகில் எந்த மருத்துவ பட்டய படிப்பும் கிடையாது மேலும் இந்த உள்ளத்தில் ஏறபடும் இந்த நோய்க்கு ஒருவனே மருத்துவனாக உள்ளான அவனே அல்லாஹ்! அவன் காட்டும் மருந்தே அருள்மறை குர்ஆன்!
உடலில் ஏற்படும் நோய்
உடல் இல்லாமல் மனிதன் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம், கண்கள், கல்லீரல், கணையம் போன்ற விலைமதிக்க இயலாத உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தியவன் படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான். எனவே ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்தையும் அவனே படைத்துள்ளான் மேலும் நோய்க்கான மருந்து மனிதனுடைய சிந்திக்கும் திறமை மற்றும் கண்டு பிடிக்கும் ஆற்றலை பொருத்தே அமைகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் இந்த மருந்துகளை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்ல.
நன்றி -நண்பர் சிராஜ் -இந்த கட்டுரை இவருடைய தளத்திலிருந்து அனுமதிதான் எடுக்கபட்டுள்ளது -அவரது தள முகவரி -http://gloriousquran.wordpress.com/
ஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: இஸ்லாமும் மருத்துவமும் -ISALAM & MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|