ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    போகர் தன் வரலாற்றை கூறல்

    Go down

    போகர் தன் வரலாற்றை கூறல் Empty போகர் தன் வரலாற்றை கூறல்

    Post by ram_soft2003 Thu 16 Dec 2010, 1:52 am

    போகர் தன் வரலாற்றை கூறல்
    ---------------------------------------------------

    குருவே போற்றி ..

    ---------------------------------------------------

    பாடினேன் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன்
    பாலகனே புலிப்பாணி பகரக்கேளாய்
    நீடியதோர் காலாங்கி கிருபையாலே
    நீதியுடன் நெடுங்காலம் இருந்தேன் அங்கே
    தேடியே காலாங்கி நாதர்தாமும்
    தேற்றமுடன் தன்தனக்கு உகந்தசீடன்
    நாடியே வேண்டுமென்று நன்மையாலே
    நானவற்கு நற்சீடன் ஆகினேனே.

    ஆகினேன் நெடுங்காலம் பணிதிசெய்து
    ....
    பாலில்விழும் ஈயைப்போல் பரதவித்தேன்
    பட்சமுடன் என்மீதில் மனதுவந்து
    சாகின்ற சடலமதுங் காயந்தந்து
    சட்டமுடன் எந்தனுக்கு இதவுகூறி
    மேதிடவே ஞானோபதேசம் சொல்லி
    மேன்மையுடன் எந்தனை ஆசீர்மித்தாரே.

    எந்தனையும் ஆசீர்மம் மிகவும்செய்து
    எழிலான உபதேச உண்மைகூறி
    அந்தமுடன் ஆதியந்த முடிவும் கூறி
    அப்பனே யோகமென்ற வழியுங்காட்டி
    விந்தையுடன் வையகத்து மகிமை கூறி
    விட்டகுறை யாவனைத்து மொழிந்துமல்லோ
    சொந்தமுடன் என்னாளுஞ் சீடனாக்கி
    சுந்தரனே மகுத்துவங்கள் கூறினாரே.

    கூறினார் வெகுகோடி இதிகாசங்கள்
    கொற்றவனே சமாதிமுறைப் பாடுஞ்சொல்லி
    தேறியே சிலகால மங்கிருந்து
    தேற்றமுடன் வையகத்து அதிசயங்கள்
    மீறியே தானுணர்ந்து குளிகைபூண்டு
    மிக்கான நாடுபதி தேசமெல்லாம்
    கோறியே தேசமெல்லாம் அதிதம்பூண்டு
    கொற்றவனே எந்தனுக்கு அருள்தந்தாரே.

    தந்தாரே எந்தனுக்கு கோடியாகச்
    சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும்
    அந்தமுடன் எந்தனுக்கு அதிதமார்க்கம்
    அப்பனே தாமுரைத்துப் போகஎன்று
    இந்தமாநிலத்தில் உள்ளமகிமை எல்லாம்
    ஏற்றமுள்ள குளிகையினால் அறிந்துகொண்டு
    விந்தையுடன் பாடிவைப்பேன் சப்தகாண்டம்
    விண்ணுலகம் மண்ணுலகம் இடங்கொள்ளாதே.

    கொள்ளாதே போகர்ஏழாயிரந்தான்
    கொற்றவனே நாதாக்கள் கூறவில்லை
    எள்ளளவும் பிசகாது இந்நூலப்பா
    இணையான நூலுக்கு எதுவேதென்றால்
    கள்ளமிலாக் கும்பமுனி சொன்ன நூலாம்
    காசினியில் பெருநூலாம் பேதமுண்டோ
    தள்ளவுந்தான் போகாத காண்டமப்பா
    தருவான பன்னீரா யிரம்தாமே.

    பன்னீராயிரம் என்னும் நூல்தானப்பா
    பயிலான காண்டமது பனிரெண்டுமாகும்
    சொன்ன மொழிதவறாது துய்யபாலா
    துகள்அகற்றிப் பன்னீராயிரம்தான் சொன்னார்
    கண்ணியமாய்ப் பனிரெண்டு காண்டம்சொன்னார்
    கண்மணியே ஆயிரத்துக்கொரு காண்டந்தான்
    உன்னித மாய்இந்நூலுக் குவமைகூறி
    உத்தமனார் பாடிவைத் தாருண்மைதானே.

    ram_soft2003
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 30
    Points : 62
    Reputation : 0
    Join date : 04/12/2010

    Back to top Go down

    போகர் தன் வரலாற்றை கூறல் Empty Re: போகர் தன் வரலாற்றை கூறல்

    Post by ram_soft2003 Thu 16 Dec 2010, 1:52 am

    உண்மையாம் என்நூலைக் கண்டறிந்து
    உத்தமனே கும்பமுனி நூலைப்பாரு
    திண்ணமுடன் பனிரெண்டு காண்டம்பாரு
    தீர்க்கமுடன் ரகசியங்கள்எல்லாம் விள்ளும்
    நன்மைபெற மோட்சவழி கதியேகொள்வார்
    நாதாந்தக் கும்பமுனி முன்னேநிற்பார்
    தண்மையுள்ள சாத்திரந்தான் பெருநூலப்பா
    தகமையுள்ள பனிரெண்டு காண்டம்பாரே.

    பாரேதான் அகஸ்தியனார் கோடிநூல்கள்
    பாருலகில் பாடிவைத்தார் மறைப்புமெத்த
    நேரேதான் பெருநூலின் மார்க்கம் எல்லாம்
    நேர்மையுள்ள என்னூல்போல் விள்ளலாகும்
    சீரேதான் பனிரெண்டு காண்டமாக
    சிறப்புடனே பாடிவைத்தார் புலஸ்தியற்கு
    வேரேதான் சாத்திரங்கள் பார்ப்பதுண்டோ
    பார்த்தாலும் பெருநூலுக்கு ஒவ்வாது அன்றே.

    அன்றான சாத்திரங்கள் அனந்தங்கோடி
    அளவில்லா சூத்திரங்கள் கணக்கோ இல்லை
    குன்றான மலைபோலே குவித்துவைத்தார்
    கொடிதான சாத்திரத்தின் மகிமைஎல்லாம்
    தென்திசையில் கும்பமுனிசெய்த நூல்கள்
    தேசத்தில் பாதிஉண்டு ஆயுர்வேதம்
    வென்றிடவே பதினெண்பேர் செய்நூல்கள்
    வேட்கமுடன் மறுபாதி என்னலாமே.

    என்னவேகும் பமுனிஎன்ற நாமம்
    எழிலான அகஸ்தியரின் நாமமாகும்
    பன்னவே அகஸ்தியனார் என்ற நாமம்
    பலபலவாம் சாத்திரத்தில் முறைபாடாக
    துன்னவே கும்பமுனி என்றுமேதான்
    துப்புரவாய் எப்போதும் வழக்கம்பாரு
    சொன்னதொரு நூல்களிலே மகிமைகோடி
    தோறாமல் பாடிவைத்தார் முனிவர்தாமே.

    முனியான சாத்திரங்கள் பலநூல்கோர்வை
    மூதுலகில் பாடிவைத்தார் சித்தார்எல்லாம்
    கனியான நவகனியாம் நூல்தானப்பா
    கருத்துடனே பனிரெண்டு காண்டம்சொன்னார்
    பனியதுதான் சூரியனைக் கண்டாற்போலே
    பறக்குமடா பனிரெண்டு காண்டமுன்னே
    தொனிபோன்ற சாத்திரங்கள் களவுமார்க்கம்
    துப்புரவாய்க் காவியத்துக் கொவ்வாதன்றே.

    அன்றான சாத்திரமாங் கோர்வையப்பா
    அப்பனே பனிரெண்டு காண்டம்சொன்னார்
    குன்றான மலைபோல கோடித்தங்கம்
    கொட்டினார் பனிரெண்டு காண்டத்துள்ளே
    சென்றிடவே வயித்தியமும் வாதமார்க்கம்
    செயலான யோகமுதல் ஞானமார்க்கம்
    வென்றிடவே மாந்திரீகம் மாரணவேதம்
    வேண்டியதோர் கருமானம்மிக உண்டாமே.

    உண்டான சாத்திரத்தில் இல்லாமார்க்கம்
    உத்தமனே பெருநூலில் காணலாகும்
    கண்டாலும் விடுவாரோ பெருநூலப்பா
    காசினியில் பனிரெண்டு காண்டந்தன்னை
    விண்டதொரு பொருளெல்லாம் அதிலேதோயும்
    வித்தகனே மற்றோர் நூல் காண்பதில்லை
    சண்டமாருதம் போலே பனிரெண்டுகாண்டம்
    சங்கையற ஆயிரத்துக்குஒரு காண்டம்தானே.

    ram_soft2003
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 30
    Points : 62
    Reputation : 0
    Join date : 04/12/2010

    Back to top Go down

    போகர் தன் வரலாற்றை கூறல் Empty Re: போகர் தன் வரலாற்றை கூறல்

    Post by ram_soft2003 Thu 16 Dec 2010, 1:52 am

    சங்கையில்லா பெருநூலைப் பார்த்தபேர்கள்
    சாயுச்சிய பதவிதனைப் பெறவேயாகும்
    இங்கிதமாய்ப் பெருநூல்கள் பார்க்கமாண்பர்
    எழிலான சாலோக சாமீபம்தான்
    அங்கமுடன் சாரூபபதவி மூன்றும்
    அப்பனே கிட்டுவதும் அரிதேயாகும்
    புங்கசித்தி எட்டுவித போகம்தன்னை
    புகழுடனே பெருநூலோர் காண்பார்தானே.

    ram_soft2003
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 30
    Points : 62
    Reputation : 0
    Join date : 04/12/2010

    Back to top Go down

    போகர் தன் வரலாற்றை கூறல் Empty Re: போகர் தன் வரலாற்றை கூறல்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum