ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி

    3 posters

    Go down

    சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி  Empty சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி

    Post by தோழன் Mon 03 Jan 2011, 9:07 pm

    நெல் (அரிசி)

    Siddha Synonyms : அரிசி, தோரை, வை, விரிகி, செந்நெல், சாலி, வரி

    Common Name : Rice, Paddy
    Botanical Name : Oryza sativa Linn.
    Ayurvedic Name : Shali/Shastika dhanya
    Unani Name : Baranj Sathi/Chawal

    Parts used in Siddha Medicine : அரிசி (Rice grain), தவிடு (Brawn), உமி (Husk)

    சுவை (Taste) : இனிப்பு (Sweet)
    தன்மை (Potency) : தட்பம் (Semi hotness)
    பிரிவு (After taste) : இனிப்பு (Sweet)
    செய்கை (Actions) : உடலுரமாக்கி (Nutrient), உள்ளழலாற்றி (Demulcent), குளிர்ச்சியுண்டாக்கி (Refrigerant)


    Defferent types of Rices and its Medicinal Properties according to Siddha Medicine

    கார் அரிசி

    காரரிசி மந்தங் கனப்புடலில் தூலிப்பும்
    பாரறிய வாயுவையும் பண்ணுங்காண் - நேரே
    கரப்பானென் பார்பொருந்திற் காயமது மெத்த
    உரப்பாகும் என்றே யுரை.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile மந்த குணமுள்ள காரரிசி, உடல் பெருக்கையும், வளிக்குற்றத்தையும் வன்மையையும் தரும். இதனால் கரப்பான் உண்டாகும்.

    (Meaning:)
    This rice is a good Alterative in action. It will elevate the Vaatham,
    and give more stamina. This rice will produce Eczema in some
    individuals.

    மணக்கத்தை அரிசி, வாலான் அரிசி, கருங்குறுவை அரிசி

    மணக்கத்தை வாலன் கருங்குறுவை மூன்றும்
    பிணகுட்டைச் சில்விடத்தைப் போக்கும் - இணக்குமுற
    ஆக்கியுண்டாற் கரப்பான் ஆகுமென் பார்கள்சிலர்
    பார்க்குள் இதயெண்ணிப் பார்.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile
    மணக்கத்தை அரிசி, வாலான் அரிசி, கருங்குறுவை அரிசி இம்மூன்றும் புண்ணையும்
    சிறுநஞ்சுகளையும் நீக்கும். கரப்பானை உண்டாக்கும்.

    (Meaning:) This
    three rice varities having good medicanal values. It heals Wounds and
    acts as an antitode for mild poisons. This rice will produce Eczema in
    some individuals.

    ஈர்க்குச்சம்பா அரிசி

    ஈர்க்குச்சம் பாஎன் றியம்பும் அரிசியது
    நார்க்குக் கதியுரிசை நல்குங்காண் - பார்க்குமிடத்
    தெல்லார்க்குங் காதல் இயற்றுமற்பப் பித்தமென்பார்
    வில்லாரும் பூசைகட்காம் விள்.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile
    கடவுளுக்குப் படைப்பதற்காக வழங்கும் ஈர்க்குச்சம்பா அரிசி, நாவுக்குச்
    சுவையையும், பார்க்க விருப்பத்தையும் தரும். கொஞ்சம்
    தீக்குற்றத்தையும்(Elevate Pitham) உண்டுபண்ணும்.

    (Meaning:) This
    three rice varities having good medicanal values. It heals Wounds and
    acts as an antitode for mild poisons. This rice will produce Eczema in
    some individuals.

    புழுகுசம்பா அரிசி

    புழுகுசம் பாவரிசி பூதலத்தில் உண்பார்க்
    கழகுமொளி யுஞ்சேர்வ தன்றி - அழலாம்
    பசிதாகந் தீரும் பலமுமிக உண்டாம்
    முசிவே துடற்சுகமா முன்.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இதனால் வனப்பும், காந்தியும், பெரும்பசியும், வன்மையும் உண்டாகும். தாகம் நீங்கும். இஃது உடற்கு அழலையைத் தரும்.

    (Meaning:)
    This rice will give good complexion, brigtness of body. It is a good
    Appetite stimulant in action. Gives good stamina and will releaves
    thirst. For some individuals it will produce body heat.


    கோரைச்சம்பா அரிசி

    கோரச்சம் பாநற் குளிர்ச்சியென்பார் பித்தத்தைப்
    பேரா அழலைப் பிரித்தோட்டுந் - தீராத
    மேக மெடுதினவை வீட்டுஞ் சுமங்கொடுக்கும்
    மேக முறைகுழாய் ! விள்.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இது வெறி, உட்சூடு, வெள்ளை, நமைச்சல் இவைகளை நீக்கும். குளிர்ச்சியை தரும்.

    (Meaning:) This rice will cure Manic diseases, Leucorrhoea, Itching and Bodily heat. Its a Refrigerant in action.

    குறுஞ்சம்பா அரிசி

    குறுஞ்சம்பா பித்தங் குடியிருக்கச் செய்யும்
    வெறுங்கரப்பான் உண்டாக்கும் மெய்யில் - நொறுங்கச்செய்
    வாத மருள் வாயுவினை மாற்றும்போ கங்கொடுக்குஞ்
    சீதவன சத்திருவே ! செப்பு.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இது அழல் குற்றம், கரப்பான், ஆண்மை இவைகளைப் பெருக்கும். உடலில் குத்துகின்ற வளிநோயை நீக்கும்.

    (Meaning:) This rice will increase Pithtam,Vigour and produce Eczema also. It will cure all type of Vaadha diseases.

    மிளகுச்சம்பா அரிசி
    மிளகுச்சம் பாவரிசி மென்சுகத்தைச் செய்யும்
    அளவில்பல் நோயை அகற்றுங் - களகளெனத்
    தீபனத்தைத் தூண்டிவிடுந் தீரா வளிதொலக்குஞ்
    சோபனத்தைச் செய்நகையாய்! சொல்.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இது நன்மையைக் கொடுத்து, பசித்தீயை வளர்க்கும். பெருவளி முதலிய பலவித நோய்களை அகற்றும்.

    (Meaning:) This rice is good for health. Its a good Appetite stimulant in action and it will cure all type of Vaadha diseses.



    சீரகச்சம்பா அரிசி

    சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும்
    பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் - வாருலகில்
    உண்டவுட னேபசியும் உண்டாகும் பொய்யலவே
    வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்டவனுக்கு மீளவும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களை போக்கும்.

    (Meaning:) Its sweet in taste and Gives good appetite. This rice will cure Vaadha diseases.

    காளான் சம்பா அரிசி

    காளான் சம் பாவரிசி கல்லையொத்த மாபலத்தைக்
    கேளாம லேகொடுக்கும் கேளினும் - நீளும்
    அனிலத்தைப் போக்கிவிடும் ஆரோக்கி யத்தை
    நனிலத்தில் செய்துவிடும் நாடு.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இது உலுக்கு மலைபோன்ற உறுதியையும் நன்மயையும் உண்டாக்கும், சிற்சில வளிநோய்களை நீக்கும்.

    (Meaning:) This is a good nutrient. It will give good stamina and power. Its having indication against some vaadha diseases.

    மைச்சம்பா அரிசி

    மைச்சம்பாத் தண்டுலத்தால் வாயருசி போயொழியும்
    வெச்சென்ற வாதபித்தம் மெய்யைவிடும் - நச்சுந்
    தனிவாயு வுஞ்ச்சுரக்குஞ் சர்த்தியும்போம் இன்பக்
    கனிமொழியே ! நன்றாய்க் காண்.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இதனால் சுவையின்மை, வாந்தி, வளி, தீ முதலிய குற்றங்களால் உண்டாகும் நோய்கள் போகும்.

    (Meaning:) This rice will cure Tastelessness, Vomiting and Vaadha, Pitha disease.


    கோடைச்சம்பா அரிசி

    கோடைச்சம் பாவரிசி கொண்டாற் றிரிதோட
    வாடைக் கதிக வலியுமுடோ - நீடும்
    உறுப்பிலுள் நோயெல்லாம் ஓதாமல் ஏகும்
    கறுப்பிலுயர் வார்குழலே ! காண்.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இதனால் முக்குற்றத்தால் பிறந்த வாத வலியும் உடலுள்ள சிற்சில நோய்களும் விலகும்.

    (Meaning:) This rice will cure Vaadha diseases.

    காடைச்சம்பா அரிசி

    காடைச்சம் பாவரிசி கண்டுதரி சித்தவர்க்கு
    நீடுற்ற மேகமனல் நிற்குமோ ! - காடைப்
    பறவைபோல் நோயும் பறக்கும் பலத்தின்
    உறவையெவர் சொல்வார் உரை.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இதனால் மேக அனல் சில நோய்கள் நீங்கும். உடற்குவன்மை தரும்.

    (Meaning:) This rice will cure Syphillitic body heat. Its a good nutrient in action


    மல்லிகைச்சம்பா அரிசி

    மல்லிகைச்சம் பாவரிசி வாய்க்குரிசை யாயிருக்கும்
    நல்லது மெய்க்கு நலஞ்செய்யும் - பொல்லாக்
    கரப்பானை மேகத்தைக் கண்ணழலை நீக்கும்
    உரப்பாம் பலங்கொடுக்கும் உன்.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இது வாய்க்குச் சுவையையும், உறுதியையும் தரும். கரப்பான், வெள்ளை மேகம், கண் எரிச்சல் ஆகியவைகளை போக்கும்.

    (Meaning:)
    This rice is very tasty in kind. Its a good nutrient in action and will
    give good power. Its having indication against Leucorrhoea, Burnig eyes
    and Eczema.


    இலுப்பைப்பூச்சம்பா அரிசி

    பித்த மிகப்பெருக்கும் பேருலகில் யாவருக்கும்
    உற்ற தலைவலிநோய் உண்டாக்குஞ் - சத்தியமாய்த்
    தாக மெடுப்பிக்கும் தழலிலுப்பைப் பூச்சம்பா
    ஆகமதில் நோய் வளர்க்கும் ஆய்.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இதனால் தீக்குற்றத்தால் விளைகின்ற சிற்சில நோய், தலைகொதிப்பு, நீர்வேட்கை, வெப்பம் இவைகளை உண்டாக்கும்.

    (Meaning:) This rice will produce Piththa diseases, Thirst, Body heat.

    மணிச்சம்பா அரிசி

    நல்ல மனிச்சம்பா நாடுகின்ற நீரழிவைக்
    கொல்லும் மிகுந்தசுகங் கொண்டளிக்கும் - மெல்லப்
    பசியளிக்கும் மூத்தோரைப் பாலர்களை நாளும்
    முசியாம லேவளர்க்கும்
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இது நீரிழிவை விலக்கும். உடற்கு நன்மை பயக்கும். மூத்தோரையும் இளையவரையும் வளர்க்கும். பசியை உண்டாக்கும்.

    (Meaning:)
    This the only rice having specific indication against Diabetes. Good
    for health. Its very much useful for Elderly and Children. Its a good
    Appetite stimulant in action.

    வளைத்தடிச்சம்பா அரிசி

    வளைத்தடிச்சம் பாவிற்கு வாதபித்தம் உண்டாம்
    உளையும் மடிபொருமி யுப்பும் - கொளகொளெனத்
    தானே கரப்பானாந் தாங்கொணா மந்தமுமாந்
    தேனே ! யிதனைத் தெளி.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இதனால் வளி தீக்குற்றங்களின்பெருக்கு, வயிறு உளைதல், உப்புசம், கரப்பான், மிகுமந்தம் உண்டாகும்.

    (Meaning:) This rice will increase Vaadham and Piththam, and it will produce Somach pain, Flatulence, Eczema and Loss Appetite.

    கைவரைச்சம்பா அரிசி

    கைவரைச்சம் பாவரிசி கண்டால் அவரவர்தம்
    மெய்வரையாம் என்றும் மிகுபலமாம் - மையல்
    அடையாதென் பார்கள் அடர்சுக் கிலமும்
    உடையா ததிசுகமாம் ஓது.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இதனால் உடலிற்கு மலைபோன்ற வன்மையை தரும். ஆண்மையை உண்டாக்கும். உடலிற்கு மிக நன்று.

    (Meaning:) This rice is a good nurtient. Its giving more power and vigour to the body.

    செஞ்சம்பா அரிசி
    செஞ்சம்பாத் தண்டுலத்தால் தீராச் சிறுசிரங்கும்
    விஞ்சுபுண்ணும் வன்சொறியும் மெய்க்கணியாம் - விஞ்சும்
    அதிகபசி தானே அணங்கரசே ! இந்தப்
    பதியதனில் நாளும் பகர்.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile - இஃது கிளைக்கின்ற சிரங்கு, பெரும்புண், யானைசொறி இவற்றை உண்டாக்கும், அதிக பசியைக் கொடுக்கும்.

    (Meaning:) This rice will produce Scabies, Wounds, Urticaria, Itchinig. Its a good Appetite stimulent in action.


    கல்லுண்டைச் சம்பா அரிசி

    கல்லுண்டைச் சம்பாவைக் கண்டருந்தி நின்றவர்முன்
    மல்லுண்ட பேரெதிர்க்க வாய்க்குமோ - வில்லுண்டை
    போலுரையாம் நல்ல புசபலமாம் இன்சுவையாம்
    பாலனைய மென்மொழியே ! பார்.
    - அகத்தியர் குணபாடம்.


    (பொருள்Smile சுவையுள்ள இதை உண்பவர்க்குப் பேசுந் திறமையைத் தரும்; குத்துச் சண்டைக்காரரும் எதிர்க்கமுடியாத வன்மையை உண்டாக்கும்.

    (Meaning:) Tasty in nature. It will give more stamina and power to the body.

    குண்டுச்சம்பா அரிசி

    குண்டுச்சம் பாவரிசி கொண்டுண்ணும் பேர்களுக்குப்
    பண்டையில்லா மந்தநோய் பாரிக்கும் - அண்டுபடாத்
    தாகமெல் லாமொழியும் தையலே ! வன்கரப்பான்
    தேகமெல் லாம்பரவுஞ் செப்பு.
    - அகத்தியர் குணபாடம்.


    (பொருள்Smile இதனால் பசித்தீ கெடும். கரப்பான் உண்டாகும். நீர்வேட்கை போகும்.

    (Meaning:) This rice will distrub appetite. It will produce Eczema. Its good for thirst.

    குன்றிமணிச் சம்பா அரிசி

    குன்றி மணிச்சம்பா கொண்டால் அனில் மறும்
    வென்றி தரும்பல மிகுக்குங்காண் - துன்றிநோய்
    எல்லாம் பறக்குமுறை இந்திரியப் புஷ்டியும்டாம்
    நல்லா ரறிய நவில்.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile இந்த அரிசியை உண்ணில், வளி நோய்கள் விலகும். உடல் வலுக்கும். ஆன்மை பெருகும்.

    (Meaning:) This rice will cure all types of Vaadha diseases and its a nutritive and aphrodisiac in action.

    அன்னமழகி அரிசி

    அன்ன மழகியரி ஆரோக்கிய ங்கொடுக்குந்
    தின்ன வெகுரிசியாஞ் செப்பக்கேள் - இந்நிலத்து
    நோயனைத்துந் தூளாய் நொறுங்கத் தகர்த்துவிடுந்
    தீயனலைப் போக்குந் தெளி.
    - அகத்தியர் குணபாடம்.

    (பொருள்Smile மிகுந்த சுவையுள்ள அன்னமழகி அரிசி, எல்லா சுரங்களையும், வெப்பத்தையும் போக்கி, உடற்கு நன்மை கொடுக்கும்.

    (Meaning:) This rice is very tasty. It will cure all type of Fevers. It removes body heat and its a good nutrient in action
    நன்றி -சைன்டிபிக் சித்தா

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி  Empty Re: சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி

    Post by THAMIZHAVEL Mon 18 Apr 2011, 9:09 pm

    நம் முன்னோர்களின் நுண்ணிய அறிவு போற்றுதலுக்குரியது.

    நாம் இப்போது எவ்வளவு செலவு செய்தாலும் சுவையான, நன்மை தரக்கூடிய, ஏன், நஞ்சற்ற அரிசி வாங்க முடியுமா இப்போது?

    அறிவின் வளர்ச்சி என்பது வாழ்க்கை மற்றும் சூழல் மேம்பாடு தானே!!??

    நமது காலத்திறக்குப் பின் இந்த நன்மைகளீன் சுவையைக்கூட சிறிதும் அறியா நம் குழந்தைகளை நிணைத்துப்பார்ப்போம். மனது கனக்கிறது!

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே.
    தமிழவேள்
    தமிழ் மரபுவழி மருத்துவன்.

    THAMIZHAVEL

    Posts : 3
    Points : 7
    Reputation : 0
    Join date : 18/04/2011

    Back to top Go down

    சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி  Empty st

    Post by sridhar Thu 27 Dec 2012, 4:56 pm


    f

    sridhar

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 27/12/2012

    Back to top Go down

    சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி  Empty Re: சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum