என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
மகளிர் நலத்தில் ஹோமியோ மருத்துவம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
மகளிர் நலத்தில் ஹோமியோ மருத்துவம்
ஹோமியோபதி மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பல்வேறு சிறப்புத் தன்மைகளைக் கொண்டது.
பிற முறை மருத்துவர்கள் ஐந்தறிவு படைத்த எலி, பூனை, முயல், குரங்கு போன்ற விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே (ஆரோக்கியமான) மனிதரிடம் பரிசோதனை செய்யப்பட்டவை.
மருந்தின் அமைப்பு, வீரியப்படுத்துதல், மருந்தைத் தேர்வு செய்தல் அனைத்திலும் ஹோமியோபதி பிற மருத்துவ முறைகளிலிருந்து மாறுபடுகிறது.
ஹோமியோபதியில் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கு பிரதானப் பங்கு உண்டு. உடலும், மனமும், உயிரும் இணைந்த படைப்பாக முழுமையாக மனிதனைப் பார்க்கிறது. உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவுகளை வியாதி என ஹோமியோபதி கூறுகிறது.
உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவு, பாதிப்புகளால் வெளிப்படும் அறிகுறிகளை 2 வகைகளாகப் பிரிக்கலாம்.
1. மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது மனக்குறிகள்
2. உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது புறக்குறிகள் (Physical Symptoms)
இவைகளைத் தொகுத்து குறிகளின் முழுமைக்கு பொருந்தக்கூடிய ஒரு மருந்தை தேர்வு செய்து கொடுப்பதால் நோயாளி உடலாலும் மனதாலும் முழுமையாக, நிரந்தரமாக குணமாகிறார்.
பெண்களுக்கு பயன்தரக்கூடிய மருந்துகள் ஹோமியோபதியில் அதிக அளவு உள்ளன.
பருவமடைந்த காலம் முதல் மாதவிலக்கு நிற்கும் காலம் வரை ஏற்படக்கூடிய பெண்களின் உடல்நலப் பிரச்சனைகள் ஏராளம். வெளியில் சொல்ல முடியாத நிலையில், தங்கள் பிரச்சனைகளுக்கு எந்தவிதச் சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருக்கும் பெண்கள் பலர்.
கல்வியும், நாகரிகமும் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் ஓரளவுக்குப் பெண்கள் தங்கள் அந்தரங்கப் பிரச்சனைகளுக்கு மருத்துவம் செய்துகொள்ள முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
இன்றைக்கு இங்குள்ள சமூக அமைப்பில் ஒரு பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் குடும்பமே பாதிக்கப்படும். எனவே பெண்கள் தங்கள் நலத்தை பற்றி அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.
மற்ற மருத்துவ முறை கைவிட்ட, சிக்கலான, பெண்களின் நாள்பட்ட வியாதிகளைக் கூட ஹோமியோபதியில் எளிமையாக, இயற்கையான வழி முறைகளில் குணப்படுத்த முடியும். எனவே பெண்கள் தங்களுக்கு எந்த உடல்நல, மனநலப் பிரச்சனைகளாக இருந்தாலும் முழு நம்பிக்கையோடு ஹோமியோபதி மருத்துவத்திற்கு வரலாம்.
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் 13லிருந்து 15 வயதிற்குள் பெண்கள் பருவமடைந்து விடுகின்றனர். ஒரு சில பெண்கள் உரிய வயது கடந்தும் பருவமடைவதில்லை. அவர்களது உடல் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு பல மருந்துகள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் ரத்த பரிசோதனையை வைத்தோ, மற்ற மருந்துகளைத் தேர்வு செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மன நிலை விருப்பு, வெறுப்பு பழக்க வழக்கங்கள், உடல் அமைப்பு, நடவடிக்கைகள், குடும்பப் பின்னணி, அப்பெண்ணைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்து அதன் அடிப்படையில் மருந்து தேர்வு செய்து கொடுக்கும் போது அந்தப் பெண்ணுக்கு விரைவில் முதல் மாதவிடாய் ஏற்பட்டு விடுகிறது.
பெரும்பாலான பெண்களுக்குள்ள பிரச்சனை என்னவென்றால் ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular Menses). இந்தப் பிரச்சனையும் பெண்ணுக்குப் பெண் மாறுகிறது. எனவே மருந்தும் மாறுபடுகிறது.
முந்திய மாதவிடாய் (Early Menses), பிந்திய மாதவிடாய் (Late Menses), பெரும்பாடு-அதிகளவு மாதவிலக்கு ஏற்படுதல் மாதவிலக்கின் போது கடுமையான வயிற்று வலியும், உடல் வலிகளும் ஏற்படுதல், இரத்தப் போக்கின் நிறத்திலும், தன்மையிலும் மாறுபாடு என்பவை எல்லாம் கர்ப்பப்பை இயக்கம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சனைகள்.
கர்ப்பப்பையின் இயக்கம், செயல்பாடுகளை மையமாக வைத்தே பெண்களின் ஆரோக்கியம் அமைகிறது. எனவே கர்ப்பப்பை சார்ந்த எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் தாமதமின்றி உடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
திருமணமானபின் ஏறக்குறைய ஓராண்டுக்குள் கருத்தரிக்கவில்லை என்றால் கணவன், மனைவி இருவருமே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. பெண்களைப் பொறுத்தவரையில் மலட்டுத்தன்மையை நீக்கித் தாய்மைக்குரிய ஹோமியோபதி மருந்துகள் மூலம் பெறலாம்.
பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பை பலவீனம் மற்றும் இரத்தசோகை காரணமாகவே ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை பலவீனத்தைப் போக்க மாதவிலக்குச் சுழற்சியை ஒழுங்குபடுத்த Caulophyllum pulsatilla, Nat.mur., Sepia போன்ற பல ஹோமியோ மருந்துகள் உதவுகின்றன.
சினைப்பையில் (Ovary) அல்லது கர்ப்பப்பையில் (Uterus) பலவித கட்டிகள், இயற்கைக்குப் புறம்பான வளர்ச்சிப்போக்குகள் (Cysts, Fibroids, Tumors) ஏற்பட்டு அதனால் மலட்டுத்தன்மை உருவானாலும் ஹோமியோபதி மருந்துகள் அவற்றை அகற்றி மலட்டுத்தன்மையை மாற்றும் ஆபரேஷன் எதுவும் தேவைப்படாது.
கர்ப்ப கால பராமரிப்புக்கும் பல ஹோமியோபதி மருந்துகள் பயன்படுகின்றன. கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தி, இடை மாதங்களில் ஏற்படும் கருச்சிதைவு, மலச்சிக்கல், மூலம், அசுத்த இரத்தக்குழாய் வீக்கம், திடீரென ஏற்படும் இரத்தப்போக்கு போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் எளிமையாக, மென்மையாக குணப்படுத்தலாம். மேலும் ஹோமியோபதி மருந்துகள் பக்க விளைவுகள், பின்விளைவுகள் இல்லாததால் பாதுகாப்பானவை. கர்ப்பப் பையின் கருவிற்கும், தாயின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது ஹோமியோபதி.
பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனையும் உடனுக்குடன் நீங்கி சுகப்பிரசவம் ஏற்படச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உதவுகின்றன. பிரசவித்த தாய்மார்கள் சிலருக்கு பால் சுரப்பதேயில்லை. அல்லது குறைவாகச் சுரக்கும் நிலை இருக்கும். அதனால் குழந்தை பிறந்த நாட்களிலேயே குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே தாய்மார்கள் போதுமான அளவு பால் சுரப்பதற்கு ஹோமியோபதியில் மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.
மார்பகப் பராமரிப்பிலும் பெண்கள் அக்கறை செலுத்த வேண்டும். கட்டிகளோ, சினைப்புகளோ, வீக்கமோ, வலியோ, காம்புகளில் வெடிப்போ, புண்களோ காணப்பட்டால் கை வைத்தியம் செய்து அப்படியே விட்டுவிடக்கூடாது. மார்பகக் கட்டிகளை அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை. ஹோமியோ சிகிச்சை மூலம் அவற்றை கரைத்து குணப்படுத்தி மீண்டும் கட்டிகள் வராமல் செய்ய முடியும். மார்பக அழற்சி (Mastitis) காரணமாக ஏற்படும் கல் போன்ற இறுக்கத்தால், வீக்கத்தால் துணி பட்டால் கூட தாங்க முடியாத வலி சிலருக்கு ஏற்படும். இதற்கு உடனடி நிவாரணம் மட்டுமல்லாமல் முழு குணமும் பெற ஹோமியோபதி மருத்துவமே சிறந்தது.
பிற முறை மருத்துவர்கள் ஐந்தறிவு படைத்த எலி, பூனை, முயல், குரங்கு போன்ற விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே (ஆரோக்கியமான) மனிதரிடம் பரிசோதனை செய்யப்பட்டவை.
மருந்தின் அமைப்பு, வீரியப்படுத்துதல், மருந்தைத் தேர்வு செய்தல் அனைத்திலும் ஹோமியோபதி பிற மருத்துவ முறைகளிலிருந்து மாறுபடுகிறது.
ஹோமியோபதியில் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கு பிரதானப் பங்கு உண்டு. உடலும், மனமும், உயிரும் இணைந்த படைப்பாக முழுமையாக மனிதனைப் பார்க்கிறது. உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவுகளை வியாதி என ஹோமியோபதி கூறுகிறது.
உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவு, பாதிப்புகளால் வெளிப்படும் அறிகுறிகளை 2 வகைகளாகப் பிரிக்கலாம்.
1. மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது மனக்குறிகள்
2. உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது புறக்குறிகள் (Physical Symptoms)
இவைகளைத் தொகுத்து குறிகளின் முழுமைக்கு பொருந்தக்கூடிய ஒரு மருந்தை தேர்வு செய்து கொடுப்பதால் நோயாளி உடலாலும் மனதாலும் முழுமையாக, நிரந்தரமாக குணமாகிறார்.
பெண்களுக்கு பயன்தரக்கூடிய மருந்துகள் ஹோமியோபதியில் அதிக அளவு உள்ளன.
பருவமடைந்த காலம் முதல் மாதவிலக்கு நிற்கும் காலம் வரை ஏற்படக்கூடிய பெண்களின் உடல்நலப் பிரச்சனைகள் ஏராளம். வெளியில் சொல்ல முடியாத நிலையில், தங்கள் பிரச்சனைகளுக்கு எந்தவிதச் சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருக்கும் பெண்கள் பலர்.
கல்வியும், நாகரிகமும் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் ஓரளவுக்குப் பெண்கள் தங்கள் அந்தரங்கப் பிரச்சனைகளுக்கு மருத்துவம் செய்துகொள்ள முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
இன்றைக்கு இங்குள்ள சமூக அமைப்பில் ஒரு பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் குடும்பமே பாதிக்கப்படும். எனவே பெண்கள் தங்கள் நலத்தை பற்றி அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.
மற்ற மருத்துவ முறை கைவிட்ட, சிக்கலான, பெண்களின் நாள்பட்ட வியாதிகளைக் கூட ஹோமியோபதியில் எளிமையாக, இயற்கையான வழி முறைகளில் குணப்படுத்த முடியும். எனவே பெண்கள் தங்களுக்கு எந்த உடல்நல, மனநலப் பிரச்சனைகளாக இருந்தாலும் முழு நம்பிக்கையோடு ஹோமியோபதி மருத்துவத்திற்கு வரலாம்.
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் 13லிருந்து 15 வயதிற்குள் பெண்கள் பருவமடைந்து விடுகின்றனர். ஒரு சில பெண்கள் உரிய வயது கடந்தும் பருவமடைவதில்லை. அவர்களது உடல் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு பல மருந்துகள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் ரத்த பரிசோதனையை வைத்தோ, மற்ற மருந்துகளைத் தேர்வு செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மன நிலை விருப்பு, வெறுப்பு பழக்க வழக்கங்கள், உடல் அமைப்பு, நடவடிக்கைகள், குடும்பப் பின்னணி, அப்பெண்ணைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்து அதன் அடிப்படையில் மருந்து தேர்வு செய்து கொடுக்கும் போது அந்தப் பெண்ணுக்கு விரைவில் முதல் மாதவிடாய் ஏற்பட்டு விடுகிறது.
பெரும்பாலான பெண்களுக்குள்ள பிரச்சனை என்னவென்றால் ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular Menses). இந்தப் பிரச்சனையும் பெண்ணுக்குப் பெண் மாறுகிறது. எனவே மருந்தும் மாறுபடுகிறது.
முந்திய மாதவிடாய் (Early Menses), பிந்திய மாதவிடாய் (Late Menses), பெரும்பாடு-அதிகளவு மாதவிலக்கு ஏற்படுதல் மாதவிலக்கின் போது கடுமையான வயிற்று வலியும், உடல் வலிகளும் ஏற்படுதல், இரத்தப் போக்கின் நிறத்திலும், தன்மையிலும் மாறுபாடு என்பவை எல்லாம் கர்ப்பப்பை இயக்கம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சனைகள்.
கர்ப்பப்பையின் இயக்கம், செயல்பாடுகளை மையமாக வைத்தே பெண்களின் ஆரோக்கியம் அமைகிறது. எனவே கர்ப்பப்பை சார்ந்த எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் தாமதமின்றி உடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
திருமணமானபின் ஏறக்குறைய ஓராண்டுக்குள் கருத்தரிக்கவில்லை என்றால் கணவன், மனைவி இருவருமே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. பெண்களைப் பொறுத்தவரையில் மலட்டுத்தன்மையை நீக்கித் தாய்மைக்குரிய ஹோமியோபதி மருந்துகள் மூலம் பெறலாம்.
பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பை பலவீனம் மற்றும் இரத்தசோகை காரணமாகவே ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை பலவீனத்தைப் போக்க மாதவிலக்குச் சுழற்சியை ஒழுங்குபடுத்த Caulophyllum pulsatilla, Nat.mur., Sepia போன்ற பல ஹோமியோ மருந்துகள் உதவுகின்றன.
சினைப்பையில் (Ovary) அல்லது கர்ப்பப்பையில் (Uterus) பலவித கட்டிகள், இயற்கைக்குப் புறம்பான வளர்ச்சிப்போக்குகள் (Cysts, Fibroids, Tumors) ஏற்பட்டு அதனால் மலட்டுத்தன்மை உருவானாலும் ஹோமியோபதி மருந்துகள் அவற்றை அகற்றி மலட்டுத்தன்மையை மாற்றும் ஆபரேஷன் எதுவும் தேவைப்படாது.
கர்ப்ப கால பராமரிப்புக்கும் பல ஹோமியோபதி மருந்துகள் பயன்படுகின்றன. கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தி, இடை மாதங்களில் ஏற்படும் கருச்சிதைவு, மலச்சிக்கல், மூலம், அசுத்த இரத்தக்குழாய் வீக்கம், திடீரென ஏற்படும் இரத்தப்போக்கு போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் எளிமையாக, மென்மையாக குணப்படுத்தலாம். மேலும் ஹோமியோபதி மருந்துகள் பக்க விளைவுகள், பின்விளைவுகள் இல்லாததால் பாதுகாப்பானவை. கர்ப்பப் பையின் கருவிற்கும், தாயின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது ஹோமியோபதி.
பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனையும் உடனுக்குடன் நீங்கி சுகப்பிரசவம் ஏற்படச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உதவுகின்றன. பிரசவித்த தாய்மார்கள் சிலருக்கு பால் சுரப்பதேயில்லை. அல்லது குறைவாகச் சுரக்கும் நிலை இருக்கும். அதனால் குழந்தை பிறந்த நாட்களிலேயே குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே தாய்மார்கள் போதுமான அளவு பால் சுரப்பதற்கு ஹோமியோபதியில் மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.
மார்பகப் பராமரிப்பிலும் பெண்கள் அக்கறை செலுத்த வேண்டும். கட்டிகளோ, சினைப்புகளோ, வீக்கமோ, வலியோ, காம்புகளில் வெடிப்போ, புண்களோ காணப்பட்டால் கை வைத்தியம் செய்து அப்படியே விட்டுவிடக்கூடாது. மார்பகக் கட்டிகளை அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை. ஹோமியோ சிகிச்சை மூலம் அவற்றை கரைத்து குணப்படுத்தி மீண்டும் கட்டிகள் வராமல் செய்ய முடியும். மார்பக அழற்சி (Mastitis) காரணமாக ஏற்படும் கல் போன்ற இறுக்கத்தால், வீக்கத்தால் துணி பட்டால் கூட தாங்க முடியாத வலி சிலருக்கு ஏற்படும். இதற்கு உடனடி நிவாரணம் மட்டுமல்லாமல் முழு குணமும் பெற ஹோமியோபதி மருத்துவமே சிறந்தது.
ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» தோற்காத ஹோமியோ மருத்துவம்
» ஹோமியோ மருந்து தயாரிப்பு மற்றும் ஹோமியோ துறை சார்ந்த சட்ட நுணுக்கங்கள்
» குழந்தைகளுக்கு ஹோமியோ மருந்துகள் -இது ஒரு ஹோமியோ பீடியாட்ரிசீயன் முழு விளக்கம்
» புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -3
» தலைவலிக்கு ஹோமியோ
» ஹோமியோ மருந்து தயாரிப்பு மற்றும் ஹோமியோ துறை சார்ந்த சட்ட நுணுக்கங்கள்
» குழந்தைகளுக்கு ஹோமியோ மருந்துகள் -இது ஒரு ஹோமியோ பீடியாட்ரிசீயன் முழு விளக்கம்
» புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -3
» தலைவலிக்கு ஹோமியோ
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|