ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    2 posters

    Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:27 pm

    தமிழ் இலக்கியம்

    தமிழ் இலக்கியம்பலவகைப்படும். அவை, பத்துப்பாட்டு,எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் என விரிவடைந்துஇலக்கிய வகையின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகும். காலத்துக்கு ஏற்ப கருத்துகள்வளர்ந்து கொண்டே வருவதைப் போல இலக்கிய வளர்ச்சியும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

    கலை இலக்கியம்

    இலக்கியம் கலைஎன்னும் கோட்பாட்டினை உள்ளடக்கியது. தமிழ்ப் புலமை மிக்கோர் நெஞ்சில் இடம் புகுந்தகலை, வடிவ நிலையை அடைந்துகைத்தொழில் கைவினைத் திறத்தினால் உருவாகும் கட்டிடக் கலை போன்ற பயன் கலைகளும்,புலன்களுக்கும்மனத்திற்கும் இன்பத்தைத் தருகின்ற சிற்பம், ஓவியம் போன்ற இன்பக் கலைகளும், மாந்தர் தம் உள்ளங்களில் சுவையுணர்வை எழுப்பி அழகையும்இன்பத்தையும் ஊட்டுகின்ற இசை, நாட்டியம்,நாடகம், கூத்து என்னும் (Fine Arts, PerformingArts) நுண்கலைகளும், அறிவுக்கும் வாழ்க்கை நலத்துக்கும்தேவையாயிருக்கின்ற மருத்துவம், வானவியல் போன்ற (Science)அறிவியல் கலைகளும்,வாழ்வியல் உண்மைகளைமொழிச் சுவை கலந்து படைக்கும் படைப்புகளாகஇலக்கியக் கலைகளாகப் படைக்கப்பட்டுள்ளன.

    இத்தகைய கலைகள்அனைத்தும் படைப்பாளர்களால் படைக்கப் படும் போது, அவற்றைச் செய்யுள் வடிவில் கூறுவதைத் தமிழ்மரபாகக் கொண்டிருந்தனர்.

    செய்யுள்இலக்கியம்

    காகிதமும் அச்சுஇயந்திரமும் இல்லாத காலத்தில், ஓலைச் சுவடிகளில்எழுதிப் படிப்பதும், சுவடிகளைப்பேணிக் காப்பதும் கடினமானதாக இருந்தது. செய்யுள் வடிவங்களைப் பெற்ற கலைஇலக்கியங்கள் எளிதில் மனனம் செய்வதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் ஏற்றதாக,பயனுடையதாக விளங்கியது.எத்தகைய செய்திகளானாலும் அவற்றைக் கல்லிலோ, செப்புப் பட்டயங்களிலோ ஓலைச் சுவடிகளிலோஎழுதும் போது, செய்யுள் வடிவமேகையாளப்பட்டது. அவ்வாறு, செய்யுளுருவம்பெற்ற மருத்துவம், தனித்த இலக்கியவகையாக வளர்ச்சியுற்று ஏட்டுருவம் பெறத் தொடங்கிற்று.

    மருத்துவ இலக்கியவடிவம்

    இலக்கிய வகையாகவளர்ச்சியுற்று வடிவநிலை பெற்ற மருத்துவம் அதன் கண்ணமைந்த செய்யுள்கள், வடிவங்களுக்கேற்ற யாப்பின் உறுப்புகளான எதுகை,மோனை, அடி, தொடை, போன்றசெய்யுளுறுப்புகளைக் கொண்டு வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, கலி வெண்பா, விருத்தங்கள், உவமவகை, அணிவகை ஆகியவற்றை வடிவமாகக் கொண்டன.

    "இலக்கியம்'என்னும் வழக்கு

    ஆங்கிலத்தில்,ஒரு பொருளைப் பற்றிக்கூறும் செய்திகளடங்கிய துண்டறிக்கை (Phamplet), சிற்றேடு (Monograpt), அறிக்கை (Report) ஆகியவற்றை இலக்கியம் ( Literature) என்று பொருள்படும் சொல்லால் வழங்குவது மரபு.தமிழிலும் பேச்சு மொழியினை வழக்கு எனவும், எழுத்து மொழியினை இலக்கியம் எனவும் வழங்குதல் மரபு. தமிழில் மருத்துவம்என்னும் அறிவியல் செய்திகளைக் கூறும் நூல்கள் இலக்கியமாகவும் திகழ்கின்றன. எனவே,சித்த மருத்துவ நூல்களும்இலக்கியம்என்று வழங்கப்படுகின்றன.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:28 pm

    சித்தர்இலக்கியம்

    தமிழில் வழங்கிவரும் மருத்துவ நூல் ஆசிரியர் பெயர்கள் அனைத்தும் சித்தர்கள் பெயராலேயேவழங்கப்படுகின்றன. அகத்தியர்12000; திருமூலர்8000;போகர்7000; மச்சமுனி800; சட்டமுனி3000; கொங்கணர்3000; கோரக்கர் சந்திரரேகை என்றேகுறிப்பிடப்படுகின்றன. இப்பெயர்கள் அனைத்தும் சித்தர் பெயராகவே இருப்பதனால்,மருத்துவ இலக்கியம்அனைத்தும் சித்தர்இலக்கியம்என்னும்பொதுப்பெயரால் வழங்கப்படுகின்றன.

    சித்தர்இலக்கியம் முழுவதும் மருத்துவம், வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கு கூறுகளைக் கொண்ட மருத்துவத்தின் அடிப்படைகளை வகுத்துக்கொண்டு, நோய்களைக்கண்டறிதல், மருந்துகளைநோய்களுக்கு ஏற்றவாறு தயாரித்து அளித்தல், நோய் அணுகாதிருக்க கற்ப முறைகளைக் கூறுதல், சாகா நிலையைப் பெற யோக முறைகளை விளக்குதல்போன்ற செய்திகளையும் முறைகளையும் உரைப்பதால், ‘மருத்துவ இலக்கியம்என்றும் வழங்கப்படும். அவ்வாறான மருத்துவஇலக்கிய நூல்கள் பழங்காலத்திலிருந்தே தமிழ்மொழியில் வழங்கி வருவதனால், அவை, ‘தமிழ் மருத்துவ நூல்என்று பழமையைச்சுட்டும் பெயராகவும் வழங்கப்படுகின்றன.

    மருத்துவநூலாசிரியர்

    தமிழ் மருத்துவநூல்கள் பெரும்பாலும் சித்தர் எனப்படும் திருமூலர், அகத்தியர்,போகர், புலிப்பாணி, மச்சமுனி,சட்டமுனி, போன்ற முனிவர்கள் பெயராலேயே வழங்கப்படுகின்றன.இந்நூல்கள் அனைத்தும் சித்தர்களால் இயற்றப்பெற்றவை அல்ல. சித்தர்களின் மருத்துவமுறைகளையும்மருத்துவக்கொள்கைகளையும் பரம்பரை பரம்பரையாகக் கைக் கொண்டவர்களும், அவர்கள் பரம்பரையைச் சேர்ந்த மருத்துவப்புலவர்களும் பாடியவை.1

    தமிழ் மருத்துவத்துறையில் அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்கள் அமுதக் கலைஞானம், வைத்திய காவியம், பாலவாகடம், செந்தூரம், முப்பூ, கற்பம் போன்று மிகுதியாகக் காணப்படுகின்றன.பலவகைப் பெருநூல்களும், சிறு நூல்களும்இவரின் நூல்களாகக் கூறப் பெறுகின்றன. இத்தகைய நூல்களில் பல பிற்காலத்தில் மற்றையோரால் எழுதப்பட்ட நூல்கள்2 என்று அறிஞர்கள்துணிகின்றனர்.

    மருத்துவ நூல்கள்எல்லாம் குறிப்பிடும் ஆசிரியரால் இயற்றப் பெறவில்லை என்றாலும், ஒரு சில நூல்கள் அவரால் இயற்றப் பெற்றவை என்றுகுறிப்பிட்டுக் காட்டுவதற்கு ஏதுவாக எவ்விதமான சான்றுகளும் அமையவில்லை. எல்லாநூலும் மூல ஆசிரியரால் இயற்றப் பெற்றவை என்போர்க்கும், எந்த நூலும் மூல ஆசிரியரால் இயற்றப் பெற்றவைஅல்ல என்று கூறுவோர்க்கும் ஆதரவாகவே மருத்துவ நூல்கள் அமைந்திருக்கின்றன. மருத்துவநூலின் செய்யுளைக் கொண்டு அதனை இயற்றிய ஆசிரியரின் பெயரைக் கண்டறிய இயலாத நிலைஏற்படுகிறது.

    சித்தர் இலக்கியநூலின் செய்யுளைக் கொண்டோநடையைக் கொண்டோவழங்கப்படும் மொழியைக் கொண்டோ எந்தச் சித்தர்என்று கண்டறிய முடியாத நிலை ஏற்படுகிறது. காரணம், எந்தச் சித்தரின் நடையும் இதுவரை அறுதியிட்டுக்கண்டறியப்படாமல் இருப்பதேயாகும்.

    மருத்துவர் மரபு
    வால்மீகி காலம் முதற்கொண்டு கம்பன் காலம் வரைஅகத்தியர் மரபு என ஒன்று இருந்து வந்திருக்கிறது. ஆதி சங்கரர் மரபு, தருமையாதீனமரபு போன்று வளர்ந்து நின்ற சங்கிலித் தொடரில் ஏதோ ஓர் அகத்தியர் மருத்துவம் எழுதி, அக்கருத்துசெவி வழிப் பேணப்பட்டு, பிற்காலத்தில் புலமை செறிந்த மரபினரால் எழுதப்பெற்றதால் நூலின் நடை பழமைப் பொலிவைப் பெறவில்லை3 என்னும் கருத்தும்நிலவுகிறது

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:28 pm

    மருத்துவச்சுவடிகள்

    தமிழ்நாடு அரசுதொகுத்திருந்த சுவடி நூல்களின் சுருக்க விளக்கக் குறிப்பேடுகளாக 1910–இல் ஐந்து தொகுதிகளை வெளியிட்டது. 1911–இல் அதன் திருந்தியபதிப்பை வெளியிட்டது. 1932–இல் தமிழ்ச்சுவடிகளின் அகரவரிசைக் குறிப்பேட்டுத் தொகுதிகளை வெளியிட்டது. 1980–இல் திருத்தி வெளியிட்ட தமிழ்ச் சுவடிகளின் அகரவரிசைக் குறிப்பேட்டின் படி, மருத்துவச்சுவடிகள் 574 ஆகக்காணப்படுகின்றன. இத்தொகுப்பில் அனைத்துச் சுவடிகளும் அடங்கும் என்றும்கூறமுடியாது. இத்தொகுப்பில் காணப்பெறாத வேறு சில சுவடிகள் வேறு இடங்களில்இருப்பதாகத் தெரிகிறது. உதாரணமாக, உஸ்மான் கமிட்டி(1924) வெளியிட்ட தொகுப்பில்எமதூதுவன், ஞானட்டா, உலா போன்ற சுவடிகள் காணப்படுகின்றன. அவை,அரசு வெளியிட்டஅட்டவணையில் காணப்பெறாதவைகள் ஆகும்.

    தமிழில்மருத்துவச் சுவடிகளின் அட்டவணையைத் தொகுத்து வெளியிட்டவே. இரா. மாதவன், இதுவரை சுமார் 3000 சித்த மருத்துவச் சுவடிகள் கண்டறியப்பட்டுதொகுக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் அது முடிவடைந்ததாகக் கூறமுடியாதுஅது போல் மேலும் தொடர்ந்து தொகுக்கப்படவேண்டும்4 என்றும்குறிப்பிடுகின்றார்.

    தொகுக்கப்பெற்றமருத்துவச் சுவடிகள் அனைத்தும் வெவ் வேறானவை அல்ல. ஒரு தலைப்பில் உள்ள சுவடியேபல்வேறிடங் களிலிருந்து பெறப்பட்டிருக்கின்றன. அவை மட்டுமன்றி ஒரு தலைப்பில் உள்ளசுவடியே வெவ்வேறு தலைப்பிலும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, போகர்700 என்னும் மருத்துவ நூல் போகர் என்னும் சித்தர்நூலாக அறியப்படுகிறது. அந்நூல், பிரம்மமுனிஎண்ணூறு என்னும் வேறு பெயரால் அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது என்பதுஅறியத்தக்கது.

    அக்குறைபாட்டினைப்போக்குதற்குச் சுவடிகள் அனைத்தும் ஒப்பு நோக்கப்பட்டு, திரண்ட ஆய்வினை மேற்கொள்வது ஒன்றே சரியானமுறையாகும்.

    அகத்தியர்

    தமிழில்காணப்பெறும் மருத்துவ நூல்களில் அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்களே அதிகமாகஇருக்கின்றன. கீழ்த்திசைச்சுவடி நூலகத் தொகுப்பில் காணப்பெறும் மருத்துவச்சுவடிகளில் அகத்தியர் பெயரால் வழங்கப் பெறும் 166 சுவடிகள் உள்ளன. அத்தனை செய்யுள்களையும்ஒருவரால் இயற்றிட இயலுமா? என்று எண்ணும்போதே ஒரு வித மலைப்புத் தோன்றுகிறது. அந்நூல்களில் காணப் பெறுவது கற்பனைச்செய்யுள்கள் அல்ல; அறிவியல்கருத்துகளைக் கொண்ட மருத்துவச் செய்யுள்கள். மருத்துவ முறைகள் அனைத்தையும் ஒருவரேஅறிந்திருந்தாலும், அத்தனைச்செய்யுள்களையும் இயற்றுவதற்குச் செலவாகும் காலம் பல ஆண்டுகள். அப்படியிருக்கும்போது, அகத்தியர், பல மருத்துவ நூல்களை இயற்றினார் என்னும்கருத்து வலுவிழக்கின்றது.

    மறைந்த மருத்துவநூல்கள் பதிப்பில் வெளிவந்த நூல்களின் பாடல்கள், சில நூல்களைப் பற்றிய செய்திகளைக் கூறுவனவாகஅமைந்திருக்கின்றன. அவ்வாறு கூறப்பெறுகின்ற நூல்கள் தொகுக்கப்பெற்ற பட்டியல்களில்காணப் பெறாதவை. அவ்வாறான நூல்களில் சிலவற்றின் விபரம் வருமாறு:

    அகத்தியர்81000;அகத்தியர்51000; அகத்தியர்30000; அகத்தியர் 21000; அகத்தியர்18000; அகத்தியர்8000; திருமூலர்8000; பரஞ்சோதி 8000; கோரக்கர் வெண்பா; மச்சமுனி கலிப்பா; சங்கர மாமுனி கிரந்தம் போன்றவையாகும்.

    மேற்கண்டநூல்களின் பெயர்கள் மட்டுமே அறியக் கூடியவை களாக இருக்கின்றன. ஆனாலும், தேரையர் யமக வெண்பா என்னும் நூலுக்கு இயற்றியஉரையில் மேற்கோளாகக் காணப்பெறும் பாடல்களில், அகத்தியர்21000 என்னும் நூலின் பாடல்களும் காணப்படுவதனால்,அந்நூல் இருந்ததற்கானஅடையாளம் புலப்படுகிறது. மேலும், அந்நூல் உரையில் 84 மேற்கோள் நூல்கள் இடம் பெறுகின்றன. அவற்றுள்பல, வழங்கிவரும் நூல்களாகவும்இருக்கின்றன.5 அவற்றின்பெயர்களைக் கொண்டு அவை பழந்தமிழ் நூல்களாகவும் இடைப்பட்ட காலத்து நூல்களாகவும்இருந்தனவெனக் கருதலாம்.

    அத்தகையநூல்களின் பயன் கருதி, அவற்றைத்தொகுத்து வெளியிட்டால் மருத்துவத்துறைக்கு மிகவும் பயனுடையதாக அமையும். அத்தகையநூல்களின் வழி நூல்கள் எவை என்பதும் கண்டறியப் பட வேண்டும்.

    சுவடி நிலையங்கள்தமிழ் மருத்துவச் சுவடிகளைத் தொகுத்தும் பாதுகாத்தும் வருகின்ற நிலையங்களாக,பன்னிரண்டு நிலையங்களைக்குறிப் பிட்டுக் கூறலாம். பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களிலிருந்து பெறப்பெற்ற மருத்துவச்சுவடிகள் அவ்விடங்களில் பாதுகாக்கப் படுகின்றன.

    மிகவும்நலிந்தும் சிதைந்தும் காணப்படும் சுவடிகளும், நல்ல நிலையிலும் சிதைவுகள் ஏதுமில்லாத நிலையில்உள்ள சுவடிகளும், தொடக்கமும்முடிவும் இல்லாமல் இடைப்பகுதி மட்டுமே உள்ள சுவடிகளும், முழுவதும் இருந்தாலும் படித்தறிய முடியாதநிலையில் உள்ள சுவடிகளுமாக இருக்கின்றன.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:28 pm

    சுவடிநிலையங்களாவன:

    1. தமிழ்ப் பல்கலைக்கழகம்,ஓலைச்சுவடிகளைத்தொகுத்துப் பாதுகாப்பதுடன், அவற்றை ஆய்வுசெய்வதற்கென்று ஓலைச்சுவடித்துறைஎன்றொருதனித்துறையையும் இயக்கி வருகிறது. அத்துறையில் சுமார் 5000 சுவடிகள் இருக்கின்றன. அவற்றுள் மருத்துவச்சுவடிகள் மட்டும் ஏறத்தாழ 60 சதவீதம் எனலாம்.

    2. சென்னை, அரசினர் கீழ்த்திசைச்சுவடி நூலகம், பல்லாயிரக் கணக்கான சுவடிகளின் களமாகவிளங்குகிறது. இந்நூலகம்

    ஆய்வாளர்,சுவடியியல் கற்போர்,பதிப்பாளர், மருத்துவர், கல்வியாளர் போன்ற அனைவரும் பயன்படுத்தும்நோக்கில் அமைந்திருக்கிறது. இந்நிலையத்திலுள்ள தமிழ் மருத்துவச் சுவடிகளின்பட்டியல் பின்னிணைப்பில் இணைக்கப் பட்டுள்ளது.

    3. தஞ்சைச் சரசுவதிமஹால் நூல் நிலையம், தஞ்சை மன்னர்சரபோஜி (கி.பி. 1798 -1832) அவர்களால்ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு துறைசார்ந்த சுவடிகள், கையெழுத்துப்பிரதிகள் எனத் தொகுக்கப்பெற்று பாதுகாக்கப் படுகின்றன. இந்நிலையத்தில் பல்வேறுதலைப்புகளைக் கொண்ட 396 மருத்துவச்சுவடிகள் உள்ளன.

    4. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 270 மருத்துவச்சுவடிகளைத் தொகுத்திருக்கிறது. அவற்றுள் சில பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன.

    5. சித்த மருத்துவமேம்பாட்டுக் குழு 478 தலைப்புகளைக்கொண்ட சுவடிகளைச் சேகரித்துள்ளது.

    6. மத்திய அரசால் 1924–இல் நீதி அரசர் உஸ்மான் தலைமையில்அமைக்கப்பெற்ற சித்த மருத்துவ நூலாய்வுக்குழு, அதனது அறிக்கையில், 594 சுவடிகளைத் தொகுத்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

    7. உ.வே.சாமிநாதையர்நூலகம், 15 மருத்துவச்சுவடிகளைப் பாதுகாக்கிறது.

    8. விருத்தாசலம்,குமார வீரசைவ மடத்தில் 15 மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன.

    9. பாண்டிச்சேரி,பிரஞ்சுஇந்தியக்கலைக்கூடம் 80 சுவடிகளைப்பாதுகாக்கிறது.

    10. மதுரை, தமிழ்ச்சங்கம் 24 தலைப்புகளைக் கொண்ட நூல்களைப் பாதுகாக்கிறது.

    11. திருவனந்தபுரம்,கீழ்த்திசைச் சுவடிநூலகம் 165 மருத்துவச்சுவடி களைக் கொண்டிருக்கிறது.

    12. சென்னை, ஆசியவியல் நிறுவனம் பல சுவடிகளைத் தொகுக்கும்நிறுவனமாக விளங்குகிறது.

    13. மேற்கண்டநிலையங்களில் காணப்படும் சுவடிகள் மட்டுமல்லாது, பல தனியார் நிறுவனங்கள், மருத்துவச் சாலைகள், மருத்துவர்கள், சோதிடர்கள், மாந்திரீகர்கள், துறவிகள், மடாலயங்கள், சித்தர் பீடங்கள், கோயில்கள் எனப் பல்வேறிடங்களில்மேற்குறிப்பிட்ட தொகுப்புள் அடங்காத சுவடிகள் பயன் கருதாது முடங்கிக் கிடக்கின்றன.

    மேலை நாடுகளில்தமிழ் மருத்துவச் சுவடிகள்

    மேலை, கீழைநாடுகளில் சில, வணிகர்கள், அரசுத் துறை, பயணிகள் மூலமாக இந்தியாவுடனும் குறிப்பாகத்தமிழகத்துடனும் தொடர்புகளைக் கொண்டிருந்திருக்கின்றன. அவ்வாறான தொடர்பு களினால்,தமிழகத்திலிருந்து பலமருத்துவச் சுவடிகள் அந்நாடு களுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

    பண்டைக்காலத்தில், ‘கலைக் கோட்டுமுனிவர்என்றொரு முனிவர்இருந்ததாகத் தெரிகிறது. இவர் போகருக்கு முந்தைய காலத்தவர். இம்முனிவர் ககனவித்தை18008,இரசாயன நூல், சிற்பம்100000, என்னும் நூல்களை இயற்றியுள்ளதாகக் கோரக்கர்சந்திர ரேகை என்னும் நூல் குறிப்பிடுகிறது.6

    கலைக் கோட்டுத்தண்டு என்ற நிகண்டு நூலைத் தமிழில் இயற்றி யவர் கலைக் கோட்டு முனிவர்.திருவள்ளுவர் காலத்தில் சொற் றொகைஎன்னும் சொல்லின் தொகுதிஇருந்தது. சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்’, என்பது குறள்.அவ்வாறான சொற்றொகையைச் செம்மையாகச் செய்தவர் கலைக் கோட்டு முனிவராவார்.7

    சென்னையில்நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்திய ஜெர்மன் நாட்டுஅறிஞர், கலைக் கோட்டுமுனிவரைப் பற்றியும், அவர் பெயரால்வழங்கிவரும் நூல்களைப் பற்றியும், நூலுள் நுவலப்பெற்ற பொருட் சிறப்புப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.8 அந்த அறிஞர் கூறிய கட்டுரை வரிகளிலிருந்துகலைக் கோட்டு முனிவரின் நூல்கள் ஜெர்மன் நாட்டில் பாதுகாக்கப் படுவதாக அறியமுடிகிறது.

    அவ்வாறான பல அரியமருத்துவ நூல்கள் மேலை, கீழைநாடுகளுக்கும் சென்றிருக்கின்றன. அவ்வாறு இருப்பதாக அறியப் படும் சுவடிகளைப்பற்றிய விரிவான தகவல்களைத் திரட்டி,ஆய்ந்து, புதுப்பித்தல் தமிழ் மருத்துவத் துறைக்குவளஞ்சேர்க்கும்.

    (மேலை கீழைநாடுகளில் சுவடிகள் இருக்கு மிடங்களின் பட்டியல் அடிக்குறிப்பில் இணைக்கப்பட்டுள்ளது.)9

    பிறநாடுகளிலிருந்து தங்கள் நாடுகளுக்கு வந்தடைந்த ஓலைச் சுவடிகளைக் கண்டறியும் பணியைமேற்கொண்ட ஐரோப்பிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள், தாங்கள் பணி மேற்கொள்ள வேண்டிய இடங்களென 87 நூலகங்களைத் தேர்ந்தெடுத்தனர். அந்தநூலகங்களில் இருந்த சுவடிகளை ஆராய்ந்தபோது தமிழ் மருத்துவ ஓலைச் சுவடிகள்இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அச்சுவடிகளைப்பற்றிக் குறிப்பிடுகின்ற அவர்களின் குறிப்பேடுகளில், இந்தியாவின் பழமையான மொழிகளின் பெயரால் குறிப்பிட்டிருக்கின்றனர்.அவ்வாறு குறிப்பிட்டவற்றுள் ஒரு சில வருமாறு, ‘ஜொண்டு’, ‘இந்து’, ‘கர்நாடிக்/மலபார்’, ‘ஜாப்னா’, ‘கோரமண்டல’, ‘ட்ராமலி’, "ப்ரக்ரித்' போன்ற பெயர்களாகும்.10

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:29 pm

    மொழி மாற்றம்

    பழங்காலத்தில்வழங்கி வந்த பல தமிழ் மருத்துவச் சுவடிகள் சமஸ்கிருதத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்திலிருந்து திபேத்திய மொழியிலும், திபேத்திய மொழி யிலிருந்து மங்கோலிய மொழியிலும்,மங்கோலிய மொழியிலிருந்துருஷ்ய மொழியிலும் தமிழ் மருத்துவம் மொழி மாற்றம் பெற்று பயன்பாட்டில் இருந்துவந்திருக்கின்றது.

    திபேத்தியமொழியில் தஞ்சாவூர்என்னும் பெயருடையமருத்துவச் சுவடி பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. அச்சுவடி, சித்த மருத்துவ முறைகளை விரிவாகக் கூறுவதாகஅமைந்திருக்கிறது.

    கடந்த நூற்றாண்டுவரை மேலைநாடுகள் சிலவற்றில் சித்த மருத்துவ முறைகள் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றன.அவ்வாறு பயன்பாட்டில் இருந்த மருத்துவம் 11–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சித்த மருத்துவச்சுவடிகளின் மூலம் அரியப் பெற்று மேலை நாட்டு மொழிகளில் மொழிமாற்றம்பெற்றவைகளுமாகும்.

    மேலைகீழை நாடுகளிலும் இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் பெற்றும், வேறு பெயர்களால்வழங்கப் பெற்றும் வருகின்ற சித்த மருத்துவம் பற்றிய விரிவான தொடராய்வு நிகழ்த்திட,பல்கலைக் கழகங்களும்இந்திய அரசும் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளல் வேண்டும்.

    தமிழ் மருத்துவம்வேற்று மொழியில்

    தமிழில் தோன்றிமறைந்து விட்டதாகக் கருதப்படும் மிகச் சிறந்த நூல்கள் பல தமிழல்லாத பிற மொழிகளில்காணப்படுகின்றன. பிறமொழிகளில், மிகவும்குறிப்பாக சமஸ்கிருதம், திபெத்தியன்,அரபிக், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளில் வழங்கிவரும் மருத்துவநூல்கள், தமிழ் மருத்துவநூல்களாகக் காணப்படுகின்றன என்பர். அம்மொழிகளில், தமிழ் மருத்துவ நூல்கள் எளிதில் கிடைக்கக்கூடியவையாகவும், திரண்டமருத்துவக் கருத்துகளைத் தரக் கூடியவையாகவும் பல நூற்×ண்டுகளாகவே இருந்து வருகின்றன.

    சித்தமருத்துவத்தை மரபு வழியாக அறிந்த தொழில்முறை மருத்துவர்கள், தங்களுக்கு வேண்டிய சித்த மருத்துவ முறைகளைஅறிய அம்மொழிகளையே நாடி அறிந்து வருகின்றனர்.

    பழந்தமிழ்மருத்துவச் சுவடி நூல்கள் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையடைந்த போது, புதிதாகச் சுவடிகளை எழுதுவோரும், புதிய முறையில் அச்சுமுறையில் நூலாகப்பதிப்பிக்கும் போதும், தங்களுக்குவேண்டிய மொழிகளில் மாற்றியும், தங்களுக்கு வேண்டாதபகுதிகளை நீக்கியும், வேறு சிலகருத்துகளை இணைத்தும் எழுதியும் பதிப்பித்தும் உள்ளனர். அவ்வாறு, சித்த மருத்துவத்தின் மூலவடிவம் சிதைக்கப்பட்டநிலையில், சித்த மருத்துவமுறைகளைத் தனியே பிரித்தறிவது மிகவும் கடினமான செயலாகும் என்கிறார் வே. இரா.மாதவன்.

    கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலங்களில் தமிழ்மருத்துவ முறைகளிலுள்ள மருந்துகளில் பல சமஸ்கிருத மொழியில் பயன் படுத்தப்பட்டுவந்துள்ளது கண்டறியப் பட்டிருக்கிறது.11

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:29 pm

    தமிழ்மருத்துவத்தின் நிலைமாற்றம்

    பன்னெடுங்காலமாகத்தமிழர்களால் வளர்க்கப்பட்டு வந்த தமிழ் மருத்துவத்தை ஆயுர் வேதமாக மாற்றும்முயற்சி நிகழ்ந்துள்ளது. தமிழ் மருத்துவ நூல்கள் பல அவை வடமொழி நூல்களின்வழிநூலாகக் குறிப்பிடுகின்றன. ஆயுர்வேத நூல்களிலிருந்து தமிழில் பெயர்த் தெழுதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய சூழலில் பழந்தமிழ் மருத்துவ நூல்கள் அழிந்தும்உருமாறியும் இருக்கின்றன.12 (வேதநூல்களில்தாவரங்கள் இணைப்பு 3).

    தமிழ்மருத்துவத்தைத் தோற்றுவித்த மருத்துவ அறிஞர்கள், தங்கள் பட்டறிவால் கண்டறிந்த மருத்துவ முறைகளைவெளிப்படையாக யாருக்கும் தெரிவிக்கவோ கற்றுத் தரவோ முன்வரவில்லை. அவர்கள்கண்டறிந்த முறைகளை அவர்களே பயன்படுத்திக் கொண்டனர். அம்முறைகளை அனுபவ வாயிலாகவேஒரு சிலர் அறிந்திருக் கின்றனர். அளப்பரிய மருத்துவ முறைகள் மறைபொருளாக இருந்துவிடக் கூடாது என்றெண்ணிய ஒரு சிலர், எல்லாரும் பயன் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் அவற்றைவெளிப்படுத்தியுள்ளனர். வாய்மொழி மருத்துவமாக இருந்தவை, கல்வியில் தேர்ந்தவர்களால் நூல் வடிவமாகத்தொடங்கின. அவ்வாறான நிலைமாற்றம் கொண்ட மருத்துவத்தைக் கூறும் நூல்களே தமிழ்மருத்துவ நூல்களாகும்.

    சித்தர்இலக்கியமாக வழங்கி வரும் தமிழ் மருத்துவ நூல்கள் சித்தர்களின் மரபு வழியினரால்நூல் வடிமாகி உள்ளன. அவ்வாறு நூல் வடிவம் பெற்ற 3000 மருத்துவச் சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.தொகுக்காமல் விடுபட்ட நூல்களும் மறைந்த நூல்களும் பல. தொகுத்த மருத்துவச்சுவடிகளைப் பாதுகாக்கும் நிலையங்கள் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் 12 ஆகும். தமிழ் மருத்துவ ஓலைச் சுவடிகளைப் பலமேலைநாடுகளில் சுமார் 87 நூலகங்களில்கண்டறிந்துள்ளனர். சமஸ்கிருதம், மங்கோலியம்,ருஷ்ய மொழிகளில் தமிழ்மருத்துவம் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. தமிழ் மருத்துவம், ஆயுர் வேதம் என்னும் வேறு பெயராலும் வழங்கிவருவது கண்டறியப்பட்டுள்ளது.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:30 pm

    சித்த மருத்துவம்

    தமிழ்மருத்துவத்தின் தோற்றம் அறிய முடியாத அளவில் நீண்ட காலமாக வழங்கி வருகின்றமருத்துவமாக இருந்தாலும், தற்போதுகிடைக்கப் பெறும் மருத்துவ நூல்கள் அனைத்தும் சித்தர்கள் பெயராலேயே வழங்கிவருகின்றன. அதனால், தமிழ்மருத்துவத்தை உருவாக்கியவர்கள் சித்தர்கள் என்றும், மரபுவழிக்கருத்தின்படி தமிழ் மருத்துவமுறைகளைச் சித்த மருத்துவம்என்றும் வழங்கும் வழக்குஉருவாயிற்று.

    சித்த மருத்துவநூல்வடிவம்

    தமிழ் மருத்துவம்,பல்வேறு காலங்களில் மருத்துவ நூல்களாக இயற்றப்பெற்றிருக்கின்றன. அவை, தமிழ் மரபுஇலக்கியங்களைப் போலவே, இலக்கியவடிவங்களாக அமைந்து மருத்துவ இலக்கிய மாகத் திகழ்கின்றன.

    மருத்துவநூல்களின் பெயர்க் காரணம் தமிழ் மருத்துவ நூல்கள், தமிழ் இலக்கியத்தின் தாக்கத்தினைக் கொண்டவையாகஉள்ளன. தமிழ்ப்பா வகைகளில் அவற்றின் படைப்புகள் காணப்படுவதுடன், அப்பாக்களின் பெயரையே நூலின் பெயராகக்கொண்டிருக்கின்றன. அதே போல, தமிழிலுள்ளபேரிலக் கியங்கள், சிற்றிலக்கியங்கள்பலவற்றின் பெயர்களைக் கொண்டும் அமைந்திருக்கின்றன. வேறு சில நூலாசிரியர் பெயராலும்,நூலுள் அமைந்துள்ளபாக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டும் பெயர்கள் அமைந்துள்ளன. மேலும்,நூல் முதலிய பொருளின்அடிப்படையிலும், மருந்தின்பெயராலும், நோயின் பெயராலும்பெயர்கள் அமைந்துள்ளன.

    தமிழ் மருத்துவநூல்களைப் பொதுப்படையாக நோக்கும்போது, பெரும்பாலான நூல்களின் பெயர்கள் காரணப் பெயர்களாக அமைந்துள்ளன. சில நூல்கள்சிறப்புப் பெயராலும், இயற்பெயராலும்அமைந்திருக்கக் காணலாம்.

    பாவின் வகையால்பெயர் அமைந்த நூல்கள் பாவின் வகைகளில் வெண்பா முதல் இடம் பெறும். பிற பாக்களின்தளைகள் கலவாமல் அமைவதனால் இதனைச் சிறப்பு மிக்கதாகக் கருதுவர். அத்தகைய வெண்பாஎன்னும் யாப்பினையும் பயன்படுத்தி மருத்துவ முறைகளைக் கூறியிருப்பதுசிறப்பிற்குரியது. மேலும், பா வகைகள்அனைத்தும் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் பாவின் வகையே நூலின் பெயராக இருப்பதும்கருதத்தக்கது. அவ்வாறான நூல் வகைகள், வெண்பா, குறள், அகவல், விருத்தம், சிந்து, நொண்டி, கும்மி போன்றவையாகும்.

    அவை வருமாறு:

    வெண்பா வகை:

    தேரையர் வெண்பா

    தேரையர் சிகாமணிவெண்பா

    கோரக்கர் வெண்பா

    தேரையர் யமகவெண்பா

    அகத்தியர்ஆத்திச்சூடி வெண்பா

    அகத்தியர் வாகடவெண்பா

    அகத்தியர் வெண்பாமணி4000

    பிரம்ம முனிசூத்திர வெண்பா

    நத்தீசர்கரசைப்பா வெண்பா

    வைத்திய வெண்பா

    மதிவெண்பா100

    வகார மதிவெண்பா100

    குணவாகட வெண்பா

    போகர் வெண்பா

    அமர வெண்பாஅந்தாதி

    போன்றவற்றைக்குறிப்பிடலாம்.

    குறள் வெண்பா

    வெண்பாவின்வகையான குறள் வெண்பாவினால், திருக் குறளைப்போல அமைந்திருக்கும் நூல்கள் சில காணப்படுகின்றன. அவற்றுள் ஒளவைக் குறள்குறிப்பிடத் தக்கது.

    ஆசிரியப்பா

    பா வகைகளில்இரண்டாவதாக அமைகின்ற ஆசிரியப்பா, அகவல் ஓசையைஉடையதாகும். அகவல் ஓசையின் பெயரால் அமைந்த நூல் ஒன்றும் மருத்துவ நூலாகஇருக்கின்றது. அது,

    அகத்தியர் புதியஅகவல்என்பது.

    ஆசிரியப்பாவின்இனமான ஆசிரிய விருத்தப் பாக்களால் அமைந்த நூல்.

    "" அகத்தியர் விருத்தம்''என வழங்கப்படுகிறது.

    கலிப்பா

    பாக்களில்மூன்றாவதாக அமைகின்றது, கலிப்பா.இப்பாவகை யினால் இயற்றப் பெற்ற நூல், இப்பாவின் பெயரினால் வழங்கப் படுகிறது. அது,

    மச்சமுனி கலிப்பாஎன்பதாகும்.

    பாக்களின் வகையானதாழிசைச் செய்யுளினால் இயற்றப் பெற்ற நூல்,

    சட்டைமுனி தாழிசைஎன்பது.

    நொண்டி, சிந்து, கும்மி, பள்ளு

    காலத்தால்மிகவும் பிற்பட்ட செய்யுள் வகையாகக் கருதப்பெரும் நொண்டி, சிந்து, கும்மி என்னும் பாக்களைக் கொண்டு இயற்றப் பெற்றநூலுக்கு அவற்றின் பெயரையே அமைத்திருப்பதுடன், மிகவும் எளிய நடையில், பாமர மக்கள் அறிந்து கொள்ளத் தக்க வகையில்அந்நூல்கள் அமைந்திருப்பதும் கருதத் தக்கது, அவை:

    கருவூரார் நொண்டி

    கருவூரார்நொண்டிச் சிந்து

    கருவூரார் நொண்டிநாடகம்

    அகத்தியர்வைத்தியக் கும்மி

    யூகி முனிவர்வாகடக் கும்மி

    மச்சமுனி கும்மி

    அகத்தியர் பள்ளு

    என்பவை.

    இலக்கியங்களின்பெயர்களால் அமைந்த நூல்கள்

    காவியம், காப்பியம்

    பெருநூலாகஅமையும் காவியம், காப்பியம் ஆகியஇரண்டும் ஒருவகைச் செய்யுளானும், பலவகைச்செய்யுளானும், உரை நடை கலந்தும்,சொற்றொடர் நிலைச்செய்யுளாகவும் அமைபவையாகும்.

    அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஒன்றும்பலவும்குறைந்தும் வருதல்13 காப்பியத்தின்பொது இலக்கணம் எனக் கூறுவர். மருத்துவ நூலாக அமைந்துள்ள காவியம், காப்பியம் ஆகிய வற்றுக்கும் மேற்கண்ட இலக்கணம்பொருந்தி வரக் காணலாம்.

    தமிழ்க்காவியங்களும் காப்பியங்களும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருளைக் கொண்டும்,அவற்றுள் ஒன்றிரண்டுகுறைந்தோ கூட்டியோ அமைந்திருப்பதைப் போல, மருத்துவக் காவியமும், காப்பியமும்வைத்தியம், வாதம், யோகம், ஞானம் ஆகிய நான்கு உறுதிப் பொருள்களைத் தன்னகத்தே கொண்டும், அவற்றுள் ஒன்றிரண்டு குறைந்தும் அமைந்திருக்கக்காண்கிறோம். மேற்கண்ட நான்கு உறுதிப் பொருள்களைக் காவியம், காப்பியம் ஆகிய நூல்கள் கொண்டிருந்தாலும்,அவற்றைத் தனித்தனியேபொருளாகக் கொண்ட நூல்களும் இருக்கின்றன.

    பெரும்பகுதிமருத்துவ நூல்கள் தொடர் நிலைச் செய்யுளாகவே அமைக்கப் பட்டிருக்கின்றன. மருத்துவத்தைக்கூறும் தொகுப்பு நூல்போல் அல்லாமல் மருத்துவ இலக்கிய நூலாக அமைக்கப் பட்டுள்ளனஎனலாம்.

    மருத்துவக்காப்பியமாகவும், காவியமாகவும்காணப்படும் நூல்கள் வருமாறு:

    தன்வந்திரிவைத்திய காவியம் 1000

    தன்வந்திரிவைத்திய காவியம் 800

    சட்டை முனி வாதகாவியம் 3000

    கொங்கணர் வாதகாவியம் 3000

    மச்சமுனிபெருநூல் வைத்திய காவியம்

    இராம தேவர்வைத்திய காவியம் 1000

    திருமூலர்வைத்திய காவியம் 1000

    அகத்தியர் வாதகாவியம் 1000

    அகத்தியர்வைத்திய காவியம் 1500

    அகத்தியர் ஞானகாவியம்

    அகத்தியர்மாந்திரீக காவியம்

    அகத்தியர் இலட்சணகாவியம்

    அகத்தியர் பூரணகாவியம்

    போகர் வைத்தியகாவியம் 1000

    கருவூரார் வாதகாவியம்

    தேரையர் வைத்தியகாவியம் 1500

    யூகி முனிவர்வைத்திய காவியம் 1000

    போன்ற நூல்கள்குறிப்பிடத்தக்கவை. மேற்கண்ட அகத்தியர் நூல்களில், வாத காவியம், ஞான காவியம், மாந்திரீக காவியம், இலட்சண காவியம், பூரண காவியம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்ச காவியங்கள்என்று குறிப்பிடப் படுகின்றன. இக்காவியங்களில்அமைந்துள்ள அரும் பொருள்களின் விளக்கத்தை அறிய, ‘பஞ்ச காவிய நிகண்டுஎன்றொரு நூலும் வழங்கி வருகிறது.

    அகத்தியர்வைத்திய காவியம்1500

    அகத்தியர்வைத்திய காவியம் நாடிகளையும், நாடி முறைகளால்அறியக் கூடிய நோய்களையும் விளக்குகிறது. அதனைத் தொடர்ந்து நோய்களுக்கான மருந்தும்,மருந்து செய்முறைகளையும்விளக்குகிறது. இந்நூலில் கூறப்படும் மருந்துகள் செந்தூரம், நெய், மாத்திரை, குடிநீர் போன்றபுற மருந்துகள் முப்பத்திரண்டும், கலிங்கம்,களிம்பு, நசியம், புகை, மை போன்ற மருந்து செய்முறைகளும் கூறப்படுகின்றன.

    மேலும், மருந்துகளைச் செய்யும்போது மருந்துப் பொருள்கள்சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது தமிழ் மருத்துவத்தின் சிறந்த முறைகளில்ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்முறையில் சுத்தி முறைகள்விளக்கப்பட்டுள்ளன.

    இந்நூல்முழுவதும் அந்தாதித் தொடையமைந்த விருத்த யாப்பினால் அமைந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:30 pm

    காப்பியம்

    காப்பியம்என்று கூறத்தக்கதாகஅமைந்த நூல் தேரையர்காப்பியம்ஒன்றே யாகும்.இந்நூல், சுருங்கச் சொல்லிவிளங்க வைத்தல் என்னும் உத்தியைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. சொற்சுவையும்பொருட்சுவையும் மிகுந்தது. தேரையர், தாம் இயற்றிய நூல்களுக்கெல்லாம் திறவு கோலாக அமைக்கப் பெற்றது இந்நூல்என்கிறார். இந்நூலுடன், தேரையர் இயற்றியசிறிய அளவிலான சொற்பொருளை விளக்கும் நிகண்டும் இணைந்திருக்கிறது. இந்நூலுள்மருத்துவச் சுவையும் காப்பியச் சுவையும் மலிந்து காணப்படுகின்றன.

    சிந்தாமணி,சூடாமணி

    மதிப்பிடற்கரியமணிகளால் கோவையாய்ச் செய்யப் பெற்ற மாலை உயர்ந்ததாகக் கருதப்படுவதைப் போல, சிறந்த பாடல்களால் மாலையாக இயற்றப் பெற்றஇலக்கியம் சிறந்தாகப் போற்றப்படும். அவ்வாறான பாடல்களைக் கொண்ட இலக்கியங்கள்சிந்தாமணி, சூடாமணி ஆகியஇரண்டும் தமிழில் சிறந்து விளங்குகின்றன. அவ்வகை இலக்கியங்களின் அடியொற்றித் தமிழ்மருத்துவ நூல்களும் சிந்தாமணி, சூடாமணி என்னும்பெயர்களில் வழங்குகின்றன. அவற்றுள்,

    பதார்த்தகுணசிந்தாமணி

    அகத்தியர்வைத்திய சிந்தாமணி

    தன்வந்திரிவைத்திய சிந்தாமணி 1500

    பிரம்மமுனிசிந்தாமணி குணவாகடம்

    பிரம்மமுனிசிந்தாமணி நாடிசாஸ்திரம்

    பிரம்மமுனி சிந்தாமணிதாது நிதானம்

    யூகி வைத்தியசிந்தாமணி

    இராம தேவர்வைத்திய சிந்தாமணி

    இரண வைத்தியசிந்தாமணி

    திருவள்ளுவர்நவரத்தின சிந்தாமணி

    அகத்தியர்வைத்திய சூடாமணி

    கொங்கணர் கற்பசூடாமணி

    ஆகியவற்றைச்சிறப்பாகக் குறிப்பிடலாம்.

    பதார்த்த குணசிந்தாமணி

    பதார்த்தம்என்பது தாவரங்களின்உறுப்புகளான வேர், பட்டை, பிசின், சாறு, இலை, பூ, காய், விதை ஆகிய எட்டும் ஆகும். இவ்வெட்டும் கசப்பு, உவர்ப்பு, இனிப்பு, கார்ப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய அறுவகைச் சுவைகளைக் குணமாகக்கொண்டிருக்கும். இவ்வகைப் பதார்த்தங்களைச் சிந்தாமணியாய்த் தொகுத்து உரைப்பதேபதார்த்த குண சிந்தாமணியாகும்.

    பதார்த்தங்களைத்தொகுத்து அவ்வவ்வற்றின் குணாகுணங்களைச் சொல்லாவிட்டால் அவற்றை எவ்வாறு பயன்படுத்தமுடியும்? அதனால்உலகத்திலுள்ள கோடானுகோடி பதார்த்தங்களில் ஓர் அணு அளவாவது தெரியும்படிச் சொன்னோம்என்று அவைஅடக்கம் கூறப்பட்டுள்ளது. இந்நூலினுள், பதார்த்தங்களைப் பகுத்தும் தொகுத்தும்விரித்தும் எண்பத்து நான்கு வகைத் தொகை வகையாகக் கொண்டு அதற்குரிய பெயர்களைக்கூறுகிறது. இந்நூல் மருத்துவ வல்லுநர்க்கன்றி அனைவர்க்கும் தேவையான நூலாகக் கருதக்கூடியது.

    யூகி வைத்தியசிந்தாமணி

    தமிழ்மருத்துவத்திற்குக் கிடைத்த மருத்துவ அறிவியல் நூலாகத் திகழ்வது, யூகி வைத்திய சிந்தாமணி. இது நோய்க்கணிப்புக்கு உரிய அதிகாரபூர்வமான நூலாகவும் திகழ்வது.

    திராவிடப்பண்பாட்டின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்குகின்ற ஆகமங்களின் வழிநின்று பயின்று,அதன்படி யூகி தம்சிந்தனையை வெளிப்படுத்துவதாக உரைக்கின்றார்.

    தமிழ் மருத்துவநூல்கள் வாதம், பித்தம், ஐயம் என்னும் நாடிகளின் அடிப்படையில் மட்டுமேநோய்களைக் கணித்தறிய வேண்டும் என்கிறது. ஆனால், யூகி நோய்க் கணிப்பில் புதிய முறைகளை உருவாக்கிநோய்க் கணிப்பை விவரிக்கிறார். யூகி முனிவர், நோய் வருவதற்கான காரணம், குறிகுணங்கள், தீரும் தீரா நிலை, மருத்துவம் என்கிற அடிப்படையை வகுத்துள்ளார்.நோய்களை உண்டாக்கும் நாடிகளின் பாதிப்பு (Humoral Pathology), உடற்கூறு பாதிப்பு (RegionalPathology), புற்று நோயைக்குறிப்பிடும் துன்மாங்கிசம் (Malignant growth), புற்று நோயின் இரண்டாம் நிலை வளர்ச்சி (Metastasis),இடுப்பு எலும்பு, தோள் எலும்பு, முதுகு எலும்பு முதலியவற்றிலிருந்து சீராகவளரும் சூலை (Osteophytic Secondaries), ஆசன முளை (Haemorrhoid),தீங்கற்ற கொடியமூலம் (Benign and Malignant) போன்றவற்றைக்கணித்துப் பதிவு செய்திருக்கிறார்.

    கல்லாடம்

    தமிழில் சிறந்தபக்தி இலக்கியமாகக் கருதப்படுபவற்றுள் கல்லாடம் என்னும் நூலும் ஒன்று. அந்நூல்அரங்கேறும் போது, அந்நூலின்பாடலைக் கேட்டு, கல் வடிவில்இருந்த சிவன் தனது தலையை ஆட்டி, ‘மிக நன்று,மிக நன்றுஎன்று பாராட்டியதாகக் கூறி, நூலின் பாடல் சிறப்பை உயர்த்திக் கூறுவர்.அந்நூலைப் போன்று, மருத்துவ நூலாகவிளங்குவது,

    "இராமதேவர்வைத்திய கல்லாடம்''

    என்னும் இந்நூல்,வைத்தியம், வாதம், யோகம், ஞானம் எனும்நான்கு காண்டங்களாகவும், நான்கு வகையானசெய்யுள்களையும் கொண்ட தாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    திருமந்திரம்

    திருமந்திரம்,சைவ சமயத்தின் திருமறைஎனக் கொள்ளப் படுகிறது. அந்நூல், அறம் பொருள்இன்பம் வீடு என்னும் உறுதிப் பயன்களை அடைதலே மக்கள் பெறத்தக்க பேறாகக் கொண்டு,‘உணர்வாவதெல்லாம் உடம்பின்பயனேஎன்றும், ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்என்று திருமந்திரம் அறுதியிட்டிருக்கிறது.

    திருமந்திரம்உயிர்ப்பிணி, உடற்பிணி ஆகியஇரண்டையும் நீக்குதற்குரிய வழி முறைகளை எடுத்துரைக்கிறது. மக்களின்ஒழுகலாறுகளையும் உலகியலையும் வற்புறுத்துகிறது.

    உடல் தத்துவங்கள்96உம், ஈசன் இருப்பிடமும், அவனை அடையும் வழிகளையும், மரணத்தை வென்று எந்நாளும் இருக்கச் செய்யவேண்டிய யோக நெறிகளையும் விளக்குவதாக அமைகிறது. அதன் உட்பொருளைக் கொண்டு மந்திரம்(மறை) என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. அந்நூலைப் போன்று மருத்துவத்திற்குரியதிருமந்திர நூல்கள் சிலவும் காணப்படுகின்றன.
    திருமந்திரப்பெயரால் அமையும் நூல்கள் வருமாறு:
    திருமூலர்திருமந்திரம் 3000
    திருமூலர்கருத்திருமந்திரம்
    திருமூலர்திருமந்திரச் சூத்திரம்
    நந்தீசர்திருமந்திரம்
    மச்சமுனிதிருமந்திரம்
    மூலிகாவலிதிருமந்திரம்

    என்பனவாகும்.

    "" பொங்கிப்பிறந்தநாள் புகழ்வார் வெறுவீணர்
    தங்கிச்செனிக்கையிற் றானோயு முற்றதே''

    தான் பிறந்தநாளைப் புகழ்ந்து பேசுகின்றவர்கள் வீணர்கள். ஆண், பெண் சேர்க்கையால் கருவான அன்றே நோயும்சேர்ந்தே உருவாயிற்று என்று விவரிக்கிறது.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:31 pm

    சதகம்

    சதம், நூறு என்பதைக் குறிக்கும் சொல்லாகும். சதகம்என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூல் என்பது புலப்படும். சதக்குப்பை என்றொருமருந்துப் பொருள் உண்டு. இம்மருந்தின் நுண்மையைக் குறிக்க இப்பெயர் பெற்றதெனலாம்.ஒரு சிட்டிகை அளவு சதக்குப்பையை எடுத்து எண்ணினால் நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் சதக்குப்பை இருக்கக் காணலாம். அதனைக் குறிப்பால் உணர்த்த இப்பெயர்வழங்கப்படுவதைப் போல, பாடல்களின்எண்ணிக்கையைக் குறிப்பிடும் பெயராகச் சதகம் என வழங்குவதாகக் கருதலாம். மருத்துவநூல்களில் சதகம் எனும் பெயரில் வழங்கும் நூல்கள் பல. அவை,
    அகத்தியர்வைத்திய சதகம்
    தட்சிணாமூர்த்திவைத்திய சதகம்
    புலத்தியர்வைராக்கிய சதகம்
    பிரம்மமுனிவைத்திய சதகம்
    வைத்திய சதக நாடி

    என்பவைகுறிப்பிடத்தக்கவை.

    வைத்திய சதக நாடி

    வைத்திய சதகம்,உடல் தத்துவம் 96 ஐயும் விளக்குகிறது. நாடியையும் அவை இயங்கும்முறையும், நாடிக்கும்நோய்க்கும் உள்ள தொடர்பையும் கூறி, நாடியால் நோயைஅறியும் முறையை விவரிக்கிறது. நோயுற்ற நிலையை அறிந்து, நோயின் தன்மையைக் கொண்டு, மரணம் எவ்வாறு உண்டாகும் என்னும் பல மருத்துவச்செய்திகளை 102 பாடல்களால்தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை. மற்றநூல்கள் சுவடி வடிவில் உள்ளன. நூல்வடிவில் கிடைக்கவில்லை.

    கரிசல்

    கரிசல் என்பதுகருமை என்று பொருள்படும். கருமை என்பது தமிழ் மருத்துவத்தில் உயர்ந்தது என்றுவழங்கப்படுகிறது. கசடற்றகரிசலென்று நாமந் தந்துஎன்பது யூகிமுனிவர் (யூகி கரிசல். பா.5) கருத்து.குற்றமற்றது என்னும் பொருளிலும் கரிசல் என்பது வழங்கப் பட்டிருக்கிறது.

    வைணவப்பேரிலக்கியமாகிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இடம் பெறுகின்ற பெரிய திருமடல்,சிறிய திருமடல் ஆகியஇரண்டு மடல் இலக்கியங்களின் வடிவம், தமிழ் மருத்துவ நூல்களில் காணப்படுகிறது. அந்நூலின் தாக்கமே கரிசல் எனலாம்.

    மடல்இலக்கியங்கள் எதுகை ஆசிரியத் தாழிசையாலும், கரிசல் இலக்கியங்கள் மோனை யாசிரியக்குறுந்தாழிசையாலும் அமைந் திருக்கின்றன.

    உயுமுறை வைத்தியவுரைத் தமிழ்க் கரிசல்
    தகுங்குறு மகவற்றாழிசை மோனை
    வகை பெறு சந்தவருக்கத் துறைக்கே''14

    என்று மகா கரிசல்உரைப்பதனால், கரிசலின் பாவகையை அறியலாம்.

    யூகி கரிசல்,வெண்பா, ஆசிரியத் துறை, விருத்தம் போன்ற வடிவங்களைக் கொண்டதாகக்காணப்படுகிறது. இதனால் இந்நூல் மிகவும் பிற்பட்ட காலத்ததாகக் கருத இடமுண்டு.

    கரிசல் என்னும்பெயரினைக் கொண்டிருக்கும் மருத்துவ நூல்கள்

    அகத்தியர் கரிசல்’’

    தன் வந்திரிகரிசல்’’

    தேரையர் மகாகரிசல்’’

    யூகி கரிசல்’’

    என்னும் நூல்கள்காணப்படுகின்றன.

    யூகி கரிசல்இலேகியம், செந்தூரங்கள்,சுண்ணம், களங்கு, பற்பம், மாத்திரை, தைலம், எண்ணெய், கர்ப்பக் கோள்,தம்பனம், குளிகை, ஆண், பெண் ஆகிய இரு பாலர்க்கும் இடுமருந்து போன்ற மருந்துகள் கூறப்படுகின்றன.

    கரிசல் நூல்கள்மருத்துவத்தை மட்டும் உரைக்கும் நூலாக அமைந்திருக்கின்றன எனலாம்.

    பிள்ளைத் தமிழ்சிற்றிலக்கிய வகையில் சிறப்பிற்குரிய இலக்கியங்களில் பிள்ளைத் தமிழும் அடங்கும்.

    சான்றோர்களையும்மன்னர்களையும் குழந்தையாகப் பாவித்து, குழந்தைகளுக்குரிய பருவங்கள் பத்து, ஆண்பால் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களாகக் கொண்டு பாடல் இயற்றப்படும். ஒவ்வொருபருவத்திலும் பத்து பாடல்கள் இடம் பெறும். இவ்வாறு இயற்றப் பெற்ற நூல்களில் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்,’ ‘சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ஆகியன சிறப்பிற் குரியவை. இவ்வாறான பிள்ளைத்தமிழ் நூல் வைத்தியப்பிள்ளைத் தமிழ்எனவழங்கப்படுகிறது.

    சாற்றரியகாப்புச்செங் கீரைதால் சப்பாணி
    மாற்றரிய முத்தமேவாரானை போற்றறிய
    வம்புலியே சிற்றிலேயாய்ந்த சிறுபறையே
    பம்பு சிறுதேரோடும் பத்து''

    என்னும் பத்துபருவங்களில் பத்து பத்து = நூறு பாடல்கள் இடம் பெற் றுள்ளன. தொண்ணூ<ற்று ஒன்பது வகை மருந்துகள் கூறப்பட்டுள்ளன.

    ""கரிய மிளகுதிப்பிலி கீழக்
    காய்வேர் சுக்குசிறு தேக்கு

    கண்டங் காரிசங்கு நெல்லி

    ...............

    அருளே சொரியும்பொதிகை வரை

    ஐயா வருக வருகவே

    அடியா ரகத்திலீசுரனா

    மரசே வருக வருகவே''

    என்று வருகைப்பருவப் பாடல் அடைந்துள்ளது. இது போன்ற நூலால் தமிழ் இலக்கியம் செழிப்பதுடன் தமிழ்மருத்துவமும் வளம் பெறும்.

    உலா

    சிற்றிலக்கியவகையில் சிறந்த இடத்தைப் பெறும் இலக்கியமாக உலா இலக்கியங்கள் கருதப்பெறும். அவ்வகைஇலக்கியமாகிய திருக்கைலாய ஞானஉலா,” முதலில் தோன்றிய ஆதியுலாஎனக் கூறப்படுகிறது. அதன்பின் ஒட்டக் கூத்தரால்இயற்றப்பட்ட மூவருலாஎன்னும் விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலாவாகும். இவை தவிர வேறு உலா நூல்கள் தமிழில்சிறப்பிடம் பெறவில்லை. மேற்கண்ட உலா நூல்களைப் போல, தமிழ் மருத்துவ நூலாக, யூகி முனிவரால் இயற்றப்பெற்ற வாத வைத்திய உலா1000’ என்னும் நூல் காணப்படுகிறது.

    உலா நூல்இலக்கணம்

    பாட்டுடைத் தலைவன்தன்நாட்டு மக்களைக் காண உலா வரும் போது, அவனைக் கண்ட எழுவகைப் பருவ மங்கையரும் காதல் கொண்டு மயங்கி நின்றனர் எனப்பொருளமைத்துக் கலிவெண்பாவில் பாடுவது உலாவாகும்.

    மேற்கண்டஇலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு, வாத வைத்திய உலாநூல் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நூல் கலிவெண்பாவில் 4248 அடிகளைக் கொண்டிருக்கிறது. பாட்டுடைத் தலைவனாக,துருசுக் குரு மருந்துகூறப்படுகிறது. இம்மருந்து, பாதரசத்துக்குஉரிய ஏழு சட்டையையும் கட்டும். கட்டப்படுகின்ற ரசமணியைக் கொண்டு முறைப்படிசெந்தூரம் செய்து, தாழ்ந்தஉலோகங்களுடன் சேர்த்து உருக்கினால் பொன்னாகும் என்கிறது. உலாத் தலைவனைக் கண்டுமயங்குகின்ற பருவ மங்கையர் களாக, இரசமணிக் குரியஏழு சட்டையும், தாழ்ந்தஉலோகங்களும் குறிப்பால் உணர்த்தி உரைக்கப்படுகின்றன. இலக்கிய உலாவைப் போலவேமருத்துவ உலா நூலும் அமைப்பால் ஒத்து இருக்கக் காணலாம்.

    பாரதம்

    தமிழ்இலக்கியங்களில் மகாபாரதம் இதிகாச வகையைச் சேர்ந்த பேரிலக்கியமாகக் கருதப்படும்.இந்த இதிகாச வகை இலக்கியத்தின் தாக்கம் தமிழ் மருத்துவத்திலும் இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு அடையாளமாக, ‘மருத்துப் பாரதம்என்னும் நூல்விளங்குகிறது. மகாபாரதத்தில் அமைந்துள்ள இடம், சந்ததி முறை, நிகழ்வுகள், கதை மாந்தர்கள், போர்க்களம் அமைத்தல், போரின் முடிவு போன்றவை அனைத்தும் மருத்துவநூலில் அமைந்திருக்கக் காணலாம்.

    மகாபாரதநிகழ்வுகள் நிகந்ந்த இடமான அத்தினாபுரம், வாரணாசி ஆகிய இரண்டனையும் பருவுடம்பு, நுண்ணுடம்பு ஆகிய இரண்டாகக் கொள்கிறது மருத்துப் பாரதம்.

    மகாபாரதமரபினராகியோரை மருத்துவ மரபினராகக் கொள்கிறது.

    பாண்டவர் மரபில்தோன்றிய சந்தனுவை முதுகெலும்பாகவும், அவன் மணந்த கங்கையை மாயையாகவும், கங்கை மகன் வீடுமனைத் துணிவென்றும், சத்தியவதிக்கும் சந்தனுவுக்கும் பிறந்த இருவரை இருவினைகள் என்றும், விசித்திர வீரியன் மறைவுக்குப் பின்கைம்பெண்களான அம்பிகை, அம்பாலிகை ஆகியஇருவரும், பணிப்பெண்ஒருத்தியும் வியாசமுனிவருடன் கூடியதால் பிறந்த திருதராட்டிரன், பாண்டு, விதுரன் ஆகிய மூவரும் முறையே தாமத, இராசத, சத்துவ குணமாகவும் கொண்டு மருத்துவ நெறிகளைக் கூறுகிறது.

    மகாபாரதக் கதைமாந்தர்களான கிருட்டிணன் மருத்துவனாகவும், பாண்டவர்கள் மருந்தாகவும், கௌரவர்கள்நோய்களாகவும் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறன்றனர்.

    மகாபாரதத்தில்நிகழும் மூன்று தூதுகளும் மூன்று நாடிகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

    தூதுவர்களானகிருட்டிணன், சஞ்சயன், உலூகன் ஆகிய மூவரும் வாதம், பித்தம், ஐயம் என்னும் நாடிகளாகக்குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களில் கிருட்டிணனும், உலூகனும் பாண்டவர்களைச் சேர்ந் தவர்கள்.சஞ்சயன் கௌரவர்களைச் சேர்ந்தவன். இவர்களை மருத் துவத்துடன் இயைபு படுத்திக் காணும்போது, வாதமும், ஐயமும் (கிருட்டிணன், உலூகன்) மருந்துப் பகுதி, உடல் வளத்தை மேம்படுத்துவதாகும். பித்தம்(சஞ்சயன்) நோய்ப் பகுதி, உடல் நலத்தைக்கெடுத்து நலிவடையச் செய்வதாகும் என்பதனால், மகா பாரதத்துடன் மருத்துப் பாரதம் பொருந்திவரக் காணலாம்.

    மகாபாரதத்தில்நூலின் பகுப்புகளான ஆதிபருவம், சபா பருவம்,ஆரணிய பருவம், விராட பருவம், உத்தியோக பருவம், வீட்டும பருவம், துரோண பருவம், கன்ன பருவம், சல்லிய பருவம், கதா பருவம் ஆகிய பத்து பருவங்களும் மருந்துப்பாரதத்தில் இடம் பெற்றிருக்கின்றன. பதினெட்டு நாள் போரை லங்கணம் என்றுகுறிப்பிடப்படுகிறது.

    மருத்துப்பாரதத்தைக் கற்றிட வேண்டுமானால், மகாபாரதத்தில்தேர்ச்சியும் மிகுந்த மருத்துவப் புலமையும் கொண்டிருத்தல் வேண்டுமெனத் தெளியலாம்.

    மருத்துவஇலக்கியத்தை உருவாக்கிய மருத்துவப் புலவர்கள், தமிழ் மொழிப் பயிற்சியும், மருத்துவப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர்களாகஇருந்திருந்தனர் எனப் பெறப்படுகிறது. அவர்களால் உருவாக்கப் பெற்ற மருத்துவஇலக்கியங்கள் மொழித்திறனும் பன்னூற் புலமையும், நுண்ணறிவும், உயர்ந்த நடையும் கொண்டிருக்கக் காணலாம்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:31 pm

    சூத்திரம்

    சூத்திரம் என்பதுஇரகசியம், எந்திரம்,பொருள்களின் செறிவு ஆகியபொருள்களில் வழங்கும். இலக்கண நூல்களின் விதிகளைச் சூத்திரம் என்று உரைப்பதும்உண்டு. மேற்கண்ட பொருள்கள் அனைத்திலும் வழங்கும் முறையில் மருத்துவ நூல்களில்சூத்திரம் என்னும் பெயரில் அமைந்துள்ள நூல்கள் காணப்படுகின்றன.

    சூத்திரமாகக்கூறப்படும் நூல்கள், ஒரு பாடல் முதல் அதிகப்படியாக 800 பாடல்கள் வரைசூத்திரம் என்னும் பெயரில் வழங்கப் படுகின்றன. உதாரணமாக, அகத்தியர் காவியச் சுருக்கம் ஒரு பாடலாலும்,மச்சமுனி சூத்திரம் எண்ணூ<று பாடல்களாலும் இயற்றப் பெற்றிருக்கின்றன.

    சூத்திர நூலின்பொருள்கள்

    சூத்திர நூல்கள்இன்ன பொருளில் தான் இயற்றப்பெறல் வேண்டும் என்றில்லாமல், வைத்தியம், வாதம், யோகம், ஞானம் ஆகியநான்கு உறுதிப் பொருள்களின் உட்பிரிவுகளைப் பெயர்களாகக் கொண்டு அமைந்திருக்கின்றன.பல நூல்களின் பொருள் விளங்காமல் சூத்திரம் என்னும் பெயரால் மட்டும் வழங்கக்காணலாம்.

    வைத்தியசூத்திரம், வகாரச் சூத்திரம்,வாத சூத்திரம், வழலைச் சூத்திரம், சோதிமணி சூத்திரம், நாடி சூத்திரம், திருமந்திரச் சூத்திரம், கற்ப சூத்திரம், பூரண சூத்திரம் என்னும் நூல்களின் பெயரைக்கொண்டு ஓரளவிற்கு நூல் கூறும் பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

    அகத்தியர்சூத்திரம் 1200, அகத்தியர்சூத்திரம்1500, உரோமரிஷிசூத்திரம்500, சட்டைமுனிசூத்திரம்800, திருமூலர்சூத்திரம்800, பிரம்மமுனிசூத்திரம்380 போன்ற நூல்கள்,கற்றாலன்றி நூலின் பொருளைஅறிய முடியாதவாறு அமைந்திருக்கின்றன.

    நிகண்டு

    நிகண்டுஎன்ற சொல்லுக்குத் தொகுதி’, ‘உண்மை’, ‘கூட்டம்என்னும் பொருள்கள் உள்ளன. நிகழ்ந்தவை என்றதமிழ்ச் சொல்லின் திரிபே நிகண்டு எனலாம். உலகில் உண்மையாகத் திகழ்ந் தவைகளைத்தொகுத்து, அதற்குநிகழ்ந்தவை எனப்பெயரிட்டு, அது நாளடைவில்நிகண்டு என மருவிற்றென்பர்.

    தமிழில் வழங்கியதொன்மையான நிகண்டின் பெயர் உரிச்சொல் என்றும், உரிச்சொல் பனுவல் என்றும் வழங்கியிருக்கவேண்டும்.

    பின்னாளில்எழுந்த நிகண்டு நூல்களுக்கு முன்னரே உரிச்சொல் என்ற பெயரால் நிகண்டு இருந்துள்ளதுஎன்பதற்கு,

    இன்ன தின்னுழியின்னண மியலும்
    என்றிசை நூலுட்குணிகுணப் பெயர்கள்
    சொல்லாம்பரத்தலிற் பிங்கல முதலா
    நல்லோ ருரிச்சொலினயந்தனர் கொளலே''

    (நன்னூல், உரிச்சொல்லியல் செய். 460)

    என்று பவணந்திமுனிவர், பிங்கல முனிவர்இயற்றிய பிங்கல நிகண்டினை உரிச்சொல்என்றே குறிப்பிடுவதுகருதத் தக்கது.

    கயாதர நிகண்டுபாயிரத்தில், ‘உரிச்சொல் பனுவல்மேம்படுமேஎன்றுகுறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கது.

    மருத்துவ நிகண்டு

    தமிழ்மருத்துவத்தில் நிகழ்ந்த உரிச்சொற்களை விவரித்துக் கூறும் நிகண்டுகளாக அமைந்தவைபல. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்தர் பெயரால் வழங்கி வருபவை. ஒவ்வொருவரும் தாங்கள்படைத்த மருத்துவ நூலின் பொருளை விளக்கிக் கூறுமாறு அமைத் துள்ளதால், தமிழ் இலக்கிய உரிச்சொல் நிகண்டை விடவும்அளவில் பெரியதாகவும், சொற்களின்எண்ணிக்கை மிகுந்ததாகவும் இருக்கக் காணலாம். இவ்வாறான நிகண்டுகளின்பெருக்கத்தினால், மருத்துவஇலக்கியக் கலைச்சொற்கள் வளர்ச்சியடைந்துள்ளதெனலாம்.

    நிகண்டுகளின்பெயர்கள் வருமாறு:
    அகத்தியர்பஞ்சகாவிய நிகண்டு
    அகத்தியர்அறுசுவை நிகண்டு
    அகத்தியர்நிகண்டு 800
    இராமதேவர்நிகண்டு
    கைலாச சட்டைமுனிஅய்யா சோடச நிகண்டு
    சட்டைமுனிநிகண்டு 1200
    சட்டைமுனி மூலிகைநிகண்டு
    தட்சிணாமூர்த்திநிகண்டு200
    பிரம்மமுனிகருக்கிடை நிகண்டு
    மச்சமுனி நிகண்டு
    போகர் நிகண்டு1700
    தன்வந்திரிநிகண்டு800

    போன்றவைகளாகும்.

    "" சொன்னதொருமூலிகையின் தொகுப்புக் கேளு
    சுளுக்கானநானூற்று யெழுபத்து மூன்று
    பென்னதொருபேரையெல்லாம் பிரித்துச் சொன்னேன்
    பேரானசாத்திரத்தில் இல்லை இல்லை'' (போகர் நிகண்டு.பா. 61)

    என்று, போகர் நிகண்டு நானூற்று எழுபத்து மூன்றுமூலிகைப் பெயர் களின் தொகுப்பை எடுத்துரைக்கிறது. மேலும் பல நிகண்டுகள் சுவடிவடிவில் இருப்பதனால் அவற்றின் தன்மையை அறிய முடியவில்லை.

    திருப்புகழ்

    அருணகிரிநாதர்இயற்றிய திருப்புகழ் சிறப்பிடத்தைப் பெறும். இது, சந்தப் பாடல்களால் முருகனைப் போற்றிப்பாடுவதாகும். முருகனைப் புகழ்ந்து பாடுவதனால் திருப்புகழ் எனப்பட்டது. இது,இசைவளமும், தாளக்கட்டும் கொண்ட பக்தி, இலக்கியச்சுவை, இனிய தமிழோசை, நயம் ஆகியவை இணைந்து புகழ்ப் பாடல்களாகஅமைந்தது.

    இத்திருப்புகழ்அமைந்திருக்கும் அமைப்பைப் போலச் சந்தங்களும், தாளக்கட்டும், இசைவளமும் கொண்ட மருத்துவ இலக்கியச் சுவையைக்கொண்ட இனிய தமிழ்ப் பாடல்களாக அமைந்துள்ளது வைத்தியத் திருப்புகழ் ஆகும்.
    "" தனதன தானதந்ததனதன தானதந்த தன தான
    தனதன தானதந்த
    இடருறு மேகவெட்டைபடர்தரு மூரல்சட்டை

    கொடியிடர் நோய்விரட்ட முறைகாணும்
    இகமுறசோம்புகொத்த மலிநில வாரைசுக்கு

    வினியநன் னாரியொக்க வெடையோரைஞ்
    சுடரழன் மீதுகட்டி படிசல மாறுவிட்டு

    விட ரெரிவாகவெட்டி லொருகூறா''

    என்று சந்தம்அமைந்த பாக்களால் நல்வாழ்வு மணப்பாகு என்னும் மருந்து திருப்புகழாகத்தெரிவிக்கப்படுகின்றது. இதில் மனிதர்களுக்கு, ஆண்பெண் சேர்க்கை மிகுதியால் நேரிடும் பல வகைக் கடும் பிணிகளான மேக நோய், கிரந்தி, குட்டம், குறை நோய், குன்மம், கண்டமாலை ஆகிய கொடிய நோய்களைப் போக்கும் அரியமருந்து முறைகளும், தாதுப்பெருக்கம்,உடலுரம், மெய்நலம் முதலியவற்றை உண்டாக்கும் மருந்துமுறைகளும் கூறப்பட்டுள்ளன.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:33 pm

    கோவை

    சிற்றிலக்கியங்களுள்ஒன்று கோவை என்னும் இலக்கிய வடிவம். இதற்கு பல செய்யுள்களைத் தொடர்பு உடையவனவாகக்கோத்தல் என்பது பொருள்.

    கோவை இலக்கியம்நானூறு பாடல்களைக் கொண்டு அரசர், வள்ளல், தெய்வம் ஆகியவற்றுள் எதையேனும் புகழ்ந்துபாடப்படுவ தாகும்.

    இவை ஆசிரியம்,வெண்பா, கலித்துறை போன்ற பாடல் களால் பாடப்படுவதுண்டு.அகத்துறை சார்ந்த பாடல்களால் பாடப் படுவதையே பன்னிரு பாட்டியல் சிறப்பிக்கிறது.ஆனால், பிற்காலத்தில் எழுந்தகோவை இலக்கியங்கள் புறத்துறையையும் பாடத் தொடங்கின.

    கோவைஇலக்கியமாகத் தமிழில் காணப்படுபவற்றுள் ஆசாரக் கோவை, பாண்டிக் கோவை, தஞ்சைவாணன் கோவை ஆகியவற்றைக் கூறலாம்.

    பாடல் முறையாலும்,பாடப்படும் பொருள்முறையாலும் மாறுபட்டு, கோவை என்னும்இலக்கிய வடிவத்தில் மருத்துவம் கூறப்பட்டு இருப்பது, கோவை இலக்கியத்தின் வளர்ச்சியையேகாட்டுவதாகும்.

    பெரிய ஞானக் கோவை
    வாதக் கோவை
    வைத்தியசில்லரைக் கோவை

    எனும் நூல்கள்மருந்துவம் கூறும் கோவை நூல்ககளாகக் காணப்படுகின்றன. இம்மூன்று நூல்களும் பதினெண்சித்தர்களால் பாடப் பெற்ற பாடல்களின்/ நூல்களின் தொகுப்பு எனலே சரியாம். பெரியஞானக் கோவை யோகம், ஞானம் ஆகியஇரண்டனையும், வாதக் கோவை வாதம்பற்றியும், வைத்தியசில்லரைக் கோவை மருத்துவம் பற்றியும் விவரிக்கக் கூடியதாக அமைந்திருக்கின்றதெனலாம். தமிழ் மருத்துவ நூலார்கள் மேற்கொள்ளுகின்ற வைத்தியம், வாதம், யோகம், ஞானம் ஆகியநான்கு உறுதிப் பொருள்களையும் இம்மூன்று நூல்களின் வழி அறியலாம்.

    வைத்தியசில்லரைக் கோவை நூலில் இடம் பெறும் நூலின் எண்ணிக்கை 118 ஆகும். இது மொத்தம் 3322 பல்வேறு வகைப் பாடல்களைக் கொண்ட கோவையாகும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:34 pm

    தண்டகம்

    தண்டகம் என்பதுமுதுகெலும்பு எனப் பொருள்படும். தண்டகம் என்னும் நூலினுள் அமைகின்ற பொருள்முதுகெலும்பைப் போன்ற வலிமையுடைய ஆதாரமானவை எனக் கருதலாம். அகத்தியர், தன்வந்தரி, நந்தீசர், கடைப்பிள்ளை, இராமதேவர் ஆகிய ஐவர் பெயரால் தண்டக நூல்கள்காணப்படுகின்றன. மேற்கண்ட இவர்களின் பிற நூலின் பொருள்களுக்கு இத்தண்டக நூல் ஆதாரநூலாகக் கருதலாம்.

    "" திரிவார்கள்தேசத்தில் அனேகம் பேர்கள்

    செயலானபலபிணியின் கருவைக் காணார்
    அறிவார்கள் அறிவாலேகுருவின் பீடம்

    ஆனந்தசற்குருவின் கருவின் பீடம்
    தெரியாமல்அலைவார்கள் என்றே சொல்லிச்

    சிறப்பானநபிமார்கள் வெகுபேர் கூடி
    குறிப்பாகதண்டகமாய்ச் சொல்லென் றார்கள்

    குருவாகஅன்னாளில் சொன்னேன் நானே''15

    என்றதனால்,நோய்க்கான காரணத்தையும்குருவின் பீடத்தையும் கருவின் பீடத்தையும் மக்கள் அறிந்திட வேண்டுமென்ற நோக்கில்,தண்டக நூலார் ஆசிரியர்நிலையிலிருந்து கூறுவதாகக் தெரிகிறது.

    "" இன்னாளில்தண்டகந்தான் சொல்ல வென்றால்
    இயல்பாய்ஆயிரத்தைவிட வேறொன் றில்லை
    சொன்னாலும் அதைக்குறுக்கிச் சொல்ல வேண்டும்''16

    முன்னமே ஆயிரம்எனும் நூலில் மூலப் பொருள் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. தண்டகமாய்ச் சொல்லவேண்டுமானால் அதையும் சுருக்கிச் சூத்திரம் போலச் சொல்வதைக் குறிப்பதாகத்தெரிகிறது. இதன் வழியே பிற தண்டக நூல்களும் அமைந் திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

    கற்ப நூல்கள்

    கற்பம் என்பது 432 கோடி ஆண்டைக் குறிக்க வழங்கும் சொல்லாகும்.மருத்துவ நூலில் வழங்கப்பட்டுவரும் கற்பம், உடலை உறுதியாக்கும்; நோயற்ற வாழ்வைப் பெறலாம்; நீண்டநாள் வாழலாம்; முத்தி நிலையை அடையத் துணையாகும் கருவி என்றுகூறப்படுகிறது.

    கற்பம் என்னும்மருந்து, தமிழ் மருத்துவம்மிகவும் வளர்ச்சியடைந்த நிலையைக் காட்டுவதாக அமைகிறது. அதனால் தான் மருத்துவநூல்களில் பெரும்பகுதி கற்ப மருந்தைக் கூறக் கூடியனவாக அமைந்துள்ளன. அவைமட்டுமல்லாமல், கற்பம் என்னும்பெயரில் தனிநூலாக அமைந்திருப்பவையும் அதிகமாகும். குறிப்பாக கொங்கணர், சட்டைமுனி, திருமூலர், நந்தீசர், போகர், மச்சமுனி, புலத்தியர்,கோரக்கர் போன்றோரின்பெயர்களில் அமைந்த கற்ப நூல்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. சுவடி நூலகங்களில்காணப்படும் கற்ப நூல்களின் எண்ணிக்கை61 ஆகும். மருத்துவத்திற்கே மகுடம் சூட்டியதுபோலக் கற்ப மருந்துகள் சிறந்தமருந்தாகப் போற்றப் படுவதனைக் கொண்டு, கற்ப மருத்துவம் மேலும் வளர்ச்சியடைய ஆய்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:35 pm

    மூலிகை நூல்கள்

    மருத்துவத்தின்மூலமாக அமைவது மூலிகை. அம்மூலிகையின் குணம், வகை, இனம் எனத் தொகுத்துக் கூறும் நூல்கள் நிகண்டு எனலாம். மருத்துவ நிகண்டுகள்மருத்துவம் சார்ந்த பொருள்களைத் தொகுத்து அவற்றுக்கு வழங்கி வருகின்ற பெயர்களைஎடுத்துரைப் பவை. ஆனால், மூலிகை நூல்கள்மூலிகைகளை மட்டும் உரைக்கக் கூடியவையாக இருக்கின்றன. மூலிகைகளின் பெயரைத் தெரிந்துகொள்வதால் மட்டுமே மூலிகையைக் காணவோ, திரட்டவோ முடிவதில்லை. மூலிகையின் பிறப்பிடம், அதன் தன்மை, தோற்றம், வடிவம் போன்ற பல செய்திகளைக் கூறி, எந்தெந்தத் திசையில் என்னென்ன மூலிகைகள்இருக்கின்றன என்பன போன்ற செய்திகளைக் கூறும் வழிகாட்டிக் கையேட்டினைப் போல,கோரக்கர் மலைவாகடம்என்னும் நூல் அமைந்திருக்கிறது. மலை நெடுகிலும் அமைந்திருக்கும் முனிவர்களின்குடில்களைக் குறிப்பிட்டு, அவற்றிலிருந்துஇவ்வளவு தூரத்தில் இந்த மூலிகை இருக்கிறது என்றெல்லாம் குறிப்பிடக் காணலாம்.

    மூலிகை பற்றியவிரிவான தகவல்களை உள்ளடக்கி, தொகை, வண்ணம், குணம், மருத்துவ மூலிகை, விஷத்துக்கானமூலிகை போன்ற நூல்கள் காணப்படுகின்றன. அவை,

    1. மூலிகைப் பிரயோகவண்ணம் 2. மூலிகை வண்ணம்

    3. மூலிகைக் குணம் 4.வைத்திய மூலிகை

    5. மூலிகை வைத்தியம்6. விஷத்துக்கு மூலிகை

    7. போகர் பச்சிலைமூலிகை வைத்தியம் 8. மூலிகை விபரம்

    9. வைத்திய மூலிகைஅகராதி 10. மூலிகாவலிதிருமந்திரம்

    என்பனவாம். கற்பமூலிகைகள் 1008 என்றும்,மூலிகைகள் 4444 என்றும் கூறுவர். மேற்கண்ட நூல்களைத் திரட்டிஆராய்ந்தால் அதன் விபரங்கள் கிடைக்கக் கூடும்.

    குழந்தை மருத்துவநூல்

    குழந்தை என்பதுபாலரையும் குறிக்கும் என்பதனால், குழந்தைமருத்துவம் பால வாகடம் என்னும் பெயரால் வழங்கி வரக் காண் கிறோம். வளர்ந்த மேலைநாட்டு மருத்துவத்தில் குழந்தை மருத்துவம் தனிப்பிரிவாக வளர்ச்சியடைந்ததைப் போல,தமிழ் மருத்துவத்தில்குழந்தை மருத்துவம் தனிப் பிரிவாகவே தோன்றி, வளர்ந்து வந்திருக் கிறது. பெரும்பாலும்,‘குடும்ப மருத்துவம்என்பதும், ‘பாட்டி வைத்தியம்என்பதும், தமிழ் மருத்துவத்தின் மரபு மருத்துவமாகும். அவை,பெரும் பகுதி குழந்தைமருத்துவத்தையே செய்து கொண் டிருக்கின்றன. இவ்வாறான குழந்தை மருத்துவத்தின்தனிநூலாக அமைந்தவைகளாவன,
    அகத்தியர் பாலவாகடம் 200
    பாலவாகடத்திரட்டு1200
    தன்வந்திரிகுழந்தை (மருத்துவம்) வாகடம்
    பிள்ளைப் பிணிவாகடம்
    வைத்திய பாலவாகடம்
    பாலகிரிகைவைத்தியம்

    போன்றவை.

    பாலவாகடத்திரட்டு 1200

    தமிழ்மருத்துவத்தில் குழந்தை மருத்துவமாக வளர்ச்சியடைந் திருக்கும் மருந்துவ முறைகள்அனைத்தும் இந்நூலுள் இடம் பெறுவதாகக் கூறலாம். குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற,மாந்தம், தோஷம், சவலை, வாந்தி, பேதி, கணம், சூலை, கரப்பான், சுரம், சன்னி, கழிச்சல்,அட்சரம், சோகை, பாலுண்ணாமை, உண்ணாக்குவளர்ச்சி, கக்குவான்,தாகம், வீக்கம், பொருமல், மயக்கம், விக்கல், மார்புச் சளி, கண்ணோய், காதுநோய், விரைவாதம், மசரை நோய், கீரி நோய், வயிற்றில் பூச்சி, மலக்கட்டு போன்ற குறைகளுக்கு இதில் மருத்துவம்கூறப்பட்டிருக்கின்றது.

    குழந்தைநோய்களில் பிரிவுகளையும் குறிகுணங்களையும் கூறித் தக்க மருந்து இதுவெனஎடுத்துரைக்கும் சிறப்பினை இந்நூலில் காணமுடிகிறது.

    நோயின் பெயரால் அமைந்தநூல்கள்

    மருத்துவ நூல்கள்பலவகை யாப்பின் பெயராலும், பேரிலக்கியம்,சிற்றிலக்கியங்களின்பெயராலும் அமைந் திருப்பதைப் போல, நோயின் பெயரால்அமைந்துள்ள நூல்களும் காணப்படுகின்றன. நோய்களின் எண்ணிக்கை 4448 எனக் கூறப்படுகிறது. குறிப்பாகச் சிலநோய்களின் சிறப்பினைக் கருதி, அந்த நோய்க்குரியமருத்துவம் வளர்ச்சி பெற வேண்டும் என்னும் நோக்கில் அமைந்ததாகக் கொள்ளலாம்.

    வைசூரி நூல் 80

    வைசூரி என்பதுஅம்மை நோயைக் குறிப்ப தாகும். அம்மை நோய் கோடைக் காலத்தின் வெப்பத்தினால்உண்டாகும். அம்மை நோய் வகைகளுள் ஒன்றான பெரியம்மை மிகவும் கொடுமையானது. அதுமுற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

    வைசூரி நோய்உண்டாகக் காரணம், அதன் வகை,உரிய மருந்து முதலியவைசித்தர்களால் அறியப்பட்டவை என்பதற்குச் சான்றாக வைசூரி நூல் 80 விளங்குகிறது.

    இந்நூல், வைசூரி நோய் பதினெட்டு வகையானது என்கிறது.அவற்றின் குணம், மருந்து, நோயினால் உண்டாகும் புண்ணுக்கும், ஆறாத புண்ணை ஆற்றுவிக்கும் மருந்தும் இதனுள்கூறப்பட்டுள்ளது.

    பொதுவாக, வைசூரி நோயினால் கண்பார்வை பாதிக்கப்படும்.அவ்வாறு கண்பார்வை பாதிக்கப்பட்டால் அதற்குரிய மருந்தும் கூறப்படுகிறது.

    அம்மை நோய்மீண்டும் வருகின்ற குணமுடையதாகையால், ஆறுமாதத்திற்குள் மீண்டும் வந்தால், அதிலிருந்து நோயாளியைக் காக்கும் முறையும் கூறப்படுகிறது.

    இந்நூல், வைசூரி மருத்துவம் பற்றிய முழுமையான நூலாகக்கருதத்தக்கது.

    மனநோய் நூல்

    கிறுக்குகள்18

    கிறுக்கு என்பதுபைத்தியம் அல்லது மனநோய் என்றும் கொள்ளலாம். மனநோய்க்குரிய மருத்துவ நூலாக அமைவதுகிரிகை60 என்றும்நூலாகும். நோயின் செயல்களை அடிப்படையாகக் கொண்டு 18 வகைப்படுமென்று கணித்துள்ளனர்.

    மனநோய் தோன்றக்காரணம் பூத கணங்கள் என்றும், எச்சினி என்றும்,தேவதை என்றும் கூறுவர்.அவ்வாறு கூறுபவர்களெல்லாம், மன நோயின்சாத்திரங்களை அறியாத மட்டைகள். மனநோயின் வகைகளைக் கூறுகிறேன். அவற்றை அறிந்து,அவற்றுக்குரிய மருந்தைக்கொடுத்து குணம் பெறச் செய்வீர் என்று கேட்டுக் கொள்ளும் முறையில் இந்நூல்அமைந்திருக்கிறது.

    உறுப்பின்பெயரால் அமைந்த நூல்கள்

    நூல்களின்பெயரமைப்பில் மனித உடல் உறுப்பும் இடம் பெற்றிருப்பது சிறப்பிற்குரியது. மனித உடல்முழுவதற்கும் மருந்தைக் கூறுகின்ற மருத்துவம், குறிப்பாக, ஓர் உறுப்பில் தோன்றுகின்ற நோய் அறிந்துஅந்நோயின் வன்மை, மென்மை, குணம் அறிந்துஅவற்றிற்கு மருத்துவம் தோற்றுவிப்பது, மருத்துவத்தின் வளர்ச்சியடைந்த நிலையைக்காட்டும். அவ்வாறு வளர்ந்த மருத்துவ நூலாக உறுப்பின் பெயரால் அமைந்த நூல்களைக்கூறலாம்.

    நயனவிதி

    நயனம் என்பதுகண்ணைக் குறிக்கும். 96 வகையானசிற்றிலக் கியங்களுள் ஒரு நூலாக அமைவது பனை முலை நயனம்என்பதாம். எனவே,நயனம் என்னுஞ் சொல்இலக்கியத்துக்குப் பழமையான சொல். கண்ணில் தோன்றும் நோய்கள் 96 எனக் கணக்கிட்டு, அந்நோய்கள் நீங்க மருந்துகளை உரைக்கும் நூல் நயன விதிஆகும்.

    கண்ணின்உறுப்புகள் ஒவ்வொன்றிலும் எத்தனை நோய்கள் தோன்றும் என்பதையும், அந்நோயைக் கண்டறியும் முறைகள் என்னென்னஎன்பதையும் விவரிக்கும் நூலாக இது அமைந்திருக்கிறது. நயன நூல்களாக இரண்டும்,மருந்து மட்டும் கூறும்நூலாக ஒன்றும் காணப்படுகின்றன. அவை,
    அகத்தியர் நயனவிதி; நாகமுனிவர் நயன விதி;
    போகர் நேத்திரரோகத் தைலம் என்பவையாகும்.

    தலை நோய் மருத்துவம்

    கண்மருத்துவத்தையும் உள்ளடக்கி, காது, மூக்கு, தொண்டை, வாய், பிடரி, தலை என்னும்அனைத்துப் பகுதி உறுப்பிற்கும் மருத்துவம் கூறுகின்ற நூலாக அமைந்துள்ளது, நாகமுனிவர் தலைநோய் மருத்துவம் என்னும்நூலாகும்.

    இந்நூல் தலையில்தோன்றும் கரப்பான், குட்டம், பிளவை, திமிர்ப்பு, கனப்பு, வலி, வரட்சி, சூலை, சன்னி, இரத்த சூலை, செவிச் சூலை,செவிச் சன்னி, கண்நோய் ஆகியவற்றை வகைப்படுத்தி,

    "" சிகையுறு சிரசில்நோய்தான் செப்பிலா யிரத்தெட் டாகும்''17

    என்று நோயின்தொகையைக் கூறுகிறது.

    மருந்தின்பெயரால் அமைந்த நூல்கள்

    தமிழ்மருத்துவத்தின் சிறப்புக்குக் காரணம், அம்மருத்துவத்தின் மருந்தாகும். அம்மருந்தின் செய்முறைகள் பலநோக்கில்ஆராய்ந்து கண்டறியப்படுகின்றன. அதன் விளைவுகள் நல்லமுறையில் அமைவதால், அம்முறைகளைப் பிறரும் கையாள வேண்டுமென்றுசெய்முறைகளைக் கூறுகின்றனர். அவ்வகை மருந்துகளைக் கூறும் நூலாகக் காணப்படுபவைவருமாறு:
    அகத்தியர் மகாதிராவகம்800
    அகத்தியர்குழம்பு
    அகத்தியர்சித்தாதி எண்ணெய்
    அகத்தியர்செந்தூரம்300
    அகத்தியர் இரசகுளிகை 14
    அகத்தியர்வல்லாதி 600
    தன்வந்திரிசெயநீர் 50
    திருமூலர் குளிகை50
    தேரையர் தைலவருக்கம்
    மேகத்தெண்ணெய் 14
    மச்சமுனி சன்னிகியாழம் 8
    திருமூலர்கிரந்தி எண்ணெய் 8
    கொங்கணர்கருக்குளிகை 8
    பாம்பாட்டிச்சித்தர் பூபதி மாத்திரை 9
    ஐனகமகாமுனிபிரமதண்டி எண்ணெய்
    கல்லுளிச்சித்தர் ஜெயரச கற்பூர மாத்திரை 10
    வேதாந்த சித்தர்பற்பம் 15

    என்பனவாகும்.

    அகத்தியர்வைத்திய வல்லாதி

    மருந்தின்பெயரால் அமைந்துள்ள நூல்களில் அளவில் பெரியதாக அமைந்த நூல், அகத்தியர் வைத்திய வில்லாதி யாகும். இந்நூல் 622 விருத்தப் பாக்களைக் கொண்ட அந்தாதித்தொடையமைந்த நூலாகும். வல்லாதி என்பது, சேங்கொட்டையைக் குறிக்கும். அதனை ஆதியாகக் கொண்டு செய்யப்படும் மருந்து எனப்பொருள்படும்.

    நோய்களை நீக்கும்வல்லமை கொண்ட தாதுப் பொருள்களில் இரசம் முதன்மை பெற்று விளங்குவதைப் போல, சரக்கு வகைகளில் சேங்கொட்டை முதன்மை பெறுகிறதுஎன்பதற்கு, வைத்திய வல்லாதிசான்றாக அமையும்.

    சேங்கொட்டை பலபொருள்களோடு சேர்ந்து பல்வேறு மருந்து களாகி தீராத பல நோய்களைத் தீர்க்கும்மருந்தாக உருவாகிறது. சேங்கொட்டை இயல்பில் கொடிய நச்சுத் தன்மை கொண்டது.அதனால்தான், மருந்து செய்யத்தொடங்குமுன் சுத்தி முறையைக் கட்டாயமாக மேற்கொள்ளச் செய்கின்றனர்.

    சேங்கொட்டையைமருந்தாக மாற்றிய பின்னர், அது, சுமார் 450 நோய்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது என்பதைக்கொண்டு வல்லாதியின் வல்லமையைப் புரிந்து கொள்ளலாம்

    அகத்தியர்குழம்பு

    அகத்தியர்குழம்பு என்பது ஒரு மருந்தின் பெயர். இம்மருந்து, சித்த மருத்துவத்தின் சிறந்த மருந்துகளில்ஒன்றாகப் போற்றப்படுகிறது. இம்மருந்தின் சிறப்பைச் சித்தர் நூல்கள் பலவற்றில் காணமுடிகிறது. இம்மருந்தின் சிறப்பைத் தமிழ் மருத்துவம் என்னும் இயலில்விளக்கப்படும்.

    எண்ணிக்கையால்பெயர் அமைந்த நூல்கள்

    தமிழில்அமைந்துள்ள மருத்துவ நூல்கள் பலவற்றில், அந்தந்த நூல்களில் அமைந்திருக்கும் பாடல்களின் எண்ணிக்கையைக் குறிப் பிடுவதுவழக்கமாகி இருக்கிறது.

    நூலில்அமைந்துள்ள பொருளின் சிறப்பைக் கருதிப் பொருளின் பெயரையும், இடம் பெற்ற பாடல்களின் சிறப்பைக் கருதிப்பொருளின் பெயரோடு பாடல்களின் எண்ணிக்கையையும் குறிப்பிடுகின்றனர். பாடல்கள்சுவடிகளில் எழுதப் படுவதனால், பாடல்களின் வரிசைமுன்னுக்குப் பின்னாக மாறக்கூடும். அவ்வாறு மாறினால், சொல்லப் படும் பொருள் விளங்காமலும் தொடர்ச்சிஇல்லாமல் பொருள் மாற்றமும் அடையக் கூடுமாதலின் பாடல்கள் அந்தாதித் தொடை யால்அமைக்கப் பட்டிருக்கின்றன.

    தமிழ் மருத்துவநூலுக்கே உரிய சிறப்பு, நூல்கள்பெரும்பாலும் அந்தாதித் தொடையால் அமைக்கப் படுவதேயாகும்.

    எண்ணின் பெயரால்அமைந்த நூல்கள் யாவும் நூலாசிரியர் பெயருடன், நூலுள் அமைந்த பாடல்களின் எண்ணிக்கையையும்குறிப்பிடுகின்றன. அவ்வாறான நூல்கள் வருமாறு :
    அகத்தியர் –12000
    போகர் –7000
    போகர் –700
    சிவ வாக்கியம் –1000
    சட்டை முனி –200

    போன்றவையாகும்.அகத்தியர் 12000 முழுவதும்கிடைக்காமல் 5000 பாடல்கள்மட்டுமே வெளிவந்திருக்கின்றன.

    போகர்7000–இல் பொதுவான சித்தர் மரபுச் செய்திகள், பரம்பரைச் செய்திகள், சமூகச் செய்திகள் போன்றவற்றுடன் மருத்துவம்சார்ந்த செய்திகள் கூறப்படுகின்றன.

    போகர்700 என்னும் நூலைப் போகர்7000 இன் சுருக்கமாகக் கருதுவர். சிவவாக்கியம் 1000 என்பது சிவாக்கியர் பாடல்களின் தொகுப்பாகும்.வழக்கில் இருந்துவரும் சிவவாக்கியர் ஞானப் பாடல்500–ம் இதனுடன் இணைந்துள்ளது.

    வாத நூல்கள்

    வாதம் என்பதுஇரசவாதம் என்றும், இரசவாதம் என்பதுஉலோகங்களைப் பொன்னாக மாற்றுகின்ற கலை என்றும் பொருள்படும்.

    இரசவாதம்,இரசத்தை மூலப்பொருளாகக்கொண்டு செய்யப் படுகின்ற குருமருந்தை, நூற்றுக்கு ஒன்று என்ற அளவுக்குத் தாழ்ந்த உலோகங்களுடன் சேர்ந்து உருக்கினால்,அந்த உலோகங்கள் பத்தரைமாற்றுத் தங்கம் போலாகும் என்பர்.

    வாதக் கலையால்உலோகங்களைத் தங்கமாக மாற்றிக் கொண்டிருப்பது சித்தர்களின் நோக்கம் அன்று.செய்யப்படுகின்ற குருமருந்தானது சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா? என்று சோதித்து அறியவே உலோகங்களுடன் சேர்த்துஉருக்கிச் சோதிக் கின்றனர். குருமருந்தைச் சேர்த்தால், தாழ்ந்த உலோகம் பொன்னாக மாறுவதைப் போல, குற்றமுடைய உடலினர்க்குக் கொடுத்தால்அக்குருமருந்து, அவர்களைக்குற்றமற்ற உடலினராக மாற்றும். அதன் பின்னர் யோக நெறிநின்று நீண்ட காலம் உயிர்வாழலாம் என்பதே வாதத்தின் நோக்கமாகும்.

    அவ்வாறான வாதக்கலையைக் கூறுகின்ற நூல்கள் பல காணப்படுகின்றன. அவை,
    அகத்தியர் வாதசௌமியம் – 1200
    அகத்தியர் இலக்கசௌமிய சாகரம்
    கொங்கணர் வாதகாவியம் – 3000
    கருவூரார் வாதகாவியம்
    சட்டைமுனி வாதகாவியம்
    யாகோபு வாதகாவியம் – 400
    திருவள்ளுவர் வாதசூத்திரம் – 80
    யூகி வாதாங்கதீட்சை – 300
    யூகி வாதவைத்தியம் – 200
    யூகி பிடிவாதம் –1000
    யூகி வாத உலா –1000
    யூகி வாத கும்மி –1000
    யூகி வாத காவியம்– 2000

    என்பனவாகும்.

    பரிபூரணம்என்னும் பெயரால் அமைந்த நூல்கள்

    பூரணம் என்பதுநிறைவு, முழுமை என்னும்பொருளைத் தருவது. பரிபூரணம் என்பதும் அவ்வாறே அமையும்.

    பரிபூரணம்என்னும் பெயரமைந்த நூல்கள் மருத்துவத்தை நிறைவாகவும் முழுமையாகவும் கூறுவனவாகக்கொள்ளலாம். அப்பெயரமைந்த நூல்கள்,
    அகத்தியர்பரிபூரணம் – 1200
    அகத்தியர்பரிபூரணம் – 69
    அகத்தியர் பூரணகாவியம் – 1000

    அகத்தியர் பூரணசூத்திரம் – 216
    சட்டைமுனி பூரணசூத்திரம்
    தட்சிணாமூர்த்திபூரணம் – 48
    அகத்தியர் பூரணம்– 400
    வைத்திய பூரணம் –205
    யூகி பரிபூரணம் –200

    என்பனவாகும்.

    இந்நூல்கள்,சித்தர்கள் மேற்கொண்டவைத்தியம், வாதம், யோகம், ஞானம் ஆகிய நான்கின் அடிப்படைகளை இலக்கண நூல் களைப் போல உரைத்திடுவனவாகும்.

    அகத்தியர் பூரணம்400

    அகத்தியர்பரிபூரணம், 400 பாடல்களைக்கொண்டிருக்கிறது. இதனுள், மருத்துவத்திற்குரியசெந்தூரம், பற்பம், தைலம், குளிகை, மாத்திரை,கியாழம், மருந்து, எண்ணெய், சூரணம், லேகியம், நசியம், நாடியைக் கொண்டு நோயறியும் முறை, நோய்வரும் வழிகள் போன்றவை கூறப்படுகின்றன.

    வாதத்துக்குரியகட்டு முறைகள், வைப்பு முறைகள்,உலோக மாற்று முறைகள்போன்றவையும், யோகத்துக்குரியஅகர உகர மகரத்தைக் கையாளும் முறைகளும் கூறப்பட்டுள்ளன.

    பின்னர்ஞானத்தைப் பற்றி விளக்குகின்றது. எனவே இந்நூல் ஒரு முழுமையுடைய பூரண நூலெனப் பெயர்பெற்றதெனலாம்.

    திறவு கோல்நூல்கள்

    திறவுகோல் என்பதுபூட்டைத் திறக்க உதவும் கோல் என்றும், சாவி என்றும் கூறுவர்.

    மருத்துவ நூலாகஅமையும் திறவுகோல் நூல்கள் மருந்தையும் பிறவற்றையும் தயாரிக்கும் போது ஏற்படுகின்றஇடர்ப்பாடுகளையும், குற்றங்களையும்,ஐயங்களையும் களைவதற்காகஅமைந்த நூல் களாகும்.

    மருத்துவநூலாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றி மருந்துகளை உரைப்பதனால்,கற்போர் நெஞ்சில் கலக்கம்தோன்றக் கூடும் என்பதனால், அவற்றைப் போக்கஇவ் வாறான திறவுகோல் நூல்கள் தேவையெனக் கருதப்பட்டன. அந்நோக்கில் இவ்வகை நூல்கள்தோன்றியிருக்கலாம். அவை,
    அகத்தியர்திறவுகோல் சூத்திரம்
    உரோமரிஷி வகாரத்திறவு கோல்
    திருவள்ளுவர்நாதாந்த திறவு கோல்
    பதினெண்சித்தர்கள் வைத்தியத் திறவு கோல் என்பனவாகும்.

    பரிபாஷை நூல்கள்

    பரிபாஷை என்பதுபாதுகாக்குஞ் சொல் எனவும், மறைமொழி எனவும்பொருள்படும்.

    தமிழ் மருத்துவநூல்கள் எல்லாராலும் கற்கக் கூடியன என்றாலும் பொருளை அறிந்து கொள்ளல் எளிதன்று.காரணம், அந்நூல்களில்மறைமொழியாக அமைந்திருக்கும் சொற்களாகும். வெளிப்படை யாகக் காணும் போதில் ஒருபொருளும், மறைமொழியைஅறிந்தபின் வேறு ஒரு பொருளும் தோன்றுவதனால், தமிழ் மருத்துவம் எல்லாரையும் சென்றடையாமல்இருக்கிறதெனலாம்.

    அத்தகையமறைமொழிச் சிக்கலைத் தீர்ப்பனவாக அமை பவையே பரிபாஷை நூல்களாகும். அவை,
    அகத்தியர்பரிபாஷை – 500
    கௌமதி நூல்பரிபாஷை
    இராம தேவர்பரிபாஷை
    ரோம ரிஷி பரிபாஷை– 300
    பரிபாஷைத்திரட்டு – 500

    என்பன.

    பரிபாஷைத்திரட்டு 500

    இந்நூல் 500 பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஒவ்வொரு 100 பாடலுக்கும் ஒவ்வொரு காண்டமாகக் கொண்டிருக்கிறது.இதனுள், வழலை பிறப்பு,குரு முடிக்கும் முறை,கற்பமூலம், ஞான சாரமணி விபரம், மறைமொழிக்குத் தெளிவு என ஒவ்வொரு காண்டத்திலும்உரைக்கப்பட்டுள்ளது.

    "" இந்த நூல் ஐந்துகாண்டத் தியம்பிய கருவேதென்றால்
    சந்தேகந் தீர்க்கவேண்டித் தமிழ் கவியை நூற்றுக்குள்
    மந்திர வாத யோகமணி பஞ்சீகரண மார்க்கம்
    சிந்தை செய் வகாரபாட்டை தீட்சையுஞ் செப்பு மாதோ''18

    என்றதனால்அறியலாம்.

    சரக்கு வைப்புநூல்கள் [Chemical and atomic processes]

    சரக்கு என்பதுமருத்துவத்துக்குப் பயன்படும் மருத்துவ மூலப் பொருள்களைக் குறிக்கும். சரக்கு வைப்புஎன்பது ஒரு மூலப் பொருளைக் கொண்டு வேறொரு மூலப் பொருள்களையோ, பல மூலப் பொருள்களைக் கொண்டு வேறொருமூலப்பொருளையோ தயாரிப்பது. குறிப்பாக, செயற்கைப்பாடான அணுப் பொருள்களைத் தயாரித்தல் எனலாம்.

    தமிழ்மருத்துவத்துக்குப் பயன்படக் கூடிய மூலப் பொருள்கள்மூலிகைகள், உபரசங்கள், பாடாணங்கள், உலோகங்கள் என்பர். இம்மூலப் பொருள்களில்பாடாணங்கள்64 ஆகும். இவை,இயற்கைப் பாடாணங்கள்32,செயற்கைப் பாடாணங்கள்32 என்பர்.

    செயற்கைப்பாடாணங்கள்32 –ம் தயாரிக்கமேற்கொள்ளப்படும் முறையே சரக்கு வைப்பு என்பர். செயற்கைப் பாடாணங்களைத் தொட்டிப்பாடாணங்கள் என்றும் கூறுவர். இச்செயற்கைப் பாடாணங்களைத் தயாரிக்க, இயற்கையாகத் தோன்றுகின்ற மூலிகை கள், தாதுப்பொருள்களான உபசரங்கள், இயற்கைப் பாடாணங்கள் ஆகியவற்றைப்பயன்படுத்துவர்.

    இவ்வாறானசெயற்கைப் பாடாணத் தயாரிப்பை, மச்சமுனி நாயனார்கடைக் காண்டம்800 (பா. 82275)மச்சமுனி நாயனார் கலைஞானம்800 (பா. 1134)கொங்கணர் பல திரட்டு500(பா. 253, 273) உரோம ரிஷி500 (பா. 259292) அகத்தியர் அமுத கலைஞானம் 1200 (பா. 647717) கூறுகின்றன.

    இவையல்லாமல்,தனிநூலாக அமைந்தவைவருமாறு:

    அகத்தியர் முப்பூவைப்பு

    அகத்தியர் சரக்குவைப்பு – 100

    சட்டைமுனி சரக்குவைப்பு

    போகர் சரக்குவைப்பு – 700

    மச்சமுனி சரக்குவைப்பு – 800

    கொங்கணர் சரக்குவைப்பு – 100

    என்னும் நூல்கள்காணப்படுகின்றன.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:35 pm

    கலைஞான நூல்கள்

    கலை ஞானம் என்பதுஅறிவு நூல் என்றும் கலை நூல் என்றும் தமிழ்ப் பேரகராதி பொருள் கூறுகிறது.

    தமிழில்காணப்படுகின்ற கலைஞான நூல்கள்,

    அகத்தியர்கலைஞானச் சூத்திரம் – 120

    அகத்தியர் அமுதகலைஞானம் – 1200

    சுப்பிரமணியர்கலை ஞானம் – 500

    தன்வந்திரி கலைஞானம் – 500

    கொங்கணர் கலைஞானம் – 200

    தட்சிணாமூர்த்திகலை ஞானம் – 1200

    நந்தீசர் கலைஞானம்

    போன்றவையாகும்.

    அகத்தியர் அமுதகலை ஞானம்1200

    அமுத கலை ஞானம்என்னும் இந்நூல் 1200 பாடல்களால் ஆனஅந்தாதித் தொடையமைந்த நூல். இந்நூலைப் பல்வேறு கலைகளைக் கூறும் நூலாகக் கருதலாம்.இது, மந்திரங்கள், சக்கரங்கள், தீட்சைமுறை, சரக்கு வைப்பு, செந்தூரம், பற்பவகைகள், மெழுகு, ஜெயநீர்வகை, தாம்பரம், சிமிட்டு, மயேந்திர சாலம், அஞ்சனம், வசியம், மறைப்பு, திலதம், மோடி வித்தை, கருவின் முறைகள், பில்லி, சூனியம், சரியை, கிரியை, யோகம், ஞானம், கற்பக் கூறுகள், தியான முறை,முப்புவின் கரு, கற்ப சமாதி, அஷ்ட பந்தனம் (பா. 24) ஆகியவற்றைக் கூறுகிறது. மேலும், வைத்தியன், வாதி, யோகி, ஞானி ஆகியோரின்இயல்புகளையும் நெறிமுறைகளையும் கூறுகிறது. இதனுள், அறுபத்தி நான்கு சித்து விளையாட்டுகளும்விளக்கப் படுகின்றன. அச்சித்து விளையாட்டுகளில் புராணங்களில் கூறப்படுகின்றதெய்வச் செயல்கள் பல காணப்படுகின்றன.

    இந்நூல்கூறுகின்ற பொருள்களை நோக்குமிடத்து, இது ஒரு கலை நூல் போலவே அறியத் தோன்றுகிறது. இவ்வளவு முறைகளையும் ஒருவனேஅறிந்தவனாக இருந்தால் அவனே, ‘சகல கலா வல்லவன்எனல் பொருந்தும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:36 pm

    வர்ம நூல்கள்

    வர்மம் என்பதுமர்மம் என்பதின் மரூஉச் சொல்லாக இருக்கலாம். வர்ம முறைகள் மறைவுஎன்னும் பொருளில் வழங்கப்பட்டு வருவதனால் அவ்வாறு கருதலாம்.

    வர்மம் என்பதுபழந்தமிழ்க் கலைகளுள் ஒன்று. இது, தென்தமிழ்நாட்டில் ஒரு சிலரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வர்மக்கலை, தமிழ் மருத்துவத்தின் ஒரு பிரிவான நரம்புமருத்துவமாகும். இக்கலை, தற்காப்புக்காகவும்பயன்படுத்தப் படுகிறது.

    விபத்து, விளையாட்டு போன்ற தொழில்களால் ஏற்படுகின்ற அடி,குத்து போன்றவை வர்மபாதிப்புகளை ஏற்படுத்தி, தீராத நோயாகமாறுகின்றன. அவ்வாறான நோய்களுக்குரிய மருத்துவமே வர்ம மருத்துவம் என்பர்.அம்மருத்துவத்தையும், செய்முறைகளையும்,வர்ம நிலைகளையும்உரைப்பவை வர்ம நூல்களாகும்.

    வர்ம நூல்கள்மொத்தம் 116 இருப்பதாகத்தெரிகிறது. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டுமே காணமுடிகிறது. மற்றவை பெயரளவில்கூறப்படுபவை. வர்ம கண்டி, வர்ம சூடாமணி,வர்ம சூத்திரம், வர்ம பீரங்கி, திறவு கோல், வர்மக் கண்ணாடி, வர்ம அடங்கல், வர்ம வைத்தியம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

    பலவகைப்பெயர்களால் அமைந்த நூல்கள்

    தமிழ் மருத்துவநூல்களின் பெருக்கத்தையும், எண்ணிக் கையையும்,அளவையும், இலக்கிய வகையையும் கருத்திற் கொண்டுவகைப்படுத்தி விளக்கப்பட்டவை அல்லாமல், வேறு பல பெயர்களில் அமைந்த நூல்களும் காணப்படுகின்றன.

    அவை, மேலே குறித்த வகைப்பாட்டிற்குள் அடங்காமல்தனித்த சிறப்பினைக் கொண்டவையாக இருக்கக் காணலாம்.

    அவற்றுள்சிலவற்றின் சிறப்பினைக் கருதி ஈண்டு குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.

    ஞான வெட்டியான் 1500

    இந்நூல் 1500 பாடல்களைக் கொண்டிருக்கிறது. இதனுள், இசைப்பாடல், விருத்தம், வெண்பா, கலித்துறை, கொச்சகம், சிந்து வகைப் பாடல்கள் அமைந்திருக்கின்றன.

    "" எட்டுத்தூணாட்டியொரு விட்டம் போட்டு
    எழுந்ததின்மேல்அருகுவளை ஒன்றாய்க் கூட்டி
    மட்டற்றமோட்டின்வளை ஒன்று நாட்டி
    வளமான துண்டுவளைரெண்டும் போட்டு
    கட்டாகக்கையகத்தில் வளைத்துக் கொண்டு
    கறமான வரிச்சல்விலாக் கொடியு மாக்கி
    முட்டமுட்ட நின்றகம்பத்து மேலாய்
    முகப்புடனேசிங்கார வீடு மாச்சே'' (பா. 90)

    என்பது, தனது உடலைக் கட்டப்பட்ட குச்சிவீடாக உவமித்துக்கூறும் நயமிக்க பாடல். இவ்வாறு பல பாடல்கள் குறிப்பிடக் கூடியதாகச் சிறந்துகாணப்படுகின்றன.

    ஊர்வெட்டியான்கள், குடியானவர்களைஆண்டை என்றழைக்கும் வழக்கு இந்நூலின் பாடல்கள் பலவற்றில் காணப்படுவதனால், அறிவுப் பொருளைக் கூறும் வெட்டியான் எனக்கொண்டு ஞான வெட்டியான்எனும் பெயரால் வழங்கப்படுகிறதெனலாம்.

    பஞ்ச ரத்தினம் –500 [Five Elements]

    பஞ்சம் என்பதுஐந்தையும் ரத்தினம் என்பது மணியையும் குறிக்கும். பஞ்ச ரத்தினம் என்பது ஐந்துபூதங்களைக் குறிக்கும்.

    பஞ்ச பூதங்களின்தன்மையை அறிந்து அதன்படிப் பொருள்களைக் கூட்டுவித்தால் பளிங்கு போல அதீதமாகும்என்றார். அம்முறையால் செய்த பொருளை உட்கொண்டு மரணத்தை வெல்லும் யோகத்தைச் செய்தால்சித்தியுண்டாகும் என்பதை உரைப்பது, இந்நூல்.

    நாட்டில் விளைந்தநாலுவித சரக்குகளை நாய்போல் விலைக்கு வாங்கி
    மூட்டையிட்டு எருமுட்டையில் வன்னியிட்டு மூண்ட அழலில் மாய்வார்
    சாட்டை யின்றிப்பம்பரம் சுழற்றுவார்கள் தமக்கான குண மிதுவே
    ஏட்டைப் படித்துஇஷ்டம் போல் பிதற்றும் இழிவான வர்க ளாண்டே''

    பா. 174)

    என்னும்பாடல்களால், பஞ்ச பூதங்களைஅறியாமல் செய்யும் செயலைக் கண்டிக்கும் முறை தெரியவரும்.

    பஞ்சமித்திரம் 300

    பஞ்சமித்திரம்என்பது ஐந்து பொருள்களின் நட்பு என்று பொருள்படும். பொருள்களின் நட்பு, பகை அறிதல் மருத்துவத்தில் சிறந்த பணியாகையால்,அவை பற்றி விளக்கிக்கூறுமாறு அமைந்த நூலெனலாம்.

    பஞ்ச பூதப்பொருள்களாவன படிகாரம், வெங்காரம்,சாரம், இந்துப்பு, வளையலுப்பு (பா. 24) எனக் கூறும். அவை, மருந்தாகச் சத்துவகை, உருக்கு பாகம், உலை செய் முறை, சத்துப் பொருளில் செம்பைப் பிரித்தெடுத்தல்,உலைபோடும் வண்மை ஆகியஐந்து முறைகள் சிறப்பித்துப் பாடப்படுகின்றன.

    பெருநூல் 800

    பெருநூல் எண்ணூ<று என்னும் பெயருக்கு ஏற்பப் பல அறிய மருந்துமுறைகள் இந்நூலில் கூறப்படுகின்றன. இதனுள், வைப்பு, செந்தூரம், சுத்திமுறை, பற்பம், கட்டு, மை வகைகள், மந்திர ஜாலங்கள்என்பன குறிப்பிடத்தக்கன. பல பாடல்கள் பொருள் விளங்காத நிலையில் காணப்படுகின்றன.

    சித்தர்இலக்கியங்களில் பெரும் புதிராக அமைபவை மூன்று பொருள்கள். அவை, சாகாக் கால், போகாப் புனல், வேகாத் தலை என்பன. இவற்றுக்கான விளக்கம்இந்நூலில் காணப்படுகிறது. மேலும் விபரங்கள் சித்தர் நெறிஎன்னும் இயலில் விளக்கப்படுகிறது.

    சேகரப்பா

    சேகரப்பாஎன்னும் இந்நூலைத்தேரையர் இயற்றிய நூல்களின் சிகரமாகக் கருதலாம். ஏனைய மருத்துவ நூல்களைப்போலல்லாமல் பிரித்தறியக் கூடியதாக அமைந்த நடை, தமிழ்ப்புலமை, மருந்துவச் செறிவு, உவமை நயம் ஆகியன இந்நூலின் தனிச் சிறப்பாகக்கூறலாம்.

    இலக்கியப் புலமைமிக்கோர்களால் மட்டுமே அறியக் கூடிய சொற்களின் கடுமை, பரிபாஷைச் சொற்கள், பரியாயப் பெயர்கள் ஆகியவை கொண்ட பாடல்களால் இதுஇயற்றப் பெற்றுள்ளது. தமிழ் மருத்துவத்தின் தத்துவங்கள், மருந்துப் பொருளின் தன்மைகள், பயன்கள், மருந்துகளில் பற்பம், செந்தூரம், கட்டு, களங்கு, இளகம், குடிநீர், எண்ணெய் போன்ற செய்முறைகள், நோய்நாடல், நோய் அணுகா நெறிகள் போன்றவை பொதிந்துள்ளன.

    தரு

    தருஎன்பது மரத்தைக் குறிக்கும். மரத்தின்உறுப்புகள் போல, உடல் நலத்தின்உறுப்புகள் கூறப்படுகின்றன. எல்லா நூலும் கூறுவது போல் மருந்தை மட்டுமே கூறாமல்,உணவையும், உணவின் பண்பையும், உணவினால் உண்டாகும் நோயையும் கூறுகிறது.தீக்காய்தல், உடம்பைப்பிடித்துவிடல், தட்டல், இறுக்கல், முறுக்கல், அழுத்துதல், இழுத்தல், மல்லாத்துதல், அசைத்தல் என்னும் முறைகளால் (ட்ச்ண்ண்ச்ஞ்ஞுண்)உடல் வலி, வாயுக் குற்றம்ஆகியன போக்கும் வழி கூறப்படுகிறது.

    குடிநீர் Syrup)

    மருத்துவர் உதவிஇல்லாமல் நமக்கு நாமே எளிய முறை மருந்துகளினால் நோய்களைத் தீர்க்கும் முறைகூறப்படுகிறது. இந்நூல் முழுவதும் குடிநீர் முறைகளே கூறப்படுவதனால் குடிநீர் (Syrup)எனப் பெயர்பெறும். இதில் 93 வகையான குடிநீர் உரைக்கப் பட்டுள்ளது.

    இலக்க சௌமியசாகரம்

    இலக்கம்எண்ணையும், சௌமியம் அழகையும்,சாகரம் கடலையும் குறித்துஅமையும். எண்ணின் அழகுக் கடல் என்று இந்நூலின் பெயரைத் தமிழ்ப் படுத்திக் கூறலாம்.இந்நூல் முழுவதும் எழுத்துகளை எண்ணி எண்ணிப் பொருள் காண வேண்டியிருப்பதனால்,இப்பெயர் அமைந்ததாகக்கொள்ளலாம்.

    வெற்றியென் றோன்பெயர் முதல் ளகர்கடை

    வெள்ளை யெனும்பெயர் கடையுடன்
    தந்தியுடன்சகர்கடையுந் தமியுந்

    தாட்டிடு வாய்ரகரொன்றை யே
    நற்றவனாம் ணாவைவிட்ட மடையனாம்
    நாட்டுவை யேழதைக்கோட்டி யுடன்
    உத்தம தாகவேபெயர் விளங்கிடு
    முயர்வுட னிலைச்சாற்றினின்''19

    என்னும் பாடல்வெள்ளைச் சாரணை என்னும் சரக்கின் பெயரைக் குறிப்பதற்காக இயற்றப்பட்டது. ஒருபெயரைக் குறிக்க ஒரு பாடல் என்று பல பாடல்கள் இவ்வாறே இயற்றப்பட்டுள்ளன.இப்பாடல்கள் நுட்பமாக மருத்துவம் அறிந்த அறிஞர்களின் குறிப்புகளால் அறியக்கூடியதாக அமைந்துள்ளன.

    இப்பகுதியில்குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் அல்லாமல் மேலும் பல அறிய நூல் வகைகள் காணப்படுகின்றன.அவ்வாறான நூல்களில் குறிப்பிடத் தக்கவையாக, கன்ம காண்டம்300, குறு நூல் வைத்தியம்600, துடி நூல் பின்80–முன்80, முப்பூ தீட்சை, இரண வைத்தியம்100, சல்லிய கிரிகை, கேசரி நூல், வசிய சூத்திரம் 500, கர்ப்பக் கோள், மலைவாகடம், உப்புக் கட்டு100, சித்தர் ஆரூடம், நாடி சாஸ்திரம், நெய்க்குறி, நீர்க்குறி, வைத்திய மாநிதி வல்லியார் ஊஞ்சல், ஒட்டியம், சல்லியம், கோரக்கர் சந்திரரேகை, சிமிட்டு ரத்தினச் சுருக்கம், வாலை சாத்திரம், சனன சேகரம், பிண்டோற்பத்தி, ரத்னாகரம்1001, கடிசூத்திரம், செனன சாகரம்557 என்பவை குறிப்பிடத் தக்கவை.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Admin Sat 04 Dec 2010, 11:37 pm

    கால்நடை மருத்துவநூல்கள்

    தமிழ் மருத்துவம்மனிதர்களுக்கு மட்டும் மருத்துவம் என்னும் நோக்கில் வளர்ந்ததாக இல்லாமல், விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்தாவரங்களுக்கும் மருத்துவம் கூறுகின்ற அளவிற்குப் பரந்து விரிந்த நிலையைஅடைந்திருப்பது தெரிய வருகிறது. அகத்தியர் நூல்களில் பறவை, தாவரங்கள் ஆகியவற்றிற்கான மருத்துவம் கூறப்பட்டுள்ளதாகக் கூறுவர். அத்தகைய நூல்கள் சுவடியாகவே இருக்கின்றமை யாலும், அம்மருத்துவ முறைகளைத் தனியே பிரித்துத் தனி நூலாகக்கொள்ளாமல், பிற நூல்களுடன்இணைத்துக் கூறப்பட்டிருப்ப தனாலும், அவை பற்றின விவரங்களை இங்கே விரித்துரைக்க இயலவில்லை. ஆனால், கால்நடைகளுக்கான மருத்துவ நூல்கள் தனித்தனியேஇயற்றப்பட்டுள்ளன. விலங்குகளின் மருத்துவ நூலாகக் காணப் படுபவை வருமாறு:

    அசுவ வாகடம்
    ஆனை வாகடம்
    கஜவிதி நூல்
    குதிரை வாகடம்
    மாட்டு வாகடமும்வைத்திய வாகடமும்
    மாட்டு வாகடம்
    மாடுகள், குதிரைகள், பறவைகள் லக்ஷ்ணமும்
    வைத்தியமும்.''

    என்பனவாகும்.

    இவற்றுள்,‘ஆனை வாகடம்’ (சுவடி எண். 7353) என்னும் சுவடியில் யானையின் இலட்சணம், சுழியின் வகைகள், சாதி வகைகள், ஆயுள் வகைகள் உரைக்கப்படுகின்றன.

    யானைகளுக்குஉண்டாகும் நோய்களுக்கு மருந்துக் கவளங்கள் (வாயின் கொள்ளளவுக்கு ஏற்ப உருண்டையாகத்தரும் மருந்து). எண்ணெய்கள், தீனிகள்உரைக்கப்படுகின்றன. மதங்கொண்ட யானைக்கு மதத்தை அடக்கக் கவளங்கள்உரைக்கப்படுகின்றன.

    (தஞ்சை சரசுவதிமகால் நூல் நிலையத்தில் உள்ள விலங்குகள், பறவைகள் மருத்துவ நூல்களில் அடங்கியுள்ள செய்திகளைத் திரட்டி மாடுகள், குதிரைகள், பறவைகள் லக்ஷணங்களும். வைத்தியமும் என்னும்நூலாக வெளியிடப்பட்டுள்ளது).

    சரசுவதி மகால்நூல் நிலையத்தில் பல்வேறு மொழி அறிஞர்களால் இயற்றப் பெற்ற குதிரை மருத்துவ நூல்கள்மட்டும் இரண்டாயிரத் துக்கும் அதிகமாக உள்ளன என்பர். ஆனால், தமிழக மெங்கும் மாட்டு வாகடத்தில் தேர்ச்சிபெற்ற வல்லுநர்கள் பலர் இருந்தும், அவர்களிடமிருந்துவிலங்கியல் சார்ந்த நூல்களைப் பெற முடிவ தில்லை. காரணம், அந்நூல்களைப் பிறரிடம் காண்பிக்கவோ, படி யெடுக்கவோ அனுமதிப்பது குற்றமாகக் கருதிமறைத்தே வைத்துள்ளனர்20என்பதுவருத்தத்திற்குரியது. உழுவதற்கும் கறவைக்கும் உறுதுணையாக விளங்கும் மாட்டின்வளத்தைப் பெருக்கிட, மாட்டுவாகடநூல்கள் எல்லார்க்கும் கிடைக்குமாறு திரட்டுதலும், பதிப்பித்திலும் நடைபெற்றாக வேண்டும்.

    மந்திரமும்மருத்துவமும் சேர்ந்த நூல்கள்

    மந்திரத்தால்மருத்துவம் செய்த முறைகள் ஒன்றிரண்டு நூல்களில் காணப்படுகின்றன. மச்சமுனி300 என்னும் நூலில் மருந்துப் பொருள்களைச்சேகரிக்கவும், செய்த மருந்துகள்சக்திபெறவும் மந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது. அவைபோலல்லாமல், மருத்துவத்துடன்இணைத்துக் கூறப்படும் மந்திரங்களைத் தொகுத்துக் கூறும் தனி நூல்களும் இருக்கக்காணலாம், அவற்றுள் சில,

    "" கருவூரார்மாந்திரீக காவியம்''

    "" மந்திரமும்வைத்தியமும்''

    "" விஷ வைத்தியமும்மந்திரமும்''

    "" வாத முறையும்மாந்திரீக முறையும்''

    ஆகும்.இந்நூல்கள் சித்தர்களால் இயற்றப் பெற்றதாகத் தோன்ற வில்லை. ஆயினும் சித்தர்கள்மந்திரம், மாந்திரீகம்போன்றவைகளிலும் தேர்ச்சியுடையவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றுகள்பல உள.

    மருத்துவமும்சோதிடமும் சேர்ந்த நூல்கள் மருத்துவத்துடன் சோதிடம் என்னும் கோளியல் முறைநெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது. சோதிடர்கள், கோள்களின் ஆதிக்கத்தால் உடம்பில் விளைவுகள்ஏற்படுமென்றும் அதனால் நோய்கள் உண்டாகக் கூடும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

    புலிப்பாணிவைத்தியம்500, நாடி நூல்கள்,மருத்துவத் தனிப்பாடல்கள் ஆகிய நூல்கள் கூறும் மருத்துவக் காலங்கள் வருமாறு:

    நோயாளிக்கு நோய்வந்துற்ற காலம், நோயாளி மருந்துஉண்ண ஏற்ற நாள், மருந்துசெய்வதற்குரிய பருவம், மருந்துப்பொருள்களைச் சேமிக்க வேண்டிய பெரும்பொழுது ஆகியவற்றுடன், நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்யக் கூடாததிதியுடன் உடற்பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    அகத்தியர் கன்மகாண்டம்300 என்னும் நூல்,மனிதர்கள் செய்கின்றகன்மத்தின் காரணத்தினால் தான் நோய்கள் வருகின்றன என்றும், செய்த கன்மத்திற்கு நிவர்த்தி செய்யாவிட்டால்கன்ம நோய் தீராது என்றும் குறிப்பிடுகிறது.

    நட்சத்திரங்கள் 27–ம் மனித உடலை 27 பாகங்களாகக் கொண்டு ஆட்சி செய்கின்றன. மனிதன்பிறக்கும் நேரத்து நட்சத்திரத்தில், சந்திரனின் நடமாட்டம் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதையே அவனின் பிறந்தநட்சத்திரமாகவும், அந்த நட்சத்திரம்அவனின் உடலில் எந்த அங்கத்தின் ஆதிக்கத்தில் உள்ளதோ அந்த அங்கமே அவனின் உயிர்நிலைக்கும் இடமாகும். அந்த இடத்தில் பழுது ஏதும் ஏற்பட்டால் அது அவனின் உயிரைப்பாதிக்கக் கூடியதாக இருக்குமென்று சோதிட நூல் குறிப்பிடுகிறதாகக் கூறுவர்.

    இவ்வாறானசோதிடமும் மருத்துவமும் கலந்த செய்திகளை மருத்துவ நூல்கள் மருத்துவமாகவும்,சோதிட நூல்கள்சோதிடமாகவும் கூறுகின்றன. இவ்விரண்டும் இணைந்த, சோதிடமும் மருத்துவமும் என்று ஒரு நூல்காணப்படுகிறது. இதனால், சோதிடத்துக்கும்மருத்து வத்துக்கும் உள்ள தொடர்பு அறிய முடிகிறது.

    மதிப்பீடு

    தமிழ் மருத்துவநூல்களாகக் காணப்படுவனவற்றை எண்ணிக்கை, அளவு ஆகியவற்றை நோக்கும் பொழுது, அவை தமிழ் மொழி இலக்கியத்தின் எண்ணிக்கை, அளவு ஆகியவற்றை விட மிகுந்திருப்ப தாக அறியமுடிகிறது.

    இலக்கியவளத்திலும் மொழி வளத்திலும் குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்குச் சிறந்தவையாகக்காணப்படுகின்றன.

    மருத்துவநூல்களின் பெருக்கத்தால் தமிழ் மொழியின் சிறப்பு மிகுந்து காணப்படுவதுடன், தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், உரை நடை இலக்கியம் என இருந்த நிலை மேலும்வளர்ந்து, மருத்துவக் கலைஇலக்கியம் என்னும் புதிய வகை இலக்கியமும் இருப்பது போற்றுதலுக்குரியது.

    குறைபாடுகள்

    சுவடிகளிலிருந்துநூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ள பல மருத்துவ நூல்களில் சொற்பிழை, எழுத்துப் பிழை, யாப்புப் பிழை, ஆகியவை காணப்படுகின்றன. அதற்குக் காரணமாகஅமைவது, தேர்ந்த மொழிப்பயிற்சியுடையவர்களால் சரிபார்க்கப்படாமல் பதிப்பித்தலேயாகும்.

    பல நூல்கள்,தலைப்பு அட்டவணை, பாடற்குறிப்பு போன்ற பதிப்பிற்குரிய முறைகள்பின்பற்றப் படாமல், பாடல்களை மட்டும்பதிப்பித்து வெளியிட்டுள்ளன.

    உரைகள் கொண்டநூல்கள் பத்துக்கும் குறைவானவை எனலாம்.

    ஒரே நூல் பலபெயரிலும், பல நூல்கள் ஒரேபெயரிலும் பதிப் பாளர்களால் மாற்றி வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.மேற்கண்டவை தவிர்க்கக் கூடியவையே.

    தொகுப்புரை

    இலக்கிய வளத்தைக்கருதி, மருத்துவ நூல்கள்அனைத்தையும் சுவடிகளிலிருந்து பெயர்த்தெழுதி வெளியிட வேண்டும்.

    நோய்க்குரிய நூல்,மருந்திற்குரிய நூல்,வாதத்திற்குரிய நூல்,யோகத்திற்குரிய நூல்,ஞானத்திற்குரிய நூல் எனத்தொகுத்து, தொகுதி தொகுதியாகவகைப் படுத்தி வெளியிட வேண்டும்.

    மருத்துவ நூல்கள்அனைத்தும் பயனுடைய நூல் எனக் கொள்ள முடியாது. பயனுடைய நூல்களைப் பாதுகாக்கும்நோக்கில் அவை உரையுடன் கூடிய நூல்களாக வகுத்து வெளியிட வேண்டும்.

    நலிந்துகொண்டிருக்கும் மருத்துவ இலக்கியம் வளர்ச்சியடைய, தேர்ந்த பதிப்பாசிரியர் குழுவின்மேற்பார்வையுடன் மருத்துவ இலக்கியக் களஞ்சியம் என்னும் பெருந்தொகுதியாகத்தேர்ந்தெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழ் இலக்கியப்பட்டயக் கல்வி போல், மருத்துவஇலக்கியப் பட்டயக் கல்வியை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் மருத்துவ இலக்கியத்தின் வளத்தையும்சிறப்பையும் அறியச் செய்ய வேண்டும்.

    மருத்துவஇலக்கியம் பாடநூலில் இடம் பெற்றால் தான் தமிழ் மருத்துவம் வளரும் சூழல் உருவாகும்


    nandri -prof vasudevan

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by ram_soft2003 Thu 16 Dec 2010, 2:21 am

    இந்தக் கட்டுரை அலசலல்ல அதையும் தாண்டிய ஒரு மகா முயற்சி. இறையருள் இனிதே பெற வாழ்த்துக்கள்!!

    - சிவசத்தியடியான்

    ram_soft2003
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 30
    Points : 62
    Reputation : 0
    Join date : 04/12/2010

    Back to top Go down

    தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்  Empty Re: தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum