ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    அறுவை சிகிச்சை அவசியமான நோய்களில் ஹோமியோ மருந்துகளின் பங்கு

    Go down

    அறுவை சிகிச்சை அவசியமான நோய்களில் ஹோமியோ மருந்துகளின் பங்கு  Empty அறுவை சிகிச்சை அவசியமான நோய்களில் ஹோமியோ மருந்துகளின் பங்கு

    Post by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 11:05 pm

    அறுவைச் சிகிச்சையை ஹோமியோபதிபதி முற்றிலும் எதிர்க்க வில்லை. பிறவி உடலமைப்புக் கோளா றுகள் (CONGENITAL DEFORMITIES), விபத்துகளால் உடல் உறுப்பு களில் ஏற்பட்ட கடுமையான சேதங்கள், முற்றிய நிலைக் கட்டிகள் போன்ற சூழ்நிலைகளில் அறுவைச் சிகிச்சையின் நியாயமான பயன் பாட்டை அங்கீகரிக் காமல் இருக்க முடியாது.

    ஆனால். மருந்து, மாத்திரை களாலேயே குணப்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ள பல்வேறு வியாதிகளை, அதற்கான அவகாசமோ, வாய்ப்போ வழங்காமல், முயற்சிகள் மேற்கொள்ளா மல் அறுவைச்சிகிச்சை செய்வதைத் தான் ஹோமியோபதி விமர்ச்சிக்கிறது. ‘அறுவைச் சிகிச்சை வெற்றி’ என்று அறிவித்தாலும், பாதிக்கப்பட்ட பாகத் தை அறுவை செய்து நீக்கியதால் மட்டும் முழு குணம் ஏற்பட்டு விடாது என்பதை விரைவிலேயே ஒவ்வொரு நோயாளியும் மறு அனுபவமாகத் (REEXPERIENCE) தெரிந்து கொள்கின்றனர்.

    வியாதிக்குறிகளை அகற்று வதால் மட்டுமே வியாதியின் அடிப்படை நீங்கி விடுவதில்லை. எனவே தான், டான்சில் ஆபரே சன் செய்து கொண்ட குழந்தை களுக்கு, டான்சிலால் ஏற்பட்ட எந்தத் தொந்தரவுகளும் மாறி விடுவதில்லை; வாழ்நாள் முழுதும் தொடர்கின்றன. மூக்கடைப்பிற் காக (NASAL BLOCKAGE) சிகிச்சைக் குச் செல்லும் பெரும்பாலோர்க்கு மூக்கினுள் உள்ள சிறிய சதை வளர்ச்சியைக் (POLYPI) காரணம் காட்டி அறுவைச் சிகிச்சை செய் யப்படுகிறது. இருந்த போதிலும் மூக்கடைப்பு நீங்குவதில்லை; மீண்டும் சதை வளர்ச்சி ஏற்படுவ தைத் தடுக்க முடிவதுமில்லை. அதே போல, மூலச் சதையை வெட்டி எறிவதால் மட்டும் மூலத்தின் மூல காரணம் மறைந்து விடுவதில்லை. மீண்டும் மூல அவஸ்தைக்கு ஆளாகின் றனர். பல முறை மூல அறுவைச் சிகிச் சைக்கு ஆளானவர்கள் இறுதியில் ஹோமியோபதி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வருவதைப் பார்க்கிறோம்.

    தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணிபுரியும் கிறிஸ்துவப் பெண்மணி ஒருவர் கழுத்தின் இடதுபுறம் கட்டி ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். அந்தத் தழும்பில் வலி ஏற்பட்டு மீண்டும் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றார். வலி குறையவில்லை. தழும்பு புண்ணாக மாறியது. நீர் போன்ற சீழ்கசிவு ஏற்பட்டு எரிச்சலும் வலியுமாய் சித்ரவதை செய்த போது என்னை அணுகினார். சில நாட்களில் குணமடைந்தார். சிலகாலம் கழித்து, அவரது கழுத்தின் வலதுபக்கம் முன்பு போலவே ஒரு கட்டி ஏற்பட்டு, ஆங்கில மருத்துவரைச் சந்தித்து “அறுவைச் சிகிச்சை வேண்டாம்! மருந்து மாத்திரை கள் மட்டும் தாருங்கள்” என்று கேட்க அவர் கோபப்பட்டு அனுப்பி விட்டார். மீண்டும் அப்பெண் ஹோமியோ சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டு முழுமையாகக் குணமடைந் தார்.

    கல்லூரி மாணவர் ஒருவர் முன் கழுத்துப் பகுதியில் ஒரு சிறிய மருவை தோல் நிபுணரிடம் காட்டி அறுவை மூலம் அகற்றினார். இரண்டு மாதம் கழித்து, அருகிலேயே புதிய இரண்டு மருக்கள் தோன்றின. அதே நிபுணரிடம் சென்று மறுபடியும் அறுவை செய்து கொண்டதோடு, மீண்டும் வராமலிருக்க மருந்து மாத்திரைகள் கொடுங்கள் என்று கேட்க, டாக்டர் வெறும் ஆறுதல் மட்டுமே கூறி அனுப்பியுள்ளார். சில மாதம் கடந்த பின் அவரது கழுத்துப் பகுதி முழுவதும் ஏராளமான மருக்களும், சில பாலுண்ணிகளும் தோன்றின. அம்மாணவர் ஹோமி யோபதி பற்றிக் கேள்விப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்ட இரண்டு மாதங்களில் எல்லா மருக்களும், பாலுண்ணி களும் மாயமாய் மறைந்தன. இது போன்ற அறுவை சிகிச்சையின்றி நலமாக்கிய எண்ணற்ற அனுபவங்கள் ஹோமியோபதியில் மட்டுமே சாத்தியம்.

    (APPENDICITIS) குடல்வால் அழற்சி நோயால் துயருற்ற கல்லூரி ஆசிரியர் ஒருவர் அறுவைச் சிகிச்சைக்குப் பயந்து ஹோமியோபதி சிகிச்சைக்கு வந்தார். இவர் இதற்குமுன் சாதாரணத் தலைவலிக்குக் கூட ஹோமியோபதி பக்கம் தலை காட்டியதில்லை. ஆங்கில வலி நிவாரணிகளுக்குக் கட்டுப்படாத கொடூரமான வலியால் துடித்துப் போன அவருக்கு ஹோமியோ மருந்துகள் மிக விரைவான நிவாரணம் அளித்து வலியைக் குறைத்ததோடு, அறுவைச் சிகிச்சைக்கும் அவசிய மில்லாமல் செய்துவிட்டன. மறுபடியும் அப்பிரச் சனை அவருக்கு பல ஆண்டுகளாகியும் வரவே யில்லை.

    “உண்மை ஒரு நாள் வெளியாகும் அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்” - என்ற பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பல சந்தர்ப்பங் களில் அறுவைச் சிகிச்சை தேவையில்லை என்ற உண்மை ஒருபுறமிருக்க, பல்வேறு நோயாளிகள் அறுவைச் சிகிச்சைக்குச் சற்று முன்னும் பின்னு மாய் ஹோமியோபதியர்களைச் சந்திக்கின்றனர். தவிர்க்க முடியாமல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதாகக் கூறி அறுவைச் சிகிச்சை காரணமாகப் பாதிப்புகள் நேராமல் இருக்க ஹோமியோ மருந்துகளைக் கோருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஹோமியோபதி அருந்துணை புரிந்து காக்கிறது. பொதுவாக அறுவைச் சிகிச்சைக்கு முன்பு எந்தவிதமான உணவும் பானமும் மருந்தும் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டாலும் ஹோமியோ மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் அறுவைச் சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் நேர்வதில்லை.

    தேவைப்படும் காரணங்கள், சூழ்நிலைகள், குறிகளுக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கீழ்கண்ட ஹோமியோ மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

     பொதுவாக எந்த ஓர் அறுவைச் சிகிச்சைக்கும் இரண்டு நாள் முன்னதாக தினம் 3 வேளை வீதம் ஃபெர்ரம் பாஸ் 6 எடுத்துக் கொள்வதால், அறுவைச் சிகிச்சையால் ஏற்படும் அதிக ரத்த ஒழுக்கையும், தொற்று நோயையும் கட்டுப்படுத்தலாம். (Infection & haemorrhaging)

     அறுவைச் சிகிச்சைக்கு முன் ஆர்னிகா 30 பயன்படுத்தினால் (SURGICAL SHOCK) அதிர்ச்சியைக் குறைக்கும்; ரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்தும்.

     அறுவைச் சிகிச்சைக்கு முன் பதட்டம், நடுக்கம், மனச்சோர்வு ஏற்படும் போது ஜெல்சிமியம் 30 பயன்படும்.

     அறுவைச்சிகிச்சையின் போது அல்லது சிகிச்சைக்குப் பின்னர் இறந்துபோவோம் என்ற பயத்துடன் இருப்பவருக்கு அகோனைட் கொடுக்கலாம்.

     ஜெல்சிமியம், அகோனைட் போன்ற மருந்துகளை அறுவைச் சிகிச்சைக்கு முதல்நாள் இரவு 1 வேளையும், அறுவைச் சிகிச்சை நாளன்று காலை 1 வேளையும், அறுவை முடிந்த பின் பயம், பதட்டம் நீடித்தால் மீண்டும் சில வேளைகளும் தரலாம்.

     முழங்கை, முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்யும் முன்னர் ரூட்டா 30 2 வேளையும், பின்னர் சில வேளைகளும் கொடுக்கலாம்.

     முதுகுத் தண்டில் அறுவைச் சிகிச்சை எனில் ஹைபரிகம் 30 பயன்படும்.

     கை, கால் பாகம் நீக்கிய பின்.... ஏற்படும் நரம்பு வலிக்கு அல்லியம் சீபா சிறந்தது.

     சுன்னத் (CIRCUMCISION) அறுவைக்கு முன் ஆர்னிகா 30 அல்லது ஹைபரிகம் 30 அல்லது ஸ்டாபிசாக்ரியா 30 கொடுக்கலாம். அறுவை முடிந்த பின்னர் மேலும் 2 நாள் 4 மணி நேரத்திற்கு ஒரு வேளை வீதம் இம்மருந்துகளைத் தரலாம்.

     கருச்சிதைவு (Dilatation & Curatage) சிகிச்சைக்குப் பின் பெல்லடோனா 30, ஆர்னிகா 30, சபீனா 30 (குறிகளுக்கேற்ப) 4 மணி நேரத்திற்கு ஒரு வேளை வீதம் சில நாள் தேவைப்படும்.

     மூலம் அறுவைச் சிகிச்சைக்கு முன்னும், செய்த பின்னும் ஸ்டாபிசாக்ரியா 30 அல்லது ஏஸ்குலஸ் 30 பயன்படும்.

     பௌந்திரம் அறுவைக்குப் பின்னர் காலிபாஸ் 30 பயன்படும்.

     அறுவைச்சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்ட பின் (HYSTERECTOMY) காஸ்டிகம் 30 அல்லது ஸ்டாபிசாக்ரியா 30தினம் 4 வேளை வீதம் சில தினங்கள் கொடுக்கவேண்டும்.

     அசுத்த ரத்தக் குழாய் புடைப்பைச் சீர்படுத்தும் (VARICOSE VEINS) அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் லேடம்பால் 30 பயன்படும்.

     மார்பகக் கவர்ச்சிக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் பெண்களுக்கு சிகிச்சைக்குப் பின் பெல்லிஸ் பெரன்னிஸ் 30 தினம் 3 வேளை சில தினங்கள் கொடுக்கலாம்.

     பொதுவாக பிளாஸ்டிக் சர்ஜரிக்கு வெளி உபயோகமாக காலண்டுலா தாய்த் திரவத்தையும், உள் உபயோகமாக ஆர்னிகாவும் பயன்படுத்தலம்.

     கருக் கலைப்பைத் தொடர்ந்து இக்னேஷியா பயன்படும்.

     கண் அறுவைச் சிகிச்சைக்குப் பின் லேடம்பால் 30 4 மணி நேரத்திற்கு 1 வேளை வீதம் 3 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.

     சுக்கிலச் சுரப்பியில் (PROSTATE GLAND)அறுவைச் சிகிச்சை நடைபெற்ற பின் ஸ்டாபிசாக்ரியா 30 பயன்படுத்தலாம்.

    அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து ஸ்டாபிசாக்ரியா 30 அல்லது லேடம்பால் 30 தினம் 4 வேளை கொடுக்கலாம்.

     அறுவைச் சிகிச்சைக்குப் பின் சில காலம் கழித்துத் தழும்புள்ள இடத்தில் வலி ஏற்பட்டால் ஸ்டாபிசாக்ரியா பயன்படும்.

     அறுவைச் சிகிச்சையால் ஏற்பட்ட தழும்பு(SCARRING & ADHESIONS) மறைய தயோசினமினம் தாய்த் திரவத்தையும் காலண்டுலா தாய்த் திரவத்தையும் வெளிப்பூச்சாக தினம் 1 வேளை சிலவாரம் அல்லது சில மாதம் பயன்படுத்த வேண்டியிருக்கும். கிராபைட்டிஸ் 30 வாரம் 1 வேளை மட்டும் சாப்பிட வேண்டும்.

     அறுவைச் சிகிச்சைக்குப் பின் சீழ்கட்டிக் கொண்டு வலியும் சுரமும் ஏற்பட்டால் பைரோஜின், பாப்டீசியா, ரஸ்டாக்ஸ் ஆகிய மருந்துகளைக் கொண்டு குணப்படுத்தலாம்.

     அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய மயக்க மருந்தின் விளைவுகளைப் போக்க அசிடிக் ஆசிட், மயக்க மருந்தினால் ஏற்படும்

    வாந்தியைக் கட்டுப்படுத்த சாமோமில்லா போன்ற மருந்துகள் பயன்படும்.

     பித்தப்பையில் நடைபெற்ற அறுவைச் சிகிச்சைக்குப் பின் லைகோபோடியம் 30 பயன்படும்.

     அடிவயிற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் உப்புசம் (FLATULANCE) ஏற்பட்டால் சைனா அல்லது லைகோபோடியம் முழு நிவாரணமளிக்கும்.

     தையல் போட்ட இடம் நோக்கி சுற்றியுள்ள தோல் இழுக்கப்பட்டிருந்தால் காலிபாஸ் கொடுக்கலாம்.

    அப்பெண்டிசிடிஸ் அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து ரஸ்டாக்ஸ் 30 தினம் 3 வேளை தரலாம்.

     அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவம் நடந்த பிறகு அல்லது குழந்தை பிறக்கும் வழியை இலகுவாக்க செய்யப்படும் சிறிய அறுவைக்குப் பிறகு பெல்லிஸ் பெரனிஸ் 30 அல்லது ஸ்டாபிசாக்ரியா 30 தினம் 4 வேளை சில நாள் கொடுக்கலாம்.

    துப்பாக்கி ரவைகள் துளைத்த பின் அல்லது கத்திக்குத்து ஏற்பட்ட பின் நடைபெறும்

     தையல் பிரித்தபின் கருநிறம் தெரிந்தால், சதைகளில் வலி, பலவீனம் காணப்பட்டால் சல்ப்யூரிக் ஆசிட் கொடுக்கலாம்.

     அறுவை மருத்துவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியுடன், நெற்றியில் குளிர்ந்த வியர்வை, வாந்தி, வெளுத்த முகம், கை கால்களில், பிடிப்பு வலி போன்ற குறிகள் இருப்பின் வெராட்ரம் ஆல்பம் பயன்படும்.

     அறுவைச் சிகிச்சை முடிந்த பின் இரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டு, உடல் வெப்பமும் குறைந்தால் காம்போரா குணப்படுத்தும்.

    அறுவைச் சிகிச்சைக்குப் பின் சிறுநீர் தடைபட்டால் காஸ்டிகம் கொடுக்கலாம்.

     அறுவைச் சிகிச்சை மூலம் பற்களை அகற்றுவதற்கு முன் ஆர்னிகா பயன்படுத்தலாம். பற்களை அகற்றிய பின்னர் அதிர்ச்சிமற்றும் ரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்த ஆர்னிகா, பெர்ரம் பாஸ், ஹைபரிகம், பாஸ்பரஸ் பயன்படும். ஆனால், தாடை வலி, நரம்பு வலி ஏற்பட்டு நீடிக்குமானால் ‘ஹெக்லலாவா’ அல்லது ‘ஹைபரிகம் 200’ நல்ல பலனளிக்கும்.

     டான்சில் மற்றும் அடினாய்டு அறுவைச் சிகிச்சையைத் (TONSILLECTOMY & ADENOIDECTOMY) தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு 1 வேளை வீதம் ரஸ்டாக்ஸ் 30 சில நாட்கள் சாப்பிடுவது நல்லது.

     அறுவைச்சிகிச்சையைத் தொடர்ந்து அடிக்கடி வாயு உற்பத்தியாவதும் வெளியேறாமல் இருப்பதும், வயிற்றுத் தொந்தரவுடன் மலச்சிக்கலும் ஏற்படுமாயின் ‘ரபேனஸ்’ நன்மை செய்யும்.

     அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து கடுமையான வாந்தி, குமட்டல் ஏற்படக்கூடும். குளிர்நீர், பானம் அருந்த வேண்டும் என்ற விருப்பமிருக்கும். ‘பாஸ்பரஸ்’ அளித்தால் நலம் கிடைக்கும். தவிரவும் நக்ஸ்வாமிகா, இபிகாக், ஆர்சனிகம் ஆல்பம் போன்ற மருந்துகளும் குறிகளுக்கேற்பப் பயன்படும். பொதுவாக, வயிற்றுப் பகுதி அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக பாஸ்பரஸ் கொடுத்தால், வாந்தி மற்றும் இதர பின் விளைவுகள் ஏற்படாது.

     அறுவைச்சிகிச்சைக்குப் பின் குடல் அடைப்பு ஏற்பட்டால் ஓபியம் பயன்படும்.

     அறுவைச் சிகிச்சை செய்த இடத்திலுள்ள காயத்திற்கு (SURGICAL WOUND) வெளிப் பூச்சாக காலண்டுலா தாய்த் திரவமும், ஹைபரிகம் தாய்த் திரவமும் உபயோகிக்கலாம். அந்தக் காயத்தில் சீழ் ஏற்பட்டால் ஹீப்பர்சல்ப் சீழை அகற்றிக் காயத்தை விரைவில் குணமாக்கும்.

    (குறிப்பு : சதைக்குள் சென்ற துரும்பு, கண்ணா டித்துண்டு,வேறு பொருட்களை வெளியேற்றும் சக்தி ஹீப்பர்சல்ப் மருந்துக்கு உண்டு. அதே போல (SURGICAL STITCHES) அறுவைச் சிகிச்சைத் தையலையும் வெளித்தள்ளும் என்பதால் தையல் பிரிக்கும் வரை ஹீப்பர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்)

     அறுவைச்சிகிச்சைக் காயம் நீலம் பாரித்திருந்தால் லாச்சஸிஸ் அல்லது கன் பவுடர் பயனளிக்கும். அக்காயத்தில் அதிக எரிச்சல் ஏற்படுமாயின் சல்பர் குணமளிக்கும்.

     கண்பொறை (CATARACT) அறுவைச் சிகிச்சைக்குப் பின் பார்வை மங்கல் ஏற்பட்டால் செனேகா பயன்படும்.

    nandri-டாக்டர் ந.வெங்கடாசலம் --

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » கண்புரை -அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோவில் மாறும்
    » முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
    » அறுவை சிகிச்சையின்றி -கருப்பை கட்டிகளை மாயமாக ஓடவைக்கும் ஹோமியோ
    » ஹோமியோ மருந்து தயாரிப்பு மற்றும் ஹோமியோ துறை சார்ந்த சட்ட நுணுக்கங்கள்
    » குழந்தைகளுக்கு ஹோமியோ மருந்துகள் -இது ஒரு ஹோமியோ பீடியாட்ரிசீயன் முழு விளக்கம்

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum