ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    3 posters

    Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

    Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:41 pm

    மருத்துவரீதியாகபார்த்தால் வெறும் நாற்பத்தி இரண்டு சதவிகிதம் பெண்களுக்கு மட்டும்தான்முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது கன்னித்திரை கிழிந்து ரத்தக்கசிவு ஏற்படவாய்ப்பு இருக்கிறது. நாற்பத்தேழு சதவிகிதம் பெண்களுக்கு இந்தக் கன்னித்திரை ஏதோஎலாஸ்டிக் மாதிரி நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கிறது. உடலுறவு முடிந்ததும்பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகிறது. அதனால் இவர்களுக்கு முதல் தடவைஉறவின்போது இது கிழியவும் கிழியாது... ரத்தக் கசிவும் இருக்காது... வலியும்இருக்காது!

    தடய அறிவியல்நிபுணர்கள்தான் இதைக் கண்டு பிடித்தார்கள். விலைமாதர்கள் உடலைப் பிரேதப் பரிசோதனைசெய்தபோது, அவர்களில் பலரது கன்னித் திரை கிழியாமல்பத்திரமாக இருப்பதைப் பார்த்து நிபுணர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இத்தனைக்கும்ஆண்டுக்கணக்கில் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் அவர்கள். அதைப் பரிசோதித்த பிறகேஇந்த எலாஸ்டிக் சமாச்சாரம் தெரிய வந்தது.

    இந்த இரண்டு ரகம்தவிர, இன்னொரு பதினோரு சதவிகிதம் பெண்களுக்குக்கன்னித்திரை மிகவும் மெல்லியதாக இருப்பதால் சின்ன வயசிலேயே கிழிந்து விடும்.உடற்பயிற்சி செய்யும்போதோ, பைக்கில் காலைத் தூக்கிப் போட்டு உட்காரும்போதோ, சைக்கிள் ஓட்டும் போதோ இது சிம்பிளாகக் கிழிந்துவிடும்.இவர்களில் சிலர் கன்னித்திரை என்ற பாகமே இல்லாமல் பிறக்கிறார்கள் என்பதும்மருத்துவர்கள் கண்டறிந்த உண்மை. மொத்தத்தில் பார்த்தால், ஐம்பத்தெட்டு சதவிகிதம் பெண்களுக்கு கன்னித்திரை கிழியாது... ரத்தக் கசிவும்இருக்காது. அப்படியிருக்கும்போது... இவர்களை கெட்டுப்போனவர்கள்என முத்திரை குத்துவது எவ்வளவு பெரிய கொடுமை?!
    பெண்களின்பிறப்பு உறுப்பின் உட்பக்கமாக ஒரு இஞ்ச் தூரத்தில் இந்தக் கன்னித்திரை இருக்கிறது.பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க மேல்பக்கம்ஒரு ஃபாயில் பேப்பர் மாதிரி ஒட்டி வைக்கிறார்களே... அது மாதிரி மெல்லிய சவ்வு இது!

    இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும். பொதுவாக பிறைநிலா மாதிரி பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். மாதவிடாயின்போது ரத்தம் வெளியேறுவதற்காக இந்த வடிவம்.சில பெண்களுக்குக் கன்னித் திரை சுத்தமாக மூடியிருக்க, மாதவிடாயின்போது ரத்தம் வெளியில் வராமல் அப்படியே அடைத்துக் கொள்ளும். அவர்களுக்கு ஆபரேஷன் செய்து கன்னித் திரையை அகற்றுவார்கள். இல்லாவிட்டால் உயிருக்கேஆபத்தாகி விடும். கன்னித்திரையை அகற்றப் போகிறோம்என சொல்லிவிட்டுத்தான் இந்த ஆபரேஷனை டாக்டர்கள் செய்வார்கள். பின்னால் பிரச்னைவந்துவிடக் கூடாது என்ற அக்கறை தான் காரணம்!
    வேடிக்கைஎன்னவென்றால், பிளாஸ்டிக் சர்ஜரி மகத்தான வளர்ச்சிகண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஏதோ கண்ணில் கான்டாக்ட் லென்ஸ் பொருத்துவது மாதிரிபெண்களுக்குக் கன்னித்திரையைக்கூட புதிதாகப் பொருத்துகிறார்கள்.

    திருமணத்துக்குமுன்பாக இதை யார் வேண்டுமானாலும் ஆபரேஷன் மூலம் பொருத்திக் கொள்ளலாம். இந்தஆபரேஷனில் பிறப்பு உறுப்பின் உட்புறச் சுவரையும் இறுக்கமாக்கி விடுகிறார்கள்.இதன்பிறகு முதலிரவின்போது ரத்தக் கசிவும் இருக்கும்... தாங்க முடியாமல் வலியும்இருக்கும். செக்ஸ் பற்றி ஆத்திச்சூடிகூட தெரியாத பெண்நமக்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்என கணவர்பெருமைப்பட்டுக் கொள்வார். இன்னமும் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கும் ஆசிய மற்றும்ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பல பெண்கள் இப்படிப்பட்ட ஆபரேஷனுக்காகவே மேற்கத்தியநாடுகளுக்குப் போகிறார்கள்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:42 pm

    அமெரிக்கப்பணக்கார பெண்கள் மத்தியில் இது தான் லேட்டஸ்ட் ஃபேஷன்! தங்களது இருபதாவது திருமணநாளுக்கு முன்னால் இதைச் செய்துகொண்டு குழந்தைகளோடு கிளம்பி ஹனிமூன் போகும்ஜோடிகள் அங்கே நிறைய!

    இது ஒரு பக்கம்என்றால், விலைமாதர்களுக்கும் இது வசதியாகி விட்டது.எய்ட்ஸ் பயம் பீடித்திருக்கும் அமெரிக்காவில் புதிதாகத் தொழிலுக்கு வரும்விலைமாதர்களுக்கு மவுசு அதிகம். பணக்கார கஸ்டமர்கள் லட்சக்கணக்கில் கொட்டிக்கொடுப்பார்கள். இதற்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட பெண்கள் இந்த ஆபரேஷன் செய்துகொள்கிறார்கள். எந்தெந்த சமுதாயம் கற்புக்கும், கன்னித்தன்மைக்கும் மதிப்பு கொடுக்கிறதோ அங்கெல்லாம்தான் தவறுகள் அதிகம்நடக்கின்றனஎன்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ஒரேவித்தியாசம்... பெண்கள் நேரடியான செக்ஸ் உறவில் ஈடுபடுவதில்லை. சுய இன்பம், பிறவழி இன்பம் என மற்ற எல்லா விவகாரங்களையும் செய்கிறார்கள். திருமணத்துக்குமுன் ஆண்களுக்கு அதிக இடம் கொடுக்காமல் தவிர்த்துத் தங்கள் கன்னித் தன்மையைப்பாதுகாத்துக் கொள்கிறார்கள். டெக்னிக்கல் கன்னிப்பெண்கள்என இவர்களைச் சொல்லலாம்.

    தன்னுடைய மகாராணிதன்னை ஏமாற்றி விட்டு வேறு யாருடனோ செக்ஸ் உறவு வைத்திருப்பதாக சந்தேகிக்கும் ஒருமன்னர் தினமும் ஒரு கன்னிப் பெண்ணை மணந்து, அவளோடு செக்ஸ்அனுபவித்துவிட்டு, மறுநாள் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுவார்.காரணம்... அவளும் அவரை ஏமாற்றக் கூடாது என்பதுதான்! புகழ்பெற்ற செக்ஸ் புத்தகமான ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்கதை இது. இப்படி சந்தேக மன்னர்களாக ஆண்கள்இருந்தால், கன்னித்திரை பொருத்தும் ஆபரேஷன்கள் நம்முடையகுக்கிராமத்தில்கூட பாப்புலர் ஆகக்கூடும்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:42 pm

    கைகளைத்தட்டியபடி அவர்கள் பிச்சை கேட்டு வந்தால் கடைக்காரர்கள் விரட்டுவார்கள். சினிமாக்களில் காமெடி நடிகரை இந்தக் கும்பல், "மாமா" என்றபடி துரத்தும் காட்சிகள் சகஜம். எல்லா இடங்களிலும் மக்களின் ஏளனப் பார்வை அவர்கள்மீது படியும். தியேட்டர்களில், பஸ்களில், இன்னும் ஏராளமானபொது இடங்களில் அவர்களை ஆண்களாக நடத்துவதா... இல்லை, பெண்கள் பிரிவில்அனுமதிப்பதா என்று இன்னமும் குழப்பம். அரவாணிகளைப் பற்றித்தான் சொல்கிறேன். அலி, நபும்சகன், பேடி என பல பெயர்களில் இவர்களைக்கூப்பிடுகிறார்கள். ஆணுமாக இல்லாமல், பெண்ணுமாகஇல்லாமல் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று பலருக்கும் குழப்பம். மருத்துவநிபுணர்களேகூட இதற்கான காரணங்கள் குறித்து இன்னமும் தீர்மானமான முடிவுக்குவரவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை... இப்போதைய சமூக சூழலில்இவர்கள் ஏளனமாகப் பார்க்கப்பட்டாலும், பழங்காலத்தில்இவர்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அரவாணிகளுக்கு ஆங்கிலத்தில்"யூனக்" (Eunuch) என்று பெயர். இதில் நான்கு ரகங்கள் உண்டு (இந்தரகங்கள் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்). குழப்பமான குணங்களோடுபிறக்கிறவர்களை வகைப்படுத்தும் இந்த எல்லா ரகங்களுக்கும் தமிழில் சரியானவார்த்தைகள் இல்லை. எல்லாவற்றையும் அரவாணிகள் என்ற ஒரே பெயரால்தான் இங்கேசொல்கிறார்கள்! யூனக் என்பது கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை."படுக்கைக் காவலர்" என இதற்கு அர்த்தம்.

    பெரியஅரசாங்கங்கள் உருவான அந்த சமயத்தில், மன்னர்களின்அந்தரங்கமான வேலைகளைச் செய்ய யாரை அனுமதிப்பது என குழப்பம் இருந்தது. அந்தப்புரத்தில் காவல் புரிவது, மன்னரின் படுக்கை அறையை அலங்கரிப்பது, வாசனை திரவியங்களைப் பூசிக் குளிப் பாட்டுவது, மசாஜ் செய்துவிடுவது... இப்படி ஏகப்பட்ட வேலைகள். ஆண்களை அனுமதித்தால் சிக்கல் வந்தது.அந்தப்புரம் வரை போவதற்கு கிடைத்த சுதந்திரத்தை பயன்படுத்தி அவர்கள் தப்பு செய்யஆரம்பித்தனர். மகாராணிகளோடு முறை கேடான தொடர்பு வைத்திருப்பது ஒருபுறமிருக்க, அரசருக்கு எதிரான சதிவேலைகளிலும் இறங்கினர். பெண்களை இந்த வேலைகளைச் செய்யஅனுமதிப்பதில் மகாராணிகளுக்குத் தயக்கம் இருந்தது. பணிப்பெண் அழகாக இருந்தால், மன்னருக்குப் பணிவிடை செய்ய கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தானும் மகாராணியாகி விடுவார். இப்படிப்பட்ட சூழலில் ஏதோ ஒரு ஐரோப்பிய பேரரசில், புத்திசாலி மன்னர் ஒருவர் அரவாணிகளை இதற்கு பயன்படுத்த ஆரம்பிக்க, அதுவே எல்லா நாடு களுக்கும் பரவியது. பிறக்கும்போது ஆணாக இருந்தாலும்பெண்மைக்குரிய குணங்களைக் கொண்ட அரவாணிகள், அந்தக்காலத்திலேயே தங்களது விதைப்பைகளை அகற்றி ஆண்மையைப் போக்கிக் கொண்டனர்.

    இவர்களை அந்தரங்கவேலைக்கு வைத்துக் கொள் வதில் பல வசதிகள் இருந்தன. மன்னரைத் தொட்டுப் பணிவிடைகள்செய்தாலும் தப்பாகப் படாது. மாமனார், கணவர், மகன் என உறவுகள் இவர்களுக்குக் கிடையாது. அதனால் பதவி ஆசையில் மன்னருக்குஎதிராக சதி செய்ய மாட்டார்கள். அப்படியே தப்பு செய்தாலும், இவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தலையை வெட்டினால்கூட கேட்க ஆளில்லை...சமுதாயத்தில் மிகவும் கீழான நிலையில் இருப்பவர்கள்தானே!

    மன்னர்களோடுபெரும்பாலான நேரத்தைக் கழிப்ப வர்கள் என்பதால், இவர்களது பேச்சைமன்னர்கள் தட்டு வதில்லை. "மன்னரின் காது" என்று இவர்களைத்தான்சொல்வார்கள். முதல்மந்திரியேகூட மன்னரிடம் அவசர மாகப் பேச வேண்டும் என்றால்இவர்களின் அனுமதி தேவை. இப்படி இருந்த அரவாணிகள் பல நாடுகளில் அமைச்சர் பதவி வரைகூட போனார்கள்.

    மாமன்னர்அலெக்சாண்டரின் அந்தரங்க ஆலோச கராக இருந்த பாகோஸ், ஓர் அரவாணி.போரில் வென்ற பகுதிகளைக் குழப்பமின்றி ஆட்சிபுரிய இவரது ஆலோ சனைகளைத்தான் கேட்பார்அலெக்சாண்டர்.

    வீரத்திலும்அவர்கள் குறைந்தவர்கள் இல்லை. ஜூலியஸ் சீசரைத் தோற்கடித்து, அவரது மேலங்கியை உருவிக்கொண்டு விரட்டிய புகழ்பெற்ற தளபதி கனிமீட்ஸ், ஓர் அரவாணி. சீசரைவிட சிறந்த வீரராக அவர் கருதப்பட்டார்.

    இந்தியாவில்அரவாணிகளுக்கு நெடிய வரலாறு உண்டு. பழங்கால இந்திய நூல் களில் இவர்களைப் பற்றிபலவிதமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இந்திரனின் தேவசபையில் இருந்த பிரதானிகள்பற்றிய வர்ணனையில் "கிம்புருஷர்கள்" என்ற ரகம் பற்றி சொல்லப்படுகிறது.இவர்கள் நாட்டியம் ஆடுவதில் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருந்தனர். கிம்புருஷர்என்றால், ஆணாக இல்லாதவர் என்று அர்த்தம். இதுஅரவாணிகளையே குறிக்கும் என்கிறார்கள்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:43 pm

    வியாசர் எழுதியமகாபாரதத்தில் காலப்போக்கில் இடைச்செருகலாக நிறை கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.அப்படி வரும் கதைகளில் அரவாணி களைப் பற்றி செய்திகள் உண்டு. திரௌபதிக்கு ஒருசகோதரி இருந்தாள். அவள் பெயர் சிகண்டி. பெண்ணாக இருந்தபோதும், ஆண் மாதிரி நினைத்து சிகண்டியை வளர்த்தனர் பெற்றோர். இளவரசன் போல உடைஅணிவித்து, போர்ப் பயிற்சியும் கொடுத்தார்கள். கிட்டத்தட்டஆணாகவே வளர்க்கப்பட்ட சிகண்டிக்கு கடைசியில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம்செய்து வைத்தார்கள். உண்மை வெளிப்பட்டு விடும் என பயந்து முதலிரவு சமயத்தில்சிகண்டி ஓடிவிட, யாரோ ஒரு கந்தர்வன் தனது ஆண் தன்மையைசிகண்டிக்குக் கொடுத்ததாக ஒரு கதையில் இருக்கிறது. பகவான் கிருஷ்ணர்தான் சிகண்டிமீது பரிதாபப்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய வைத்து ஆணாக மாற்றியதாகக்கதையில் சொல்லப்படுகிறது. கதை உண்மையோ பொய்யோ... அரவாணிகளுக்கு அறுவை சிகிச்சைசெய்யும் பழக்கம் அப்போதே இருந்தது என்பதை இதில் உணர முடிகிறது.

    இதே மகாபாரதத்தைவைத்து இன்னொரு கதையும் இருக்கிறது. குருஷேத்திரப் போர் ஆரம்பிக்க வேண்டியசமயம்... பஞ்ச பாண்ட வர்களில் சகாதேவன், ஜோதிடக் கலையில்தேர்ச்சி பெற்றவன். அவன்,""முப்பத்தி இரண்டுலட்சணங்களும் பொருந்திய ஒரு ஆண் மகனை களப்பலி கொடுத்து விட்டு, போரை ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்"" என்று சொல்கிறான்.

    பாண்டவர்தரப்பில் பார்த்தால், மூன்றே பேர்தான் இப்படி சர்வ லட்சணங்கள்பொருந்திய ஆண்களாக இருந்தனர். ஒருத்தர் கிருஷ்ணர்... போருக்கு வியூகங்களை வகுத்துத்தரும் பகவானை பலியிட முடியாது. இன்னொருத்தர் அர்ஜுனன்... பாண்டவர் படைக்குத்தளபதியே அவன்தான். அவனை பலியிட்டுவிட்டுப் போர் நடத்த முடியாது. இவர்கள் இல்லாமல்மூன்றாவது நபர் அரவாண். அர்ஜுனனுக்கும், நாககன்னிக்கும்பிறந்த மகன். அவனிடம் பாண்டவர்கள் இதுபற்றி சொன்னபோது, தன் உயிரைத் தியாகம் செய்ய ஒப்புக் கொண்டான்.

    ஆனால், அவன் அடிமனதில் ஓர் ஆசை இருந்தது. ""இன்னமும் எனக்குத் திருமணம்ஆகவில்லை. திருமணம் செய்து, தாம்பத்ய வாழ்க்கையை ஒரு நாளாவது அனுபவித்துவிட்டு, பிறகு பலியாகிறேன்"" என்று தன் ஆசையைஅரவாண் சொல்ல, அவசரமாக அவ னுக்கு பெண் பார்த்தனர். ஒரே நாளில்சாகப் போகிறவனை மணந்துகொள்ள யாரும் தயாராக இல்லை. கடைசியில் பகவான் கிருஷ்ணரேமோகினி அவதாரம் எடுத்து, பெண்ணாக மாறி அவனை மணந்தார். அவர்கள் ஒருநாள்தாம்பத்ய வாழ்க்கை நடத்தினர். மறுநாள் அரவாண் பலி கொடுக்கப்பட, சம்பிரதாயப்படி கிருஷ்ணர் விதவைக் கோலம் பூண்டு, அரவாணுக்காகஅழுதார். வியா சர் எழுதிய மகாபாரதத்தில் இந்தக் கதை இல்லை. ஆனால், பல்வேறு இடங்களில் புழக்கத்தில் இருக்கும் வேறு பாரதங்களில் இதுவும் ஒருஇடைச்செருகலாக சேர்ந்து விட்டது.
    விழுப்புரம்மாவட்டத்தில் இருக்கும் கூவாகம் கிராமம் அரவாணிகளின் புனிதத்தலம். குருஷேத்திரப்போரில் அரவாண் பலியிடப்பட்டதாகக் கருதப்படும் சித்ரா பௌர்ணமி நாளில் இங்குதிருவிழா நடக்கும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் அரவாணிகள், அந்த இரவில் அரவாணுக்கு மனைவி ஆகிறார்கள். பகவான் கிருஷ்ணர் எடுத்த மோகினிஅவதாரமாகவே தங்களை அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். அரவாணின் சார்பில் கோயில்பூசாரி அவர்களுக்குத் தாலி கட்டுகிறார். மறு நாள் எல்லோரும் தங்கள் நெற்றிப்பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து, வெள்ளைப் புடவை உடுத்தி விதவைக் கோலம் கொள்கிறார்கள்.

    அரவாணிகளைப்பொறுத்தவரை, சாதார ணமான குடும்பங்களில் மற்றவர்கள்மாதிரியேதான் பிறக்கிறார்கள். வளர வளர, அவர்களுக்குள்மாற்றம் நிகழ்கிறது. தங்கள் குழந்தைக்கு உயிரைக் கொல்லும் பயங்கர நோய்இருந்தால்கூட பாசம் காட்டும் குடும்பம், இந்த ஒருவிஷயத்தை மட்டும் ஏற்பதில்லை. கேலிப் பேச்சுகளுக்குப் பயந்து அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் என எல்லோரும் சித்ரவதைசெய்ய, அதைத் தாங்க முடியாமல் ஊரைவிட்டு ஓடுகிறார்கள்அரவாணிகள். பிச்சை எடுப்பதும், பாலியல் தொழிலும்தான் அவர்களது கடைசிப்புகலிடமாகிறது.

    அவ்வளவாகதேர்ச்சி பெறாத சாதாரண டாக்டர்களிடம் அறுவை சிகிச்சை செய்து தங்கள் ஆணுறுப்பைஅகற்றிக்கொள்ளும் அரவாணி களில் பலர், வேறொரு ஆணைதிருமணம் செய்து கொள்வதும் உண்டு.

    சட்டம் இவர்கள்விஷயத்தில் இன்னமும் குழப்பமாகவே இருக்கிறது. தேர்தல் கமிஷனே அனுமதித்தும் பலமாநிலங்களில் இவர்களுக்கு ஓட்டு ரிமை இல்லை. ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் என எல்லாவற்றிலும் ஆண், பெண் எனஇருபாலினங்கள் மட்டுமே இருப்பதுதான் பிரச்னை. மூன்றாவது வகையை மனதளவில்கூடஅங்கீகரிக்கத் தயாராக இல்லாத நிலைதான்!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:43 pm

    ஊனமுற்றவர்கள்மீது கருணை காட்டுவது போல அரவாணிகளையும் சமூகம் நடத்த வேண்டும். அறிவியல்ரீதியாகப் பார்த்தால் அவர்கள் அப்படித்தான்... பாலியல் ஊனமுற்றவர்கள்!

    மனித சமுதாயம்இரண்டுவிதமான தோற்றங் களைத்தான் இயல்பாகப் பார்க்கப் பழகி இருக்கிறது. ஒன்றுஆண்... இன்னொன்று பெண்! இந்த இரண்டு மாதிரியாகவும் இல்லாமல் ஆணாகப் பிறந்து, பெண்ணாக வாழ முயலும் (இதேபோல பெண்ணாகப் பிறந்து ஆணாக வாழ முயலும்) குழப்பமானஅடையாளங்களைக் கொண்டவர்கள், மூன்றாவதுவிதமான தோற்றம் கொண்டவர்கள். இவர்களைஅறிவியல்பூர்வமாக "ட்ரான்ஸ் ஜெண்டர்" (Transgender) என்கிறார்கள்.இதற்குத் தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை. இந்த ட்ரான்ஸ் ஜெண்டர் என்பதை நான்குரகங்களாகப் பிரிக்கிறார்கள். இதற்கும் தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை."அரவாணி"கள் என்று சமூகத்தில் அழைக்கப்படுபவர்கள், இந்த நான்கு ரகத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.ஆனால், அதுகூட அறிவியல்ரீதியில் எந்த அளவுக்குச் சரிஎன்று சொல்ல முடியாது. காரணம்... அரவாணி என்பதற்கு சரியான பொருள் என்ன என்பதுஇங்கே தெளிவுபடுத்தப்படவில்லை. அதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்பட்டதாகவும்தெரியவில்லை.

    சரி, நாம் அறிவியல் அடிப்படையில் மேலை நாட்டினர் பிரித்து வைத்திருக்கும் நான்குரகத்தினரையும் வரிசையாகப் பார்ப்போம்.

    முதல் ரகத்தினர், "டிரான்வெஸ்ட்" என்றுஅழைக்கப்படுகிறார்கள். இவர்களின் செயல்பாடுகள் "டிரான்ஸ்வெஸ்டிஸம்" எனப்படும்.இவர்களுக்கு உடைகளை மாற்றிப் போட்டுக் கொண்டால்தான் செக்ஸ் உணர்வு எழும்.மனைவியின் புடவையைக் கட்டினால்தான் "மூட்" வரும். செக்ஸுக்கு முன்னதாகக்கட் டாயம் இப்படி அவர் உடை மாற்றிக் கொள்வார். அதன்பிறகே பரவசப்பட ஆரம்பிப்பார்.இதுதவிர வேறெந்த குறையும் இருக்காது. இந்த உடை சிக்கல் தவிர மற்றபடி, "நான் இயல்பான ஆண்" என்கிற உணர்வுஇவர்களுக்கு இருக்கும். பெண்களிடம்தான் செக்ஸ் உணர்வு கொள்வார்கள். இதே குறைபாடுகொண்ட பெண்களுக்கு அப்படியே உல்டாவாக ஆண்களின் உடைமீது ஆசை வரும். அதுமட்டுமல்ல, செயல்களிலும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.

    இரண்டாவதுரகத்தினர் "டிரான்ஸ் செக்ஸுவல்கள்". இவர்களது உடலும், உணர்வும் வேறுவேறாக இருக்கும். உடல்ரீதியாக இவர்கள் ஆணாக இருப்பார்கள்.அதற்கான அடையாளங்களாக மீசை, தாடி, ஆணுறுப்புஎல்லாம் இருக்கும். ஆனால், மனோரீதியாகத் தங்களை பெண்ணாக உணர்வார்கள்."நான் பிறக்கும்போதே ஒரு பெண்தான்! ஆனால், கடவுள் ஏதோஞாபகத்தில் தப்பு செய்து விட்டார். என்னைக் கொண்டுவந்து இந்த ஆம்பளை உடம்பில்போட்டுவிட்டார்" என நினைப்பார்கள். தன்னை அமுக்கிக் கொண்டிருக்கும் இந்த ஆண்உடம்பிலிருந்து விடுபட முயற்சிப்பார்கள். ஆணுறுப்பின் மீது வெறுப்பு வரும்.பெற்றோர், சமூகம் என எல்லோரும் ஆணாகப் பார்த்தாலும்"நான் பெண்தான்" என்ற உணர்வு இவர்களுக்கு ஆழமாக இருக்கும். இவர்களுக்குசக ஆண்களைப் பார்த்தால்தான் செக்ஸ் உணர்வு வரும். பெண்களுடன் சகோதர பாவத்தில்பழகுவார்கள். இதன் காரணமாக ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டு பெண்ணாகமுயற்சிப்பார்கள். இதேபோல பெண்ணாகப் பிறந்தவர்கள், ஆணாகத்துடிப்பார்கள். மார்பகங்களை அகற்றிவிட நினைப்பார்கள். மிகுந்த சிரமப்பட்டு ஆண்குறியையும் உருவாக்கிக் கொள்வார்கள். இந்த வகையினரில்... ஆணாகப் பிறந்து, பெண்ணாகத் துடிப்பவர்கள்தான் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    ஆனால், இப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் இவர்கள் முழுமையான பெண்ணாகவோ...ஆணாகவோ ஆக முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.
    மூன்றாவதுரகத்தினர், "இன்டர்செக்ஸ்" (நம்மூரில் "அரவாணிகள்என்று அழைக்கப்படுபவர்களை இந்த ரகத்தினர் என்று சொல்லலாம். ஆனால், அறுதியிட்டுக் கூற முடியாது. அதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் இங்கேநடக்கவில்லை). பிறப்புக் கோளாறு காரணமாக ஆண் அல்லது பெண் ஜனன உறுப்புகள்பரிபூரணமாக வளர்ச்சி அடைந்திருக்காது. இந்த ரகத்தினரில் ஆண்களாகநினைக்கப்பட்டவர்களுக்கு, ஆண் குறி இருக்கும். ஆனால், அது முழுமையாக இருக்காது. கூடவே பெண் குறி போன்ற அமைப்பும் இருக்கும்.முக்கியமாக விதை இருக்காது.

    பெண்ணாகநினைக்கப்பட்டவர்களுக்கு... பெண் குறி முழுமையாக இருக்காது. பக்கத்தில் ஆண் குறிபோன்ற முழுமை பெறாத அமைப்பு இருக்கும். முக்கியமாகக் கருப்பை இருக்காது.

    இந்த ரகத்தினர்அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாகவே... அல்லது பெண்ணாகவோ மாறிவிட்டதாகசொல்வார்கள். ஆனால், அதனால் எந்த பயனும் இல்லை. செக்ஸ் உணர்வுஎன்பது அதன் மூலம் பரிபூரணமாகக் கிடைக்காது. கர்ப்பப் பை என்பது இல்லாததால்குழந்தையும் பெற்றுக்கொள்ள முடியாது. விதை இல்லாததால் தந்தையாகவும் முடியாது.

    நான்காவதுரகத்தினர் "யூனக்" என்று அழைக்கப் படுவார்கள் (கடந்த இதழில்அரவாணிகள்தான் "யூனக்" என்றும் அதில் நான்கு ரகங்கள் உண்டு என்றும்தவறான தகவல் இடம் பெற்றுவிட்டது... ஸாரி). ஆண்கள் மட்டுமே இந்த ரகத்தில் உண்டு.விதை மற்றும் ஆண்குறியை வெட்டி எடுத்துவிடுவார்கள். இவர்கள் முழுமையான ஆண்கள்தான்என்றாலும் சூழல் காரணமாகக் குறியை வெட்டிக்கொள்கிறார்கள். இதற்கு மூன்று காரணங்கள்கூறப்படுகின்றன.

    ஒன்று... அந்தக்காலத்தில் அந்தப்புர பாதுகாப்புக்காக மன்னர்களால் இப்படி விதை மற்றும் ஆண் குறிநீக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டார்கள். இரண் டாவது காரணம், ஹோமோசெக்ஸ். இது சமுதாயம் ஏற்றுக்கொள்ளாத விஷயம் மட்டுமில்லை... சட்டவிரோதமும்கூட. மாட்டிக் கொண்டால் தண்டனை கிடைக்கும். இதற்கு பயந்து, விதை மற்றும் ஆண் குறியை வெட்டிக்கொள்வார்கள். மூன்றாவது காரணம்... குரல்வளம். பிறந்ததிலிருந்து இருக்கும் மென்மையான குரல், பருவ வயதைஎட்டும்போதுதான் மாற்றம் அடையும். அதாவது ஆணாக இருந்தால் கரடு முரடாக மாறும்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:44 pm

    இப்படி மாறாமல்மென்மையான குரலே வேண்டும் என்பதற்காக விதை மற்றும் ஆண்குறியை வெட்டிக்கொள்வார்கள். அதாவது, ஹார்மோன் சுரந்தால்தான் பருவத்தை எட்டமுடியும். குறியை அகற்றிவிட்டால்,ஹார்மோன் சுரப்பதுகுறைந்து... குரல் மாறாமல் அப்படியே இருக்கும்.

    இப்படிவெட்டிக்கொள்வதன் மூலம் இவர்கள் பெண்ணாக முடியாது என்பது முக்கியமான விஷயம்! சரி..சராசரி ஆணாகவோ... பெண்ணாகவோ பிறந்தவர்கள்... "டிரான்ஸ்வெஸ்ட்" மற்றும்"டிரான்ஸ் செக்ஸுவல்கள்" ஆகிய இரண்டு ரகங்களாக மாறக் காரணம்?

    டிரான்வெஸ்ட் மற்றும்டிரான்ஸ் செக்ஸுவல்கள் என்று இரண்டு ரகங்களாக, மனிதர்களில்சிலர் மாறுவதற்கு உளவியல் நிபுணர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.குழந்தையிலிருந்து வளர்க்கப்பட்ட முறையில் தப்பு இருப்பதுதான் முக்கிய காரணமாகப்பலருக்கும் படுகிறது. சின்ன வயசிலிருந்து பையன் அம்மாவிடம் நெருக்கமாகப் பழகிவளர்வான். அவனுக்கு ரோல்மாடலே அம்மாதான்! கோலம் போடுவது, சமைப்பது என அம்மாவை மாதிரியே செய்ய ஆரம்பித்து, கடைசியில்தன்னைப் பெண்ணாக உணர ஆரம்பித்து விடுகிறான் என்பது ஒரு தியரி.

    இன்னும் சிலவீடுகளில் பெண்குழந்தை வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், வரிசை யாக ஆண் குழந்தைகள் பிறக்கும். இதில் ஏதாவது ஒரு குழந்தையைப் பெண்மாதிரி உடை போட்டு, சடை பின்னி, பொட்டு வைத்துவளர்ப்பார்கள். இப்படி வளர்க்கப்படும் குழந்தை, தன்னைப் பெண்என்றே கற்பனை செய்து கொள்கிறது... அதுதான் குழப்பத்துக்குக் காரணம் என்பது இன்னொருதியரி.

    இதைத் தவிர, சின்ன வயதில் செக்ஸ் சித்ரவதையை அனுபவிப்பது, செக்ஸ் பற்றியவிபரீதமான கற்பனைகளோடு வளர்வது, ஹோமோசெக்ஸ் ஆசையை
    அடக்கி வைத்துத்தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது... இப்படி பல காரணங்களும் சொல்லப்படுகிறது.டிரான்ஸ்செக்ஸுவல்களில் பலர் சீரியஸாக ஆபரேஷன் செய்து, தங்களை மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். வட இந்தியாவின் பிரபல தொழிலதிபர்குடும்பத்தைச் சேர்ந்த அபர்ணா, நாற்பது வயதில் ஆபரேஷன் செய்து அஜய் என்றபெயரோடு ஆணாக மாறிய பிறகு, இந்த ஆபரேஷன் பற்றி அதிகம் செய்திகள்வருகின்றன.

    ஒருகாலத்தில்உலகம் முழுக்க இந்த மாதிரி பாலினம் மாற்றும் ஆபரேஷன்கள் சட்டவிரோதமாகக்கருதப்பட்டது. ஆனால், ரகசியமாக டாக்டர்கள் இதைச் செய்தபடிதான்இருந்தார்கள். இதை பாப்புலராக்கியது, ஜார்ஜ்ஜார்ஜென்சன் சீனியர் என்ற அமெரிக்க ராணுவ வீரர். சின்ன வயதிலிருந்தே இவருக்குத்"தான் ஒரு பெண்" என்ற உணர்வு இருந்தது. இருந்தாலும் இவர்தேர்ந்தெடுத்தது, ராணுவ வேலையை! ஒன்றரை வருஷம் ராணுவத்தில் வேலைபார்த்த ஜார்ஜ், உடம்பு சரியில்லாததால் ராஜினாமா செய்தார்.அப்போது டென்மார்க்கில் மட்டும் அரசு அனுமதியோடு இந்த ரக ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.தனது இருபத்தாறாவது வயதில் டென்மார்க் போன ஜார்ஜ், ஆபரேஷன் செய்துகொண்டு கிறிஸ்டி ஜார்சென்சன் என்ற பெயரோடு பெண் தோற்றத்தில் திரும்பி வந்தார்.

    அது 1952-ம்வருஷம். இவரது ஆபரேஷன் பற்றி "நியூயார்க் டெய்லி நியூஸ்" பத்திரிகைமுதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. "முன்னாள் ராணுவ வீரர், அழகான பெண்ணாக மாறினார்" என்பதுதான் தலைப்பு. அந்த செய்தி உலகம்முழுக்கப் பற்றிக்கொண்டது. கிறிஸ்டி அழகாக வேறு இருந்தார்... அதனால் ஒரு பத்திரிகைவிடாமல் அவரது போட்டோ வந்தது.

    இந்தபாப்புலாரிட்டியை அவர் புத்திசாலித் தனமாகப் பயன்படுத்திக் கொண்டார். கல்லூரிகள், சமூக சேவை அமைப்புகளின் கூட்டங்கள் என பல இடங்களில் போய் அரவாணிகளுக்குஆதரவாகப் பேசினார் (ஒரே ஒரு தடவை டி.வி. "டாக் ஷோ" ஒன்றில் மட்டும்கிறிஸ்டி அவமானப்பட நேர்ந்தது. நிகழ்ச்சியை நடத்தியவர், தடாலடியாக ஒரு கேள்வி கேட்டார். ஆபரேஷனுக்கு முன் ஜார்ஜாக இருந்தபோது அவர் ஒருபெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். "கிறிஸ்டி என்ற பெண்ணாக மாறியபிறகுஉங்கள் மனைவியுடன் எப்படி ரொமான்ஸ் செய்கிறீர்கள்?" என கேள்விவந்தபோது, அவர் திகைத்துப் போனார். ஒன்றும் சொல்லதெரியாமல் அவமானத்தோடு வெளிநடப்பு செய்தார்).

    மேடைகளில்பாடுவது, இரவு விடுதிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்நடத்துவது என சம்பாதித்து சொகுசாக வாழ்ந்த கிறிஸ்டியின் கதை, ஹாலிவுட் படமாகவும் வந்து நன்றாக ஓடியது.

    ஆனால், எல்லோருக்கும் கிறிஸ்டி மாதிரி அமைந்து விடுவதில்லை. அமெரிக்கரான ரீனிரிச்சர்ட்சன் ஒரு கண் டாக்டர். ரிச்சர்டு ரஸ்கின்ட் என்ற பெயரோடு ஆணாகப்பிறந்தவர். கல்யாணமாகி ஒரு குழந்தையும் பிறந்த பிறகு பாலின மாற்று ஆபரேஷன்செய்துகொண்டு பெண்ணாக மாறினார். டென்னிஸ் விளையாட்டில் அவருக்கு உயிர். பெண்ணாகமாறிய பிறகு அமெரிக்க ஓபன் பெண்கள் பிரிவில் அவர் விளையாடப் போனபோது தடுத்துவிட்டார்கள். கோர்ட்டில் வழக்குப் போட்டுத் தன் உரிமையை நிலைநாட்டி, அடுத்த ஆண்டு விளையாட வந்தார் அவர். ஒரு தடவை வெற்றியும் பெற்றார். ஆனால், தன் வாழ்க்கையின் கடைசி நாட்களில் ஒரு டி.வி. பேட்டியில், "ஆபரேஷன் செய்துகொண்டு பெண்ணாக மாறியதற்குஇப்போது வருத்தப்படுகிறேன்" என மனம் நொந்து சொன்னார்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:44 pm

    சமூகம் சிலவிஷயங்களை அவ்வளவு எளிதாக ஜீரணித்துக் கொள்ளாது. ஆபரேஷன் செய்து தனது பாலினஅடையாளத்தை மாற்றிக்கொண்டு, சமுதாயத்தின் கேலிப் பார்வைகளை சகித்துக்கொண்டுவாழ, உறுதியான மனப்பக்குவம் வேண்டும். அது இல்லாதபலர், தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறார்கள்.சிலர் அனுபவமற்ற டாக்டர்களிடம் ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள். இதில் தப்பு நடந்துஇறந்துபோகிறவர்கள் நிறைய பேர்.

    இந்த ஆபரேஷனுக்குஎன்று சில நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் உளவியல் பரிசோதனை செய்வார்கள்.ஆபரேஷனுக்குப் பிறகு அவர்களால் சமுதாயத்தில் வாழமுடியுமா என்பதை அறிய இந்த சோதனை.இதன்பிறகு அவர்கள் இதற்கு சட்டப்படி கோர்ட் அனுமதி வாங்க வேண்டும். இதைப் பெற்றபிறகே ஆபரேஷன் செய்யலாம். இது ஒருநாளில் செய்து முடிக்கிற ஆபரேஷன் இல்லை.

    ஆணாக இருந்துபெண்ணாக மாற விரும்பும் ஒருவருக்கு,பெண்களின் ஹார்மோன்களைசெலுத்துவார்கள். இதுதவிர முகத்தில் மீசை, தாடி ஆகியவற்றைஅகற்ற லேசர் சிகிச்சை தரப்படும். இந்த சிகிச்சை தரப்படும் இரண்டு ஆண்டுகளும் அந்தஆண், பெண்களின் உடையை அணிய வேண்டும். அரைகுறையாகமுகத்தில் இருக்கும் தாடி, மீசையோடு பெண்களின் உடை அணிந்து பொதுஇடங்களுக்குப் போகிறபோது, மற்றவர்களது விசித்திரமான பார்வைகளைத்தாங்கிக்கொள்ள வேண்டும்.
    இதன்பிறகே பிரதானஆபரேஷன்! பிளாஸ்டிக் சர்ஜன், உளவியல் நிபுணர் அல்லது செக்ஸாலஜி நிபுணர், ஹார்மோன் ஸ்பெஷலிஸ்ட், சிறுநீரகவியல் நிபுணர் இப்படி ஒரு குழுவேசேர்ந்து ஆபரேஷன் செய்யும். ஆபரேஷனுக்குப் பிறகும் நிரந்தரமாக ஹார்மோன் மருந்துகளைசெலுத்திக்கொள்ள வேண்டும்.

    ஒருமுறை இப்படிஆபரேஷன் செய்துகொண்ட பிறகு திரும்பவும் பாலினம் மாற முடியாது. அது மட்டுமில்லை...இப்படி ஆபரேஷன் மூலம் முழுமை பெற்ற பெண்ணாகவோ, ஆணாகவோ ஒருவர்மாறிவிட முடியாது. ஆண், பெண்ணாக மாறும்போது வெளிப்புற தோற்றங்களில்தான்மாற்றம் நிகழும். அவர்களுக்குக் கருப்பை கிடையாது என்பதால், குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. இதே நிலைதான் பெண்ணாக இருந்து ஆணாகமாறுபவர்களுக்கும். சிகிச்சை முறையும் அதே போலத்தான். இருந்தாலும் விதை, விந்து தயாரிப்பு இல்லாததால் இவர்களால் தந்தையாக முடியாது.

    ஒட்டுமொத்தமாகநாம் ஒரு விஷயத்தை உணர வேண்டும்... அரவாணிகளாக இருப்பவர்களை சமூகம் கேலிப்பார்வையோடுதான் பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களும் மனிதர்கள்தான். இயற்கைதான்அவர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது. சக மனிதர்களான நாம் செயற்கையாகவேறுதண்டனைகள் கொடுத்துத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்.

    நாம் இருவர்நமக்கு இருவர்" என குடும்பக் கட்டுப் பாடு பிரசாரம் செய்துவந்த அரசு இப்போது, "ஒன்று பெற் றால் ஒளிமயம்" என சொல்லிவருகிறது. "நாமே இருவர், நமக்கு எதற்கு ஒருவர்?" என அரசாங்கம் கேள்வி கேட்கும் காலம் சீக்கிரமேவரக்கூடும்.

    நாகரிகம் கற்றகாலத்திலிருந்தே குடும்பக் கட்டுப்பாடு குறித்த அக்கறை மக்களுக்கு இருந்துவந்திருக்கிறது. விதம் விதமான தடுப்பு முறைகளைப் பல நாடுகளில் முயற்சித்துப்பார்த்திருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பலவித உபகரணங்களை மக்கள்பயன்படுத்தினர். ஆனால், இவை நூறு சதவிகிதம் நம்பகமானவை என்று சொல்லமுடியாது. இவற்றை மாட்டிக்கொண்டு உறவு கொண்டும்கூட பல பெண்கள் கர்ப்பமாகி, குழந்தை பெற்றனர்.

    1960--ம்ஆண்டுகளில் கருத்தடை மாத்திரையும்,காப்பர் "டி"போன்ற கருத்தடை வளையங்களும் அறிமுகமான பிறகுதான், குடும்பக்கட்டுப்பாடு மகத்தான முன்னேற்றம் கண்டது. பெண்களும் கர்ப்பம் பற்றிய பயத்தை உதறித்தள்ளி விட்டுத் தைரியமாக இருக்க முடிந்தது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரின் செக்ஸ் செயல்பாட்டில் பெரிய மாற்றம் வந்தது. அதேசமயம், "இந்தக் கருத்தடை சாதனங்கள் மக்களைக்கெடுக்கும். கள்ளத்தனமான உறவுகளைத் தேடுகிறவர்களின் எண்ணிக்கை இதனால்அதிகமாகும்" என கலாசார பாதுகாவலர்கள் ஒருபக்கம் எதிர்ப்பு தெரிவித்தபடிதான்இருந்தனர்.

    பழங்காலத்திலிருந்துஇந்த நவீன யுகம் வரை கர்ப்பத்தைத் தவிர்க்கும் பொறுப்பு பெண்களின் தலையில்தான்விழுகிறது. இப்போதும்கூட அரசாங்கத்தின் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பெண்களைமையப்படுத்தியே இருக்கிறது. அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பெண்களுக்குதான் அதிகமாகக்கருத்தடை ஆபரேஷன் செய்கிறார்கள். ஆண்களுக்கு செய்கிற "வாசக்டமி" ஆபரேஷன்ரொம்ப சிம்பிளானது. ஆனால், செய்து கொள்கிறவர்கள் குறைவு

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:45 pm

    முதன்முதலாகப்பயன்படுத்தப்பட்ட கருத்தடை மருந்து,முதலை சாணம்தான். கி.மு.1800-ம் ஆண்டு இதைப் பயன்படுத்திப் புரட்சி செய்தவர், அழகி கிளியோபாட்ரா. முதலை சாணத்தை காயவைத்துப் பொடி யாக்கி, அத்துடன் சமையல் சோடா மாவு, தேன் ஆகிய இரண்டையும் கலந்து நன்றாகக் குழைத்துபசை மாதிரி ஆக்கி, செக்ஸுக்கு முன்னால் உபயோகிப்பாராம்கிளியோபாட்ரா. உறவின்போது விந்தணுக்கள் உள்ளே நுழைந்ததும், அவற்றின் வேகத்தை இந்த மருந்து தடால டியாகக் குறைத்து, எல்லாவற்றையும் கொன்றுவிடுமாம். கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தஅரிஸ்டாட்டில், "ஆலிவ் ஆயிலையும், தேவதாரு மரஎண்ணெயையும் கலந்து, செக் ஸுக்கு முன்னால் உபயோகித்தால் கர்ப்பம்ஆகாது" என எழுதி வைத்திருக்கிறார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கநாட்டில் வாழ்ந்த சொரானஸ் என்ற மகப்பேறு நிபுணர் கர்ப்பத்தைத் தடுக்க ஒரு டிப்ஸ்கொடுத்தார். இரும்பு அடிக்கும் கொல்லுப் பட்டறைகளில், இரும்பை பழுக்கக் காய்ச்சிய பிறகு அதை சுத்தியலால் அடித்து, தேவையான வடிவத்துக்கு வந்தபிறகு தண்ணீரில் போட்டுக் குளிர வைப்பார்கள்."இப்படி காய்ச்சிய இரும்பைக் குளிரவைக்கப் பயன்படுத்திய தண்ணீரைக் குடிக்கும்பெண்கள் கர்ப்பிணி ஆக வாய்ப்பில்லை" என்பதுதான் சொரானஸ் கொடுத்த டிப்ஸ்.

    அரேபிய பாலைவனநாடுகளில் வியாபாரிகள் மாதக்கணக்கில் ஒட்டகங்களின் முதுகில் மூட்டைகளை வைத்துஎடுத்துப் போவார்கள். அப்படி சுமை தூக்கிச் செல்லும் ஒட்டகங்கள் கர்ப்பமாகிவிட்டால், அவற்றால் பயணம் செய்ய முடியாது. அதனால்ஒட்டகத்தின் ஆசனவாய் வழியாகக் கூழாங்கற்களை அதன் கருப்பைக்குள் போட்டுவிடுவார்கள். கருப்பையில் இப்படி வேறு ஏதோ ஒரு பொருள் இருக்கும்போது ஒட்டகம்கர்ப்பமாகாது (இந்த "ஒட்டக டெக்னிக்"தான் இப்போது உலகம் எங்கும்பாப்புலராக இருக்கும் கருத்தடை வளையங்களுக்கு அடிப்படையாக இருந்தது!).

    கி.பி. எட்டாம்நூற்றாண்டுவாக்கில் வட இந்தியாவில் பெண்கள் ஒரு விநோதமான உபாயத்தைக் கையாண்டனர்.கல் உப்பை தேன் அல்லது எண்ணெயில் நனைத்து, உறவுக்கு முன்உபயோகித்தனர். இப்படி செய்தால் கர்ப்பம் தரிக்காது என்று அவர்கள் நம்பினர். அரேபியபெண்களும் இதேபோல எண்ணெயை ஒரு மிருதுவான துணியில் நனைத்து உபயோகிப்பது வழக்கம்.சீனா போன்ற ஆசிய நாடுகள் பலவற்றில் துணிக்குப் பதிலாக பேப்பரில் எண்ணெய் தடவி, பெண்கள் பயன்படுத்தினர்.
    ஐரோப்பிய நாடுகள்பலவற்றில் வேறொரு பழக்கம் இருந்தது. தேன் கூடு இருக்கிறதே... அதில் தேனைப்பிழிந்து எடுத்தபிறகு மெழுகு மாதிரி பொருள் மிச்சமிருக்கும். அதைப்பயன்படுத்தினால் கர்ப்பமடைய வாய்ப்பில்லை என அங்கு பெண்கள் நினைத்தார்கள்.

    இந்தியாவைப்பொறுத்தவரை "புருஹத்ரண்யக உபநிடதம்" என்ற நூலில் கர்ப்பத்தைத் தடுக்கமந்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது. காமசூத்திரம், கர்ப்பத்தைத்தடுக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகள் பற்றி சொல்கிறது. எந்தெந்த நாட்களில்செக்ஸ் வைத்துக் கொண்டால் கர்ப்பத்தைத் தவிர்க்கலாம் என மனு தர்ம சாஸ்திரத்தில்இருக்கிறது.
    இப்படி வரலாற்றுகாலத்திலிருந்து குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக நிகழ்ந்த ஆராய்ச்சிகளுக்குப்பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு பிரேக் விழுந்தது. தொழிற்புரட்சி ஆரம்பித்த நேரம்அது! பல நாடுகளும் படையெடுப்புகளை நிகழ்த்தித் தங்கள் ஆதிக்கத்தைவிரிவுபடுத்துவதில் பிஸியாகின. "நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருந்தால்தான்படையில் சேர வீரர்கள் கிடைப்பார்கள்... தொழிற்சாலைகளுக்குக் குறைந்த கூலியில்தொழிலாளர்களும் கிடைப்பார்கள்" என தலைவர்கள் நம்பினர். அதனால் குடும்பக் கட்டுப்பாடுமுயற்சிகளை அவர்கள் தேசவிரோத செயலாகக் கருதினர்.

    ஆனால், கருத்தடை சாதனங்களை கலாசார பாதுகாவலர்கள் எதிர்த்தால்-சமூக ஆர்வலர்களோ இதைஆதரித்தனர். "மக்கள் தொகை குறைவாக இருக்கும்போதுதான் வாழ்க்கைத் தரம்மேம்படும். எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு எல்லா வசதிகளும்கிடைக்கும்படி செய்தால் மட்டுமே ஒரு நாடு முன்னேறும்" என்றனர் இவர்கள்.
    1798-ல் தாமஸ்மால்தூஸ் என்ற பாதிரியார்,"மக்கள் தொகை தத்துவம்பற்றிய ஒரு கட்டுரை" என்ற நூலை வெளியிட்டார். ""உலகத்தின் மக்கள்தொகை எப்போதும் இரட்டிப்பாகப் பெருகுகிறது. ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக இப்படி அதிகரிக்கிறது. ஆனால், உற்பத்தியாகும்உணவின் அளவு இந்த வேகத்தில் அதிகரிக்கவில்லை. ஒரு கட்டத்தில் உற்பத்தியாகும்உணவைவிட, உண்பதற்கு தயாராக இருக்கும் மக்கள் பெருகிவிடுவார்கள். அந்த நிலையில் விளைநிலங்கள் சக்தியிழந்து தரிசாகும்... பஞ்சமும், நோய்களும் தலைவிரித்தாடும்... பிணக்குகள் பெருகி சமூக ஒழுங்கு குலைந்துபோர்மூளும்"" என்று எச்சரித்தார் அவர்.

    இதன்பிறகு அவரதுபெயரில் "மால்தூசியன் லீக்" என பல நாடுகளில் அமைப்புகள் தோன்றின.அமைப்புரீதியாகக் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் செய்த முதல் கோஷ்டியினர்இவர்கள்தான்! இதில் இந்தியாவும்,குறிப்பாக தமிழகம்காட்டிய வேகமும் பிரமிக்க வைப்பது!

    குடும்பக்கட்டுப்பாடு பற்றிய விழிப்பு உணர்வு உலகம் முழுக்கக் கிளம்பிய அதே வேகத்தில் இந்தியாவிலும் பற்றிக் கொண்டது. சொல்லப் போனால், இந்த விஷயத்தைஅரசாங்க திட்டமாக எடுத்துக்கொண்டு செயல்படுத்திய முதல் நாடு இந்தியாதான்!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:45 pm

    புதுமையானவிஷயங்களுக்கு எப்போதும் கிளம்பும் எதிர்ப்பு இதற்கும் வந்தது. ஆனால், டாக்டர் களுக்கு இணையாக சமூக அக்கறை கொண்ட பல தனிநபர்களும் குடும்பக்கட்டுப்பாடு பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார்கள். ஒருவேளை, இவர்களின் முயற்சி வெற்றிபெறாமல் போயிருந்தால் இப்போது உலகத்தின் மக்கள் தொகைசுமார் அறுநூறு கோடியே சொச்சம் என்றில்லாமல், ஆயிரம் கோடியைத்தாண்டி எல்லோருக்கும் மூச்சுத் திணறியிருக்கும்.

    1820-ம் ஆண்டுபிரிட்டனைச் சேர்ந்த ஃபிரான்சிஸ் பிளேஸ் என்பவர், கருத்தடைமுறைகளைப் பற்றி ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார். இதுதான் முதல்"குடும்பக் கட்டுப்பாடு" அட்வைஸ் முயற்சி. இவருடைய நண்பரான டாக்டர்வேக்லிக்கு இது பிடித்துப் போனது. புகழ்பெற்ற மருத்துவ இதழான "லேன்செட்"பத்திரிகையை நிறுவியவர் இந்த வேக்லி. கருத்தடை மற்றும்

    குடும்பக்கட்டுப்பாடு பற்றி இவர் மருத்துவரீதியாகப் பத்திரிகைகளில் எழுதினார்.

    ஆனால்"குடும்பக் கட்டுப்பாடு" என்ற வார்த்தையை பிரிட்டனில் பிரபலமாக்கியது, ஒரு விநோத வழக்குதான்! அமெரிக்காவில் அந்த சமயத்தில் பலரும் இதுபற்றி துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டபடி இருந்தனர். இதில் ஒன்றை லண்டனைச் சேர்ந்த பிராட் லா, பெசன்ட் என்ற இரண்டு பேர் பிரிட்டனில் மறுபிரசுரம் செய்தனர். அது 1877-ம்ஆண்டு. பிரிட்டனை விக்டோரியா மகாராணி ஆட்சி செய்த காலம். குடும்பக் கட்டுப்பாடுபற்றி பேசுவது, எழுதுவது எல்லாமே அரசாங்கம் வரையறுத்து இருந்தசமூக ஒழுங்குக்கு எதிரான விஷயம்! அதனால் மக்களைக் கெடுப்பதாகக் குற்றம்சாட்டிபிராட் லா, பெசன்ட் இருவரையும் போலீஸ் கைது செய்தது. ஆனால், வழக்கு விசாரணைக்கு வந்தபோது,இவர்களை நீதிமன்றம்விடுதலை செய்து விட்டது. இந்த வழக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது. குடும்பக் கட்டுப்பாடு பற்றி தெருமுனைகளில்கூட விவாதம் நடக்க இதுகாரணமாக அமைந்தது.

    பெண்களும்கூடஇந்தப் பிரசாரக் களத்தில் குதித்தனர். இதில் முன்னோடி, அமெரிக்காவைச் சேர்ந்த மார்கரெட் சாங்கர். நியூயார்க்கில் நர்ஸாக இருந்தவர்இவர். குடிசைப் பகுதி பெண்கள் பலர் பிரசவத்தில் உடல்பலத்தை இழந்தே படுத்த படுக்கைஆகிவிடுவதை இவர் கண்கூடாகப் பார்த்தார். பலர் பிரசவம் சிக்கலாகி இறந்தே போனார்கள்.
    பதினோருகுழந்தைகளைப் பெற்றெடுத்து தனது அம்மா பட்ட கஷ்டங்களையெல்லாம் கூடவே இருந்துபார்த்தார் சாங்கர். அடுத்த தலைமுறையை உருவாக்கும் வேகத்தில், பெண்கள் தங்களது ஆரோக்கியத்தை சீரழித்துக் கொள்வதை உணர்ந்தார் அவர். "ஒருபெண்ணின் வாழ்க்கை நன்றாக அமைய, பிரசவத்தின் மீது அவளுக்குக் கட்டுப்பாடுஇருக்க வேண்டும்" என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

    நர்ஸ் வேலையை ராஜினாமாசெய்துவிட்டு இதுபற்றி புத்தகங்கள் எழுத ஆரம்பித்தார். அப்போது அமெரிக்காவில்"காம்ஸ்டாக் சட்டம்" அமலில் இருந்தது. ஆபாசப் புத்தகங்களைத் தடுக்கஉருவான இந்த சட்டம், சாங்கரின் புத்தகங்களையும் ஆபாசம் என்றது."குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்கள் மத்தியில் ஆபாசத்தைப்பரப்புகிறார்" என்று சாங்கர் மீது வழக்குப் போட்டார்கள். அவர் தலைமறைவாகிஐரோப்பாவுக்குத் தப்பி ஓடினார்.

    ஒரு வருஷம்கழித்து அமெரிக்கா திரும்பியபோது,சாங்கர் கைதுசெய்யப்பட்டார். ஆனாலும் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்தை அவர் நிறுத்தவில்லை.ஒரு மாதம் ஜெயிலில், ஒரு மாதம் வெளியில் என அவர் வாழ்க்கை போனது.பெண்ணுரிமை அமைப்புகள் அவருக்காகக் குரல் கொடுக்க, கடைசியில்சட்டத்தை மாற்ற முயற்சி நடந்ததுதான் எதிர்பாராத திருப்பம்.

    அமெரிக்காவுக்குசாங்கர் என்றால் பிரிட்டனுக்கு மேரி ஸ்டோப்ஸ். பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர்இவர். கண்ணியமான குடும்பத்தில் பிறந்த ஒரு பிரபுவுக்கு இவரைத் திருமணம் செய்துவைத்தார்கள். திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் கழித்துதான் மேரிக்கு ஓர் உண்மைதெரியவந்தது... "கணவர் ஆண்மையற்றவர்." செக்ஸுக்கு முக்கியத்துவம் தராதமணவாழ்க்கையை அரசாங்கம் வலியுறுத்திய காலம் அது! அதனால் அவர்கள் ஒருமுறைகூட செக்ஸ்அனுபவிக்காமல் பதினைந்து ஆண்டுகளைக் கழித்து விட்டனர். இதேபோல நாட்டில் எத்தனைபெண்கள் இருப்பார்கள் என யோசித்த மேரிக்கு செக்ஸைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம்வந்தது. பிரிட்டிஷ் மியூஸியத்தில் போய் புத்தகங்களைத் தேடிப் படித்தார். அதைவைத்து, "திருமண வாழ்க்கையில் காதல்" என்றபுத்தகத்தை எழுதினார். "செக்ஸ் இயற்கையானது... ஆரோக்கியமானது" என்றுசொன்ன மேரி, "குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே செக்ஸின்நோக்கம் இல்லை. கர்ப்பத் தடை முறைகளைப் பெண்கள் பின்பற்ற வேண்டும்" என்றும்எழுதினார். அந்தப் புத்தகம் பத்து லட்சம் பிரதிகள் விற்றது. பல மொழிகளுக்குப்போனது. ஐரோப்பாவே பரபரப்பாக, மதகுருக்கள் பயந்து போனார்கள். மேரியைக் கைதுசெய்ய வேண்டும் என அரசாங்கத்தை வற்புறுத்தினர். ஆனால், அவர் மீது சட்டம் பாயவில்லை. ஆத்திரம் கொண்ட ஒரு குழுவினர், அவரது வீட்டைக் கொளுத்தினர்.

    மேரி ஸ்டோப்ஸ்அசராமல் லண்டனில் ஒரு ஆலோசனை மையம் திறந்தார். கருத்தடை முறைகளை நர்ஸ்களுக்குக்கற்றுத்தரும் இடமாக அது இருந்தது.

    இதன்பிறகு பலநாடுகளிலும் படிப் படியாக இந்தப் பிரசாரம் பரவியது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:46 pm

    இந்தியாவைப்பொறுத்தவரை, இந்த விஷயத்தில் தமிழகம் முன்னோடியாக இருந்தது.

    அப்போதைய சென்னை மாகாணத்திலும், புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் இதற்காகப் பலஅமைப்புகளைத் தமிழர்கள் உருவாக்கினர். மார்கரெட் சாங்கர் இந்தியா வந்தபோது மகாத்மாகாந்தியையும், தாகூரையும் சந்தித்துக் குடும்பக் கட்டுப்பாடுபற்றி பேசினார். காந்தி எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால் தாகூர், "பெண்களின் ஆரோக்கியத்துக்கு இது மிகமுக்கியம்" என்றார். 1931-ம் ஆண்டு இந்தியாவில் முதல் தடவையாக மக்கள்தொகைகணக்கெடுப்பு நடந்தது. அதன்பிறகு குடும்பக் கட்டுப்பாடின் அவசியம் எல்லோருக்கும்புரிந்தது. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகே முயற்சிகள் வேகமெடுத்தன.1952-ம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு பற்றிய சர்வதேச கருத்தரங்கு இந்தியாவில்நடந்தது. இதனை "இந்திய குடும்பக் கட்டுப்பாடு அமைப்பு" ஏற்பாடுசெய்திருந்தது. இதில் கலந்துகொள்ள கூப்பிட்ட போது மத்திய சுகாதார அமைச்சர்ராஜ்குமாரி அம்ரித் கௌர் வரமறுத்து விட்டார். "குடும்பக் கட்டுப்பாடு"பற்றி பேசுவதே அவருக்கு அதிர்ச்சியான விஷயமாக இருந்தது.

    ஆனால், பிரதமர் நேரு வாழ்த்துச் செய்தி அனுப்பி யிருந்தார். துணை ஜனாதிபதி டாக்டர்ராதாகிருஷ்ணன் வந்து பேசினார். அவரது பேச்சுதான் அரசாங்கத்தை உலுக்கியது எனலாம்.

    ""குழந்தைகளை, பெண்களின் கருப்பைக்கு கடவுள் தான் அனுப்பி வைக்கிறார்... அவரது விருப்பத்தில்நாம் எப்படிக் குறுக்கிடுவது என்று சிலர் கேட்கிறார்கள்... குழந்தையைக் கொடுக்கும்அதே கடவுள், நமக்கு அறிவையும் கொடுத்திருக்கிறார். பயன்படுத்துவதற்குதான் அறிவு! எதிர்கால விளைவுகளையும், பெண்களின்ஆரோக்கியத்தையும் கருதி நாம் இதை செய்தாக வேண்டும். இதற்கு அறிவைப்பயன்படுத்தாவிட்டால் மனித இனம் அழிந்துவிடும்"" என்றார் ராதாகிருஷ்ணன்.

    இந்தியர்களின் மனசாட்சியை உலுக்கி எடுத்த பேச்சு அது! இதைத் தொடர்ந்து நேரு, சுகாதார அமைச்சகத்துக்கு 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி னார். நாட்டின் எல்லாஅரசு மருத்துவமனைகளிலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றி விழிப்பு உணர்வுஏற்படுத்துவது என அரசு தீர்மானித்தது.

    இப்படி பொறுப்பைஅரசாங்கம் ஏற்றது உலகிலேயே முதலாவதாக இங்குதான்! இன்னமும்கூட அமெரிக்காவில்"குடும்பக் கட்டுப்பாடு" தனிநபர்களின் பொறுப்பாகவே இருக்கிறது.

    புறப்பட்டஇடத்துக்கே திரும்ப வந்துசேரும் ஒரு பொருளை "ஒரு முழுச்சுற்றுவந்துவிட்டது" என்பார்கள். ஆணுறையின்கதையும் அதுதான்! ஆரம்பத்தில் பால்வினைநோய்களை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட அயிட்டம் அது! "குடும்பக்கட்டுப்பாடுக் கருவியாக" அது மாறியது, தற்செயலாக நடந்தவிஷயம். இப்போது எய்ட்ஸ் நோய் உருவாக்கிய பீதியில் பழையபடி அது "நோய்கட்டுப்பாடுக் கருவி"யாக அவதாரம் எடுத்திருக்கிறது.

    ஆணுறையின் வரலாறுகி.மு. 1350-ல் ஆரம்பிக்கிறது. எகிப்து நாட்டில் வசித்த நாடோடிகள் ஆணுறுப்பைபூச்சிகள் கடிக்காமல் இருக்கவும்,அதில் காயங்கள் ஏற்படாமல்இருக்கவும் ஓர் உறை மாட்டிக் கொள்ளும் வழக்கத்தை உருவாக்கினர். மனித இனம்கண்டுபிடித்த முதல் ஆணுறை இதுதான்!

    ஃபிரான்ஸின்காம்பரெல்ஸ் குகைகளில் கி.பி.முதல் நூற்றாண்டில் வரையப்பட்ட தொல்லோவியங்கள் உள்ளன.இவற்றில் ஆணுறை அணியும் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.

    கி.பி. 1500-ம்ஆண்டுகளில் ஐரோப்பாவின் பல நாடுகளை "சிபிலிஸ்" என்ற பால்வினை நோய்அச்சுறுத்தி யது. செக்ஸ் எண்ணத்தோடு மனைவியைத் தொடக்கூட பலரும் பயந்தனர்.இவர்களுக்கு ஆறுதல்தரும் விதமாக

    இத்தாலியைச்சேர்ந்த புகழ்பெற்ற உடற்கூறியல் நிபுணர் கேப்ரியேல் ஃபெலோபியஸ், ஆணுறை போன்ற பையை உருவாக்கினார். மெல்லிய லினன் துணியால் இது செய்யப்பட்டது.நோய் பரவாமல் தடுக்க இதை வேதிப் பொருட்களில் நனைத்துப் பிறகு காயவைத்து ஆண்கள்பயன்படுத்தினர். அப்போதுதான்,"இது நோயை மட்டும்தடுக்கவில்லை... விந்தணுக் களையும் பெண்ணுறுப்புக்குப் போகாமல் வடிகட்டி, கர்ப்பத்தையும் தடுக்கிறது" என்ற உண்மை தெரிந்தது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:47 pm

    ஆணுறைக்குஆங்கிலத்தில் "காண்டம்" என்று பெயர். எப்படி இந்தப் பெயர் வந்தது? இதற்கு இரண்டுவிதமாக சொல்கிறார்கள். இங்கிலாந்தை ஆண்ட இரண்டாம் சார்லஸ்மன்னரின் அரசவை டாக்டராக "காண்டம்" என்பவர் இருந்தார். அந்த மன்னர்தினமும் புதுப்புது பெண்களைத் தேடும் சபல புத்திக்காரர். இப்படி கண்டஇடங்களுக்குப் போய் மன்னர் ஏதாவது பால்வினை நோயைச் சுமந்து வருவதைத் தவிர்க்கவும், மன்னரின் வாரிசுகளை ஏராளமான பெண்கள் வயிற்றில் சுமந்து கொண்டு ஏகப்பட்டகுழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் டாக்டர் காண்டம், ஸ்பெஷலாக ஆணுறைகளைத் தயாரித்துத் தினமும் இரவில் மன்னருக்குக்கொடுத்தனுப்புவாராம். அந்த டாக்டரின் பெயரே ஆணுறைக்கு வந்துவிட்டது என்கிறார்கள்சிலர். லத்தீன் மொழியில் "காண்டஸ்" என்றால் கிண்ணம். ஆணுறை கிண்ணம்மாதிரி இருப்பதால், இந்த லத்தீன் பெயரே அதற்கு ஆங்கிலத்திலும்வந்தது என்கிறார்கள் வேறு சிலர். லினன் துணியை அடுத்து, கி.பி. 1700-களில் ஆட்டுக்குடல் சவ்வில் ஆணுறைகள் தயாரிக்கப் பட்டன. ஆனால், இவற்றின் விலை அதிகம்! இப்போது "செகண்ட் சேல்ஸ்" என்ற முறையில் பழையபைக்குகள், கார்களை விற்பது மாதிரி அந்தக் காலத்தில்ஏற்கெனவே பயன்படுத்திய ஆட்டுக்குடல் ஆணுறை களை கழுவி எடுத்துவந்து, திரும்பவும் கடைகளில் விற்ற கூத்தும் நடந்தது.

    ஐரோப்பாவில்இவ்வளவு புரட்சிகளும் நடந்த அதே நேரத்தில் ஜப்பானில் மெல்லிய தோலையும், ஆமை ஓட்டின் உட்புற பகுதியையும் பயன்படுத்தி ஆணுறைகள் தயாரித்து வந்தனர்.

    ரப்பர்கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஆணுறை அசுர வளர்ச்சி கண்டது. 1840-ல் தொடங்கி ஏராளமாகஆணுறைகள் ரப்பரில் செய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு வந்தன. 1930-களில் லேடெக்ஸ் ரப்பர்தொழில்நுட்பம் வந்தபிறகு, ஆணுறை இன்னமும் மெலிதானது. இருப்பதே தெரியாதஅளவுக்கு அணியமுடிந்தது.

    ஆண்களின்உடம்புச்சூடு ஆணுறுப்பு வழியாக பெண்களுக்குப் பரவும் போதுதான் முழுமையான இன்பம்கிடைக்கும் என்றும் ஆணுறை மாட்டினால் அது கர்ப்பத்தைத் தடுப்பது போலவே சூட்டையும்தடுத்துவிடும் என்றும் மக்களில் பெரும்பாலானோர் நினைத்தார்கள். ஆனால், அது உண்மையில்லை. சமீப காலத்தில் பாலியூரித்தேன் கொண்டு புதிய ஆணுறைகள்தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படி தயாரிக்கப்பட்ட ஆணுறைகள் "டியூரான்"(duron) என்று அழைக்கப்படுகிறது. இதில் உடம்புச்சூடு பரவுகிறவசதி இருக்கிறது.

    இப்போது செக்ஸ்இன்பத்தை அதிகரிக்கிற விதமாக ஏகப்பட்ட ரகங்களில் ஆணுறைகள் வந்து விட்டன. சின்னகம்ப்யூட்டர் சிப்பும், பாட்டரியும் இணைத்து, உறவின்போது அதிர்வுகளை ஏற்படுத்துகிற ஆணுறைகூட கிடைக்கிறது.

    இதுதவிர, கடந்த செப்டம்பர் மாதம் "ஃபெமிடோம்" எனப்படும் பெண்களுக்கான"பெண்ணுறை"கூட மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறது. ஆணுறைகளைவிட இதுகொஞ்சம் சைஸ் பெரிதாக இருக்கும்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:47 pm

    ஆணுறைகளின்பயன்பாடு பற்றி சுவாரஸ்யமான ஒரு விஷயம் வளைகுடா போரின் போது நடந்தது. கடந்த 91-ம்ஆண்டு சதாம் உசேன் குவைத்தை ஆக்கிரமித்து இருந்தார். படைகளை வாபஸ் பெறச் சொல்லிஐ.நா.சபை அவருக்குக் கெடு விதித்தது. குறிப்பிட்ட நாட்களில் இது நடக்கவில்லைஎன்றால் இராக் படைகளைத் தாக்கி, குவைத்தை மீட்க ஏதுவாக அமெரிக்க மற்றும்பிரிட்டிஷ் படைகள் சவூதி பாலைவனத்தில் தயாராக இருந்தன.

    பல நாட்கள்இந்தக் காத்திருப்பு தொடர்ந்தது. இந்த சமயத்தில், "எங்களுக்கு ஐந்துலட்சம் ஆணுறைகள் வேண்டும்" என பிரிட்டிஷ் படைகள் அந்த நாட்டு அரசாங்கத்துக்குத்தகவல் அனுப்பின. ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் ஓய்வெடுக்கும்போது விலைமாதர்களைத்தேடிப் போவது உலகமெங்கும் சகஜமான விஷயம்தான்! ஆனால், யாருமில்லாத பாலைவனத்தில் இவர்களுக்கு எதற்கு இவ்வளவு ஆணுறைகள் என பிரிட்டிஷ் அரசு குழம்பியது.ஆனாலும் கேட்டதை அனுப்பி வைத்தது.

    இருநாட்டுபடைகளும் ஒன்றுசேர்ந்து களத்தில் இருந்ததால் பிரிட்டிஷ் படைகளின் முகாமுக்குஆணுறைகள் பெட்டிப்பெட்டியாக வந்து இறங்குவதைப் பக்கத்திலிருந்த அமெரிக்க ராணுவஅதிகாரிகள் பார்த் தனர். "நாமே இங்கு காய்ந்துபோய் கிடக்கிறோம். நமக்குத்தெரியாமல் பிரிட்டிஷ் பார்ட்டிகள் பெண்களை எங்கு போய் பிடிக்கிறார்கள்?" என புரியாமல் தவித்த அதிகாரிகள், ராத்திரி நேரத்தில் பிரிட்டிஷ் முகாமை கண்காணிக்க உளவுப் படையினரைத் தனியாகநியமித்தனர். நாட்கள் கடந்தன. ஆனால், பிரிட்டிஷ்வீரர்கள் எதுவும் தப்புதண்டாவுக்கு போகிற மாதிரி தெரியவில்லை.

    இந்தச் சூழலில்கெடுமுடிந்தும்கூட, சதாம் படைகள் குவைத்திலிருந்து நகராததால்அவர்கள் மீது தாக்குதல் தொடுக்குமாறு திடீரென கட்டளை வந்தது. அமெரிக்கப் படைகள்உடனே கிளம்ப முடியவில்லை. அவர்களிடமிருந்த துப்பாக்கிக் குழல்களில் எல்லாம் மணல்அப்பி மூடியிருந்தது. இதை சுத்தம் செய்யவே பலமணி நேரம் ஆயிற்று. புத்திசாலிபிரிட்டிஷ் படையினர் இந்தக் குழல்களை ஆணுறைகளால் மூடியிருந்தனர். அதை மீறி மணல்உள்ளே போகவில்லை. அவர்கள் கட்டளை வந்த அடுத்த நிமிடமே ஆணுறைகளை அகற்றிவிட்டுத்தாக்குதலை ஆரம்பித்தனர்.

    ஆணுறை இப்படி பலவிஷயங்களைத் தடுக்கிறது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:48 pm

    ஆபாசசுவரொட்டிகள் கிழிப்பு... ஆபாச சினிமா வுக்கு எதிரான கிளாச்சி... ஆபாசமாக என்பெயரை சினிமாவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். உடனே அதைப் படத்திலிருந்து நீக்கவேண்டும்என்றெல்லாம் சில நிகழ்வுகளை அடிக்கடி நாம்நாளிதழ்களில் படிக்கிறோம். ஆதிகாலத்திலிருந்து... ஆதி விஜய் காலம்வரை காலந்தோறும் சமுதாயத்தில் ஆபாசம்பற்றி இப்படிசர்ச்சைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

    ஒருசிலர்சமூகத்தில் கௌரவமாக மதிக்கப்படும் சில புத்தகத்தைத் தீவிரமாகப் படித்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சம் கிட்டச் சென்று பார்த்தால், அவர்கள் அந்தப் புத்தகத்துக்குள் இன்னொரு புத்தகம் வைத்துப் படித்துக்கொண்டிருப்பார்கள். அது ஆபாச புத்தகமாக இருக்கும்! ஏன் இப்படி?

    ஆபாச புத்தகத்தைவெளிப்படையாகப் படித்தால், எங்கே சமூகம் தன்னை இழிவாக நினைத்துவிடுமோ என்றபயம்தான் இப்படி ஒளித்துவைத்துப் படிக்கக் காரணம். பொதுவாக எந்த ஒரு விஷயம்தீவிரமாகக் கட்டுப்படுத்தப் படுகிறதோ, அதை அறிந்துகொள்ளஆசைப்படுவது மனித இயல்பு. உதாரணமாக,தமிழ் நாட்டில் மதுவிலக்குஅமலில் இருந்தபோது நமது குடிமகன்கள் பலர் பாண்டிச்சேரி, காரைக்கால் சென்று குடித்துவிட்டு வந்தார்கள். ஆந்திராவில் என்.டி.ஆர். மதுவிலக்குக் கொண்டு வந்தபோது, அங்கிருந்தவர்கள் தமிழகத்தின் எல்லைப்பிரதேசமான திருத்தணி போன்ற பகுதிகளுக்கு வந்து குடித்துவிட்டுப் போனார்கள்.

    இதேபோலத்தான்செக்ஸும். அதைப் பற்றிய கட்டுப்பாடுகள் அதிகரிக்க அதி கரிக்க, அவற்றை மீறி அது என்ன?’என்றுதெரிந்துகொள்ளும் தீவிரம் அதிகரித்து விடுகிறது. இதன் விளைவுதான் ஒளித்துவைத்துஆபாசப் புத்தகத்தைப் படிப்பது, நீலப்படம் பார்ப்பது போன்றவை.

    இன்றைக்கு இணையதளங்களில் போர்னோகிராபி (Pornography)என்பது படுபிரசித்தமாகஇருக்கிறது. இதற்கென்று கணக்குவழக்கில்லாமல் வலை தளங்கள் இருக்கின்றன. போர்னோகிராபிஎன்ற ஆங்கில வார்த்தையின் ஆதிமூலம் கிரேக்கசொல்லான போர்னியா’ (Porneia) என்பதுதான். இந்தசொல்லுக்கு விலைமகள்என்று பொருள்.விலைமகளின் நடைவடிக்கைகளைப் பற்றி எழுதுவதற்குத்தான் போர்னோகிராபிஎன்று பெயர் வைத்தார்கள். இந்த வார்த்தையைப்போலவே எரோடிகா’ (Erotica) என்றொரு சொல்உண்டு. இதுவும் கிரேக்கச் சொல்தான். கிரேக்கப் புராணத்தில் குறிப்பிடப்படும்மன்மதக் கடவுளின் பெயர் ஈராஸ்’ (Eros). இவருடைய ஒரே வேலை, செக்ஸ் ஆசையை தூண்டிவிட்டுக் கொண்டே இருப்பதுதான். கவர்ச்சிகரமான படங்களும், எழுத்துக்களும் மனதில் தூண்டலை நிகழ்த்துவதால் ஈராஸ்கடவுளைப் பின்பற்றி எரோடிகாஎன்ற பெயர்வந்தது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:48 pm

    செக்ஸ் குறித்தபடங்கள் இன்றுநேற்று வந்ததல்ல. மனித வரலாறு தொடங்கியபோதே இதன் வரலாறும்துவங்கிவிட்டது. ஆதிகால குகை ஓவியங்களைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளலாம்.

    செக்ஸ் தொடர்பானஆளிணிவுகளில் பிரபலமான சார்லஸ் கின்ஸி, ஆபாசம் பற்றியபுத்தகம், படங்களை யாரெல்லாம் படிக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்று ஆராளிணிச்சி செளிணிது, ஒரு புள்ளிவிவரம்வெளியிட்டார். அதில் 48 சதவிகித பெண்களும், 36 சதவிகித ஆண்களும், "ஆபாசமான படங்கள், எழுத்துக்கள்எங்களை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கின்றனஎன்று ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    நான் 2004-ம்ஆண்டு, ‘இண்டர்நேஷனல் கான்ஃபரன்ஸ்ஒன்றில் ஆளிணிவறிக்கை சமர்ப்பித்தேன். இந்த ஆளிணிவுக் காக இந்தியாவில் 15மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரிடம், ‘ஆபாச புத்தகம், நீலப்படம் போன்றவற்றை படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டதற்கு72.27 சதவிகித ஆண்களும், 48.90 சதவிகித பெண்களும் நாங்கள் படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம்என்று ஒப்புக் கொண்டார்கள். போர்னோகிராபிபற்றிய பயம்மக்கள் மனதில் இருப்பது எதனால்?‘செக்ஸ் என்பதே குற்றம், செக்ஸ் என்பதே அனுபவிக்கக் கூடாததுஎன்ற எதிர்மறைஎண்ணத்தாலும், அறியாமையாலும்தான் இப்படியரு அதீத பயம் ஏற்பட்டிருக்கிறது.செக்ஸை மிகுந்த கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றுநினைப்பவர்களுக்கு அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கையிருப்பதில்லை.அதனால்தான்அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்கு பொருத்தமான உதாரணம், அமெரிக்காவைச் சேர்ந்த அந்தோனி காம்ஸ்டாக் என்பவர்தான். 1844-ல் பிறந்தஇவருக்கு, அம்மா என்றால் வெல்லக்கட்டி... அவ்வளவுபிரியம்.

    ஆனால், இவருக்குப் பத்து வயது நடக்கும்போது, அம்மாவைப்பறித்துக்கொண்டான் மரணதேவன். தந்தையோ மதுக்கோப்பைக்குள் விழுந்து கிடந்தார்.துன்புறுத்தும் தனிமை யில் இருந்து தப்பி ஒளிந்து கொள்ள, ஆபாச புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தான் சிறுவன் காம்ஸ்டாக். அந்தப் படங் களில்உள்ளது போல சுய இன்ப வேட்கையில் ஈடுபடுவது அவனுக்கு சகஜமானது. சுய இன்பம்பற்றிய தவறான கருத்து இருந்த காலம் அது. இதனால்காம்ஸ்டாக்கை குற்ற உணர்ச்சி பிடுங்கித் தின்றது. மேஜர் வயதைத் தொட்டபிறகும் குற்றஉணர்ச்சி தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் இந்த சித்ரவதை பொறுக்க முடியாமல் தற்கொலைக்குமுயற்சித்து, மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர்பிழைத்தார் காம்ஸ்டாக். இந்நிலையில், ஆபாச புத்தகம், படங்க ளை நாட்டிலிருந்தே ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத்தீவிரமாகப் பற்றிக் கொண்டது. ஒளிணி.எம்.சி.ஏ.என்ற அமைப்பில்உறுப்பினரானவர், அமைப்பிலிருந்த சிலருடன் சேர்ந்து ஆபாசத்தைஒழிக்க ஆவேசமாகப் புறப்பட்டார். அரசாங்கத்துக்கு நிறைய விண்ணப்பங்களை எழுதித்தள்ளினார். இவருக்கு சாம்வுல் கோல்கேட் (புகழ்பெற்ற கோல்கேட்கம்பெனியின் முதலாளி), ஜே.பி.மார்கன்(பேங்க் அதிபர்) என்ற இரண்டு தலைகள் ஆதரவு தெரிவித்தன.

    1873-ல் அமெரிக்கபாராளுமன்றத்தில் ஆபாச புத்தகங்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதையஅமெரிக்க அதிபர் யுலிசஸ் எஸ்.கிராண்ட் இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டதும் இதுஉடனடியாக அமலுக்கு வந்தது. காம்ஸ்டாக் சட்டம்என்றே பெயர் பெற்றது. காம்ஸ்டாக்குக்கு ஆன்டிஅப்ஸீனிட்டி ஏஜென்ட்என்ற பதவியும் அளிக்கப்பட்டது. தவிர, அஞ்சல் துறையிலும் ஒரு பதவி தரப்பட்டது. போலீஸில் இன்ஸ்பெக்டர் பதவிக்குஇணையான அங்கீகாரம் உடையது இந்தப் பதவி.

    இந்தப் பதவிகைக்கு வந்தபிறகு, ஆபாச ஒழிப்பு என்ற பெயரில் பயங்கரமாக ஆட்டம்போட ஆரம்பித்துவிட்டார். ஓவியர்கள்,பதிப்பகங்கள், பத்திரிகைகள் அனைத்தையும் ஏதேதோ காரணம் சொல்லி குற்றவாளியாக்கினார். இவரால்அலைக்கழிக்கப்பட்டு மனம் உடைந்த 15 பெண்கள் தற்கொலை செளிணிது கொண்டார்கள் என்றால், காம்ஸ்டாக் எந்த அளவு ஆட்டம் போட்டிருப் பார் என்பது புரிந்திருக்கும்.அபார்ஷன் செளிணியும் டாக்டர்கள்,நர்ஸ்கள், விலைமாதர் என பலரும் குற்றம் சாட்டப்பட்டனர்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:49 pm

    தூரிகைக்காரர்களின்சொர்க்கம் என புகழப்பட்ட நியூயார்க்கின் ஹெர்மன் நாட்லர்ஓவியக்கூடத்தில் இருந்த 117 ஓவியங்களை ஆபாசம் என்று சொல்லி தூக்கிக்கொண்டுபோனார் காம்ஸ்டாக். ரஸ்ஸல் டிரால் என்பவர் எழுதிய செக்ஸுவல்பிஸியாலஜி’ (Sexual physiology) என்ற டாக்டர்களுக்கான மருத்துவப்பாடப்புத்தகத்தை "ஆபாசக் களஞ்சியம்" என்று சொல்லித் தடை செளிணிதார்.காம்ஸ்டாக்கின் கொட்டம், பல அரசு அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை.

    இந்தச் சூழலில் த ட்ரூத் ஸீக்கர்’ (உண்மை தேடுபவன்) என்ற வாரப் பத்திரிகையில்(1877) காம்ஸ்டாக்கின் கெடுபிடிக்கு காரணம்என்னவென்றால்- எது ஆபாசம், எது ஆபாசமில்லை என்கிற விளக்கம் சட்டரீதியில்தரப்படாததுதான். அதனால்தான் காம்ஸ்டாக் யாரை வேண்டுமானாலும் கைது செளிணிகிறார்என்று தலையங்கம் வெளியானது.

    அவ்வளவுதான்... உண்மை தேடுபவன்இதழின் ஆசிரியரும் காம்ஸ்டாக்கின் கோபத்துக்குஆளாகி கைது செளிணியப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துப்பத்திரிகையாளர்களும் கொதிதெழ... நாடு முழுவதும் காம்ஸ்டாக்குக்கு எதிரான தீபற்றிப் பரவியது. படிப்படியாக காம்ஸ்டாக்கின் கெடுபிடி தளர்ந்தது.
    காம்ஸ்டாக்கின்கதையை இங்கு விவரித்ததற் கான காரணம், இப்போதுவாசகர்களுக்குப் புரிந்திருக்கும்.

    இந்தியாவிலும், இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தில்கூட எது ஆபாசம்?’ என்று துல்லியமாக விளக்கப்படவில்லை. செக்ஸ் குறித்த சட்டங்கள் இந்தியாவில் 1860-ம்ஆண்டு காலக்கட்டத்தில் உருவானவை. இன்று மருத்துவ உலகமும், விஞ்ஞான உலகமும் நவீனமாகிவிட்டன. ஆனாலும் அந்தக் காலத்து சட்டங்கள்தான்பயன்பாட்டில் உள்ளன. காலத்துக்கு ஏற்ப அவை புதுப்பிக்கப்படவில்லை.

    இக்காலத்துக்குஏற்ற வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று சில ஆண்டுகளாக சட்ட நிபுணர்கள்முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள். விரைவில் புதிய சட்டம் வரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அப்போதாவது எது ஆபாசம், எது ஆபாசமில்லைஎன்கிற குழப்பம் அகலுமா..?

    சென்ற இதழில்குறிப்பிட்டது போல - ஆபாசம் குறித்த சர்ச்சை களுக்கு செக்ஸ் பற்றிய அறியாமையேபிரதான காரணமாக இருக்கிறது. இதுதான் ஆபாசம் என்பதை இதுவரை யாருமே தீர்மானமாகவரையறுக்க வில்லை. ஒன்றைப் பார்த்து இது ஆபாசம், இது ஆபாசமில்லைஎன்று உறுதியாக சொல்லவே முடியாது. ஏனெனில், ஒருவருக்குஆபாசமாகத் தோன்றும் (Obscene) விஷயம் இன்னொருவருக்கு கலைப்பூர்வமான (Art) விஷயமாகத் தோன்றலாம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:49 pm

    உண்மையில் ஆபாசம்குறித்த குளறுபடிகளுக்கு இந்தப் பார்வை மாறுபாடுதான் முக்கிய காரணம். அழகுஎன்ற கருத்தாக்கம் பற்றிச் சொல்லும்போது, ‘ஒரு பொருளின் அழகு என்பது பார்க்கப்படுகின்ற பொருளில் இல்லை, பார்ப்பவரின் கண்ணில் இருக்கிறதுஎன்பார்கள். இதுஆபாசத்துக்கும் பொருந்தும்.

    ஒரு தாய் தன்குழந்தைக்குப் பாலூட்டுவதை பார்க்கும் ஒருவன், அந்தச் செயலின்உன்னதம் அறிந்து உணர்ச்சிவசப்படு வதும், இன்னொருவன் காமம்பொங்க அந்தக் காட்சியை வெறித்துப் பார்ப்பதும்கூட அவரவர் மனதின் விளைவுகள்தான்.

    ஆபாசம் என்பதற்குஅகராதிகள் சொல்லும் அர்த்தம் என்ன?

    நடைமுறை வாழ்வில் புழக்கத்தில் இருக்கும்விருப்பங் களுக்கும், சுவை மனப்பான்மைக்கும் எதிரான -அருவருப்பூட்டும், முகம்சுளிக்க வைக்கும், முறையற்ற செயல் அனைத்தும் ஆபாசமாகக் கருதப்படும்.இதுதான் ஆபாசத்துக்கு அகராதிகள் சொல்லும் பொதுவான விளக்கம். கி.பி. 1600-களில்ஆபாசம் பற்றிய அமெரிக்க விதிகளில் செக்ஸ் விஷயங்கள் கவனத்தில்

    கொள்ளப்படவில்லை.இன்று நிர்வாணப் படங்கள், செக்ஸ் விருப்பத்தை தூண்டும் எழுத்துக்கள்தான்ஆபாசம் என்று பலரால் கருதப்படுகிறதல்லவா? ஆனால், கி.பி.1600-களில் மதத்துக்கு எதிராகப் பேசுவதையும், எழுதுவதையும் மட்டுமே ஆபாசம் என்று கருதினார்கள். இயற்கைக்கு மாறாக ஒருவரை செயல்பட எதுவெல் லாம் தூண்டுகிறதோ, ஒருவரின் மனதில் எதுவெல்லாம் இயல்புக்கு மாறான, முறையற்றஉணர்வுகளை எழுப்புகிறதோ... அவை எல்லாம் ஆபாசம். இயற்கைக்கு மாறான எண்ணத்தைத்தூண்டும், இயற்கைக்கு மாறாக செயல்பட தூண்டும்எழுத்துக்களும் இதில் அடங்கும்.’- கி.பி. 1868-ல்இங்கிலாந்து நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்த ஹிக்கலின் கொடுத்த ஆபாசம்பற்றிய இந்த விளக்கமே- ஆபாசம் பற்றியவிதியாகவும் அப்போது மதிக்கப்பட்டது. இதற்கு ஹிக்கலின் விதி (Hicklin Decision) என்று பெயர்.

    இதன்அடிப்படையில் இங்கிலாந்து நீதிமன்றங்களுக்கு ஓர் அதிரடி உத்தரவு போடப்பட்டது.இதன்படி, ‘ஒரு முழுப் புத்தகத்தில் ஒரே ஒரு பாராவில்மட்டும் சற்றே செக்ஸ் வாடை அடித்தால்கூட போதும். அந்தப் புத்தகத்தின் ஆசிரியர், வாசகனை முறையற்ற செக்ஸ் தூண்டலுக்கு உள்ளாக்குகிறார். ஆகவே, அந்த புத்தகத்தையே ஆபாச புத்தகமாகத்தான் கருத வேண்டும்என்பதுதான் அந்த உத்தரவு. ஐந்து பைசா திருடினாலும் திருட்டுதான்; ஐந்து லட்சம் திருடினாலும் திருட்டுதான் என்பார்கள் அல்லவா? அதைதான் ஆபாசம் பற்றிய ஹிக்கலின் விதியும் அடிநாதமாகக் கொண்டிருந்தது.

    அதன்பிறகுகாலங்கள் உருண்டோட, ஆபாசம் பற்றிய கருத்தோட்டத்தில் சின்னச் சின்னமாறுதல்களுடன் புது விதிகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. சட்டரீதியிலானஆபாசம் குறித்த விதிகள் காலந்தோறும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்பதற்கு நிறையஉதாரணங்கள் உண்டு.

    1973-ம் ஆண்டுஇதுவரை இருந்துவந்த ஆபாசம் குறித்த விதிகளுக்கு மாறான ஒரு சிந்தனை உருவானது.அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் இந்தப் புதிய விதி உருவாக்கப்பட்டது. ஆபாசம் என்று சொல்லி நீண்ட காலத்துக்கு ஒரு புத்தகத்தைத் தடை செய்தால்- அதுசிறந்த இலக்கிய அந்தஸ்து கொண்ட, கலாப்பூர்வமான, அரசியல் மற்றும்விஞ்ஞானரீதியிலான படைப்புகளை வெளிவராமல் தடுத்துவிடும்என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் புதிய சிந்தனை.

    இன்றுவரை ஆபாசம்பற்றிய துல்லியமான, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வரை யறைகள்இல்லாதது பெரிய துரதிர்ஷ்டம்தான். இதனால்தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பைப் பற்றி எழுதினால் தவறில்லை.அவற்றைச் செய்தால் மட்டுமே தண்டனைஎன சொல்லும் குற்றவியல்சட்டம், செக்ஸ் பற்றிய விஷயத்துக்கு மாறுபாடான அளவுகோலைமுன்வைக்கிறது. அதாவது, ‘செக்ஸ்நடவடிக்கையில் நேரடியாக ஒரு மனிதன்ஈடுபட்டால் அது தவறில்லை. செக்ஸை,செக்ஸ் செயல்பாடுகளைநாவலில், சினிமாவில், எழுத்தில்காட்டினால் அது குற்றம். அதற்கு தண்டனையும் உண்டுஎன்கிறது. இதில்உள்ள முரண்பாடு புரிகிறதா உங்களுக்கு? இப்படிஇரண்டையும் நான் ஒப்புமை செய்தவதால் கொலையைப் பற்றி எழுதுவது தவறு, கொலை செய்தால் தவறில்லை என்று நான் சொல்ல வருவதாகத் தப்பு அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டாம். இங்கே நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியது, கிரிமினல் நடவடிக்கை மீதான அணுகுமுறைக்கும், ஆபாசம் பற்றியஅணுகுமுறைக்கும் உள்ள முரண் பாட்டைதான்! சாதாரண பொதுமக்கள் மட்டுமல்ல- மெத்தபடித்தவர்கள், சட்ட நிபுணர்கள்கூட ஆபாசம் குறித்த தவறானகருத்துக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

    இவர்கள்எல்லோருமே- கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல் போன்றவற்றைப் போலவேதான் ஆபாசம் பற்றியும் கருதிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நவீன யுகத்தில் செக்ஸ் ஆராய்ச்சியாளர்கள், பிகேவியரல் சயின்டிஸ்ட்கள் (behavioralscientists) போன்றவர்கள், செக்ஸ் தொடர்பான எல்லை மீறிய எழுத்து மற்றும் படங்களை ஆபாசம் என்றுகுறிப்பிடாமல் ‘Explicit Sexualmaterial’ என்றுகுறிப்பிடுகிறார்கள். இதை செக்ஸை அம்பலப்படுத்தும் விஷயம் என்று பொருள் கொள்ளலாம். இவர்கள் பார்வையில் நிர்வாணமான ஒரு பெண்ணின் படம் ‘Explicit Sexual material’ அல்ல; ஆண்-பெண் கூடலைஅப்பட்டமாக சொல்லும் புத்தகம் அல்லது படம் ‘Explicit Sexual material’ ஆகும்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:49 pm

    இது ஒருபுறம்இருக்கட்டும்... சமூகம் நினைப்பதைப்போல் ஆபாச எழுத்து, ஆபாச படங்கள் போன்றவை சமூகத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதா? இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளில் விஞ்ஞானப்பூர்வமான இரண்டு ஆய்வுகளைக்குறிப்பிட்டே ஆக வேண்டும்.

    முதலாவது, ‘டேனிஷ் ஃபோரன் ஸிக் மெடிக்கல் கவுன்ஸில்" 1966-ம் ஆண்டில் நடத்தியஆய்வு.இது ஆபாச புத்தகங்கள், எழுத்துக் கள் ஆகியவை கிரிமினல் நட வடிக்கைகளுக்கு மக்களைத் தூண்டுகிறதா?’ எனும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது, யுனைடெட் ஸ்டேட்ஸ் பிரசிடென்ட்ஸ் கமிஷன் 1970-ம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வாகும்.

    இரண்டுஆய்வுகளும் கற்பழிப்பு, கொலை, கொள்ளைபோன்றவற்றில் தண்டிக்கப்பட்ட சிறைக் கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. நீங்கள் கொலை செய்ய, கற்பழிக்க, கொள்ளை நடந்ததூண்டுகோலாக இருந்தது எது?"என்று கேட்கப்பட்டது.

    அந்தக் கைதிகளில்ஒருவர்கூட ஆபாச புத்தகங்கள் தான் என்னைக் கொலை செய்ய வைத்தது, கற்பழிக்கத் தூண்டியது என்று குறிப்பிடவில்லை. தவிர, இதுபோன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட அவர்களின் சொந்த வாழ்க்கைச்சீரழிவும், குடும்பப் பின்னணியும்தான் காரணம் என்றும்கண்டறியப்பட்டது. இதுதவிர 100 மிகப் பெரிய தேசிய நிறுவனங்களிலும் இந்த ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு குழுக்கள் டென்மார்க் சென்று, மக்கள் மத்தியில் செக்ஸ் கண்காட்சி நடத்தி, "போர்னோகிராபி"படங்களை பார்க்கவைத்து சட்டத்துக்குப் புறம்பானவற்றில் ஈடுபட இவை தூண்டுகோலாக இருக்கிறதாஎன்றும் ஆய்வு செய்தன.

    இந்த இரண்டுவிஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகளும் இதுவரை ஆபாசம் பற்றி பொதுவாக எல்லோரும் கொண்டிருந்தகருத்துக்களை சுக்குநூறாக உடைத்து எறிந்தது. ஆபாசப்புத்தகங்களோ, படங்களோ எவரையும் தவறாகத் தூண்டவில்லைஎன்பதுதான் இந்த ஆய்வுகளின் இறுதி முடிவாகும்.

    பத்திரிகையில்அபூர்வமாக சில குற்றவாளிகள், ‘இந்த சினிமாவைப் பார்த்தேன். அதுதான் என்னைஇந்த கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட தூண்டியதுஎன்று சொன்னால், அந்தக் குற்றவாளியின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும். அவன் ஆரோக்கியமான மனநிலைகொண்டவனாக இருக்க மாட்டான். மனபாதிப்புக்கு ஆளானவனாகவே இருப்பான்.

    இந்தஆய்வுகளின்படி, ‘போர்னோ கிராஃபிசமூகத்தைக்கெட்டுப்போகத் தூண்டுவதில்லை என்பது நிரூ பணமானது. முறையான பாலியல் கல்வியை அளிக்கமுன்வந்தால், "போர்னோகிராபி" மீதுள்ள ஆர்வம்தன்னிச்சையாகக் குறைந்துவிடும் என்றும் இந்த ஆய்வறிக்கை உலகுக்கு உணர்த்திஇருக்கிறது.

    செக்ஸ் பற்றியஅரிச்சுவடி புரிபட ஆரம்பித்த ஆதி நாளிலிருந்தே மனிதன், அது தொடர்பான மற்றொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தான். எப்படிஆபாச புத்தகமும் படமும் செக்ஸ் உணர்வைத் தூண்டிவிடும் என்று நினைத்தானோ அதுபோல, செக்ஸ் சாமர்த்தியத்தைத் தூண்டிவிடும் அல்லது தாம்பத்ய உறவின் நேரத்தைஅதிகப்படுத்தும் ஒரு பொருளை மனிதன் தேடிக்கொண்டே இருந்தான். கவனிக்க - தன் செக்ஸ்பிரச்னையை மட்டும் தீர்த்துக் கொள்வதற்காக இதுபோன்ற பொருளை மனிதன் தேடவில்லை. இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்என்ற அதீதஆசையின் விளைவே இந்தத் தேடல்.

    மனிதனின் காமஉணர்வை அதிகப்படுத்தும் பொருட்களுக்கு அப்ரோடிஸியாக்’ (Aphrodisiac) என்று பெயர். இது மருந்தாக, வாசனைப் பொருளாக, உணவாக, உபகரணமாகஎதுவாகவும் இருக்கலாம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:50 pm

    செக்ஸ் உணர்வைத்தீவிரமாகத் தூண்டிவிடும் பொருட்களுக்கு அப்ரோடிஸியாக்என்று பெயர் வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. கிரேக்க புராணத்தில் யுரேனஸ்என்ற ஒரு கடவுள் இருந்தார். இவருக்கு க்ரோனஸ்என்றொரு மகன். தந்தையும் மகனும் நேசபாவத்துடன்இருப்பதைக் காட்டிலும் சண்டையிட்டுக் கொள்வதுதான் அதிகம். அப்படி ஒருநாள்இருவருக்கும் இடையே நடைபெற்ற சண்டையின் உச்சத்தில், க்ரோனஸ் தன்தந்தையின் பிறப்புறுப்பை அறுத்துக் கடலில் வீசி எறிந்தான். கடல் அலைகளில் மிதந்தபிறப்புறுப்பைச் சுற்றி நுரைகள் சூழ்ந்தன. அந்த நுரையிலிருந்து அப்ரோடைட்என்கிற பெண் கடவுள் பிறந்தாள். அப்ரோஸ்’ (Aphros) என்ற கிரேக்க வார்த்தைக்கு நுரை என்று பொருள்.நுரையிலிருந்து பிறந்ததால், அவளுக்கு அப்ரோடைட் என்று பெயர் வந்தது. இவளின்வேலை கடவுள்களுக்கும், மனிதர்களுக்கும் செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டே இருப்பதுதான்.

    பார்ப்பவர்களைக்கிறங்கடிக்கும் வசீகரத்துடன் இருந்த அப்ரோடைட்டை திருமணம் செய்துகொள்ள மற்றகடவுளர்களுக்கு மத்தியில் ஏகப்பட்ட போட்டி. அப்ரோடைட்டின் தந்தையான யுரேனஸ் அவளை ஹிப்பாய்ஸ்டாஸ்என்பவனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.ஹிப்பாய்ஸ்டாஸ்- தங்க ஆபரணங்கள் செய்பவர்களின் கடவுள். ஹிப்பாய்ஸ்டாஸை மணம் செய்துகொண்டாலும் வேறு சிலருடனும் உறவு வைத்திருந்தாள் அப்ரோடைட்.

    கிரேக்கத்தில்கோயில்கட்டி கோலாகலமாகப் பண்டிகையும் கொண்டாடப்படும் அளவுக்கு புகழ் பெற்றவள்அப்ரோடைட். அந்தப் பண்டிகையின் பெயர் அப்ரோடிஸியாக்’. இந்தப் பண்டிகையின் பெயர்தான் செக்ஸ் உணர்வைத் தூண்டும் பொருட்களுக்குசூட்டப்பட்டது.

    தன் காம இச்சையைஅதிகரித்துக்கொள்ள ஒவ்வொரு காலத்திலும் மனிதன் ஒவ்வொரு விதமான பொருளைப்பயன்படுத்தி வந்திருக்கிறான். கி.மு. 4000-ல் பாபிலோனில் அரிசியிலிருந்து ஒயின்தயாரிக்கும் பழக்கம் இருந்தது. அந்த ஒயினைக் குடித்தால் செக்ஸ் ஆர்வம்அதிகரிக்கும் என்று அப்போது நம்பினார்கள்.

    கி.மு. 200-ல்எகிப்தில் மேன்ட்ரேக்’ (Mandrake) என்ற செடியின்சாறைக் குடித்தால் மெத்தை வித்தையில் புகுந்து விளையாடலாம் என்று மக்கள் நினைக்க, அந்த செடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தனர்! கி.மு. ஏழாம் நூற்றாண்டில் ஐரோப்பாகண்டம் முழுதும் மேன்ட்ரேக் செடியின் சாறை, பிறந்த குதிரையின் தலை மீது இருக்கும் ஹிப்போமேனஸ்என்ற நுரை போன்ற பொருளுடன் கலந்துஅருந்தினார்கள்.

    ரோம் நாட்டில் ஆர்ஸிட்என்ற பூவின் இதழ்களி லிருந்து சாடிரின்என்ற பானம் தயாரித்துக் குடித்தால் செக்ஸ்உணர்வு அதிகரிக்கும் என்று நம்பி மொடாக்குடி குடித்தார்கள். ஸ்பானிஷ் ஃபிளைஎன்ற ஒருவகை சிறு பூச்சி யைப் பிடித்துவறுத்துப் பொடி செய்து, அந்தப் பொடியைத் திராட்சை சாறில் கலந்துஅருந்தினார்கள். இதுபோன்ற காமத்தைத் தூண்டிவிடும் விதவிதமான அப்ரோடிஸியாக்வகையறாக்கள் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டு மக்களின் நம்பிக்கைக்கேற்பபயன்பாட்டில் இருந்தன... இருக்கின்றன!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:50 pm

    காமத்துக்காகக்காளான்களையும் பதம்பார்த்த மக்கள்,தங்கத்தையும்விட்டுவைக்கவில்லை. எளிதில் ஜீரணமாகும் வகையில் அதேசமயம் இச்சையைத் தூண்டிவிடும்என்ற நம்பிக்கையில் தங்கத்தைப் பஸ்பமாக்கி சாப்பிட்டார்கள்.

    இந்தியாவிலும்இதுபோன்ற பொருட்கள் மீது நிறைய நம்பிக்கைகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. கி.மு.600-ல் எழுதப்பட்ட பழமை வாய்ந்த சரக்கா சம்ஹிதாஎன்ற ஆயுர்வேதநூலில் ஒரு அத்தியாயமே "அப்ரோடிஸியாக்" வகை பொருட் களின் மகத்துவத்தைச்சொல்வதற்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது.

    காம இச்சையைத்தூண்டும் பொருட்களை சக்கரா சம்ஹிதாஉணவுப் பொருட்கள், மருந்துகள், மனதைத் தூண்டி விடுதல் என்று மூன்று வகையாகப்பிரித்திருந்தது. காம இச்சையை அதிகப் படுத்தும் ஐம்பது வகையான மருந்துகளையும்வகைப்படுத்தி இருந்தது.

    கி.பி. 300-ல்வாத்ஸ்யாயனர் தன்னுடைய காம சாஸ்திரம்ஏழாம் பாகம்இரண்டாம் அத்தியாயத்தில் (அத்தியாய தலைப்பு: ஒளப நிஷதிகம்) செக்ஸ் ஆர்வத்தைத்தூண்டிவிடவும், செக்ஸ் பிரச்னைகளைத் தீர்க்கவும் சிலமருந்துகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.

    அவருக்குப்பின்னர் சோதலா என்பவர் கி.பி. 12-ம் நூற்றாண்டில் கதாநிக்ரஹா", மற்றொரு நூலான "சாரங்கதரா சம்ஹிதாஆகிய நூல்களில் கஞ்சா செடிக்கு செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டிவிடும் ஆற்றல் உண்டுஎன்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் பல நூற்றாண்டுகளாகவே செக்ஸ் உணர்வைத்தூண்டிவிடும் பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவது தெரிகிறது.

    செக்ஸ்எண்ணத்தைத் தூண்டிவிடும் பொருட்களை பற்றிய விஞ்ஞானரீதியான ஆராய்ச்சிகள் 18-ம்நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்தன. ஒரு உயிரினத்துக்கு ஆண் விதையை எடுத்துவிட்டால்செக்ஸ் ஆர்வம் குறைந்து விடும் என்றும்...

    மீண்டும்பொருத்திவிட்டால் செக்ஸ் எண்ணம் பழையபடி திரும்பிவிடும் என்றும் அப்போதுகண்டறிந்தார்கள். 1889-ல் ஃபிரான்ஸில் பிரவுன் ஸீகுவார்டு என்ற நரம்பியல் நிபுணர்ஒரு கருத்தரங்கில், ‘‘நான் நாயின் விதையை எடுத்து, சாறு பிழிந்து அதனை ஊசி மூலம் செலுத்திக் கொண்டேன். இப்போது நான் இளமையாக இருக்கிறேன்.செக்ஸில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுகிறேன்’’ என்றார்.

    அப்போது அவரதுவார்த்தைகளை எவரும் நம்பவில்லை. 1935-ல் ஆண் ஹார்மோன் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பிரவுன் ஸீகுவார்டு சொன்னதில் மருத்துவரீதியாகக் கொஞ்சம் உண்மை இருப்பதாகநம்பப்பட்டது. இவரது ஆராய்ச்சியிலிருந்து சில உண்மைகளைக் கற்றறிந்த மருத்துவ உலகம், பின்னாட்களில் கணையத்திலிருந்து இன்சுலினை எடுக்கலாம் என்கிற பேருண்மையைக்கண்டுபிடித்தது.

    கி.பி. 1900-ல் யூஜின் ஸ்டீநாக்என்ற மருத்துவ நிபுணர், வாஸோலிகேஷன் (Vasoligation) என்ற அறுவை சிகிச்சை செய்தால் செக்ஸ் ஆர்வம்அதிகரிக்கும் என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். அதாவது, விதையில் செர்டோலி செல் (Sertolicell), லீடிக் செல் (Leydig cell) என்னும் இரண்டு வகையான செல்கள் இருக்கும்.செர்டோலி செல்லில்தான் உயிரணு உருவாகிறது. லீடிக் செல்லில் டெஸ்டோஸ்டீரோன்’ (Testostereone)என்ற ஆண் ஹார்மோன்உற்பத்தியாகிறது. இந்த ஆபரேஷன் செய்தால் டெஸ்டோஸ்டீரோன் சுரப்பது அதிகமாகும். இதன்விளைவாக செக்ஸ் உணர்வு அதிகரித்துவிடும் என்று நம்பப்பட்டது.

    அக்காலகட்டத்தில் இந்த அறுவை சிகிச்சை புகழடைந்து, 1920-களில்கிட்டத்தட்ட ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இருந்த பல்கலைக்கழகப்பேராசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆபரேஷனை செய்து கொண்டார்கள்.அவர்களில் முக்கியமானவர் நவீன உளவியலின் தந்தை என்று புகழப்படும் சிக்மண்ட்ஃபிராய்டு ஆவார். ஈட்ஸ்எனும் புகழ்பெற்றகவிஞரும் இந்த ஆபரேஷனை செய்து கொண்டார்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:51 pm

    இந்த ஆபரேஷனுக்குஇன்னொரு பெயரும் உண்டு. அதன்பெயர் வாசக்டமி’ (Vasectomy). ஆம், இப்போது குடும்பக் கட்டுப்பாட்டுக்காக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் அதேகருத்தடை ஆபரேஷன்தான் அப்போது செக்ஸ் ஆர்வத்தை அதிகரிப்பதற்காகசெய்யப்பட்டிருக்கிறது!

    1920ல் செர்ஜிஅரொமோவித் என்ற விஞ்ஞானி சிம்பன்ஸி குரங்கின் விதையை ஒரு ஆணுக்குப் பொருத்தினார்.இதனால் அந்த ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமானது என்று அவர் தெரிவித்தார்.

    இதை எல்லாம்பார்க்கிற, படிக்கிறபோது ஒரு சிரிப்புத் துணுக்குஞாபகத்துக்கு வருகிறது. அது அடுத்த இதழில்...

    சென்ற அத்தியாயத்தில்நான் சொல்வதாகச் சொன்ன அந்த சிரிப்புத் துணுக்கு இதுதான்:

    கடவுள் உலகத்தைப்படைத்தபோது முதலில் ஒரு ஆணை உருவாக்கினார். கடவுள் அவனிடம், ‘உனக்கு இருபது ஆண்டுகள் செக்ஸ் லைஃப்என்றார். ஆனால்அவனோ, ‘இன்னும் அதிக ஆண்டுகள் வேண்டும்என்றான். அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்... அப்படிப்போய் உட்கார்என்று சொன்னார் கடவுள்.

    அடுத்து ஒருசிங்கத்தைப் படைத்தார். அதனிடம்,‘உனக்கு 20 ஆண்டுகள்செக்ஸ் லைஃப்என்று அவர் சொல்ல, அதற்கு சிங்கம், ‘எனக்கு 10 ஆண்டுகள் போதும்என்றது. உடனே மனிதன், ‘சிங்கம் வேண்டாம் என்ற 10 ஆண்டுகளை எனக்குத்தாருங்கள்என்று கடவுளிடம் கேட்டுப் பெற்றான்.

    பின்னர் கடவுள்ஒரு குரங்கைப் படைத்து, அதற்கும் 20 ஆண்டுகள்செக்ஸ் லைஃப்என்றார். குரங்கும் சிங்கத்தைப் போலவே 10 ஆண்டுகள் போதும்என்றது.

    அது வேண்டாமென்ற10 ஆண்டுகளையும் மனிதன் கெஞ்சிக் கேட்டுப் பெற்றுக் கொண்டான். கடைசியாக கடவுள் ஒருகழுதையைப் படைத்து, அதற்கும் 20 ஆண்டுகள்செக்ஸ் லைஃப்என்றார். கழுதையும் 10 ஆண்டுகள் போதும்என்று சொல்ல, அது நிராகரித்த10 ஆண்டுகளையும் மனிதனே பெற்றுக் கொண்டான்.

    இதனால்தான் ஒருமனிதன் 20 வயது வரை, செக்ஸில் ஒரு மனிதன் போல நடந்து கொள்கிறான்.இருபதி லிருந்து முப்பது வரை சிங்கம் போலவும், முப்பதிலிருந்துநாற்பது வரை குரங்கு போலவும், நாற்பதுக்கு மேல் கழுதை போலவும்ஆகிவிடுகிறான்...!

    இது சும்மாஜோக்குக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல; மனிதனின்கட்டுக்கடங்காத செக்ஸ் ஆர்வத்தையும் சுட்டிக் காட்டுவதற்காக சொல்லப்பட்ட கதை.மனிதன் தனது செக்ஸ் ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொள்ள என்னென்ன அப்ரோடிஸியாக் (Aphrodisiac) வகையறாக்களை இப்போது தேடியலைகிறான்..? இந்த நூற்றாண்டில் மருத்துவம் அசுரப் பாய்ச்சலில் புது உயரங்களைத் தொடத் துவங்கியபோது, நவீன அப்ரோடிஸியாக் பொருட்களின் கண்டுபிடிப்பிலும் தன் அதீத கவனத்தைச்செலுத்தியது. அந்தவகையில் அண்மைக்கால வரவு வயாக்ரா!

    வயாக்ராவின்ஜாதகத்தைப் புரட்டினால் எத்தனை எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள்..! ஆரம்பத்தில், நெஞ்சுவலிக்காரர்களுக்கு பயன்படுத்ததான் வயாக்ரா கண்டுபிடிக்கப்பட்டது. இதைபைஸர் (Pfizer) எனும் புகழ்பெற்ற மருந்து கம்பெனி முதன்முதலில் தயாரித்தது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:52 pm

    வயாக்ரா...ஆராய்ச்சிக் கட்டத்தில் இருந்த போது, உண்மையானவயாக்ராவையும், வயாக்ரா போன்ற டம்மி மாத்திரையும் நெஞ்சுவலிவந்தவர்களுக்குக் கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. இந்த மருந்தைக் கொடுத்த பிறகுஅவர்களின் இ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது. இ.சி.ஜி எடுப்பதற்கு முன்புநோயாளியின் மார்பக முடிகளை எல்லாம் மழிக்க வேண்டும். அப்படி இவர்களுக்கு மார்பகமுடிகளை ஷேவ் செய்த நர்ஸ்கள் எல்லாம் தங்கள் டாக்டர்களிடம் சென்று, ‘நாங்கள் அவர்களின் மார்பகத்தைத் தொட்டு ஷேவ் செய்யும்போதும், பின்னர் இ.சி.ஜி. எடுக்கிறபோதும் அவர்கள் அதீத செக்ஸ் உணர்வுக்கு ஆளாகிறார்கள்என்று முறையிட்டார்கள். அப்போதுதான், வயாக்ரா, நெஞ்சு வலியை மட்டுப்படுத்துவதற்குப் பதிலாக விறைப்புத் தன்மையை வைக்கிறதுஎன்பது தெரியவந்தது.

    இதன் பின்னர்மருத்துவ உலகில் ஒரு பரபரப்பு பற்றிக் கொண்டது. மீடியாக்கள் உபயத்தால் வயாக்ரா ஒரேஇரவில் உலகப் புகழடைந்தது. இப்போது செக்ஸ் என்ற வார்த்தையின் முழு அர்த்தம்புரிந்த அனைவருக்கும் வயாக்ரா என்ற வார்த்தையின் மகத்துவம் தெரியும். அப்புறமென்ன, ரத்தக் கொதிப்புக்கான மருந்துகளை, ஆன்ட்டிபயாடிக்மருந்துகளைத் தயாரித்துக் கொண்டிருந்த பல மருத்துவ கம்பெனிகள் வயாக்ரா போன்ற இச்சைமருந்துகளின் மீது இச்சை கொண்டு அவற்றைத் தயாரிப் பதில் ஈடுபட ஆரம்பித்து விட்டன.

    இப்போதுவயாக்ராவுக்கு அடுத்த நிலை மருந்துகள் தயாரிக்கும் முயற்சியில் முழுக் கவனம்செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் Pheromones என்கிற ரசாயனம்மனிதனின் அக்குள் மற்றும் பிறப்பு உறுப்புகளின் வியர்வையிலிருந்துதயாரிக்கப்படுகிறது என்றால் நம்ப சிரமமாக இருக்கும்!

    மனிதனின் மூளைநரம்பு மண்டலத்தில் கெமிக்கல் மெஸஞ்சர்ஸ்எனப்படும் நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் ((Neuro Transmitters) உள்ளன. இதுடோபோமைன், செரோடினின் எனும் ரசாயனங்களை உள்ளடக்கியது.இதனைப் பற்றிய ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. செக்ஸ் ஆர்வத்தை உண்டாக்குவதற்கும், விறைப்புத் தன்மையைத் தூண்டுவதற்கும் இந்த ஆய்வுகள் பயன்படும் என்றுநம்பப்படுகிறது.

    1998 வரைமருத்துவ உலகம் ஆணின் செக்ஸ் உணர்வு, அவனது விருப்பம், விறைப்புத் தன்மை போன்றவற்றில் மட்டுமே மும்முரம் காட்டியது. வயாக்ராபரபரப்புக்குப் பின்னர், ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்றஅடிப்படையில் பெண்களின் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் மருந்துகளின் ஆய்வுகளும்நடைபெறத் தொடங்கிவிட்டன. இதன் விளைவாக பெண்களுக்கென பிரத்யேகமாக சில மருந்துகள்இப்போது வரத் துவங்கியுள்ளன.

    நவீன மருத்துவஉலகம் பெண்களுக்கான அப்ரோடிஸியாக் பொருட்கள் மீது இப்போது தான் அக்கறைகாட்டினாலும், வாத்ஸ்யாயனர் அந்தக் காலத்திலேயே இதில் சிரத்தைஎடுத்துக் கொண்டிருக்கிறார். பெண்களுக்கு செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டும்மருந்துகளையும், ஆண்குறி மாதிரி யான செயற்கை சாதனங்களையும்பற்றி அப்போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற சாதனம் சிந்துசமவெளி நாகரிககாலத்தில் நடைமுறையில் இருந்தது என்பது தொல்பொருள் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.வருங் காலத்தில் ஜீன்தெரபி மூலமாக பிறப்புறுப்புகளின் பிரச்னைகளை சரிசெய்வதும், ஸ்டெம்செல்கள் மூலமாக ஆண், பெண் உறுப்புகள் தயாரிப்பதும் சாத்தியமானால்ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை! சரகர்குறிப்பிட்டதையும்இங்கு சொல்லியாக வேண்டும். ஆணின் மிகச் சிறந்த அப்ரோடிஸியாக் பெண்தான்.ஒரு பெண்ணைப் பார்த்தவுடனேயே ஆணுக்குள் செக்ஸ் தீ பெரும் நெருப்பாக மூள வேண்டும்.பெண்ணுக்கு அப்பாற்பட்டு மருந்தோ,பொருளோ தேவைப்பட்டால்தான்அதைப் பயன்படுத்த வேண்டும்என்பதுதான் சரகர் வாக்கு. செக்ஸ் ஆர்வத்தை அதிகப்படுத்தும்என்றநம்பிக்கையில் நம் நாட்டில் போலி மருந்துகள் மீதும், மூலிகைகள் மீதும்மக்கள் தவறான நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

    இந்த மூலிகைஅப்ரோடிஸியாக் பொருட்கள் பக்கவிளைவுகள் அற்றவை, நன்குபலன்தரக்கூடியவை என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறானநம்பிக்கையாகும். பௌதிகத்தில் நியூட்டனின் மூன்றாவது விதியில் ‘For every action there is an equal andopposite reaction’ என்றுசொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர்விளைவுநிச்சயம் என்பதுதான் இதற்கு அர்த்தம். இந்த விதி எல்லா மருந்துகளுக்கும்கூடபொருந்தும். பக்கவிளைவு ஒரு மருந்துக்கு இல்லை என்றாலே, அந்த மருந்து எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதுதான் நிஜம். அதனால்தான்கைதேர்ந்த மருத்துவர்கள் எந்த மருந்தில் பக்க விளைவு களைவிட நல்ல விளைவுகள் அதிகம்இருக்கிறதோ, அதைப் பரிந்துரை செய்கிறார்கள். ஆனால், நுட்பமான இந்த மருத்துவ அறிவு இல்லாத போலி மருத்துவர்கள் பலரிடம் சென்றுமக்கள் பணத்தை இழப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள்கின்றனர்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:52 pm

    நீண்ட நேரம் உடல் உறவில்ஈடுபட வேண்டுமா?’, ‘இரவில் வீடுசெல்ல தயக்கமா?’, ‘வாலிப வயோதிகஅன்பர்களே... உங்களுக்கோர் நற்செய்திஎன்பது போன்றசுண்டியிழுக்கும் அழைப்புகளுடன் மக்களுக்குத் தூண்டில் போடும் போலிமருத்துவர்களின் காட்டில் தொடர்ந்து பண மழைதான். பணபலத்தின் மூலம் மீடியாக்களின்துணையோடு இவர்கள் கூவிக்கூவி பொய்நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆயுர்வேத மருத்துவர்என்று பொய்சொல்லிக் கொண்டு, பெயருக்கு முன்னால் தாங்களாகவே டாக்டர்என்றுசொல்லிக்கொண்டு, எல்லா நோய்களையும்குணப்படுத்துவோம் என்று விளம்பரம் செய்பவர்களும் போலி டாக்டர்கள்தான். ஆயுர்வேதம்என்றில்லை... சித்தா, யுனானி போன்ற வைத்தியமுறைகளிலும் இந்தப் போலிகள் பெருகிக் கிடக்கின்றனர்.

    உண்மையில்ஆயுர்வேதத்துக்கும் அலோபதி மருத்துவ முறைக்கும் பெரிய வேறுபாடு கிடையாது.விதிமுறைகளும் வழிமுறைகளும் மட்டுமே வெவ்வேறானவை. மூலாதாரக் கொள்கைகள் ஒன்றுதான்.

    ஆயுர்வேதத்தின்பிதாமகரான தன்வந்திரி, ‘ஒரு ஆயுர்வேத மருத்துவர், நோயாளி தன்னிடம் வரும்போது அவருடைய பிரக்ருதி’ (மனித உடம்பின்நிலை) விக்ருதி’ (மனித உடம்பின்பிரச்னைகள்) இரண்டையும் தெரிந்து கொள்ளாமல் அவனுக்கு வைத்தியம் செய்து குணப்படுத்தமுடியாது. அப்படி தெரியாமல் வைத்தியம் செய்ய முற்பட்டால் அவன் வைத்தியன் இல்லை; திருடன்!என்றுசொல்லியிருக்கிறார்.
    ஆயுர்வேதத்தில்குறிப்பிட்ட, ‘பிரக்ருதியைதான் அலோபதி மருத்துவம், ‘உடல்கூறியல்’ (Physiology) என்கிறது. உடல் உறுப்புகள் எல்லாம் சரிவரஇயங்காமல் போனால் என்ன பிரச்னைகள் வரும் என்பதை சொல்லும் விக்ருதிதான் அலோபதியில்நோய்இயல் (Pathology) என்றுஅழைக்கப்படுகிறது.

    இந்த பிரக்ருதி, விக்ருதி எதுவுமே தெரியாமல் பல போலிமருத்துவர்கள் துரிதஸ்கலிதம், விரைப்புத்தன்மைக்கோளாறு, மலட்டுத்தன்மை போன்றவற்றுக்கு போலிமருந்துகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சுயஇன்பம் தவறு என்று சொல்லி, அதற்கும் அதே மருந்தைக் கொடுக்கிறார்கள்.

    எப்படி ஒரேமருந்து எல்லா பிரச்னையையும் தீர்க்கும் என்று மக்கள் யோசிக்க வேண்டும்.ஒட்டுமொத்த ஆயுர்வேத மருத்துவர்கள் அனைவரை யும் நான் குற்றம் சொல்லவில்லை. முறையாகஆயுர்வேத, ஹோமியோ, யுனானி, சித்தா பட்டப் படிப்புகள் படித்து உரிய பட்டம்பெற்ற பல சிறந்த மருத்துவர்கள் நல்ல முறையில் சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், பயிருக்கு இடையேமுளைக்கும் களைபோல உருவாகும் போலி மருத்துவர்களால் ஒட்டுமொத்த மருத்துவத்துறைக்கும் களங்கம் ஏற்படுகிறது.

    ஒருவனுக்குஉடல்ரீதியிலான பிரச்னை. அவன் முதலில் அலோபதி டாக்டரிடம் போனான். "ம்ஹும்...எந்த பிரயோஜனமும் இல்லை". அடுத்ததாக ஹோமியோபதியிடம் போனான். பணம்கரைந்ததுதான் மிச்சம். நேச்சுரோபதியிடம் போனான். ச்சே, வேஸ்ட்என்றுதிட்டிக்கொண்டே வெளியேறியவன், கடைசியாகவெங்கடாசலபதியிடம் போனானாம்.

    இப்படி ஒருமருத்துவத் துறை ஜோக் உண்டு. இப்படித்தான் பலர் தங்கள் பிரச்னைக்கு யாரிடம் போவதுஎன்று சரியாக முடிவெடுக்காமல், யார் யாரிடமோசெல்கிறார்கள்! தமிழில் ஓரினச் சேர்க்கை என்பது ஆங்கிலத்தில் Homo sexuality எனப்படுகிறது. கிரேக்க மொழியில் ‘Homo’ என்றால் ஒரே மாதிரி யானவை என்று அர்த்தம். ஹோமோ செக்ஸ்என்ற பெயரைமுதன்முதலில் 1869ல் ஜெர்மன் உளவியல் நிபுணர் கார்ல் மரியாபென் கெர்ட்என்பவர்தான்பயன்படுத்தினார். அதற்கு முன் பல பெயர்களில் ஓரினச் சேர்க்கை அழைக்கப்பட்டது.பொதுவாக ஓரினச் சேர்க்கை என்று சொல்லப் பட்டாலும் ஆணும் ஆணும் கூடுவதற்கு ஹோமோ செக்ஸுவாலிட்டிஎன்று பெயர். அதுவே பெண்ணும் பெண்ணும் கூடினால லெஸ்பியன்’ (lesbian) என்று குறிப்பிடப்படுகிறது. லெஸ்பியன்என்ற வார்த்தை எதிலிருந்து வந்தது? கி.மு. 7ம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் ஸாப்போஎன்ற கவிஞர் லெஸ்போஸ்’ (Lesbos) எனும் தீவில் வசித்து வந்தார். இந்தத் தீவில் ஒரு பெண் இன்னொரு பெண்ணைப்பார்த்து ஒரு பெண்ணின் மனதைத் தொட்டுப் போனவளே... என்று பாடுவது சகஜம். ஆம், பெண்ணும் பெண்ணும் கூடி வாழ்வது இங்கு சகஜமாகஇருந்தது. பெண்களின் இந்தக் கூடல் சங்கமத்தை, ஸாப்போவின் பேனாதித்திப்பாக வர்ணித்து எழுத, உலகம் முழுவதும்பிரபலமாகிப் போனது லெஸ்போஸ் தீவு. இதனால் பெண்ணும் பெண்ணும் இணை சேர்வதற்கு லெஸ்பியன்என்ற பெயர்வந்தது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:53 pm

    மனிதன் தோன்றிவளர்ந்த ஆதி நாளிலிருந்தே ஓரினச் சேர்க்கையும் மனித சமூகத்தில் இருந்துவந்திருக்கிறது. கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோதன்னுடைய ‘symposium’ எனும் நூலில், ‘ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள்தான் சிறந்த போர்வீரர்களாக முடியும்என்று எழுதியுள்ளார். கிரேக்கப் புராணத்தில் பல கடவுள்களும் ஹீரோக்களும்ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்நிய தேசத்தின்மீது படையெடுக்கும் எகிப்திய போர் வீரர்கள், தங்களிடம்தோற்கும் அயல் நாட்டு வீரர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, அந்நாட்களில் மிக மிக சாதாரண விஷயமாக இருந்திருக்கிறது.

    கிறிஸ்துபிறப்புக்கு முன்பு வரை ரோம் நாட்டில் ஓரினச் சேர்க்கையை சமுதாயம் தவறாக நினைக்கவில்லை. இந்த உறவுக்கு சமூக அங்கீகாரம் மட்டுமில்லை... சட்டரீதியானஅங்கீகாரம்கூடதரப்பட்டிருந்தது. ரோமானிய மன்னர்களான நீரோ, கலிகுலா போன்றவர்கள் ஓரினச் சேர்க்கையை ஆதரித்ததுடன் அதில் லயிப்புடன்ஈடுபட்டும் வந்திருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்துபிறப்புக்குப் பின்னர் நான்காம் நூற்றாண்டில் ஓரினச் சேர்க்கை மீதான சமுதாயத்தின்கருத்தில் மிகுந்த மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. குறிப்பாக, ஆசனவாய் வழியாக செக்ஸில் ஈடுபடக் கூடாது என்ற எண்ணம் வலுப் பெற்றது. ஆசன வாய் வழியே செக்ஸில் ஈடுபட்டு சந்ததியை உருவாக்கும் வாய்ப்பு இல்லாதபோதுஏன் அதில் ஈடுபட வேண்டும்?’ என்ற எண்ணம் வலுவடைய ஆரம்பித்தது. காலக்கழிவில் கிறிஸ்தவ மதம் தோன்றி அது உலகெங்கும் பரவ ஆரம்பித்த காலத்தில், ‘ஹோமொ செக்ஸ்குறித்த எதிர்மறையான கருத்துகள் கிளம்பஆரம்பித்தன. அதேசமயம், மறுமலர்ச்சி காலத்தில் மாபெரும் சிற்பியும்ஓவியனுமான மைக்கேல் ஏஞ்சலோவும் இன்னும் சில ஓவியர்களும் புகழ்பெற்ற சிஸ்டைன் சேப்பல்‘ (Sistinechapel) தேவாலயத்தின்நீண்ட சுவர்களில் ஆடையில்லாத ஆண்களையும், ஆண்உறுப்புகளையுமே வரைந்து ஓரினச் சேர்க்கைப் பற்றிய தங்களின் ஆதரவை மறைமுகமாகத்தெரியப்படுத்தி இருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர்கூட தனது புகழ்பெற்ற கவிதைகளில், நாடகங்களில் ஆணின் உறுப்புகளை அழகாக வர்ணித்து எழுதியிருப்பதை நாம் இங்குசுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும். ஜான் பாஸ்வெல்என்ற வரலாற்று ஆசிரியர், ‘கிறிஸ்டியானிட்டி சோஷியல் டாலரன்ஸ் அண்ட் ஹோமோசெக்ஸுவாலிட்டிஎன்ற நூலை எழுதினார். இதில் கிறிஸ்தவ மதம் ஆரம்பத்தில் ஹோமோ செக்ஸை எதிர்க்கவில்லை, ஏற்றுக் கொண்டுதான் இருந்ததுஎன்றுகுறிப்பிட்டுள்ளார்.

    செயின்ட்அகஸ்டின், செயின்ட் தாமஸ் ஆக்வீனாஸ் என்ற இரண்டு மதகுருமார்கள், ‘எந்த விதமான செக்ஸ் செயல் பாட்டில் ஈடுபட்டால்குழந்தை பிறக்கிறதோ அதுதான் சமுதாயத்துக்கு நல்லது. அதுதான் இயற்கை யானதும்கூட.இதற்கு மாறாக குழந்தை பிறக்க எந்தவித வாய்ப்புமில்லாத நிலையில் செக்ஸில் ஈடுபடுவதுபாவம். அது இயற்கைக்குப் புறம்பானதுஎன்றுகுறிப்பிட்டார்கள்.

    அப்போதுசமூகத்தில் செல்வாக்கு மிக்க ஆசாமிகளாக இருந்தவர்கள், இந்த மத குருக்களின் கருத்துகளை ஏற்றுக் கொண்டதுடன் அவற்றைத் தங்களுக்குசாதகமாகவும் பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். தங்களை எதிர்ப்பவர்கள்குற்றமற்றவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் மீது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டார்கள்என்ற முத்திரையைக் குத்தி அவர்களுக்கு அபராதம் விதிப்பது, சிறையிலடைப்பது, துன்புறுத்துவது போன்ற காரியங்களில்ஈடுபட்டார்கள். இதன் காரணமாகஅக்கால கட்டத்தில் ஓரினச் சேர்க்கை என்பது வெறுப்புக்குரியகீழ்த்தரமான செயலாக மக்கள் மத்தியில் பதிந்து போனது.

    ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது பாவம், மாபெரும் தவறு என்ற மதரீதியான பார்வைக்குஅழுத்தம் சேர்ப்பதுபோல், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவ உலகமும்ஓரினச் சேர்க்கை தவறானது என்று சொன்னதுடன், இதுவொரு நோய்என்றும் சொல்லத் துவங்கியது. உதாரணமாக, ‘கிராஃப்ட் எபிங்என்னும் செக்ஸுவாலஜிஸ்ட் 1886ல், மருத்துவ பாடநூல்ஒன்றை எழுதினார். இதில் ஓரினச் சேர்க்கை என்பது பிறவிக் கோளாறு (ஜீன்குறைபாடு) என்றும், இத்தகைய புணர்ச்சியில் ஈடுபடுவது நரம்புத்தளர்ச்சிக்கு வழிகோலும் என்றும் எழுதியிருந்தார். அப்போது, இவரது கருத்தை ஒட்டி மருத்துவ உலகம் ஓரினச் சேர்க்கையை ஒரு மனநோயாகவேகருதியது.

    ஹோமோ செக்ஸ் தவறா, இல்லையா என்பது பல காலமாக நீண்டவிவாதமாக இருக்க, ஃபிரான்ஸ்சக்கரவர்த்தியாக ஐரோப்பியாவை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த நெப்போலியன், 1804ல் வயதுக்கு வந்த இருவர் விருப்பத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதுதவறில்லை என்று சட்டம் போட்டான். இதுதான் சரித்திரத்தில் முதல் சட்டம்!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:54 pm

    அடுத்தகட்டம், 1957ல் இங்கிலாந்தில் ஒரு கமிட்டி போடப்பட்டது. இந்த கமிட்டி ஓரினச்சேர்க்கையைப் பற்றி கள ஆய்வு செய்து, ஒரு அறிக்கையைத்தயாரித்தது. இதற்கு வுல்ஃபென்டன் ரிப்போர்ட்என்று பெயர். இந்த அறிக்கையில்,‘வயதுக்கு வந்த இரண்டுபேர் எந்தவிதமான செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் தவறே கிடையாது. விருப்பமின்றிஎந்தவிதமான செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அது தவறேஎன்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை எந்த வகையான செக்ஸ் உறவு என்பதைவிடவிருப்பத்துக்கே முதலிடமும் முக்கியத்துவமும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பலஎழுத்தாளர்களுக்கு, கவிஞர்களுக்கு, இசைக்கலைஞர்களுக்கு, ஓவியர் களுக்கு ஓரினச் சேர்க்கையைப் பற்றி நல்லஎண்ணம் இருந்திருக்கிறது. என்றாலும், தங்களின் ஆதரவுக்கருத்தை நேரடியாக மக்கள் மன்றத்தில் சொல்லாமல், மறைமுகமாகவேவெளிகாட்டி வந்தனர். வெளிப்படையாகச் சொன்னால் சமுதாயம் தங்களை இழிவாகக் கருதிவிடுமோ என்ற அச்சமும், அதுவரை தாங்கள் பாடுபட்டு தேடி வைத்திருக்கும்புகழுக்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற தயக்கமும் அவர்களுக்கு இருந்திருக்கலாம்.

    1969ல்அமெரிக்காவில் மான்ஹாட்டன் நகரத்தில் ஓரினச் சேர்க்கைக்கு என்றே ஒரு கேளிக்கைவிடுதி இருந்தது. இந்த விடுதியில் போலீஸ்காரர்கள் திடீரென்று ஒரு நாள் ரெய்டுநடத்தி அங்கிருந்தவர்களை எல்லாம் கைது செய்தார்கள். இந்த ரெய்டை எதிர்த்து ஹோமோசெக்ஸ் விரும்பிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வீதிகளில் தெருமுனைக் கூட்டம் போட்டு ஓரினச் சேர்க்கையை தவறாக நினைக்காதீர்கள்என்று கோஷம்போட்டார்கள். இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் அப்போது மிகுந்த அதிர்வலைகளைஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சி மிக மிக முக்கியமானதாகக் கருதப்பட காரணம் உள்ளது. அதுநாள் வரை ஓரினச் சேர்க்கைக்கு மறைமுகமாக ஆதரவு தந்த ஓரினச் சேர்க்கையாளர்கள்அனைவரும் ஒன்று திரண்டு, வீதிக்கு வந்து பகிரங்கமாகப் போராட வைத்ததுஇச்சம்பவம். ஓரினச் சேர்க்கைக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்றுவெளிப்படையாக மக்கள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. அதோடு ஓரினச்சேர்க்கை குறித்த அமெரிக்க அரசின் கருத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்தது! 1979ல், ‘ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவர்களை சமூகம் ஒதுக்கக் கூடாது. மற்றவர்களைப் போல்இவர்களும் சமமானவர்களேஎன்று முப்பத்தொன்பது அமெரிக்க நகரங்களில்அரசாங்கமே சட்டம் கொண்டு வந்தது. இது ஓரினச் சேர்க்கை சம்பந்தப்பட்ட விவாதவரலாற்றில் ஒரு திருப்பு முனை! மனித உயிர்களிடத்தில் காணப்படும் இந்த ஹோமோசெக்ஸ்பற்றிய பார்வை இந்தியாவில் எப்படி இருந்தது? கிறிஸ்தவ மதமும், மேலை நாடுகளும் ஓரினச் சேர்க்கை பற்றி அந்தக் காலத்தில் எவ்வகையான கண்ணோட்டம்கொண்டிருந்தன என்று சென்ற இதழில் பார்த்தோம். அந்தக் காலகட்டத்திலும் அதற்குமுந்தைய காலகட்டத்திலும், ஓரினச் சேர்க்கை குறித்து நம் இந்திய தேசத்தில்எந்தவிதமான அபிப்பிராயங்கள் நிலவின?இந்தக் கேள்விக்கான பதில்நிச்சயம் உங்களை ஆச்சர்யப்படுத்தும்!

    கிழக்கிந்தியகம்பெனி என்ற வர்த்தகப் போர்வையில் வந்து நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள்வருகைக்கு முன்பு வரை, ஓரினச் சேர்க்கையை ஆட்சேபணைக்குரிய உறவாகவோ, பாவகரமான குற்றமாகவோ இந்திய தேசம் பார்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், நம் பழங்கால நூல் களில் ஓரினச்சேர்க்கை பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.மனுதர்ம சாஸ் திரத்தில்கூட தண்டிக்கப்பட வேண்டிய, கண்டிக்கப்படவேண்டிய இழிவான செயலாக சொல்லப்படவில்லை. ஓரினச்சேர்க்கை என்பதை எதிர்க்கவும்செய்யாமல் ஆதரிக்கவும் செய்யாமல்,உறவுகளின்விசித்திரங்களில் இதுவும் ஒன்று என்ற மனோநிலையில்தான் நம் மூதாதையர்கள்இருந்திருக்கின்றனர். இதற்கு சரியான எடுத்துக்காட்டு, ‘ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட பிறகு அதில் ஈடுபட்டவர்கள் குளித்து விட்டால்போதும்என்று மனுதர்மம் சொல்வதுதான்! இந்திய நீதிநூலாசிரியர்கள்கூட ஓரினச் சேர்க் கையைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைத் தங்கள்நூல்களில் குறிப்பிடவில்லை. ஒரு விஷயத்தை முக்கியமாக யோசிக்க வேண்டும்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:54 pm

    மனுதர்ம காலம்என்பது வேத காலம். வர்ணங்களின் அடிப்படையில் மக்களைப் பேதப்படுத்திஏற்றத்தாழ்வுகளும், புறக்கணிப்புகளும் மண்டிக்கிடந்த அந்தக்காலத்தில் கூட ஓரினச் சேர்க்கையைப் பற்றிய தவறான கண்ணோட்டம் இருந்ததில்லைஎன்பதுதான் அந்த முக்கியமான விஷயம். ஆனால், வாத்ஸ்யாயனரின் காம சாஸ்திரத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம்பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதை இத்தருணத்தில் சுட்டிக் காட்டியே தீரவேண்டும்.அக்காலத்தில் எட்டு வகையான திருமணங்கள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. அவற்றில் காந்தர்வ விவாஹம்என்றழைக்கப்பட்ட காதல் திருமணமும் ஒன்று.வாத்ஸ்யாயனர் குறிப்பிடும் இந்தக் காந்தர்வ விவாஹ முறைப்படி ஒரு ஆணும் ஒருபெண்ணும் மட்டுமல்ல, ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும்கூட இணைசேரலாம்! பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்கும்கூடஇந்தியாவில் ஓரினச்சேர்க்கை ஒரு பிரச்னையாகவே கருதப்படவில்லை. ஆங்கி லேயர்கள்நம்மை ஆட்சி செய்யத் துவங்கிய பிறகுதான் ஓரினச்சேர்க்கை என்பது மிகப்பெரியபிரச்னையாகக் கருதப்பட்டது.

    ஆங்கிலேயர்கள்தங்களின் பயன்கருதி, அந்நாளைய சூழல்களுக்கு ஏற்ற வகையில் சட்டவிதிகளை உருவாக்கி ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் சுமத்தினார்கள் என்பது மறைக்கவும், மறுக்கவும் முடியாத வரலாறு. 1837ம் ஆண்டில் மெக்காலே (Lord Macaulay) என்ற அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதியானஆங்கிலேயரால்தான், முதன்முதலாக இந்திய சட்டவிதிகள் (இந்தியன்பீனல் கோட்) தயாரிக்கப்பட்டது. இதன்படி இ.பி.கோ. செக்ஷன் 377ல் ஹோமோ செக்ஸ் இயற்கையான வழிமுறைகளுக்கும், இயல்பான செக்ஸ் செயல்பாடுகளுக்கும்எதிரானதுஎன்று சொல்லப்பட்டு, தண்டனைக்குரிய ஒரு குற்றமாக அறிவிக்கப்பட்டது.

    இந்திய சட்டம், ஹோமோ செக்ஸைக் குற்றமாகக் கருதுவது ஒருபுறமிருக்கட்டும். ஒரு மனிதன் ஏன்ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறான்?இது அவ்வளவு சுலபத்தில்பதில் சொல்ல முடியாத கேள்வி.

    ஒரு மனிதன்ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குறித்து நான்கு வகையான கருத்தாக்கங்கள்இருக்கின்றன.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 3 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum