ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    இதயம் அமைப்பு -இருப்பிடம் -பொதுவான கட்டுரை

    Go down

    இதயம் அமைப்பு -இருப்பிடம் -பொதுவான கட்டுரை   Empty இதயம் அமைப்பு -இருப்பிடம் -பொதுவான கட்டுரை

    Post by தோழன் Sun 26 Dec 2010, 6:24 pm

     


    கருவில் இருந்து இதயம் முழுமையாக
    உருப்பெற்றுவிட்டது என வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதன் அளவு என்னவாக இருக்கும்
    என்று
    நினைக்கிறீர்கள்? உங்களது கையை மூடிக்
    கொள்ளுங்கள். இந்நிலையில் கையின் அளவு என்னவோ அவ்வளவுதான் இதயத்தின் அளவும்.
    சரியாகச் சொல்வதானால்
    , நீளவாக்கில்
    15 சென்டிமீட்டரும்
    , குறுக்குவாக்கில்
    10 சென்டிமீட்டரும் கொண்டது இதயம். மனித உடலில் மிகவும் வலிமையான தசைகளைக் கொண்டு
    இதயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை 300 கிராமும்
    , பெண்ணின் உடலில் உள்ள
    இதயத்தின் எடை 250 கிராமும் இருக்கும்.



    ஒரு நாட்டின் நிர்வாகத்தைப்
    பொருத்தவரையில் பிரதமர்
    , முதல்வர்
    போன்றோர் மிக முக்கியமானவர்கள். அதனால்தான் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும்
    பலமாக உள்ளன. அதேபோன்று உடலின் இயக்கத்துக்குத் தேவையான இன்றியமையாத பணியைச்
    செய்யும்



    இதயத்துக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
    பலமாகவே உள்ளன. இதயத்துக்கு எவ்வகையான பாதிப்பும் ஏற்படாதவாறு மார்பகக்கூடு என்ற
    அமைப்பு பாதுகாக்கிறது. முன்பக்கம் நெஞ்சு எலும்பு
    , பின்பக்கம் முதுகு எலும்பு, பக்கவாட்டில் விலா
    எலும்புகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த அமைப்பு பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு
    இதயத்தைக் காக்கின்றன.



    இதயத்தின் அடிப்பகுதியானது (BASE) மேல்புறமாகவும், கூர்மையான பகுதி
    கீழ்நோக்கியும் அமைந்து பார்ப்பதற்கு தலைகீழாகத் தொங்குவதுபோல் இதயம் காட்சி
    தருகிறது.



    இதயத்தின் உள்ளே உள்ள அமைப்பை இன்னும்
    உன்னிப்பாகப் பார்க்கலாமா
    ?


    இதயத்தை நான்கு அறைகள் கொண்ட ஒரு மாடி
    வீட்டுக்கு ஒப்பிடலாம். இதயம் என்ற மாடி வீட்டின் மேற்பகுதியில் உள்ள இரண்டு
    அறைகளை மேல் அறைகள் (
    Aàriclev) அல்லது
    கொள்கலன்கள் (
    Receiving Chambers) என்று
    அழைப்பார்கள். உடலின் பல பகுதிகளில் இருந்தும்



    நுரையீரல்களில் இருந்தும் வரும்
    ரத்தத்தைப் பெற்று அவற்றை கீழ் அறைகளுக்கு அனுப்புவதுதான் இந்த மேல் அறைகளின்
    வேலை.இதயம் என்ற வீட்டின் கீழ்ப்பகுதியை நோக்கினால் இரண்டு பெரிய அறைகளைக்
    காணலாம். இதயத்தின் கீழப்பகுதியில் உள்ள அறைகளை கீழ்
    அறைகள் (Ventricles) என்று அழைப்பார்கள். இவ்வகையான அறைகளுக்கு
    விசையேற்று அறைகள் (
    Pumping
    Chambers)
    என்ற பெயரும் உண்டு. இவற்றின் முக்கிய
    வேலை மிக அழுத்தத்துடன் ரத்தத்தை உடலின் பல பகுதிகளுக்கு மட்டுமல்லாமல்
    , நுரையீரலுக்கும்
    அனுப்புவதாகும்.



    ஏற்கெனவே இதயத்தை நான்கு அறைகள் கொண்ட
    மாடி வீட்டுக்கு ஒப்பிட்டுள்ளோம். ஒவ்வொரு அறையையும்
    , மூடித்திறக்கும்
    கதவுகளைத்தான் (
    Valvev) வால்வுகள்
    என்கிறோம். இவற்றை கபாடங்கள் என்றும் அழைக்கிறார்கள். இந்த வால்வுகள் எல்லாம்
    பட்டுத்துணி போன்ற பளபளக்கும் தன்மை கொண்ட வலிமையான நார்களால் ஆக்கப்பட்ட தசை
    நாண்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதயத்தில் மொத்தம் நான்கு வகையான வால்வுகள் உள்ளன.
    இவை தனித்தனியாக தங்கள் வேலைகளைச் செய்கின்றன.



    இதயத்தில் வலது மேல் அறைக்கும், வலது கீழ் அறைக்கும்
    இடையே உள்ள துவாரத்தில் இருக்கும் வால்வை மூவிதழ் வால்வு (
    TRICUSPID VALVE) என்பார்கள்.


    உடலின் பல பகுதிகளில் இருந்து பெறப்பட்ட
    அசுத்த ரத்தமானது இதயத்தின் வலப்புறம் உள்ள மேல் அறைக்குக் கொண்டு வரப்படுகிறது.
    இந்த
    அறையானது சுருங்கும்போது வலது புறம் உள்ள
    கீழ் அறைக்கு அனுப்பப்படும் ரத்தமானது மறுபடியும் வலது மேல் அறைக்குத் திரும்பி
    வராதவாறு இந்த வால்வு இறுக மூடித் தடுக்கிறது.வலது கீழ் அறைக்கும்
    , நுரையீரல் தமனியானது
    தொடங்கும் இடத்துக்கும் இடையே நுரையீரல் தமனியை இணைக்கும் துவாரத்தில் ஒரு
    வால்வு இருக்கிறது. இந்த வால்வை நுரையீரல்
    வால்வு (
    Pîlmonary Valve) என்பார்கள்.இதயத்தின்
    வலது கீழ் அறையை அடைந்த அசுத்த ரத்தமானது இதயத்தின் கீழ் அறை சுருங்கும்போது
    நுரையீரல் தமனியின் வழியாக
    நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
    இவ்வாறு அனுப்பப்படும் ரத்தமானது நுரையீரல் தமனியில் இருந்து மறுபடியும் வலது கீழ்
    அறைக்கு வராதவாறு நுரையீரல் தமனி வால்வு இறுக மூடிக் கொள்கிறது.



    இதயத்தின் இடப்புறம் உள்ள மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் இடையில்
    ஒரு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தில் அமைந்துள்ள வால்வுதான்
    ஈரிதழ் வால்வு (MITRAL VALVE) எனப்படுகிறது.
    இந்த வால்வானது கிறிஸ்தவ மத குருமார்கள் அணியும் தலைப்பாகை போன்று தோற்றம்
    அளிப்பதால் இந்த வால்வுக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.



    இதயத்தின் இடப்பக்க மேல் அறையில் இருந்து
    கீழ் அறைக்குச் செல்லும் தூய்மையான ரத்தமானது மறுபடியும் மேல் அறைக்குச் செல்லாமல்
    தடுக்கிறது இந்த ஈரிதழ் வால்வு.இறுதியாகச் சொல்ல வேண்டியது
    , பிறை வால்வைப் (Semilunar Valve) பற்றி.
    இந்த வால்வானது பிறை வடிவத்தில் இருப்பதால் இப்படி அழைக்கப்படுகிறது. இந்த
    வால்வானது இடது கீழ் அறையும்
    , மகா
    தமனியும் இணையும் இடத்தில் உள்ளது. இடது கீழ் அறையில் இருந்து மகா தமனிக்குச்
    செலுத்தப்படும் ரத்தமானது மறுபடியும் இடது கீழ் அறைக்குத் திரும்பிச் செல்லாமல்
    தடுக்க பிறை வால்வு உதவுகிறது.இதயத்தின் அமைப்பு பற்றியும்
    , அதன் பகுதிகள்
    பற்றியும் விரிவாகப் பேசிவிட்டோம். இனி இதயம் இயங்கும் விதம் பற்றித் தெரிந்து
    கொள்ளலாம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum