என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
MALANDRINUM - மாலான்டியம் -கிரேக்க நாட்டின் குதிரையிலிருந்து எடுக்கப்பட்டவை.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
MALANDRINUM - மாலான்டியம் -கிரேக்க நாட்டின் குதிரையிலிருந்து எடுக்கப்பட்டவை.
MALANDRINUM
- மாலான்டியம்
கிரேக்க நாட்டின் குதிரையிலிருந்து எடுக்கப்பட்டவை.
மனநிலை குழப்பமாகவும், களைப்பாக இருக்கும். மூளை பலஹீனம் என்பார்.
மனசுக்கு வேலை அதிகமாக இருந்தால், படபடப்பு, மனதை ஒரு நிலை படுத்த முடியலை
என்பார்கள். புதிய வேலையை செய்ய முடியாது. எனக்கு தெரியாது என்று
கூறிவிடுவார்கள். தினமும் செய்ய முடியாது, எனக்கு தெரியாது என்று
கூறிவிடுவார்கள். தினமும் செய்யக்கூடிய சாதாரண வேலையை கூட செய்ய முடியலை
என்பார்கள். பல விதமான பலஹுனம் இருக்குதுனு சொல்வார்கள். ஞாபகமே வைத்துக்
கொள்ள முடியாது, மூளை ரொம்ப பலஹுனமுடையவர்கள். இதனால் எதைப் படித்தாலும்
வேற மாதிரியாக தெரியும். இடது புறத்திலிருந்து, வலது புறத்திற்கு சுளிர்,
சுளிர் என வலி பரவும், இதனால் குழப்பமாயிடுது ஒண்ணுமே முடியலை, மனக்
கஷ்டம் ஏற்படுது, களைப்புத் தட்டிப் போயிடுது. யோசனை செய்ய முடியலை
எண்ணம் அலைபாயுது, மூளை செத்த மாதிரி இருக்குது அதனால் யோசிக்க முடியலை
என்று இவ்வளவு கஷ்டத்தையும் கூறுவார்கள். பித்துப் பிடித்த மாதிரி களப்பை
பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.
தலை் தலையில் கொப்பளங்கள் தொப்பி போட்டது போல ஏற்பட்டு வெடித்து,
வெடித்து வரும். இந்த தொல்லையின் போது காலையில் எழும் போது தலை
உருண்டையாட்டமும், அரிசி போல ஆவது போல் உணர்விருக்கும். தலையில் நிறைய
பொடுகு வரும். நான்கு வாரத்துக்கு ஒரு முறை தலையில் சீழ் கொப்பளம் வரும்.
கழுத்தைச் சுற்றியிலும் குருணை, குருணையாக இருக்கும் அது கழுத்தைச்
சுற்றியிலும் பரவி காது வரை வரும். புண்ணில் ஏற்படும் பொருக்கல் (பொக்கு)
கெட்டியாக நீல நிறமாகவும், வெள்ளையாகவும், சிவப்பாகவும், செதில்,
செதிலாகவும்;, உரியும், உடன் பிப்பும் இருக்கும். இது மாலை நேரங்களில்
காணப்படும். பொருக்கல் காதைச் சுற்றிலும் வெள்ளை, சிவப்பு நிறங்களில்
உறியும். முதுகு யோனிப் பகுதியிலும் பொருக்கல் வரும். முன், பின் தலைகளில்
வலி ஏற்படும். பலவகையான வலிகளும், ஜில்லிப்பும் இருக்கும். சாப்பிடும் போது
பித்த வாந்தி உடன் முன் தலை வலி, களைப்பும் இருக்கும். நடு மண்டையில்
புரு, புருனு ஊருவது போல இருக்கும், இது முதுகு வரை பரவும். எலும்பில்
பயங்கரமான வலி இருக்கும். உடன் ஜில்லிப்பு, பித்த வாந்தி இருக்கும்.
பேதியின் நிறையத் தொல்லைகள் ஏற்படும். தலை ரொம்ப பாரமாக இருக்கும்.
தலைவலியும், முதுகு வலியும், கழுத்து நரம்பு பிடிப்பு, பசியே இருக்காது.
மலச்சிக்கல், ரொம்ப அசதியும் இருக்கும். இந்த தொல்லை எல்லாம் அம்மை
தடுப்பூசி போட்ட பிறகு தான் என்பார்கள். நெற்றியில் புறப்பாடுகள்
தோன்றும். உடன் அரிப்பிருக்கும். முகத்தில் நிறைய படைகள் தோன்றும். அதிக
கொப்பளம் ஏற்பட்டு அதனின் உள் பகுதியில் அரிப்பு ஏற்படும். அதிலிருந்து
பிசின் மாதிரி, தேன் மாதிரி மஞ்சள் நிறமாக வரும். மேல் உதட்டிலும் மஞ்சள்
நிறத்தில் தேன் மாதிரி வரும்.
காதில் பச்சையில் கலந்த மஞ்சள் நிறத்தில் சீழ் வெளியேறும்.
மேலும் இரத்தமும் கலந்து வரும். நாக்கின் மேல் மஞ்சள் நிற படிவு
காணப்படும். ஆதலால் நடுவில் சிவப்பு நிறத்தில் கோடு கிழித்தது போல
இருக்கும். மேலும் நடு நாக்கில் பெரிய பிளவை இருக்கும். வீங்கியும்
இருக்கும். மூச்சுக் காற்றில் வாடை அடிக்கும். இடது புற நாக்கின்
ஓரத்தில் அழுகியப் புண் போல் இருக்கும். (CANKER எனப்படும் சிபிலிஸ்
நோயினால்) இதனால் நாக்கு முழுவதும் புண்ணாகி இரணமாட்டமும் இருக்கும் பேச
முடியாது. இதனால் முட்டாள் ஆகிவிடுவார்கள். இந்த குறிகளுக்கு MALANDRINUM
30 1 வேளை கொடுத்தால் புண்ணு குணமாகி, முட்டாள் தனமும் குணமாகி விடும்
என்று H.S. TAYLOR கூறுகிறார். தொண்டையின் இடது புறம் இரணமாகவும்
வீங்கியும் காணப்படும். இடது டான்சில் வீங்கி இருக்கும். மஞ்சள் நிறமான
குழிப்புண் உடன் வெட்டி விட்டது நன்றாக தெரியும். பல நாட்கள் ஆனாலும்,
இந்த புண்கள் இருக்கும். இருக்கிப் பிடிப்பது போல, தானியம் உறுத்துவது
போல், வறட்சியாக இருப்பது போல் பல உணர்வுகளிலிருக்கும். எச்சிலைத்
துப்பிக் கொண்டேயிருப்பார்கள். இதனால் பைத்தியம் மாதிரி ஆகிவிடுவார்கள்.
தொண்டை வீங்கியிருக்கும். ஆனால் வலியிருக்காது. இடதுபுற டான்சில்
பெருத்து வேக்காடு அடைந்திருக்கும். தொண்டையில் எந்த நோய்குறிகளோ, வலியோ
ஏற்பட்டால் அது இடது புறம் ஆரம்பித்து, கடைசியில் வலது புறத்தில் முடியும்.
தொண்டை அல்சர் புண் மாதிரியும், இரணமாட்டமும் இருக்கும். இது மேலும்
பரவி குரல் வளை வரை செல்லும். தாகமே இருக்காது. தண்ணிக் குடித்தால்
குமட்டல் ஏற்படும்.
எவுறு வீங்கி அதில் அல்சர் புண் காணப்படும். பற்களின் பதிவுகள்
காணப்படும். தொட்டாலோ, பிரஸ்பட்டாலோ உடனே இரத்தம் வெளியேறும். ரொம்ப
திக்காக மரக்கலரில் தசைகளுடன் இரத்தமும், சீழும் வெளியேறும். இது அல்சர்
எற்பட்ட எவுரில் இருந்து வரும். பற்களில் ஊத்தையிருக்கும்.
சாப்பிட்டப் பிறகு குமட்டல், பித்த வாந்தி வரும். வெறும் வயிற்றில்
மயக்கம் எற்படும். வயிற்றில் இருக்கக்கூடிய எல்லா உறுப்பும் எங்கியோ போனது
போன்ற உணர்வு. நடுக்கல் இருக்கும். சாப்பிட்டால் குறைவு. சாப்பிட்டுக்
கொண்டே இருக்கவும் விரும்புவார்கள். தொப்புளைச் சுற்றிலும் வலி ஏற்படும்.
பேதி இரத்தமாக, மஞ்சள் நிறமாக, சளியாட்டம், லேசாக சீதம் கலந்த மாதிரியும்
பேதி ஏற்படும். ரொம்ப மாறி, மாறி வரும். அதுவும் காலை நேரங்களில் ரொம்ப
அதிகமான தொல்லைக் காணப்படும். பேதி காரமாகவும் வரும். குழந்தைகளாக
இருந்தால் கத்தும், தூங்காமல் இருபத்து நான்கு மணி நேரமும் தூக்கி வைத்துக்
கொள்ளச் சொல்லும் குழந்தைகள், மலம் கருப்பாகவும், லேசாகவும், செத்துப்
போன பொணம் மாதிரி பொண நாற்றம் அடிக்கும். காரமாக, மஞ்சள் நிறமாகவும்,
மிகவும் உணர்ச்சி வயப்படக்கூடிய அளவுக்கு பேதி வரும், அப்போது ஆஸன வாயும்,
மலக்குடலும் நெருப்பாட்டம் எரியும். கருப்பான மரக்கலரிலும், அழுக்கான,
நாற்றத்துடன் அடிக்கடி ஏற்படும் பேதி, அப்போது அடிவயிற்றில் வலி வரும்.
பேதி மரக் கலரில் வந்தால் வயிறு வலி இருக்காது. கருப்பு நிறமாக, அழுக்கு
பிடித்த, வாடையில் ஏற்படும் பேதி. உடன் குமட்டல், சோம்பேறித்தனமும்
ஏற்படும். கருப்பான அழுக்கு நாற்றமுடைய பேதி உடன் உடலில் ஏற்படும்.
அழுகைக்கும், அதிகமான களைப்பும் இருக்கும். குடல்களின் இயலாமையால் மலம்
கழிய விருப்பம் இருக்காது. எனிமா கொடுத்தப் பிறகு மலம் வெளியேறும்.
அப்போது மலக்குடலில் இரணமாட்டமும், நைவுக் காயம் மாதிரியும், ஒரு மணி
நேரத்திற்கு ஒரு முறை மலக்குடலில் இந்த உணர்வு ஏற்படும். இதனால் மலம்
கழிய பயம் ஏற்படும்.
நடக்கும் போது சிறுநீர்ப் பையில் அளவுக்கு அதிகமான உணர்ச்சி ஏற்படும்.
பித்தப் பையில் உறுத்தல் ஏற்பட்டவுடன் சிறுநீர் கழிய ஓடுவார்கள்.
எப்போதும் மானியை கையில் பிடித்திருக்கும் குழந்தைகள்.
பெண்களின் பிறப்புறுப்பின் உதடுகளில் முரடு தட்டி வீங்கி யோனியையே மூடிக்
கொள்ளும். பொருக்கல், மஞ்சள், இளஞ்சிவப்பு, கருப்பு, மரக்கலரில் பல நிறமாக
உதிறும்.
முதுகு :- முதுகின் உட்புறங்களில் வலி ஏற்படும். வலியானது அடிப்பது போல
இருக்கும். சேக்ரலின் உட்புறப் பகுதியில் வலி ஏற்படும். இடுப்பு பட்டை
எலும்பு, தோள்பட்டை எலும்பின் கீழ் பகுதியில் வலி இருக்கும். அதுவும் இடது
புறத்தில் தான் அதிக வலி வரும். (இந்த தொல்லைக்கு Dr. B. அவர்கள் 200 1
வேளை கொடுத்தால் போதும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.)
கைகளில்:- உள்ளங்கை மற்றும் விரல்களில் அழுத்தம் ஏற்படும். புஜங்களின்
முன் பகுதிகளில் உள்ள கெட்டிப் பகுதியில் கொப்பளங்கள் ஏற்படும்.
கால்கள் :- இரண்டுத் தொடைகளும் பூ இதழ்கள் உறையர மாதிரி இருக்குது. கால்
மூட்டுள் பெருத்து விடுதல், கணுக்காலில் அசதி, ஒரு அடிக்கூட எடுத்து வைக்க
முடியாத அளவுக்கு பாரமாகி விடுதல். பாதத்தில் அதிகமான வியர்வை வரும்.
அழுகிற பொணம் மாதிரி நாற்றம் வரும். நடக்கும் போது பாதத்தின் மேல் பகுதி
எலும்புகளில் இரணமாட்டம் வலி. உள்ளங்காலில் நிறைய வியர்வை வரும். தோலும்,
உரியும், நெருப்பாட்டமிருக்கும். பாதத்தில் ஏற்படும் காக்கா
கொப்பளங்களுக்கு இது நல்ல மருந்து. செருப்புக் கூட போட முடியாது. கொஞ்ச
தூரம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. பாதத்தில் ஆழமான புண் எற்பட்டு
நெருப்பாட்டம், இரணமாட்டம் வலி அதன் மீது பச்சத்தண்ணீர் ஊற்றினால் சுகம்.
எல்லா மூட்டுகளும், இரணமாகி விடும். எல்லா விரல்களிலும், கைகளிலும், கால்
பாதங்களிலும் இரணமாட்டம் வலி ஏற்பட்டு அந்த உறுப்புகளைச் சுற்றி பரவும்.
தோல்:- முகம், மண்டைத் தோல்களில் கரப்பான் படை ஏற்படும். அதில்
எரிச்சல், கொட்டுவது போன்ற வலி, அரிப்பு எற்படும். புஜப்பகுதிகளில்
புறப்பாடுகள் தோன்றும். அம்மைத் தடுப்பு மருந்து கொடுத்தப் பின்பு
சருமத்தில் வறட்சி, சொர, சொரப்பு மற்றும் அழகற்ற (தோல்கள்) சருமம் வருடக்
கணக்கில் இருக்கும். இந்த குறிக்கு இது நல்ல மருந்து. வறட்சியான, சொர,
சொரப்பான உள்ளங்காலில் கெட்டித் தன்மையும், குளிர்ச்சியில் தொல்லை
அதிகமாகும். ஏதாவது சோப்பு போட்டு (கை, கால்களை ) கழுவினாலும், தொல்லை
ஏற்படும். எண்ணெய் வடியும் சருமம், சருமத்தில் தோன்றும் புறப்பாடுகள்
மற்றும் தலைமுடி எண்ணெய் பசையுடன் காணப்படும். கொப்பளங்கள் கொஞ்சம்,
கொஞ்சமாக வரும். ஆனால் விரைவில் (ஆறவே ஆறாது.) குணமாகாது. அப்படி
குணமானாலும், வேறு புண்கள் ஏற்பட்டு விடும். கை, புஜம் மற்றும் கால்
மூட்டில் புறப்பாடுகள் தோன்றும். சொறிந்தால் அதிலிருந்து சிவப்பு
நிறங்களில் பொருக்கல் வரும். வெது, வெதுப்பு பட்டால் பிப்பு அதிகமாகும்.
தூக்கத்தில் ஓய்வற்று அப்படி இப்படி என பெரண்டு, பெரண்டு படுப்பார்கள்.
சண்டைப் போடுவது போல் கனவுகள் வருவதால் தொல்லையாக இருக்கும். அம்மைத்
தடுப்பூசி போட்டப் பிறகு தான் அதிக கெடுதியான தொல்லைகள் ஏற்படும். ஆனால்
அம்மைத் தடுப்பூசி போட்டுக் கொண்டேயிருந்தால் நல்லாயிருக்கும். பல வகையான
சரும நோயாளிகளுக்கு இது பயன்படும். அம்மைத் தடுப்பூசிக்குப் பிறகு
ஏற்படும் தொல்லைகளுக்கும் இது நல்ல மருந்து. உடம்பின் கீழ் பகுதியில் பாதி
பகுதி கெட்டுவிடும். அதில் சீழ் கொப்பளங்கள் வந்து வெடித்து பரவி
அதிலிருந்து மீண்டும் கொப்புளம் வரும். குறைந்த அளவு நாடித்துடிப்பு.
ஏதாவது சரும நோய் தோன்றிக் கொண்டேதான் இருக்கும் என்று பர்னட் அவர்கள்
கூறுகிறார். பெரியம்மை, சின்னம்மை என அம்மைகள் அடிக்கடி தோன்றினால் கூட
இது மாதிரி சருமத் தொல்லைகள் ஏற்படும். அப்போது கூட இது மாதிரி சருமத்த
தொல்லைகள் ஏற்படும். அப்போது உடம்பு ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும் என
(கிளர்க்) CLARK கூறுகிறார். கரப்பான் படையில் இருந்து சீழ் வடியுது,
அதில் எரிச்சல் உட்புறமாக ஏற்படுவதும், அதிகமான வாடையும் அடிக்கும்.
இரவில் குளிக்கும் போது பொருக்கல் அதிகமாக வரும். குளிர்காற்றுப் பட்டால்
சுகமாக இருக்கும் என்று THOMPSON கூறுகிறார். மற்றும் தலை, முதுகுப்
பகுதியில் புறப்பாடுகள் தோன்றி அது பெட்டெக்ஸ் வரைப் பரவும். மேலும் யோனி
வரை கூட பரவும். பரவி யோனி உதடுகளில் புறப்பாடு ஏற்பட்டு அதிக தொல்லைகளை
ஏற்படுத்தும். புறப்பாடு கை வரை கூட பரவும். கம்பு அளவு சிறு, சிறு
(அக்கி) கொப்பளங்கள் வரும். இதை குணப்படுத்த முடியலைங்க ரொம்ப நாளாக
அப்படியே இருக்குது என்பார்கள். அம்மையின் அழுக்குதான் இதற்கு காரணம்.
அது சிறிய அளவு இருந்தால் கூட தொல்லைகளைத் தரும். கால் பகுதியில் சிவப்பு
நிறமாக காட்டும். காட்டாமல் உட்புறத்தில் இருந்துக் கொண்டுக் கூட தீங்கு
செய்யலாம். எனவே பெரியம்மை ஏற்பட்டிருந்தாலோ, அதுக்கு ஊசி போட்டு
அமுக்கியிருந்தால் அதன் பிறகு ஏற்படும் அனைத்து தொல்லைகளுக்கும் இதுவே
மருந்து
- மாலான்டியம்
கிரேக்க நாட்டின் குதிரையிலிருந்து எடுக்கப்பட்டவை.
மனநிலை குழப்பமாகவும், களைப்பாக இருக்கும். மூளை பலஹீனம் என்பார்.
மனசுக்கு வேலை அதிகமாக இருந்தால், படபடப்பு, மனதை ஒரு நிலை படுத்த முடியலை
என்பார்கள். புதிய வேலையை செய்ய முடியாது. எனக்கு தெரியாது என்று
கூறிவிடுவார்கள். தினமும் செய்ய முடியாது, எனக்கு தெரியாது என்று
கூறிவிடுவார்கள். தினமும் செய்யக்கூடிய சாதாரண வேலையை கூட செய்ய முடியலை
என்பார்கள். பல விதமான பலஹுனம் இருக்குதுனு சொல்வார்கள். ஞாபகமே வைத்துக்
கொள்ள முடியாது, மூளை ரொம்ப பலஹுனமுடையவர்கள். இதனால் எதைப் படித்தாலும்
வேற மாதிரியாக தெரியும். இடது புறத்திலிருந்து, வலது புறத்திற்கு சுளிர்,
சுளிர் என வலி பரவும், இதனால் குழப்பமாயிடுது ஒண்ணுமே முடியலை, மனக்
கஷ்டம் ஏற்படுது, களைப்புத் தட்டிப் போயிடுது. யோசனை செய்ய முடியலை
எண்ணம் அலைபாயுது, மூளை செத்த மாதிரி இருக்குது அதனால் யோசிக்க முடியலை
என்று இவ்வளவு கஷ்டத்தையும் கூறுவார்கள். பித்துப் பிடித்த மாதிரி களப்பை
பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.
தலை் தலையில் கொப்பளங்கள் தொப்பி போட்டது போல ஏற்பட்டு வெடித்து,
வெடித்து வரும். இந்த தொல்லையின் போது காலையில் எழும் போது தலை
உருண்டையாட்டமும், அரிசி போல ஆவது போல் உணர்விருக்கும். தலையில் நிறைய
பொடுகு வரும். நான்கு வாரத்துக்கு ஒரு முறை தலையில் சீழ் கொப்பளம் வரும்.
கழுத்தைச் சுற்றியிலும் குருணை, குருணையாக இருக்கும் அது கழுத்தைச்
சுற்றியிலும் பரவி காது வரை வரும். புண்ணில் ஏற்படும் பொருக்கல் (பொக்கு)
கெட்டியாக நீல நிறமாகவும், வெள்ளையாகவும், சிவப்பாகவும், செதில்,
செதிலாகவும்;, உரியும், உடன் பிப்பும் இருக்கும். இது மாலை நேரங்களில்
காணப்படும். பொருக்கல் காதைச் சுற்றிலும் வெள்ளை, சிவப்பு நிறங்களில்
உறியும். முதுகு யோனிப் பகுதியிலும் பொருக்கல் வரும். முன், பின் தலைகளில்
வலி ஏற்படும். பலவகையான வலிகளும், ஜில்லிப்பும் இருக்கும். சாப்பிடும் போது
பித்த வாந்தி உடன் முன் தலை வலி, களைப்பும் இருக்கும். நடு மண்டையில்
புரு, புருனு ஊருவது போல இருக்கும், இது முதுகு வரை பரவும். எலும்பில்
பயங்கரமான வலி இருக்கும். உடன் ஜில்லிப்பு, பித்த வாந்தி இருக்கும்.
பேதியின் நிறையத் தொல்லைகள் ஏற்படும். தலை ரொம்ப பாரமாக இருக்கும்.
தலைவலியும், முதுகு வலியும், கழுத்து நரம்பு பிடிப்பு, பசியே இருக்காது.
மலச்சிக்கல், ரொம்ப அசதியும் இருக்கும். இந்த தொல்லை எல்லாம் அம்மை
தடுப்பூசி போட்ட பிறகு தான் என்பார்கள். நெற்றியில் புறப்பாடுகள்
தோன்றும். உடன் அரிப்பிருக்கும். முகத்தில் நிறைய படைகள் தோன்றும். அதிக
கொப்பளம் ஏற்பட்டு அதனின் உள் பகுதியில் அரிப்பு ஏற்படும். அதிலிருந்து
பிசின் மாதிரி, தேன் மாதிரி மஞ்சள் நிறமாக வரும். மேல் உதட்டிலும் மஞ்சள்
நிறத்தில் தேன் மாதிரி வரும்.
காதில் பச்சையில் கலந்த மஞ்சள் நிறத்தில் சீழ் வெளியேறும்.
மேலும் இரத்தமும் கலந்து வரும். நாக்கின் மேல் மஞ்சள் நிற படிவு
காணப்படும். ஆதலால் நடுவில் சிவப்பு நிறத்தில் கோடு கிழித்தது போல
இருக்கும். மேலும் நடு நாக்கில் பெரிய பிளவை இருக்கும். வீங்கியும்
இருக்கும். மூச்சுக் காற்றில் வாடை அடிக்கும். இடது புற நாக்கின்
ஓரத்தில் அழுகியப் புண் போல் இருக்கும். (CANKER எனப்படும் சிபிலிஸ்
நோயினால்) இதனால் நாக்கு முழுவதும் புண்ணாகி இரணமாட்டமும் இருக்கும் பேச
முடியாது. இதனால் முட்டாள் ஆகிவிடுவார்கள். இந்த குறிகளுக்கு MALANDRINUM
30 1 வேளை கொடுத்தால் புண்ணு குணமாகி, முட்டாள் தனமும் குணமாகி விடும்
என்று H.S. TAYLOR கூறுகிறார். தொண்டையின் இடது புறம் இரணமாகவும்
வீங்கியும் காணப்படும். இடது டான்சில் வீங்கி இருக்கும். மஞ்சள் நிறமான
குழிப்புண் உடன் வெட்டி விட்டது நன்றாக தெரியும். பல நாட்கள் ஆனாலும்,
இந்த புண்கள் இருக்கும். இருக்கிப் பிடிப்பது போல, தானியம் உறுத்துவது
போல், வறட்சியாக இருப்பது போல் பல உணர்வுகளிலிருக்கும். எச்சிலைத்
துப்பிக் கொண்டேயிருப்பார்கள். இதனால் பைத்தியம் மாதிரி ஆகிவிடுவார்கள்.
தொண்டை வீங்கியிருக்கும். ஆனால் வலியிருக்காது. இடதுபுற டான்சில்
பெருத்து வேக்காடு அடைந்திருக்கும். தொண்டையில் எந்த நோய்குறிகளோ, வலியோ
ஏற்பட்டால் அது இடது புறம் ஆரம்பித்து, கடைசியில் வலது புறத்தில் முடியும்.
தொண்டை அல்சர் புண் மாதிரியும், இரணமாட்டமும் இருக்கும். இது மேலும்
பரவி குரல் வளை வரை செல்லும். தாகமே இருக்காது. தண்ணிக் குடித்தால்
குமட்டல் ஏற்படும்.
எவுறு வீங்கி அதில் அல்சர் புண் காணப்படும். பற்களின் பதிவுகள்
காணப்படும். தொட்டாலோ, பிரஸ்பட்டாலோ உடனே இரத்தம் வெளியேறும். ரொம்ப
திக்காக மரக்கலரில் தசைகளுடன் இரத்தமும், சீழும் வெளியேறும். இது அல்சர்
எற்பட்ட எவுரில் இருந்து வரும். பற்களில் ஊத்தையிருக்கும்.
சாப்பிட்டப் பிறகு குமட்டல், பித்த வாந்தி வரும். வெறும் வயிற்றில்
மயக்கம் எற்படும். வயிற்றில் இருக்கக்கூடிய எல்லா உறுப்பும் எங்கியோ போனது
போன்ற உணர்வு. நடுக்கல் இருக்கும். சாப்பிட்டால் குறைவு. சாப்பிட்டுக்
கொண்டே இருக்கவும் விரும்புவார்கள். தொப்புளைச் சுற்றிலும் வலி ஏற்படும்.
பேதி இரத்தமாக, மஞ்சள் நிறமாக, சளியாட்டம், லேசாக சீதம் கலந்த மாதிரியும்
பேதி ஏற்படும். ரொம்ப மாறி, மாறி வரும். அதுவும் காலை நேரங்களில் ரொம்ப
அதிகமான தொல்லைக் காணப்படும். பேதி காரமாகவும் வரும். குழந்தைகளாக
இருந்தால் கத்தும், தூங்காமல் இருபத்து நான்கு மணி நேரமும் தூக்கி வைத்துக்
கொள்ளச் சொல்லும் குழந்தைகள், மலம் கருப்பாகவும், லேசாகவும், செத்துப்
போன பொணம் மாதிரி பொண நாற்றம் அடிக்கும். காரமாக, மஞ்சள் நிறமாகவும்,
மிகவும் உணர்ச்சி வயப்படக்கூடிய அளவுக்கு பேதி வரும், அப்போது ஆஸன வாயும்,
மலக்குடலும் நெருப்பாட்டம் எரியும். கருப்பான மரக்கலரிலும், அழுக்கான,
நாற்றத்துடன் அடிக்கடி ஏற்படும் பேதி, அப்போது அடிவயிற்றில் வலி வரும்.
பேதி மரக் கலரில் வந்தால் வயிறு வலி இருக்காது. கருப்பு நிறமாக, அழுக்கு
பிடித்த, வாடையில் ஏற்படும் பேதி. உடன் குமட்டல், சோம்பேறித்தனமும்
ஏற்படும். கருப்பான அழுக்கு நாற்றமுடைய பேதி உடன் உடலில் ஏற்படும்.
அழுகைக்கும், அதிகமான களைப்பும் இருக்கும். குடல்களின் இயலாமையால் மலம்
கழிய விருப்பம் இருக்காது. எனிமா கொடுத்தப் பிறகு மலம் வெளியேறும்.
அப்போது மலக்குடலில் இரணமாட்டமும், நைவுக் காயம் மாதிரியும், ஒரு மணி
நேரத்திற்கு ஒரு முறை மலக்குடலில் இந்த உணர்வு ஏற்படும். இதனால் மலம்
கழிய பயம் ஏற்படும்.
நடக்கும் போது சிறுநீர்ப் பையில் அளவுக்கு அதிகமான உணர்ச்சி ஏற்படும்.
பித்தப் பையில் உறுத்தல் ஏற்பட்டவுடன் சிறுநீர் கழிய ஓடுவார்கள்.
எப்போதும் மானியை கையில் பிடித்திருக்கும் குழந்தைகள்.
பெண்களின் பிறப்புறுப்பின் உதடுகளில் முரடு தட்டி வீங்கி யோனியையே மூடிக்
கொள்ளும். பொருக்கல், மஞ்சள், இளஞ்சிவப்பு, கருப்பு, மரக்கலரில் பல நிறமாக
உதிறும்.
முதுகு :- முதுகின் உட்புறங்களில் வலி ஏற்படும். வலியானது அடிப்பது போல
இருக்கும். சேக்ரலின் உட்புறப் பகுதியில் வலி ஏற்படும். இடுப்பு பட்டை
எலும்பு, தோள்பட்டை எலும்பின் கீழ் பகுதியில் வலி இருக்கும். அதுவும் இடது
புறத்தில் தான் அதிக வலி வரும். (இந்த தொல்லைக்கு Dr. B. அவர்கள் 200 1
வேளை கொடுத்தால் போதும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.)
கைகளில்:- உள்ளங்கை மற்றும் விரல்களில் அழுத்தம் ஏற்படும். புஜங்களின்
முன் பகுதிகளில் உள்ள கெட்டிப் பகுதியில் கொப்பளங்கள் ஏற்படும்.
கால்கள் :- இரண்டுத் தொடைகளும் பூ இதழ்கள் உறையர மாதிரி இருக்குது. கால்
மூட்டுள் பெருத்து விடுதல், கணுக்காலில் அசதி, ஒரு அடிக்கூட எடுத்து வைக்க
முடியாத அளவுக்கு பாரமாகி விடுதல். பாதத்தில் அதிகமான வியர்வை வரும்.
அழுகிற பொணம் மாதிரி நாற்றம் வரும். நடக்கும் போது பாதத்தின் மேல் பகுதி
எலும்புகளில் இரணமாட்டம் வலி. உள்ளங்காலில் நிறைய வியர்வை வரும். தோலும்,
உரியும், நெருப்பாட்டமிருக்கும். பாதத்தில் ஏற்படும் காக்கா
கொப்பளங்களுக்கு இது நல்ல மருந்து. செருப்புக் கூட போட முடியாது. கொஞ்ச
தூரம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. பாதத்தில் ஆழமான புண் எற்பட்டு
நெருப்பாட்டம், இரணமாட்டம் வலி அதன் மீது பச்சத்தண்ணீர் ஊற்றினால் சுகம்.
எல்லா மூட்டுகளும், இரணமாகி விடும். எல்லா விரல்களிலும், கைகளிலும், கால்
பாதங்களிலும் இரணமாட்டம் வலி ஏற்பட்டு அந்த உறுப்புகளைச் சுற்றி பரவும்.
தோல்:- முகம், மண்டைத் தோல்களில் கரப்பான் படை ஏற்படும். அதில்
எரிச்சல், கொட்டுவது போன்ற வலி, அரிப்பு எற்படும். புஜப்பகுதிகளில்
புறப்பாடுகள் தோன்றும். அம்மைத் தடுப்பு மருந்து கொடுத்தப் பின்பு
சருமத்தில் வறட்சி, சொர, சொரப்பு மற்றும் அழகற்ற (தோல்கள்) சருமம் வருடக்
கணக்கில் இருக்கும். இந்த குறிக்கு இது நல்ல மருந்து. வறட்சியான, சொர,
சொரப்பான உள்ளங்காலில் கெட்டித் தன்மையும், குளிர்ச்சியில் தொல்லை
அதிகமாகும். ஏதாவது சோப்பு போட்டு (கை, கால்களை ) கழுவினாலும், தொல்லை
ஏற்படும். எண்ணெய் வடியும் சருமம், சருமத்தில் தோன்றும் புறப்பாடுகள்
மற்றும் தலைமுடி எண்ணெய் பசையுடன் காணப்படும். கொப்பளங்கள் கொஞ்சம்,
கொஞ்சமாக வரும். ஆனால் விரைவில் (ஆறவே ஆறாது.) குணமாகாது. அப்படி
குணமானாலும், வேறு புண்கள் ஏற்பட்டு விடும். கை, புஜம் மற்றும் கால்
மூட்டில் புறப்பாடுகள் தோன்றும். சொறிந்தால் அதிலிருந்து சிவப்பு
நிறங்களில் பொருக்கல் வரும். வெது, வெதுப்பு பட்டால் பிப்பு அதிகமாகும்.
தூக்கத்தில் ஓய்வற்று அப்படி இப்படி என பெரண்டு, பெரண்டு படுப்பார்கள்.
சண்டைப் போடுவது போல் கனவுகள் வருவதால் தொல்லையாக இருக்கும். அம்மைத்
தடுப்பூசி போட்டப் பிறகு தான் அதிக கெடுதியான தொல்லைகள் ஏற்படும். ஆனால்
அம்மைத் தடுப்பூசி போட்டுக் கொண்டேயிருந்தால் நல்லாயிருக்கும். பல வகையான
சரும நோயாளிகளுக்கு இது பயன்படும். அம்மைத் தடுப்பூசிக்குப் பிறகு
ஏற்படும் தொல்லைகளுக்கும் இது நல்ல மருந்து. உடம்பின் கீழ் பகுதியில் பாதி
பகுதி கெட்டுவிடும். அதில் சீழ் கொப்பளங்கள் வந்து வெடித்து பரவி
அதிலிருந்து மீண்டும் கொப்புளம் வரும். குறைந்த அளவு நாடித்துடிப்பு.
ஏதாவது சரும நோய் தோன்றிக் கொண்டேதான் இருக்கும் என்று பர்னட் அவர்கள்
கூறுகிறார். பெரியம்மை, சின்னம்மை என அம்மைகள் அடிக்கடி தோன்றினால் கூட
இது மாதிரி சருமத் தொல்லைகள் ஏற்படும். அப்போது கூட இது மாதிரி சருமத்த
தொல்லைகள் ஏற்படும். அப்போது உடம்பு ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும் என
(கிளர்க்) CLARK கூறுகிறார். கரப்பான் படையில் இருந்து சீழ் வடியுது,
அதில் எரிச்சல் உட்புறமாக ஏற்படுவதும், அதிகமான வாடையும் அடிக்கும்.
இரவில் குளிக்கும் போது பொருக்கல் அதிகமாக வரும். குளிர்காற்றுப் பட்டால்
சுகமாக இருக்கும் என்று THOMPSON கூறுகிறார். மற்றும் தலை, முதுகுப்
பகுதியில் புறப்பாடுகள் தோன்றி அது பெட்டெக்ஸ் வரைப் பரவும். மேலும் யோனி
வரை கூட பரவும். பரவி யோனி உதடுகளில் புறப்பாடு ஏற்பட்டு அதிக தொல்லைகளை
ஏற்படுத்தும். புறப்பாடு கை வரை கூட பரவும். கம்பு அளவு சிறு, சிறு
(அக்கி) கொப்பளங்கள் வரும். இதை குணப்படுத்த முடியலைங்க ரொம்ப நாளாக
அப்படியே இருக்குது என்பார்கள். அம்மையின் அழுக்குதான் இதற்கு காரணம்.
அது சிறிய அளவு இருந்தால் கூட தொல்லைகளைத் தரும். கால் பகுதியில் சிவப்பு
நிறமாக காட்டும். காட்டாமல் உட்புறத்தில் இருந்துக் கொண்டுக் கூட தீங்கு
செய்யலாம். எனவே பெரியம்மை ஏற்பட்டிருந்தாலோ, அதுக்கு ஊசி போட்டு
அமுக்கியிருந்தால் அதன் பிறகு ஏற்படும் அனைத்து தொல்லைகளுக்கும் இதுவே
மருந்து
ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|