ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    புகை பிடிக்கும் பழக்க பற்றி

    Go down

    புகை பிடிக்கும் பழக்க பற்றி Empty புகை பிடிக்கும் பழக்க பற்றி

    Post by Admin Wed 24 Nov 2010, 5:31 pm

    ஒரு நல்ல உடல் நலமுள்ளவரின் இரத்தச் சிகப்பணுக்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயுவை 96 சதவிகிதம் உடலெங்கும் கொண்டு செல்லும் திறன் கொண்டவை. ஆனால் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளோருக்கு அத்திறன் 88 சதவீதமாகக் குறைந்து விடுகிறது என்று இதன் விளைவாக புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கு ஐந்தரை நிமிடம் வீதம் குறைந்து வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
    புகைக்கும் புண்ணியவான்கள் தாங்கள் உண்டு உமிழ்ந்த நச்சுப் புகையால் பிறர் சுவாசிக்கும் காற்றிலும் மாசு ஏற்படுத்திக் கேடு செய்து அவர்கள் நலனையும் கெடுக்கிறார்கள். தங்கள் உடலைக் கெடுத்துக் கொள்வதுடன் தம்மருகில் உள்ளோரையும் புகை பாதிக்குமே என்ற மனசாட்சி இல்லாத இவர்கள் வெகு காலமாக சவப்பெட்டி ஆணிகளை தங்கள் கைகளிலும் உதடுகளிலும் மாறி மாறி வைத்துக் கொண்டு ஊதித் தள்ளுகிறார்கள்.உண்ண உணவில்லாமல் சில வாரங்களும் குடிக்கத் தண்ணீரின்றி சில நாள்களும் உயிர் வாழ முடியும் ஆனால் சுவாசிக்கக் காற்று இல்லாவிட்டால் சில நிமிடங்களுக்கு மேல் நம்மால் உயிர் வாழ முடியாது என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.கடவுளின் வரப்பிரசாதமான தூயகாற்றை காசு கொடுத்து மாசுபடுத்தும் புகை பிடிப்போருக்கு எந்தத் தண்டனை கொடுத்தாலும் தகும்.
    குடலைப் புரட்டும் நாற்றம் கொண்ட, காண அருவருப்பான புகைப்பழக்கத்தால் உள்ளுரப்புகள் அனைத்தும் நிதானமாக, ஆனால் நிச்சயமாகக் கேடடைகின்றன. அதிகமாகப் புகைப்பிடிப்பவனின் உடலில் நீர்வாழ் இனமான அட்டையை ஒட்டிக் கொள்ளச் செய்தால் அது அவனின் ரத்தத்தை உறிஞ்சி விஷமேறி விரைவில் இறந்துவிடும். நமது மூளை உணர்ச்சி மிக்க உறுப்பு ஆனால் சிகரெட் புகையோ அதன் எண்ணற்ற கண்ணறைகளைப் பாழாக்கி விடுகிறது. சிகரெட்டிலுள்ள பார்ப்ரால் என்ற நஞ்சினால் மூளை நலிவடைவதால். பல்வேறு கேடுகளுடன் நியாய உணர்வு குன்றி குற்றம் புரியக் கூடிய சூழ்நிலை உருவாகின்றது.

    நுரையீரல் புற்றுநோயால் இறப்பவர்களில் 90 சதவீதம் பேர் சிகரெட். பீடி புகைப்பவர்கள். மூச்சுக் குழாய் அழற்சியின் முக்கால் பங்குக்கும் இதயக் கோளாறுகளில் கால் பங்குக்கும் சிகரெட்தான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
    சிகரெட் புகையிலுள்ள நிக்கோட்டினும் காட்மியமும் இணைந்து மனித விந்து உயிரணுக்களிலிருக்கும் குரோமோஸோம்களை அழிக்கின்றன. இதன் காரணமாக மலட்டுத் தன்மை ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது.
    சிகரெட், புகையிலை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் நாள்தோறும் 2200 பேர் இறப்பதாக இந்திய இருதயநலக் கழகத்தின் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. விமானப்படை வீரர்கள் இரவு நேரத்தில் பறக்கும் போது ஒரு சிகரெட்டைப் புகைத்தாலும் அவர்களது பார்வைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவேதான் அவர்கள் விமானம் ஓட்டுவதற்கு முன் சிகரெட் குடிக்க அனுமதிப்பதில்லை.
    8000 அடி உயிரத்தில் நமக்கு ஏற்படும் பார்வை இழப்பிற்கு சமமான அளவு 3 சிகரெட்டுகளின் புகையை உள்ளிழுத்தால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். வடிகட்டி மூலம் நச்சுத் தன்மைகள் நீக்கப்பட்டு விடுவதால் வடிகட்டி பொருத்தப்பட்ட சிகரெட்டைப் புகைப்பதனால் தீமை ஏதுமில்லை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் வடிகட்டிய பின்பும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமாகக் கிடைத்து வந்த போதையின் அளவு சிறிதும் குறையாமலிருக்க முன்பை விட அதிக அளவில் அந்த நஞ்சுகள் அவ்வித சிகரெட்களில் கலக்கப்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது.
    சிகரெட்டினால் விளையும் தீமைகளை எடுத்துக் கூறிச் சிறுவர்களை நல்வழிப்படுத்தலாம் என்று முயலும் போது அவர்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவர்கள் திரைப்பட நடிகர்கள் ஆசிரியர்கள் போன்றோரே அச்சிறுவர்கள் முன்னிலையில் புகை பிடிக்கிறார்கள்.
    புகை பிடிப்பதால் ஆபத்து நேரலாம் என்பதை நன்கறிந்த எல்லாருக்கும் அறிவுறுத்த வேண்டிய மருத்துவர்களே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவதில்லை.
    சமுதாயத்தைக் குறைகூறுவதைவிட நாம் இந்த வகை நஞ்சுக் கேட்டைக்களைவது எப்படி என்று சொல்லித் தரவேண்டும். இப்பழக்கம் ஏற்படுவதால் விளையக்கூடிய தீமைகளை எடுத்துச் சொல்லிக் கண்டிக்க வேண்டும்.குறிப்பாக பலரும் கூடும் கூட்டங்களில் திரைப்பட அரங்குகள் பொது இடங்களில் கண்டிப்பாக புகைப்பிடிக்கக் கூடாது என்று எழுதுவதும் மட்டுமல்ல. கடைப்பிடிக்கவும் செய்ய வேண்டும். மீறுபவர்களைக் கண்டிப்பாகத் தண்டிக்க வேண்டும்.புகைப்பவர்களின் முகத்தில் கரிபூசி அவமானப்படுத்த வேண்டும். அதையும் மீறி புகைப்பழக்கம் தொடர்ந்தால் அவர்களது உதடுகளை வெட்டி விடவேண்டும் - இது அரண்மனையிலிருந்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை விரட்டியடிக்க மன்னர் ஜஹாங்கீர் கொண்டு வந்த சட்டமாகும்.
    புகைப்பவர்களுக்கு உணவு விடுதிகளில் உணவளிக்கக் கூடாது என்று சுவிட்சர்லாந்து நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பர்களை நாடு கடத்த வேண்டும் என்று கூட சட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்தது.பிரபல அமெரிக்க நீக்ரோ விஞ்ஞானியான பகர் ஓர் உண்மையை சற்றுக் கேலியாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.
    மனிதன் மூக்கு ஒரு புகைப்போக்கியாகப் பயன்பட வேண்டுமென்று இறைவன் கருதியிருந்தால் நம்முடைய நாதித் துவாரங்களை மேல் நோக்கி அல்லவா படைத்திருப்பான் ?
    ஒரு கொசுவே புகை இருக்கும் இடத்தை விட்டு அகன்று புகைபோய் விட்டதை உறுதி செய்து கொண்ட பிறகே வந்து நம்மைக் கடிக்கிறது. இப்படியிருக்கையில் நாம் ஏன் காசு கொடுத்து வாங்கிப் புகையை ஊதி வாழ்க்கையை வறண்ட பாலைவனமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றிச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum