ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    அழுகணி சித்தர் பாடல் -நூல்

    Go down

    அழுகணி சித்தர் பாடல் -நூல்  Empty அழுகணி சித்தர் பாடல் -நூல்

    Post by Admin Wed 21 Sep 2011, 12:27 pm







    அழுகணி சித்தர் பாடல் -நூல்




    [You must be registered and logged in to see this image.]

    அழுகணி சித்தர் பாடல் -நூல்

    பதினெண் சித்தர்களில் அழுகணி சித்தர் பாடல்களும் மிக பொருள் பொதிந்தவை ..
    தனலட்சுமி பதித்தகர் வெளிவிட்டுள்ள இந்த நூல் ..மிக எளிதான அருமையான பாடல்கள் நிறைந்தவை ..



    உதாரணத்திற்கு ..

    [You must be registered and logged in to see this image.]

    மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
    கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
    பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
    மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!




    விளையாட்டைப் பாரேனோ!



    எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி

    பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு

    அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து

    நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!

    நிலைகடந்து வாடுறண்டி!



    முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே

    பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி

    அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே

    குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா!

    கோலமிட்டுப் பாரேனோ!



    சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!

    உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து

    முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்

    தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!

    தின்றுகளைப் பாரேனோ!



    பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்

    செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி

    அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே

    கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!

    கண்குளிரப் பாரேனோ!



    எட்டாப் புரவியடி யீராறு காலடியோ

    விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்

    கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி

    அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!

    ஆண்டிருந்தா லாகாதோ!



    கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு

    நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை

    நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்

    கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!

    குடியோடிப் போகானோ!



    ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி

    மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை

    மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்

    ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!

    உன்பாதஞ் சேரேனோ!



    வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்

    தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி

    தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ

    வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!

    வாழ்வெனக்கு வாராதோ!



    பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து

    மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,

    மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்

    பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!

    பாழாய் முடியாவோ!



    மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்

    காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி

    மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்

    காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!

    கண்விழிக்க வேகாவோ!



    அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி

    மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்

    சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே

    வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!

    மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ!



    காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே

    நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ

    நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்

    காட்டானை மேலேறி என் கண்ணம்மா!

    கண்குளிரக் காண்பேனோ!



    உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்

    மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்

    கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே

    வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!

    வகைமோச மானேண்டி!



    மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி

    நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி

    நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே

    மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா

    முழுதும் தவிக்கிறண்டி!



    காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி

    பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை

    பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்

    காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!

    கண்ணெதிரே நில்லாவோ!





    தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி

    வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்

    வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ

    தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!

    சாகிறண்டி சாகாமல்!



    பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்

    உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை

    உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்

    பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!

    பாசியது வேறாமோ!



    கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே

    உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்

    உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே

    சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!

    துணையிழந்து நின்றதென்ன ?



    கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்

    உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு

    உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்

    கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!

    காரணங்கள் மெத்தவுண்டே!



    சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து

    மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்

    பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே

    இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!

    இவ்வேட மானேண்டி!



    பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து

    வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்

    செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்

    தந்த மருந்தாலே என் கண்ணம்மா!

    தணலாக வேகுறண்டி!



    கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்

    பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி

    பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்

    கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!

    கடுகளவு காணாதோ!



    பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்

    விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி

    விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்

    பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா

    படைமன்னர் மாண்டதென்ன ?



    ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்

    சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்

    வேகாத காலறியேன் விதிமோச மானேனடி

    நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!

    நொடியில்மெழு கானேனடி!



    தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே

    மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி

    மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்

    தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா

    தந்தையரு மொப்பாமோ ?



    அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி

    நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்

    கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே

    அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா

    ஆண்டிருந்தா லாகாதோ!



    உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்

    தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி

    தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்

    உன்னை மறக்காமல் என் கண்னம்மா

    ஒத்திருந்து வாழேனோ ?



    காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி

    மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே

    ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே

    மாயச் சுருளோலை என் கண்ணம்மா

    மடிமேல் விழுந்ததென்ன ?



    சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து

    உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்

    உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்

    சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!


    சிலையுங் குலையாதோ!



    புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்

    பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி

    பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்

    புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா



    பொருளெனக்குத் தாராயோ ?



    வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்

    குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே

    குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக

    வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா

    விழித்துவெளி காட்டாயோ!



    ஐங்கரனைத் தொண்ட னிட்டேன் - ஆத்தாடி

    அருளடைய வேணுமென்று

    தாங்காமல் வந்தொருவன் - ஆத்தாடி

    தற்சொரூபங் காட்டி யென்னை



    கொள்ள பிறப்பறுக்க - ஆத்தாடி

    கொண்டான் குருவாகி

    கள்களப் புலனறுக்க - ஆத்தாடி

    காரணமாய் வந்தாண்டி.



    ஆதாரம் ஆறினையும் - ஆத்தாடி

    ஐம்பத்தோர் அக்கரமும்

    சூதான கோட்டையெல்லாம் - ஆத்தாடி

    சுட்டான் துரிசறவே.





    வாகாதி ஐவரையும் - ஆத்தாடி

    மாண்டுவிழக் கண்டேண்டி

    தத்துவங்க ளெல்லாம் - ஆத்தாடி

    தலைகெட்டு வெந்ததடி.



    மஞ்சன நீராட்டி - ஆத்தாடி

    மலர்பறித்துத் தூவாமல்

    நெஞ்சு வெறும்பாழாய் - ஆத்தாடி

    நின்றநிலை காணேண்டி.



    பாடிப் படித்து - ஆத்தாடி

    பன்மலர்கள் சாத்தாமல்

    ஓடித் திரியாமல் - ஆத்தாடி

    உருக்கெட்டு விட்டேண்டி.



    மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி

    மருவி யிருந்தாண்டி

    பேணித் தொழுமடியார் - ஆத்தாடி

    பேசாப் பெருமையன் காண்.



    புத்தி கலங்கியடி - ஆத்தாடி

    போந்தேன் பொரிவழியே

    பதித்தறியாமல் - ஆத்தாடி

    பாழியில் கவிழ்ந்தேனே.



    தோற்றம் மொடுக்கம் இல்லா - ஆத்தாடி

    தொல் பொருளை அறியார்கள் . . .






    இந்த நூலை -தமிழம் வலை தளம் நமக்கு அளிக்கிறது ..நன்றி
    மதிப்பிற்குரிய நடேசன் என்கிற பொள்ளாச்சி நேசன்




    தகவிறக்கம் செய்ய ..


    [You must be registered and logged in to see this image.]



    Download details





    File format: .pdf




    Size: 198 kbs



    [You must be registered and logged in to see this image.]





    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum