என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
இதய நோய் ..
ஆயுர்வேத மருத்துவம் :: இயற்கை மருத்துவம்- NATUTAL MEDICINE-NATUROPATHY :: இயற்கை மருத்துவம் NATUROPATHY
Page 1 of 1
இதய நோய் ..
இதயநோய்
2020-ம் ஆண்டில்,இதயநோய் ஒரு கொள்ளை நோய்போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்துநம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தேஉணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம்செலுத்தவேண்டும்.
உணவுக்கட்டுப்பாடு
முதலாவதாக,உடல் எடையைக்குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில்கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில்சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பானசத்துகளைப் பெற... என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடுஅவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப்பாதுகாத்துக் கொள்ளலாம்.
கட்டுப்பாடானஉணவு மற்றும் அதன் அளவுகோலும்
ஒரு மனிதனுக்குஒரு நாளைக்கு தேவையான சக்தி 1800 - 2400 கிலோ காலரி. இந்த சக்தியைப் பாதுகாப்பான உணவின் மூலம்தான் பெறவேண்டும். இந்தமொத்த அளவில், 65% சக்தியைகார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% சக்தியைகொழுப்பிலிருந்தும், 15% சக்தியைபுரதத்தில் இருந்தும் பெறுவதுதான் ஆரோக்கியமான உணவுமுறை!
ஆரோக்கியமானசக்திகளை எந்த மாதிரி உணவுகளில் இருந்து பெறலாம்?
அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடியஉணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு,உடல் எடையைக் கூட்டும்.அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அதனால், அரிசி யையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு,காய்கறி மற்றும் கீரைவகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள்! பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள். இவற்றில், புரதம் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள்மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும்.
கொழுப்புச் சத்துபற்றி?
அதைப் பற்றிவிரிவாகவே கூற வேண்டும். கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்று இரண்டு வகைஉண்டு. ஆடு, மாடுகளின்மாமிசம், முட்டை, பால், நெய், வெண்ணெய்,வனஸ்பதி, தேங்காய், எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைத் தரும். தாவரஉணவுகள், தாவர எண்ணெய்,மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள்ஆகியவற்றின் மூலம் கிடைப்பது நல்ல கொழுப்பு. இவற்றிலிருந்து கொழுப்புச் சக்தியைபெறுவதுதான் ஆரோக்கியம்! மார்க்கெட்டில் ஏராளமான எண்ணெய் வகைகள் உள்ளன.
எண்ணெயைப் பற்றி:
‘சாச்சுரேட்டட்ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும்எண்ணெய்கள் (தேங்காய் எண்ணெய், நெய், வனஸ்பதி ஆகியன) இதயத்துக்கு எதிரானவை. அவற்றைதவிர்த்துவிட வேண்டும். ‘அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும்எண்ணெய்கள் இதயத்துக்கு நண்பர்கள். இவற்றிலும்கூட, சூரியகாந்தி, சோயா எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ‘பாலி அன் சாச்சுரேட்டட்’ வகை எண்ணெய்களைத் தான் பயன்படுத்தவேண்டும்என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது கடலைஎண்ணெய் போன்ற ‘மோனோஅன்சாச்சுரேட்டட்’ வகை எண்ணெயிலுள்ளசத்தும் உடலுக்கு தேவை என்பதால், இவற்றையும்பயன்படுத்தலாம் என்கிறார்கள். இவற்றைவிட ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’வகைதான் இதயத்துக்கு மிகநல்ல தோழன். இந்தச் சத்தை கம்பு, கேழ்வரகு,பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகள் மூலம் அபரிமிதமாகப் பெறலாம். எப்போதுமே ஒரே வகை எண்ணெயைஉபயோகிப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய்,சூரியகாந்தி எண்ணெய்ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஆனால், இந்த நல்ல வகை எண்ணெய்களிலும்கூட வறுக்க,பொரிக்கக் கூடாது. ஒருமுறை உபயோகித்த எண்ணெயை பல முறை உபயோகிக்கக் கூடாது.
பயமில்லாமல்சாப்பிடக் கூடிய உணவு வகை
இயற்கைகொடுக்கும் காய்கறிகள் உள்ளனவே! அவை இதயத்தின் நண்பர்கள். அதிக சத்து, குறைந்த கொழுப்பு, தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின் சத்துக்கள் அடங்கியவை. குறைந்தகலோரியில் அதிக சத்து கொடுப்பவை. நாம் அதிகம் சாப்பிட்டாலும் எடையும் போடாதவை.எப்போதும் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். தொட்டுக்க வைப்பதை சாதமாகவும்,சாதத்தைத் தொட்டுக்கவும்உபயோகப்படுத்துங்கள். ஆரோக்கியம் தேடி வரும்!
சில காய்கறியின்பயன்கள்
கத்தரிக்காய்,வெண்டைக்காய் ஆகியவைநார்ச்சத்து, ஃபோலிக் அமிலம்ஆகியவற்றைக் கொடுக்கின்றன. காலிஃப்ளவர், கோஸ், முருங்கைக்காய்ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்தையும், வாழைக்காய் இரும்புச் சத்தையும், சௌசௌ கால்சியம் சத்தையும் தருகின்றன. அவரைக்காயிலிருந்து புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கிறது. சுண்டைக்காயிலும்நார்ச் சத்துதான். வெள்ளரிக்காயில் எல்லாச் சத்துக்களுமே உள்ளன. வெங்காயம்,பூண்டு இரண்டுமே நல்லது.கீரைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சத்துக்களின் தொழிற்சாலைகள் அவை. இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் எல்லாமே கீரைகளிலிருந்துகிடைக்கின்றன. அவற்றில் கெட்ட கொழுப்பும் கலோரி யும் குறைவு. பழங்களிலும் அபரிதமானசத்துக்கள் கிடைக்கின்றன. நார்ச்சத்தை அள்ளி வழங்குபவை பழங்கள். இதயத் துக்குநார்ச்சத்து மிகவும் நல்லது. எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டியது & உயிர் வாழத்தான் உண்ண வேண்டும். உண்ணுவதற்காகவேஉயிர் வாழக் கூடாது!
உடல் எடை என்பதுபேங்க் பாலன்ஸ் மாதிரி. சாப்பிடச் சாப்பிட, ஏறிக்கொண்டேதான் போகும். பணத்தை எடுத்துசெலவழித்தால்தானே பாலன்ஸ் குறையும்? அதுபோல, உடலின் சக்தியைசெலவழித்தால்தான் எடை குறையும்!’’
ஹெல்த் டிப்ஸ்...
எடை அதிகம்இருப்பவர்களுக்கு, கழுத்து குட்டையாக இருக்கும். அவர்கள் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களாகஇருப்பார்கள். குறட்டை விடுபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதனால்,எடையைக் கட்டாயம் குறைக்கவேண்டும். எல்லோருமே காலையில் அதிகம் சாப்பிட்டு, இரவில் குறைவாக சாப்பிடுவது நல்லது. காலையில்ஒரு மகாராஜா போலவும் (விருந்து) இரவில் ஒரு பிச்சைக்காரர் போலவும் (குறைவான உணவு)சாப்பிட வேண்டும் என்பார்கள். மெனோபாஸ் வரைக்கும் பெண்களுக்கு இதய நோய் ஆபத்துகுறைவு. ஆனால், அதன் பிறகுபெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், இதயம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை! ‘‘டயட்டினால் எடையைக் குறைக்கலாம். ஆனால்,உடற்பயிற்சியால்தான் அதைஅப்படியே பராமரிக்க முடியும்’’
!
‘‘ஹர்ரி (அவசரம்),கறி (மாமிசம்), வொர்ரி (கவலை) மூன்றையும் நிறுத்தினால்,இதயம் ஆரோக்கியமாகஇருக்கும்!’
2020-ம் ஆண்டில்,இதயநோய் ஒரு கொள்ளை நோய்போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்துநம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தேஉணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம்செலுத்தவேண்டும்.
உணவுக்கட்டுப்பாடு
முதலாவதாக,உடல் எடையைக்குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில்கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில்சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பானசத்துகளைப் பெற... என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடுஅவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப்பாதுகாத்துக் கொள்ளலாம்.
கட்டுப்பாடானஉணவு மற்றும் அதன் அளவுகோலும்
ஒரு மனிதனுக்குஒரு நாளைக்கு தேவையான சக்தி 1800 - 2400 கிலோ காலரி. இந்த சக்தியைப் பாதுகாப்பான உணவின் மூலம்தான் பெறவேண்டும். இந்தமொத்த அளவில், 65% சக்தியைகார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% சக்தியைகொழுப்பிலிருந்தும், 15% சக்தியைபுரதத்தில் இருந்தும் பெறுவதுதான் ஆரோக்கியமான உணவுமுறை!
ஆரோக்கியமானசக்திகளை எந்த மாதிரி உணவுகளில் இருந்து பெறலாம்?
அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடியஉணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு,உடல் எடையைக் கூட்டும்.அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அதனால், அரிசி யையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு,காய்கறி மற்றும் கீரைவகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள்! பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள். இவற்றில், புரதம் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள்மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும்.
கொழுப்புச் சத்துபற்றி?
அதைப் பற்றிவிரிவாகவே கூற வேண்டும். கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்று இரண்டு வகைஉண்டு. ஆடு, மாடுகளின்மாமிசம், முட்டை, பால், நெய், வெண்ணெய்,வனஸ்பதி, தேங்காய், எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைத் தரும். தாவரஉணவுகள், தாவர எண்ணெய்,மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள்ஆகியவற்றின் மூலம் கிடைப்பது நல்ல கொழுப்பு. இவற்றிலிருந்து கொழுப்புச் சக்தியைபெறுவதுதான் ஆரோக்கியம்! மார்க்கெட்டில் ஏராளமான எண்ணெய் வகைகள் உள்ளன.
எண்ணெயைப் பற்றி:
‘சாச்சுரேட்டட்ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும்எண்ணெய்கள் (தேங்காய் எண்ணெய், நெய், வனஸ்பதி ஆகியன) இதயத்துக்கு எதிரானவை. அவற்றைதவிர்த்துவிட வேண்டும். ‘அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும்எண்ணெய்கள் இதயத்துக்கு நண்பர்கள். இவற்றிலும்கூட, சூரியகாந்தி, சோயா எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ‘பாலி அன் சாச்சுரேட்டட்’ வகை எண்ணெய்களைத் தான் பயன்படுத்தவேண்டும்என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது கடலைஎண்ணெய் போன்ற ‘மோனோஅன்சாச்சுரேட்டட்’ வகை எண்ணெயிலுள்ளசத்தும் உடலுக்கு தேவை என்பதால், இவற்றையும்பயன்படுத்தலாம் என்கிறார்கள். இவற்றைவிட ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’வகைதான் இதயத்துக்கு மிகநல்ல தோழன். இந்தச் சத்தை கம்பு, கேழ்வரகு,பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகள் மூலம் அபரிமிதமாகப் பெறலாம். எப்போதுமே ஒரே வகை எண்ணெயைஉபயோகிப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய்,சூரியகாந்தி எண்ணெய்ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஆனால், இந்த நல்ல வகை எண்ணெய்களிலும்கூட வறுக்க,பொரிக்கக் கூடாது. ஒருமுறை உபயோகித்த எண்ணெயை பல முறை உபயோகிக்கக் கூடாது.
பயமில்லாமல்சாப்பிடக் கூடிய உணவு வகை
இயற்கைகொடுக்கும் காய்கறிகள் உள்ளனவே! அவை இதயத்தின் நண்பர்கள். அதிக சத்து, குறைந்த கொழுப்பு, தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின் சத்துக்கள் அடங்கியவை. குறைந்தகலோரியில் அதிக சத்து கொடுப்பவை. நாம் அதிகம் சாப்பிட்டாலும் எடையும் போடாதவை.எப்போதும் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். தொட்டுக்க வைப்பதை சாதமாகவும்,சாதத்தைத் தொட்டுக்கவும்உபயோகப்படுத்துங்கள். ஆரோக்கியம் தேடி வரும்!
சில காய்கறியின்பயன்கள்
கத்தரிக்காய்,வெண்டைக்காய் ஆகியவைநார்ச்சத்து, ஃபோலிக் அமிலம்ஆகியவற்றைக் கொடுக்கின்றன. காலிஃப்ளவர், கோஸ், முருங்கைக்காய்ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்தையும், வாழைக்காய் இரும்புச் சத்தையும், சௌசௌ கால்சியம் சத்தையும் தருகின்றன. அவரைக்காயிலிருந்து புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கிறது. சுண்டைக்காயிலும்நார்ச் சத்துதான். வெள்ளரிக்காயில் எல்லாச் சத்துக்களுமே உள்ளன. வெங்காயம்,பூண்டு இரண்டுமே நல்லது.கீரைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சத்துக்களின் தொழிற்சாலைகள் அவை. இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் எல்லாமே கீரைகளிலிருந்துகிடைக்கின்றன. அவற்றில் கெட்ட கொழுப்பும் கலோரி யும் குறைவு. பழங்களிலும் அபரிதமானசத்துக்கள் கிடைக்கின்றன. நார்ச்சத்தை அள்ளி வழங்குபவை பழங்கள். இதயத் துக்குநார்ச்சத்து மிகவும் நல்லது. எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டியது & உயிர் வாழத்தான் உண்ண வேண்டும். உண்ணுவதற்காகவேஉயிர் வாழக் கூடாது!
உடல் எடை என்பதுபேங்க் பாலன்ஸ் மாதிரி. சாப்பிடச் சாப்பிட, ஏறிக்கொண்டேதான் போகும். பணத்தை எடுத்துசெலவழித்தால்தானே பாலன்ஸ் குறையும்? அதுபோல, உடலின் சக்தியைசெலவழித்தால்தான் எடை குறையும்!’’
ஹெல்த் டிப்ஸ்...
எடை அதிகம்இருப்பவர்களுக்கு, கழுத்து குட்டையாக இருக்கும். அவர்கள் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களாகஇருப்பார்கள். குறட்டை விடுபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதனால்,எடையைக் கட்டாயம் குறைக்கவேண்டும். எல்லோருமே காலையில் அதிகம் சாப்பிட்டு, இரவில் குறைவாக சாப்பிடுவது நல்லது. காலையில்ஒரு மகாராஜா போலவும் (விருந்து) இரவில் ஒரு பிச்சைக்காரர் போலவும் (குறைவான உணவு)சாப்பிட வேண்டும் என்பார்கள். மெனோபாஸ் வரைக்கும் பெண்களுக்கு இதய நோய் ஆபத்துகுறைவு. ஆனால், அதன் பிறகுபெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், இதயம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை! ‘‘டயட்டினால் எடையைக் குறைக்கலாம். ஆனால்,உடற்பயிற்சியால்தான் அதைஅப்படியே பராமரிக்க முடியும்’’
!
‘‘ஹர்ரி (அவசரம்),கறி (மாமிசம்), வொர்ரி (கவலை) மூன்றையும் நிறுத்தினால்,இதயம் ஆரோக்கியமாகஇருக்கும்!’
தோழன்- உதய நிலா
- Posts : 421
Points : 899
Reputation : 4
Join date : 27/10/2010

» வாத நோய் ,தோல் நோய் -இரண்டிற்கும் உதவும் மருந்து - பஞ்சதிக்தகுக்குலு க்ருதம்
» வலிப்பு நோய்
» அம்மை நோய்
» தந்த ரோக (பல் நோய் )சிகிச்சைகள்
» கண் நோய் - சித்த மருத்துவம்
» வலிப்பு நோய்
» அம்மை நோய்
» தந்த ரோக (பல் நோய் )சிகிச்சைகள்
» கண் நோய் - சித்த மருத்துவம்
ஆயுர்வேத மருத்துவம் :: இயற்கை மருத்துவம்- NATUTAL MEDICINE-NATUROPATHY :: இயற்கை மருத்துவம் NATUROPATHY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|