ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    ஹோமியோபதி அடிப்படை தத்துவம்

    Go down

    ஹோமியோபதி அடிப்படை தத்துவம் Empty ஹோமியோபதி அடிப்படை தத்துவம்

    Post by Admin Fri 05 Nov 2010, 11:48 pm

    எந்த ஒரு பொருளுக்கு உயிர்களிடத்தில் நோயை உண்டாக்கக் கூடிய சக்தி உள்ளதோ, அந்த பொருளுக்கு அதே நோயை போக்கும் சக்தியும் உள்ளது என்னும் இயற்கையின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் ஹோமியோபதி மருத்துவம்.
    ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்துகளை பரிசோதிக்கும் முறைகளைத் தெரிந்துகொள்ளும்போது, நோய்களை பக்க விளைவுகள் இல்லாமல் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய சிறப்புக்களை புரிந்துகொள்ளலாம். நடைமுறையில் பல்வேறு மருத்துவமுறைகள், பலவகை யான நோயாளர்களுக்கு புதிய மருந்துகளைக் கொடுத்து பரிசோதிப்பதும், விலங்கினங்களிடம் கொடுத்து பரிசோதனை செய்வதுமே வழக்கமாக உள்ளது. ஆங்கில மருத்துவத்தில் நிபுணரான ஈழ்.ஹானெமன், ஹோமியோ பதி மருத்துவத்தில், புதிய மருந்துகளின் செயல் பாடுகளை எவ்வித சந்தேகமு மின்றி முழுமையாக அறிந்து, உணர்ந்து, புரிந்து கொள்ளும் வகையில் மனிதர்களிடத்தில் கொடுத்து ஆய்வுகளை மேற்கொண்டார். இவ்வாறான மருந்து நிரூபணம் (Drug proving) என்பது, ஹோமியோபதியின் தனிச்சிறப்புக்களில் ஒன்றாகும்.
    200 ஆண்டுகளுக்கு முன்பு நிரூபணம் செய்யப்பட்ட ஹோமியோபதி மருந்துகளின் செயல்பாட்டின் பண்புகள் -குணப்படுத்தும் ஆற்றல்களின் எல்லைகள், இதுநாள் வரையில் மாறாமல் தீங்கிழைக்கக் கூடியதாகவோ, பயனற்ற தாகவோ இல்லாமல், மனித குலத்திற்கு நன்மை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
    ஒரு பொருள், நோயை உண்டாக்கும் என்று சொன்னால், எந்தெந்த பொருள் எத்தகைய நோய்களை உண்டாக்கும் என்பதை எப்படி அறிந்து கொள்வது? அதனை அறிந்து கொள்வதற்காகத்தான் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
    இப்பரிசோதனையை நோயுள்ளவர்களிடமே செய்யலாமா? கூடவே கூடாது. ஏனென்றால், நோய் உள்ளவர்களிடம் பரிசோதிக்கும்போது, ஒரு மருந்துப்பொருளின் மருத்துவ குணங்களை முழுவதையும் அறிந்து கொள்ள முடியாதல்லவா? மேலும் வியாதியின் காரணமாக கூருணர்வு அதிகமாகவோ, குறைவாகவே உள்ளவர் களாக இருந்தாலும் மருந்தின் முழு பரிமாணத்தை அறிய முடியாதே!
    ஏற்கனவே இருந்த நோய்களின் தன்மையால் மாறி வந்த குறிகளா? அல்லது மருந்தின் உண்மையான குணம்தானா? என்பதை அறிவதில் குழப்பம் நேரிடுமல்லவா? ஒரு வேளை ஏற்கனவே இருந்த நோய், இந்த பரிசோதிக்கும் மருந்தின் காரணமாக மேலும் சிக்கலாகிவிட்டால், நோயாளிக்கு ஆபத்துகூட நேரிடலாம் அல்லவா? அதனால்தான் கூடாது.
    அப்படியானால் எப்படிப் பட்டவரிடம் சோதித்தால் ஒரு மருந்தின் பிரத்யேக நோய் உண்டாக்கும் தன்மைகளை தெரிந்துகொள்ள முடியும்? தன்னம்பிக்கை உடையவர்கள், உண்மை யாக இருப்பவர்கள், நேர்மையானவர்கள், உணர்வுகளைத் துல்லியமாக புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என்று மொத்தத்தில் மனம் மற்றும் உடல் ரீதியாக நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களின் மூலமாகத்தான் தெரிந்து கொள்ளமுடியும்.
    நல்ல ஆரோக்கியத்துடன் இருந் தால் மட்டும் போதாது. தியாக மனப்பான்மையுடையவர்களாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால், மருந்து நிரூபணத்தின்போது அவர்களுக்கு பல வகைகளில் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. 200 ஆண்டுகளுக்கு பின்பும் தடை செய்யப்படாத மருந்துகள் உண்டென்றால் அது ஹோமியோபதியில் மட்டுமே! ஈழ்.ஹானெமன், ஹோமியோ பதியில் மருந்து நிரூபணம் செய்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டு மென்று, தனது ஆர்கனானில், கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
    (ஆர்கனான் மணிமொழி -126) :
    பரிசோதனைக்கு உட்பட்ட காலங்கள் முழுவதும் அதிகப்படியான மூளை உழைப்போ, மிக அதிக உடல் உழைப்போ இல்லாது இருக்கவேண்டும். துயரம், கோபம், வெறி, காமம் போன்ற பல உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்கும் அல்லது எண்ணங்களை சிதறடிக்கும், தடங்கல் தரும் சூழ்நிலை இருக்கக் கூடாது.
    (மணிமொழி-125): மேலும் மசாலா உணவுகளைத் தவிர்த்து விடவேண்டும். எளிய சத்துள்ள காய்கறி உணவுகளையே உண்ண வேண்டும். மருத்துவ குணம் கொண்ட பொருட்களை உணவிலிருந்து தவிர்க்க வேண்டும். ஒயின் போன்ற மதுபானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். மற்றும் அவரது கவனத்தை திசை திருப்பும்படியாக எந்தவிதமான அவசர பணிகளையும் மேற்க்கொள்ளக் கூடாது. மருந்து எடுத்துக்கொண்ட பின் தனக்குள் நிகழும் மாற்றங்களை உன்னிப்பாக கவனிப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
    (மணிமொழி-127):ஆண்களிடத்தில் என்னென்ன மாற்றங்கள் விளைவிக்கிறது. பெண்களி டத்தில் எத்தகைய உபாதைகளை விளைவிக் கிறது என்பதை அறிவதற்காக ஆண்கள், பெண்கள் என இருபாலரி டமும் மருந்து நிரூபணம் செய்யப்படு கிறது.
    (மணிமொழி-135): வெவ்வேறு விதமான உடல் அமைப்பும், வெவ்வேறு விதமான மனப்பாங்கும் உடைய பல நபர்களிடமும் நிரூபிக்கப் படுகிறது. இதனால் எப்படிப் பட்டவரிடமும் மருந்தினால் வரும் அதற்கே உரிய குறிகள் ஒரே மாதிரி இருப்பதை உறுதி செய்துகொள்ள முடியும்.
    (மணிமொழி-134): ஒவ்வொரு வரிடமும் அதன் தனிக்குணங்களை வெளிப்படுத்தினாலும், எல்லா உபாதை களும் ஒரே நேரத்தில் எல்லோரிடமும் தெளிவாக வெளிப்பட வாய்ப்பில்லை என்பதால் பலபேரிடம் சோதித்தறியப் படுகிறது.
    (மணிமொழி-133): மருந்துகள் உண்டாக்கும் குறிப்பிடத்தக்க உணர்வு மாற்றங்கள், அசையும்போது, நடக்கும் போது அறைக் குள்ளே இருக்கும்போது, வெளிக்காற்றில் உலாவும்போது, உட்காரும்போது அல்லது படுக்கும்போது உபாதைகள் கூடுகிறதா? குறைகிறதா? உபாதை இல்லாமல் உள்ளதா? என்றும் ஏதேனும் சாப்பிடும்போதோ, குடிக்கும் போதோ மாறுதல் தெரிகிறதா? பேசும்போது, இருமும்போது, தும்மும் போது ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? இரவில், பகலில் உண்டாகும் மாற்றங்கள், என்று பல விதங்களிலும் உடலிலும் மனதிலும் தோற்றுவிக்கின்ற மாற்றங்கள் துல்லியமாக அதாவது கூட்டிச் சொல்லுதல், இட்டுக் கட்டுதல், குறைத்துச் சொல்லுதல் போன்றவை இன்றி உண்மை யாக உள்ளவை மட்டுமே குறித்துவைக்கப் படுகின்றன.
    உலகமக்களின் நலத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு Dr.ஹானெமன் இத்தகைய நேர்மையான வழியில் பல இன்னல்களுக்கிடையேயும், மருந்துகளை தற்சோதனை செய்தும், மேலும் தொண்டுள்ளம் கொண்ட அவரைப் போன்றவர்கள் துணையுடனும் மருந்துகளை நிரூபணம் செய்து உண்மை தோற்பதில்லை என்பதை நிரூபித்துள்ளார். ஏனெனில் 200 ஆண்டுகளுக்கு பின்பும் தடை செய்யப்படாத மருந்துகள் உண்டென்றால் அது ஹோமியோபதியில் மட்டுமே. தீயில் புடம் போட்ட தங்கம் போன்று, இத்தகைய மருந்து நிரூபணத்தின் பரிசோதனையின் காரணமாக இன்றைய கம்புயூட்டர் யுகத்தில் மட்டுமல்ல, இனி வரப்போகும் யுகங்களிலும் காலத்தை வென்று நிற்பவை ஹோமியோபதி மருந்துகள் ஆகும்.
    ஆர்கனான் ஆப் மெடிசின் உருவாகி (1810-2010) 200-வது ஆண்டை எட்டியிருக்கும் இவ்வேளையில், ஹோமி யோபதி மருத்துவத்தைப் பற்றி நாம் பெருமை கொள்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. எவ்வித வசதி களும் இல்லாத காலத்தில் ஹோமியோபதி மருத்துவம் அவரால் உருவாக்கப்பட்டு அன்றும், இன்றும், என்றும் நிலைத்து நிற்கும் சிறப்பு பெற்றதாக உள்ளது. எனவே அட்டைப் படத்தில் டாக்டர்.ஹானெமன் மடிக்கணிணி (Laptop) யுடன் இருப்பது சாலப் பொருந்தும்.
    இதுவே ஹோமியோபதியின் உண்மைக்கு சான்றாக இருக்கிறது. முழு நலத்திற்கு ஆதாரமாகவும், விஞ்ஞான பூர்வமாக நம்பிக்கை கொள்ளத்தக்க வகையிலும், இந்த மருந்து நிரூபணம் அமைந்துள்ளது. எனவேதான் மனதை -உடலை துன்பப்படுத்தாமலும், எளிமை யாக, வேகமாக, மென்மையாக, நிரந்தர மாகக் குணப்படுத்தக்கூடிய ஹோமியோ பதி மருந்துகளை, ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொண்டு, உங்களை சோதனை செய்யும் நோய்களிலிருந்து முற்றிலும் விடுதலை அடைவதுடன், கவலையின்றி சுகமான வாழ்வைப் பெறுங்கள்!
    நன்றி -Dr.ஆர்.லோகநாயகி

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum